Sunday, 30 May 2021

ஹாசினி சந்திரா -10

 ஹாசினி சந்திரா -10

        ஹாசினி ஒரு பாலைவனத்தில் திக்கில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறாள். யாரோ அவளைத் துரத்துகின்றனர். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுகிறாள். வழியில் அவளைக் கொல்ல முயல்கின்றனர். ஒவ்வொரு முறையும் யாரோ காப்பாற்றுகிறார்கள். ஆனால் அடுத்த நொடி காப்பாற்றியவன் மறைய இவள் மீண்டும் ஓடுகிறாள். 

           பாதி வழி வந்த பிறகு அவளது அப்பா, அம்மாவை விட்டு வந்தோமே என வந்த பாதையில் திரும்ப அதே ஆபத்தை நோக்கி ஓடுகிறாள். ஆனால் யாரோ அவள் கையை இழுத்துப் பிடிக்கிறார்கள். என்னை விடு நான் போகவேண்டும் என இவள் மன்றாடுகிறாள். அந்தப் பக்கம் புதை குழி என அந்த உருவம் தடுக்கிறது. பரவாயில்லை நான் கவனமாகப் பயணித்துக் கொள்வேன் என அவள் திமிறிக் கொண்டு செல்ல முயல்கிறாள்.

         முடியாது என மறுத்த அந்த உருவம் அவளை வலுக்கட்டாயமாகத் தூக்கிக் கொண்டு போய், ஓர் அருவியில் நிறுத்துகிறது. தண்ணீர் சிலுசிலுவெனக் குளுமையாய்க் கொட்டுகிறது. இவ்வளவு நேரம் ஓடியதில் தாகமாக உணர்ந்தவள் அந்த நீரையே அள்ளி பருகிவிட்டு, அதே அருவியை ரசிக்கிறாள். அவள் அருகில் வந்து அணைக்கிறது ஓர் உருவம். " மது என்னை விட்டு எங்க ஓடுற. இங்க வந்துடு. நான் பார்த்துக்குறேன்" என அவளது முகத்தை ஏந்தி பிறை நுதல் முதல் முத்தமிட அதில் உணர்ச்சி வயப்பட்ட வளாக அவனோடு லயித்து இருக்கிறாள்.

        " சந்திரா, நீ தானா. ஏன் இவ்வளவு நேரம். நான் தவிச்சுப் போயிட்டேன் தெரியுமா" எனக் கண்ணீரோடு கேட்கிறாள் ஹாசினி. அதே நேரம், " சந்து, இவள் நம்ம குடும்பத்துக்கு ஏத்தவ இல்லை. விட்டுட்டு வா" என்கிறது அவனின் தாயின் குரல். சந்திரா அம்மாவை முறைக்கிறான், ஹாசினியை விட்டு வர மறுக்கிறான். இதைப் பார்த்த ஹாசினி, அவன் திரும்பியிருக்கும் நேரம் அருவியிலிருந்து வழுக்கி விழுந்து தன்னை மாய்த்துக் கொள்கிறாள். சந்திரா மது எனக் கத்தியபடியே கூடவே குதிக்கிறான். " சந்திரா வராதே" என ஹாசினி அலறுகிறாள்.

      "சந்திரா" என அலறிக் கொண்டு தான் காலையில் கண்விழித்தாள் ஹாசினி. ப்ரீத்தி அடுத்தக் காட்டேஜில் இருந்தவள் ஓடி வந்து பார்த்தாள். கண்ணை மூடிக் கொண்டு ஹாசினி அலற, அவள் உலுக்கி எழுப்பி விட்டாள். எழுந்து அமர்ந்த ஹாசினி, தன்னைச் சமன் படுத்திக் கொண்டவள், எழு முடியாமல் தடுமாறினாள்.

      " மேம், என்னாச்சு. எதாவது கெட்ட கனவா?" என வினவினாள். கண்ணை மூடித் திறந்த ஹாசினி, " ரெஸ்ட் ரூம் போகனும்" என ப்ரீத்தி கையைப் பிடித்துக் கொண்டு சென்று வந்து வெளியே திண்ணையில் முகம் கழுவி அமர்ந்து இருந்தாள்.

     ப்ரீத்தி சூடாக லெமன் கீரின் டீ கொண்டு வந்து தந்தாள். ஒவ்வொரு மிடறாக அது அவள் தொண்டையில் இறங்கியது. ப்ரீத்தி ஹாசினியின் நெற்றியில் கை வைத்துப் பார்த்துக் காய்ச்சல் இல்லை என அறிவித்தாள்.

      எங்கிருந்தோ ஒற்றைக் குயில் சோக ராகம் இசைத்துக் கொண்டிருந்தது. அதை உன்னிப்பாகக் கேட்ட ஹாசினி, "அந்தக் குயில் தனியா கூவுது கேட்டியா" என ப்ரீத்தியை வினவினாள். அவளும் கேட்டுவிட்டு, "ஆமாம் மேம், அது ஜோடி எங்கப் போச்சோ" என்றாள்.

      " எவ்வளவு அதிசயம் பாரு. அது அதுக்குத் தனிப் பாஷை இருக்கு. அதோட இணைக்குப் பக்கத்தில் இல்லைனாலும் தெரியும்ல. மனிதர்கள்ட்ட மனசு இருக்கு. ஆனால் நாம தான் அதைக் கவனிக்கிறதே இல்லை. இயந்திர வாழ்க்கை, நம்ம மனசு சொல்றதை கேட்கிறதே இல்லை" என்றாள் ஹாசினி.

       " இந்த டெலிபதின்னு எல்லாம் சொல்றாங்களே மேம் . நம்ம எண்ணம் வலிமையானதா இருந்தால், கட்டாயம் யாரை நினைக்கிறோமோ அவங்க வரைக்கும் போகும் மேம்" என்றாள் ப்ரீத்தி.

      " அப்படி ஒன்னு நடந்தால் நிச்சயம் சந்தோஷம் தான். நான் அம்மாவுக்கு மெசேஜ் அனுப்பிடுவேன்" என்றாள் ஹாசினி. " நீங்க யாருக்கிட்ட பேசனுமோ, மனசாரப் பேசுங்க மேம். கட்டாயம் அவங்களுக்குக் கேட்கும்" எனவும், 

       கண்ணை மூடிய ஹாசினி, " அம்மா, நான் நல்லா இருக்கேன். நீ என்னை நினைச்சு கவலைப் படாதே. அப்பாவைப் பார்த்துக்கோ" என மனதில் பேசினாள்.

        மதுரஹாசினியின் எண்ணங்களைக் கடத்திச் சென்ற தென் மேற்கு பருவக்காற்று தோட்டங்களின் நகரம் வரை இழுத்துச் சென்று மேனகாவின் காதில் சேர்ப்பித்தது. மருத்துவமனையில் சந்திராவோடு இருந்தவர் ஹாசினியை உணர்ந்தார்.

      அடுத்துக் கண்ணை மூடிய ஹாசினி, "சந்திரா, எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும். ஐ லவ் யூ. ஆனால் நான் உன்கிட்ட இதைச் சொல்ல முடியாது. நான் சொன்னா, உனக்குத் தான் பிரச்சினை. நீ எங்க இருக்கியோ, அங்கேயே நல்லா இரு. மாமி சொல்ற பொண்ணைக் கட்டிக்கோ. " என மனசாரப் பேசிக் கொண்டிருந்தாள். பாழாய்ப் போன காற்று அதையும் அருகே உள்ள அவனிடம் கடத்தியது. அவனுக்கு இயலாமை கோபமாக வந்தது. அதனால் தான் நேற்று இரவே அவளது அறையை விட்டு வெளியேறி இருந்தான். இரவே சென்று மலை மேலிருந்த மரவீட்டிலிருந்தவன், மேலும் அமைதியின்றித் தவித்தான். அவனது மன உளைச்சலை அதிகமாக்க வென்றே சில மெஸேஜ்கள் வந்திருந்தன.

       காலையில் சற்று வெளிச்சம் பரவ ஆரம்பித்த பொழுதே, தாங்கள் கொண்டு வந்திருந்த சிறிய போட்டை எடுத்துக் கொண்டு அலைந்தான். அலைகளில் மூழ்கும் சந்திரனும், அதிலிருந்து உதயமாகும் ஆதவனும் அன்றைய பொழுதின் ஆரம்பத்துக்குக் கட்டியங் கூற, சந்திரா மறைந்தாலும் அதனை விட ஒளி பொருந்திய ஆதவன் இந்த உலகிற்கு நன்மை தான் என மனதைத் தேற்றிக் கொண்டவன், இயற்கை விருப்பு வெறுப்பின்றித் தன் கடமையைச் செய்வதை நினைத்தவனாக, போட்டில் கிடந்த சிறிய மீன்பிடி கொக்கியைப் போட்டு , தங்கள் தேவைக்குச் சிலவற்றைப் பிடித்தான். 

       மீன் துள்ள துடிக்க வந்து போட்டில் விழுந்தது. சிலவை மீண்டும் கடலுக்குள் துள்ளி தன் உயிரைக் காத்துக் கொண்டது. சிலவை தெரியாமல் மாட்டிக் கொண்டன. மனிதர்களும் அவர்களின் வாழ்க்கையும் கூட இப்படித் தான் என எண்ணியவன், ஒருவர் வீழ்ச்சி மற்றொருவர் வளர்ச்சியாகிறது என ஆயிரம் எண்ணம் அலை மோதலையும் அலைகடல் மேலேயே சிதறவிட்டு மீன்களை அள்ளிக் கொண்டு வந்தான்.

       காலையிலிருந்து பாஸை காணாத ப்ரீத்தி, பவனிடம் சென்று பார்த்து வரச் சொன்னாள். " தினமும் யாரையாவது தேடுறது தான் வேலையா. அவரே வந்திடுவார். நீ என்னை அலைய விடாத" எனக் கடிந்தான் பவன். இவர்களையே பார்த்திருந்த ஹாசினி , " பவன் நீ போய்த் தேடிட்டு வா. அரக்கன் பாட்டுக்குச் சொல்லாமல் கொள்ளாமல் இங்க நம்மளை விட்டுட்டு தப்பிச்சிட்டா நாம என்ன பண்றது" என்றாள்.

        " மேம், அதெல்லாம் உங்களை விட்டுட்டு போக மாட்டார். வேலை வெட்டியெல்லாம் விட்டுட்டு மனுசன் ஆறுமாசமா உங்க பின்னாடி அலையிறாரு, அதெப்படி விட்டுட்டு போவார்" என உண்மையைப் போட்டு உடைத்தான் பவன். ஆனால் இவன் வாயைப் பிடுங்கினால் தான் உண்டு ப்ரீத்தி வாயைத் திறக்கமாட்டாள் என அவனோடு வார்த்தையாடினாள்.

       " ஹேய், ஒரு கிட்னாப்பருக்கு, கிட்னாபியை ஃபாலோ பண்றதை விடப் பெரிசா வேற என்ன வேலை இருக்கப் போகுது. ஏதோ உன் பாஸ் பெரிய பிஸ்னஸ் மேக்னட் மாதிரி பில்டப் விடாத" என அவனை மட்டம் தட்டினாள்.

       " கிட்னாப்பரா, அவருக்கு இந்தப் பேச்செல்லாம் தேவைதான் மேம். நீங்க பேசுங்க. " என்றான் பவன். " இதென்ன பாஸ்க்கு எதிர்த்து என் கூடக் கூட்டு சேருற. அரக்கன்ட்ட அவ்வளவு பேட் எக்ஸ்பீரியன்ஸா" எனக் கேட்டுச் சிரித்தாள்.

        "எக்ஸாட்லி மேம், யாரை வேணும்னாலும் காதலிக்கலாம். ஆனால் அண்ணன் தம்பி கூடப் பிறந்த பொண்ணுங்களை மட்டும் காதலிக்கவே கூடாது. அப்புறம் என்னை மாதிரி மாட்டிட்டு அல்லாடனும். " என்றான் பூடகமாக. " நீ சொல்றதே எனக்குப் புரியலை. நீ யாரை லவ் பண்ற" என்றாள் ஹாசினி.

             மேம் நிஜமாவே உங்களுக்குத் தெரியலையா. இல்லை தெரியாத மாதிரி நடிக்கிறீங்களா" என அதிசயமாக அவளைக் கேட்டான். ஹாசினி சந்தேகமாக, " ப்ரீத்தியை லவ் பண்றியா. ஆனால் நீங்க இரண்டு பேரும் அதைக் காட்டிக்கிட்டதே இல்லையே" என்றாள். பவன் பெருமூச்சு விட்டு, "அது தான் மேம், எங்க லவ்வுக்கு வந்த சோதனை. உங்களோட சேர்த்துப் பாஸ் எங்களையும் கண்காணிப்பார்" எனச் சோகமாகச் சொன்னான்.

          ஹாசினி கலகலவென நகைத்து விட்டாள். " அட அப்பரசென்டுகளா, நிம்மதியா லவ் பண்ண கூட முடியாமல், என் பின்னாடி ஏன் சுத்துறீங்க" என்றாள். பவன் தங்கள் காதல் காவியத்தை ஆரம்பிக்கப் போனான். ப்ரீத்தியின் முறைப்பில் சட்டென அடங்கினான்.

        ஹாசினி அவர்களைப் பார்த்துக் கொண்டே இருந்தவள், "பரவாயில்லை , ப்ரீத்தி சாமர்த்தியசாலி தான். ஒரே பார்வையில அடக்கிட்டாளே. என்னைப் பாரு, கடத்திட்டு வந்தாலும் என்னன்னு கேட்க நாதியில்லை" என விளையாட்டாகவே சொன்னாள்.

         " மேம் உங்க ரேஞ்சே வேற. உங்க ஆளு உங்களுக்காக உலகத்தையே ஆட்டி வைப்பார். உங்களுக்கு அண்ணன், தம்பி இருந்தாலும், இலட்சக் கணக்கில் தொண்டர்கள் இருந்தாலும், அது எதுவுமே அவரைக் கட்டுப் படுத்தாது" என்றான் பவன். அதைக் கேட்கும் போதே ஹாசினிக்கு வயிற்றில் படபடப்பு தான். ஆனால் உண்மை அறிவதற்காக அதனை மறைத்த படி அவனோடு சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தாள்.

      " எனக்கே தெரியாமல், எனக்கு ஆள் இருக்கா, யார் எனக்கே தெரியாத ரகசிய காதலன் சொல்லேன்" என்றாள்.

         " மேடம் பெருமைக்குச் சொல்லலை, உங்க மேல செம லவ்வு. அதில தான் வழக்கமான குடும்பத் தொழிலை விட்டுட்டு உங்க பின்னாடி மாறு வேசம் எல்லாம் போட்டுத் திரியிறார். உங்கப்பா படத்தில் எத்தனை கெட்டப் போட்டுருப்பார். அவரை விட உங்க ஆள் இன்னும் அதிகமா போட்டுருக்கார்" என ஹாசினியின் காதலனைப் பற்றி ஹாசினியிடமே எடுத்துரைத்தான் பவன்.

            "ம்கூம் , கேட்க நல்லாத் தான் இருக்கு, ஆனால் அப்படி ஒருத்தன் இருந்திருந்தால், எனக்கு இன்றைக்கு இந்த நிலைமையே இல்லை. நடிகர்களாக இருந்து நாட்டை ஆண்டவர்கள் வாரிசு நான். நான் விரும்பினாலும், விரும்பலைனாலும் என் அடையாளம் அது தான். நான் மத்தவங்க அனுபவிக்கும் பொருள் மட்டுமே. என் அப்பாவை நீங்க முன்னாடி பார்த்ததில்லையே, சிங்கம் தான். ஒரு வார்த்தை சொன்னார்னா மேஜிக் மாதிரி எல்லாம் நடக்கும். அவர் நல்லா இருந்திருந்தா, கொண்டவனும் என்னைச் சொந்தமாக்கிக்கணும்னு நினைச்சிருக்க மாட்டான். எனக்கான ஒருத்தனை அவரே தேடிக் கொண்டு வந்திருப்பார். நானும் ராணி மாதிரி இருந்திருப்பேன். அந்தச் சிங்கத்தையே சூழ்ச்சியால் சாச்சிட்டாங்க. இப்போ நான் பாதுகாப்பில்லாத பொன் மான் " எனப் பேசிய ஹாசினியின் வார்த்தைகளில் பாசம், ஏக்கம், இயலாமை, பச்சாதாபம் அனைத்தும் போட்டிப் போட்டது.

        ப்ரீத்தியும், பவனும் பதில் சொல்லத் தெரியாமல் முழிக்கும் போதே "புலிக்குப் பிறந்தது பூனையாகுமான்னு ஒரு பழமொழி உண்டு. எஸ். ஆர். சந்திராங்கிற சிங்கத்துடைய மகள், நிச்சயமா பெண் சிங்கம் தான். என்ன ஒன்னு அதுக்குத் தான் பெண் சிங்கம்கிறதே மறந்து போச்சு" எனச் சொன்னபடியே வந்தான் சந்திர தேவ். அவன் கையில் ஒரு சாக்குப் பை இருந்தது.

         " மறந்து தான் போச்சு. அது குட்டிச் சிங்கம் நடை பழகுறதுக்குள்ளையே சிறு நரிகள் சூழ்ந்திருச்சே. பெற்றவர்களைக் காப்பாற்றுமா, தன்னைக் காப்பாற்றிக்குமா. அது தான் ஏமாந்து மாட்டிக்கிச்சு. " எனத் தன்னை இவர்கள் கடத்தி வந்ததைச் சொன்னாள். " சிங்கத்துக்கு, அது சிங்கம்னு யாரும் ஞாபகப் படுத்த தேவையில்லை" என்றான் தேவ்.

       " ஆமாம் போ, நான் அந்தக் கார்டூன் சிம்பா மாதிரி ஆயிட்டேன் ,இந்த நீயே கடத்திட்டு வந்து இங்க வச்சுருக்க, என்னால என்ன செய்ய முடிஞ்சது " எனக் கேள்வி எழுப்பவும்.

       "ரொம்பப் புத்திசாலி தான், விட்டா என்கிட்டையே தப்பிக்க ஐடியா கேட்ப " எனக் கேலி பேசியவன். மீன் மூட்டையை இறுக்கப் பற்றிக் கொண்டே கீழே இறக்கி வைத்தான்.

       " கேட்டோனே சொல்றதுக்கு நீ எதுக்கு என்னைக் கடத்தணும், இது கூடத் தெரியாத முட்டாள் இல்லை நான்" எனப் பேச்சை முடித்துக் கொண்டாள் ஹாசினி.

        சந்திரதேவ், ப்ரீத்தியிடம் உள்ளிருந்து மூங்கில் கூடையை எடுத்து வரச் சொன்னான். " ப்ரீத்தி மீன், இன்னும் உயிரோட துள்ளிட்டு இருக்கு. சாக்கைப் போட்டு மூடிவை. ஒரு மணி நேரம் கழிச்சு இரண்டு பேருமா சேர்ந்து குழம்பு, ப்ரை எல்லாம் செய்வோம்" என்றான்.

      " பாஸ், ப்ரஸ்ஸான மீனா. சூப்பர் பாஸ். ஹாசினி மேடத்தைக் கடத்தினதுக்கு இன்னைக்குத் தான் ஒரு பலன்" என அருகில் வந்து பார்த்து, "என்ன வெரைட்டி பாஸ்" எனக் கேட்டான் பவன்.

       " பேர் எல்லாம் தெரியலை. கையில் சிக்கினது எல்லாம் புடிச்சுப் போட்டேன்" என்றான் தேவ்.

        " மேம் பக்கத்தில் வந்து பாருங்க. உங்களுக்குப் பிடிக்குமா" என ஹாசினியைப் பார்த்துக் கேட்டேன்.

        " ம் சாப்பிடுவேன்" என்றவள் சந்திர தேவைப் பார்த்து, " அரக்கன் ஸார், அடுத்து மீன் பிடிக்கப் போனேனா, என்னையும் கூட்டிட்டு போ. சின்னப் பிள்ளையில் அப்பாவோட சேர்ந்து பிடிச்சது" என ஆசையாகக் கேட்டாள் ஹாசினி.

      " அரக்கனோட வர்றதுக்கு, உங்க மேடத்துக்குப் பயம் இல்லையானு கேளு பவன்" என்றான் தேவ். பவன் ஹாசினி முகத்தைப் பார்க்கவும்,

      "அரக்கனுக்குத் தான் இந்த அழகி மேல இன்ட்ரெஸ்டே இல்லையே. யாருகிட்டையோ தானே ஹாண்ட் ஓவர் பண்ணப் போகுது. ஸோ நீங்க எல்லாம் டம்மி பீஸ் தான்" என்றாள் ஹாசினி, பவன் சிரித்து விட்டான், "ஆமாம், ஆமாம் எங்க பாஸ்க்கு உங்க மேல இன்டெரெஸ்ட்டே கிடையாது,இல்லை பாஸ் " எனத் தன பாஸிடமே கேள்வி எழுப்பி நக்கலாகப் பார்த்தான் பவன். தேவ் குறைக்கவும் அமைதியானான். இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த ஹாசினி, "அரக்கன் சார் , எதுக்குப் பவனை முறைக்கிற, நீ சொன்னதை நான் சொன்னேன். நான் சொன்னதை ,அவன் திருப்ப்பி ரிப்பீட் பண்ணான். பவன், நீ பயப்படாதே, இந்த அரக்கன் கிட்ட இருந்து, உன்னை நான் காப்பாத்துறேன்" என்றாள் ஹாசினி.

      இப்போது ஹாஹா வென நகைத்து அரக்கனின் முறையானது. " ஐ மீன், நாங்க ரெண்டு பெரும் ஒரு கேங். உண்ணலா பாதிக்கப் பட்டவங்க. என்ன பவன் " என அவள் கேள்வி எழுப்பவும், பவன் ஆம் எனச் சோகமாகத் தலையை ஆட்டினான்.

     " நீ பீல் பண்ணாத, இ வில்ல சப்போர்ட் யு. " என்றவள் தங்கள் அணிக்கு வலு சேர்க்கும் விதமாக ,"ஹேய் பவன், யாரோ ஒரு பிஸ்னஸ் மேகனெட் எனக்காக உலகத்தையே புரட்டி போடுவான்னு சொன்னியே, போட்டோ இருந்தா காட்டு. என் டேஸ்ட்டுக்கு இருக்கானா. செட் ஆவானான்னு பார்க்கிறேன். கொஞ்சம் சுமாரா இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். எங்கப்பா நல்லா சீர் செய்வார்" என்றாள் ஹாசினி.

      தேவ் பவனை மீண்டும் முறைக்கவும், பவன் முழித்தான். " மேம், நான் எப்ப சொன்னேன்" என மழுப்பினான்.

     " ஹேய், எங்கப்பாவை விடப் பெரிய ஞாபக மறதிக்காரனா இருக்கியே . இப்ப தானே உன் பாஸ் வரும் முன்ன சொன்ன . ப்ரீத்தி இவன் சொன்னான்ல " என்றாள்.

       " யெஸ் மேம், அது மட்டுமா சொன்னார். உங்க உங்க லவ்வர், உங்க அண்ணன்களுக்கெல்லாம், பவன் மாதிரி பயப்பட மாட்டாருன்னும் சொன்னார்" என ஆண்கள் இருவரையும் பார்த்துச் சொன்னாள். ஆனால் இருவருமே மாட்டிக் கொண்டது போல் முழித்தனர். பவன் தேவ் இடம் மாட்டியதாக நினைத்தால், தேவ் ஹாசினியிடம் தன் குட்டு வெளிப்படுமோ எனத் தயங்கினான்.

         ஆனால் ப்ரீத்தி, " மேம், நீங்க போட்டோ கேட்டிங்களே. என் பாயியை பார்த்துக்குங்க. இந்தத் தாடியும், கண்ல லென்ஸூம் இல்லைனா, அவர் தான் உங்க லவ்வர்னு கற்பனை பண்ணிக்குங்க, அவர் அப்படித் தான் இருப்பார் " என்றாள். தேவ் ப்ரீத்தியை முறைத்தான். ஆனால் அவள் அதற்குப் பயப்படுவதாக இல்லை.

        " ஐயே, ஸோ ஸேட். இன்னொரு அரக்கன் தான் என்னை லவ் பண்றானா. நான் கூட ஒரு பிரின்ஸ் சார்மிங்கா இருப்பார். என்னை லவ் பண்ணுவார்னு நினைச்சனே. போங்கடா, நீங்களும் உங்க ரசனையும். நான் கல்யாணம் ஆகாமலே இருந்துக்குறேன்" என இவர்கள் மூவரையுமே தரம் இறக்கிச் சென்றாள் ஹாசினி.

      தேவ்க்குச் சட்டெனக் கோபம் வந்தது, "ப்ரீத்தி, நம்மளை மாதிரி மிடில் க்ளாஸ் எல்லாம் மேடம்க்கு ஒத்து வருமா. அவங்க பழக்கமே அமெரிக்கால மல்டி மில்லினர்ஸ் , இந்தியால பெரிய மினிஸ்டர்ஸ் கூடத் தான்" என அவளது இதயத்தைப் பார்த்து வார்த்தை அம்பை விட்டான்.

       ஆனால் அவன் அமெரிக்கா என்றவுடன், தனது நண்பனை நினைத்தாள் ஹாசினி, அவள் முகமே மென்மையாகி, " எஸ், ஐ மிஸ் ஹிம் எ லாட். மேத்யூ இருந்தாலும் கூடப் போதும். என்னைக் கஷ்டப்படவே விட மாட்டான்" என அவன் நினைவில் இவள் முகம் விகசித்தது. ஆனால் சந்திராவின் காதல் கொண்ட மனம், ஹாசினியின் நட்பையும், நேசம் என்றே எண்ணியது.

       சந்திர தேவ் இவ்வளவு நேரம் ப்ரீத்தி கொண்டு வந்த மூங்கில் கூடையில் மீன்களைக் கொட்டி சாக்கைப் போட்டு மூடி மேலே பிடித்துக் கொண்டிருந்தவன், தன்னை மறந்து வேகமாக எழவும் மீன்கள் துள்ளின. ஓரிரண்டு லாங்க் அண்ட் ஹை ஜெம்ப்பாகத் துள்ளவும், பவன் ஓடி வந்து சாக்கை அழுத்திக் கொண்டான்.

         ஆனால் கண்களில் நண்பனை எண்ணி உணர்ச்சி பெருக்கில் நின்றிருந்த ஹாசினியிடம் போய்த் துள்ளி விழுந்த குறும்புக்கார மீன், அடுத்தத் துள்ளில் அவள் கழுத்து வழியே ட்ரெஸ்ஸூக்குள் போனது. இடையில் ப்ராக்கை ஒரு கயிறு கட்டி இடுப்பில் இறுக்கி இருந்ததால், அவள் மேனியில் சட்டைக்குள்ளாகவே துள்ளியது. மீனை விட அதிகமாய்க் கத்தியபடியே அடுத்து ஹாசினி துள்ளினாள்.

         பார்த்தவருக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. பவன் மீன் சட்டி மீது பெரிய கல்லை வைத்து விட்டு வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான்.

       தேவ் ஹாசினியின் கையைப் பிடித்து, " கொஞ்ச நேரம் ஆடாமல் நில்லு" என்றான். ஆனால் அவள் அவன் மீதே இடித்துக் கொண்டு துள்ளினாள். ப்ரீத்தி அவர்கள் கெமிஸ்ட்ரி பார்த்துத் திரும்பிக் கொண்டாள்.

      ஹாசினி ஒரு நீண்ட ப்ராக் தான் போட்டிருந்தாள். அது இடையில் கட்டப்பட்டு இருந்ததால் அவளுக்குள் விழுந்த மீனும் இடை வரை மட்டுமே சடுகுடு ஓடியது. "ஹேய், ஹோய், ஊ, ஆ, ஐயே" என எல்லாவித சத்தமும் கொடுத்துக் கொண்டு அவள் நெளிந்து, துள்ளிக் கொண்டிருக்க, தேவ் ப்ராக்கோடு சேர்த்து அவளது வயிற்றுப் பகுதியில் வைத்து மீனைப் பிடித்தான். அதில் ப்ராக் இழுத்துப் பிடிக்கப்பட, போட் நெக் சற்றே இறங்கியது , அனிச்சையாக அவள் நெஞ்சில் கை வைத்துக் கொண்டவள், " என்ன பண்ற" என முறைத்தாள்.

         " ஏய், லூசு, கையை எடுத்தேன்னா மீன் துள்ளும். எடுக்கவா. " எனக் காட்டினான். அவன் கைக்குள்ளேயே வழுக்கிக் கொண்டிருந்தது. அவன் அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தான். " அந்தக் கயிறை அவிழ்த்து விடு. அப்படியே கீழே விழுந்துடும்" என்றான் தேவ்.

        " ஓ, நோ. அது கண்ட பக்கம் போகும்" எனச் சிறு பிள்ளையாக அடம்பிடித்தாள். " இம்சைடி. எனக்கு இம்சையைக் கூட்டவே, எதையாவது இழுத்து விட்டுக்குவ" எனப் பல்லைக் கடித்தான்.

              "நானா மீன் பிடிச்சிட்டு வந்தேன். இல்லை அதைத் தூக்கி என் சட்டைக்குள்ள போட்டுக்கிட்டேனா. நீ தான் எனக்கு இம்சையைக் குடுக்குற" எனப் பதிலுக்கு அவஸ்தையாக அசைந்து கொண்டே பேசினாள் ஹாசினி.

        " ஏய், ரொம்பப் பேசினேன்னா, அப்படியே விட்டுட்டு போயிடுவேன்" என மிரட்டினான்.

         " யோவ் அரக்கா, நான் பாட்டுக்கு மீட்டிங் அட்டென்ட் பண்ணிட்டு கிளம்பினவளைக் கடத்தினவன் நீ. அதை ஞாபகம் வச்சுக்கோ, எனக்கு ஆபத்து வந்தாலும் நீ தான் சேவ் பண்ணனும் " எனச் சண்டையும் போட்டாள்.

       ப்ரீத்தி பவன் பார்வையிலிருந்து அவளைத் தள்ளிக் கொண்டு வந்தவன், சட்டென அவளைத் தூக்கி தலைகீழாக உலுக்கினான். மீன் துள்ளிக் கொண்டு கீழே விழுந்தது. ஆனால் பயத்தில் ஹாசினி அவனை இறுக்கப் பற்ற முனைய எசகுபிசகாக அவனது தாடி அவள் கையோடு வந்தது.

       முதலில் என்னவோ எனப் பயந்து தூக்கிப் போட்டவள், பின்னர்ச் சுதாரித்து அவன் முகத்தைப் பார்த்தாள்.

         அடிக்கடி எங்கோ பார்த்த முகமாக இருந்தது. "மேம் உங்க ரேஞ்சே வேற. உங்க ஆளு உங்களுக்காக உலகத்தையே ஆட்டி வைப்பார். உங்களுக்கு அண்ணன், தம்பி இருந்தாலும், இலட்ச கணக்கில் தொண்டர்கள் இருந்தாலும், அது எதுவுமே அவரைக் கட்டுப் படுத்தாது" என்ற பவனின் வார்த்தைகள் காதில் எதிரொலித்தது.

        " அரசியல்வாதிக்கு உணர்வுகளைத் துடைத்த நகை முகம் தான் பலம்" அன்று மங்களூரில் ப்ளைட்டிலிருந்து இறங்கும் போது சொன்னான்.

       " இந்தத் தாடி, மீசையும், லென்ஸையும் எடுத்துடுங்க. உங்க லவ்வர் கிடைப்பார்" என்ற ப்ரீத்தியின் வார்த்தைகள்.

           " குண்டு கோஸ், முட்டாள் கூஸ், இம்சை, மது" என வரிசையான வார்த்தைகள் , எல்லாமே அவன் தான். அதிர்ந்து நின்றவள், அவன் அவசரமாகத் தாடியை ஒட்ட வைக்க முயலவும், அவன் நெஞ்சில் கை வைத்துத் தள்ளிக் கொண்டு போய் ஒரு மரத்தில் ஒட்டி நிறுத்தியவள், தனது சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள, அவனது சட்டை பட்டன் மூன்றை வரிசையாகக் கழட்டினாள்.

        " ஏய், இடியட். என்ன செய்யற" என்ற அவனின் வார்த்தைகளைக் காதில் வாங்காமல், அவன் சட்டையை விலக்கி இடது மார்பைப் பார்த்தாள். அரைச் சந்திர வடிவிலான தழும்பு இருந்தது. இதுவும் பால்ய காலத்தில் பட்ட தழும்பு தான். அவள் தலையிலிருந்த க்ளிப் , அவன் நெஞ்சில் குத்தியது.ஓடி விளையாடும் போது கால் வழுக்கி தலைக்குக் குப்புற விழ போனவளை எதிரே இருந்த சந்திரா பாய்ந்து பிடித்தான், அவள் தலையிலிருந்த கூரான க்ளிப் அவன் சட்டையைத் தாண்டி நெஞ்சில் கிழித்திருந்தது., அவன் மார்பில் ஆழமாகக் கிழித்து . அதில் பிறைச் சந்திரன் போலவே காயம் பட்டு, இரத்தம் வழிந்து தழும்பானது. அதற்கு அடுத்த முறைகளிலும் அந்தத் தழும்பைப் பார்த்து இருக்கிறாள்.

      ஹாசினி அதிர்ச்சியில் வாயைப் பொற்றிக் கொண்டு அவனை விட்டு விலகினாள். கண்களில் கங்கையின் பிரவாகம். அவளையே பார்த்திருந்தவன், தான் யாரெனத் தெரிந்து தன்னிடம் அடைக்கலம் ஆவாள் என எதிர் பார்த்திருந்தான். ஆனால் அவள் சற்று தள்ளிப் போய் ஓர் பாறையில் அமர்ந்து அழவும், எங்கே மயக்கம் போட்டு விடுவாளோ எனப் பின்னே ஓடினான்.

      " மது, எதுக்குடி அழற. நீ பாதுகாப்பா என்கிட்ட தான் இருக்க" என்றான் தேவ். அவளுக்குக் கோபம் பலியாக வந்தது.

        " என்ன பாதுகாப்பு, என்னடா பாதுகாப்பு. எதுக்கு என்னைக் கடத்துன. எவ்வளவு பெரிய ரிஸ்க் தெரியுமா." என அங்காரமாகப் பேசியவள் , அவனை நேருக்கு நேராக வைத்துக் கொண்டு , "எனக்கு உதவின்னு கேட்டு உங்ககிட்ட வரத் தெரியாமலா இருந்தது. பெத்தம்மாவுக்காகவாவது நீங்க எங்களுக்கு உதவுவீங்கன்னு தெரியும். இதெல்லாம் உங்களுக்கு வேண்டாம். அம்மா மகள் எங்களோடையே போகட்டும்னு தானே இருந்தோம். உன்னை யார் பெரிய இவனாட்டம் வரச் சொன்னது." என ஆக்ரோஷமாக அவன் சட்டை பிடித்து இழுத்து அழுதாள்.

       " அப்ப எனக்கு எந்த உரிமையும் இல்லை. நீ கஷ்டப்பட்டாலும், பார்த்துட்டுப் பேசாமல் இருந்திருக்கனும் அப்படித்தானே மது" என்றான் தேவ்.

      " நான் பழைய மது இல்லை . நீ ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிற. மீடியா, கேமரா என் மேல விழுந்துடிச்சு. நான் அந்த ஒளியில் இருந்து தப்பிக்கவே முடியாது. நீ என்னை இப்படிக் கடத்தி வச்சிருக்கிறது யாருக்காவது தெரிஞ்சா என்ன ஆகும். போலீஸ்கிட்ட மாட்டினா. உன் கேரியரே ஸ்பாயில் ஆயிடுமே சந்திரா" எனப் பதட்டமாகப் பேசினாள். லேசாக அவள் மூக்கிலிருந்து இரத்தம் கசியவும், தேவ் பதட்டமானான். தனது கைக் குட்டையை எடுத்து அவளது நாசியைத் துடைத்தவன், அவளருகில் உட்கார்ந்து கொண்டு, அவளை அணைத்தபடி பேசினான்.

      " மது லுக் அட் மீ. என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கில்ல. என்னை நம்பு. இந்தப் பிரச்சனை எல்லாத்தில இருந்தும் நான் உன்னை வெளியே கொண்டு வர்றேன். நீ நினைக்கிற மாதிரி அமைதியான வாழ்க்கை உனக்குக் கிடைக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு. என் கூடக் கோவாப்பரேட் பண்ணா போதும். ட்ரெஸ்ட் மீ" என்றான்.

     அவனை ஏறெடுத்துப் பார்த்தவள், " அப்பா, அம்மா" எனக் கேள்வி எழுப்பினாள்.

      " பானு அத்தை, ப்ரதி, அதி, ரதன் சித்தப்பா எல்லாரும் இந்தியா போயிருக்காங்க. இரண்டு பேரையும் மஸ்கட் கூட்டிட்டு வந்துடுவாங்க. உன்னை அவங்களோட சேர்க்க வேண்டியது என் பொறுப்பு. என்னை நம்பு" என்றான். அவளுக்குக் குழப்பமாக இருந்தது. தலையைப் பிடித்துக் கொண்டாள்.

       " என்னால யோசிக்கவே முடியலை. " என அவள் சோர்ந்து போகவும், அவளைத் தன் மேல் சாய்த்துக் கொண்டவன், மூக்கை உயர்த்திப் பிடித்துக் கொண்டான். " மது காம் டவுன். நான் பார்த்துக்குறேன். ட்ரெஸ்ட் மீ" எனத் திரும்பத் திரும்பச் சொன்னான். அவளைத் தூக்கி வந்து காட்டேஜ் கட்டிலில் படுக்க வைத்தான். அவளது கவலை தோய்ந்த முகம் அவனை மிகவும் பாதித்தது.

      " மது நேத்து போட்ட மாத்திரைக்கே ட்ரவுசியா இருக்கும். நான் செரியல்ஸ் எடுத்துட்டு வர்றேன். சாப்பிட்டு ரெஸ்ட் எடு. அப்புறம் பேசலாம்" என்றான். அவள் சலிப்பாகக் கண்ணை மூடிக் கொண்டாள்.

     தூரத்திலிருந்து ப்ரீத்தி பவன் பார்த்துக் கொண்டிருந்தனர். அவன் வேஷம் களைந்ததையும் கண்டு கொண்டனர். அவன் அடுப்படி நோக்கி வரவும், " பாயி என்ன ஆச்சு" என்றாள் பீரீத்தி.

    " தாடி பிஞ்சு , அரக்கன் வேஷம் களைஞ்சு போச்சு" என்றான் பவன். தேவ் அவனைக் கண்டித்து, "ஷெட் அப் " எனவும் " விடுங்க பாஸ். இனிமே அந்த இத்துப் போன தாடியையும், புலி கண்ணையும் ஒட்டிக்க வேண்டாம். நீங்க நீங்களா இருங்க" என்றான்.

" சும்மா இரு" எனப் பவனைக் கடிந்த ப்ரீத்தி, " என்ன பாயி சொன்னாங்க" என்றாள். " முதல்ல அப்பா, அம்மானு கவலைப் பட்டாள். இப்போ என்னை நினைச்சு கவலைப் படுறா" என்றான் தேவ்.

     " உண்மையில் மேம்க்கு ரொம்ப நல்ல மனசு பாயி" எனச் சர்டிவிகேட் தந்தாள் ப்ரீத்தி. " அதை மட்டும் நினைக்காத. பிடிவாதமும் ஜாஸ்தி. அம்மாக்குத் தன்னைப் பிடிக்காதுன்னு, ரொம்ப ஸ்ட்ராங்கா நம்புறா. இதுவே பல பிரச்சனைக்கு மூல காரணம். பார்ப்போம். " என்றான் தேவ்.

      சற்று நேரம் பொறுத்து ஹாசினியே வெளியே வந்தாள். மூக்கில் லேசான கறை மட்டும் இருந்தது. இவர்களோடு சமைக்கும் இடத்திற்கு அருகில் வந்து அமர்ந்தாள். செரியல்ஸில் பவுடர் பால் கலந்து தந்தான். அதை வாங்கிக் கொண்டவள், அமைதியாகச் சாப்பிட்டாள்.

 அவனாக இருக்குமோ என்ற சந்தேகமும், பல வருடங்கள் கழித்து அவனைத் தான் பார்க்கிறோமோ என உறுதிப் படுத்திக் கொள்ள அத்தனை ஆர்வமாக இருந்த அவளது மனது, அரக்கன் சந்திரா தான் எனத் தெரியவுமே ஓய்ந்து போனாள். எவ்வளவு பெரிய பிரச்சனையை இழுத்து வைத்திருக்கிறான். இதற்கான தீர்வு என்ன, என்பதை யோசிக்கவே அவளுக்கு வயிறு நிறைய வேண்டியது இருந்தது. அதனால் அமைதியாகச் சாப்பிட்டாள்.

         ப்ரீத்தி, சந்திர பிரகாஷை பாயி என அழைக்கிறாள், எனில் இவள் யார் என யோசித்தாள். ஹாசினி ஒரு போதும் மஸ்கட் சென்றதில்லை. பானுமதி எஸ்.ஆர்.சியிடம் அழைத்து வரச் சொல்வார். ஆனால் சமயம் வாய்த்தது இல்லை. சிம்மதேவ் குடும்பத்தினரும் வெளிநாட்டில் வைத்துத் தான் ஹாசினியை சந்தித்து இருக்கிறார்கள். அதுவும் அனுசுயா தேவியைப் புகைப்படத்திலும், ஓரிரு முறை போனில் மட்டும் தான் பேசி இருக்கிறாள்.

      பல விசயங்களை மனதில் அசை போட்ட ஹாசினி, " என்னைக் கடத்திட்டு வந்திருக்கியே, என்ன ப்ளான். யாருகிட்ட ஒப்படைக்கப் போற. ஏன் எதுக்கு. " என நிதானமாகச் சந்திர தேவை பார்த்துக் கேட்டாள்.

     தேவ் அவளையே பார்த்திருந்தவன், "இப்போ நீ எதையுமே தெரிஞ்சுக்க வேண்டாம். உனக்கு மண்டை நல்லா சூடாயிருக்கு .பேசாமல் ரெஸ்ட் எடு" என்றான்.

     " நீ எதுவுமே சொல்லாம இருக்க, இருக்கத் தான், எனக்கு டென்ஷன் ஜாஸ்தி ஆகுது " என அவன் கடத்தியதற்கான காரணத்தைக் கேட்டு நின்றாள்.

    " இந்தச் சுஹானா தீவிலிருந்து, நாம கிளம்பனும்னா, அது உன் கையில் தான் இருக்கு" என்றான்.

          "வாட் டூ யூ மீன். என்கிட்ட போன் கூடக் கிடையாது. போட் வர சொல்லனும்னா கூட நீதான் சொல்லனும். நான் எப்படி முடிவெடுப்பேன்" எனக் கேள்வி கேட்டாள் ஹாசினி சந்திரா. ப்ரீத்தியும் , பவனும் கொலு பொம்மைகள் போல் இவர்களைப் பார்த்திருந்தனர்.

     ஹாசினி கேள்வியைக் கேட்ட பிறகும் வெகு நேரம் பதில் சொல்லாமல் ப்ரீத்தியோடு சேர்ந்து மீன் குழம்பு, வறுவல் செய்வதில் மும்மரமாக இருந்தான் சந்திர தேவ்.

        " உன்கிட்ட கேட்கிறதே வேஸ்ட். ஏய் ப்ரீத்தி, பவன், ஒரு அறிவுள்ளவன் செய்யற வேலையையா உங்க பாஸ் செஞ்சிருக்கான். அவன் கூடச் சேர்ந்துக்கிட்டு நீங்களும் கடத்தலுக்குத் துணை போயிருக்கீங்க. ப்ரீத்தி நீ ஒரு பொண்ணா இருந்துட்டு இதெல்லாம் யோசிக்க மாட்டியா. உன்னைப் பெத்தவங்க எப்படி அலோ பண்ணாங்க. " எனச் சரமாரியாக ப்ரீத்தியைச் சாடவும், சமையல் வேலையை ப்ரீத்தியிடம் கொடுத்து விட்டு வந்த சந்திரதேவ் , அவள் முன் அசட்டையாக வந்து அமர்ந்தவன்,

      " ஹேய் லுக், ஹாசினி, பூஷினி , சுஹாசினி நீ எதுவானாலும் இருந்துட்டுப் போ" என ஆரம்பிக்கவுமே அவனை முறைக்க ஆரம்பித்தாள் மதுர ஹாசினி.

   " இந்த முறைப்போடையே நில்லு, அப்பத் தான் எனக்கும் சொல்ல வசதி" என்றவன். " நீ இங்கிருந்து மிஸஸ் சந்திர பிகாஷ் சிம்ம தேவ் ஆக மட்டும் தான் வெளியேற முடியும். இன் ஆல் மீன்ஸ்" என அவள் கண்களை ஊடுருவிச் சொன்னவன், "அது கட்டாயம் நடக்கும் நடத்திக் காட்டுவேன்" என்றான்.


Tuesday, 25 May 2021

ஹாசினி சந்திரா- 9

ஹாசினி சந்திரா - 9 

மதுர ஹாசினி சந்திரா ,வீட்டில் பிரியமானவர்களுக்கு மது. பெற்றவர்க்கும் உற்றவர்க்கும் மதுரமாக இனிப்பவள் .அவளையே நினைத்திருப்பவனுக்கு மதுவாக மயக்குபவள். தான் சுயரூபம் தாங்கி வந்தால் , வேலைக்கு ஆகாது என, தன நிஜம் மறைத்து, நிழலாய் உலகைப் படைத்து, அதன் அரக்கனான வேஷம் பூண்டு இந்த அழகியைக் கடத்தி வந்த சந்திரன் அவன்.

ஹாசினி சந்திராவில், சந்திரா அவளது தகப்பன் மட்டும் அன்று, அவளது உள்ளக்கிடையில் அது அவனின் பெயர் அவளோடு பிணைந்து இருப்பது, அவள் முழு நினைவில் இருக்கும் போது, இதை ஒருபோதும் ஒத்துக் கொள்ள மாட்டாள்.தனக்குள்ளான மனசாட்சியிடம் மட்டுமே மனம் திறப்பாள். அவள் பூட்ட நினைத்தாலும் மனசாட்சியிடம் திறவுகோல் உள்ளதே.

ஆனால் தன்னிலை மறந்த மதியிழப்பில் , அவன் நாமம் உச்சரித்து விட்டாள் .அதிலும் கூடச் சூதானமாகத் தன்னிடம் வராதே என்ற அக்கறை மட்டுமே. அவனிடம் தன மனம் சிக்கியதை மறந்தும் உரைக்க வில்லை. ஆனால் அவன் அவளைத் தனதாக நினைக்க ஆரம்பித்து வருடங்கள் உருண்டோடி இருந்தது. அவள் மனதையும் ,அவளுக்கு அரசியல் பிடித்தமின்மை என்பதையும் அறிந்தே, அதிலிருந்து அவளைத் தான் சிறையெடுத்தான்.

மயங்கிய பாவையின் இதழில் தன் பெயரை உதிர்க்கவும் , விதிர்த்தவன் அவளோடு தன் அரிதாரம் களைந்து, சுய முகவரியில் மயங்கியவளிடம் பேட்டி கண்டான். அவன் அவளுக்கு ஒரு முறையில் மாமன் மகன். பெத்தம்மாவின் ஆசை மருமகன். சிம்மதேவன் வம்சத்தின் வாரிசு. நினைப்பதை, வழிவகைத் தவறு ஆனாலும், விளைவு சுபமே எனில் அது தவறில்லை எனும் சித்தாந்தம் கொண்டவன். தன நோக்கத்திற்காக எதையும் வளைக்கும் வல்லமை பொருந்தியவன். அசாத்திய துணிச்சல். அதனினும் கோபம், பிடிவாதம் எல்லாம் நிறைந்த சந்திர பிரகாஷ் சிம்ம தேவன், என்ற சி பி தேவ்.

      தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் பழங்கால மன்னர் பரம்பரை என வாழ்ந்தவர் ராஜசிம்மத்தேவன் .சிம்மதேவன் எனும் பட்டப் பெயர் கொண்ட இந்த வம்சம் நில உச்ச வரம்பு, ஜமீன்தார் முறை ஒழிப்பு ஆகியவை அமல்படுத்தப்பட்ட காலத்தில் நிலத்தை இழந்து, வீடு வாசலும் பராமரிக்க இயலாமல் வந்த விலைக்கு விற்று விட்டு ஒரு தலைமுறை முன்பே பெங்களூருவில் குடியேறினர்.

         ராஜசிம்மத் தேவனுக்கு, வீரசிம்மதேவன், ரத்தனசிம்மதேவன் என்ற மகன்களும் இருவரும் நடுவில் பானுமதி தேவி என்ற மகளும் இருந்தனர்.

       வீரசிம்மத்தேவனுக்குப் பால்ய கால நண்பர் தான் சுரேந்தர் ராமச் சந்திரா. இருவரும் இணைபிரியா நண்பர்களாக இருந்தவர்கள், கட்டிடக்கலை பற்றிய படிப்பைப் படித்தார்கள். இருவரும் பழங்காலக் கட்டிக்கலைப் பற்றி அறிய இந்தியா முழுவதும் சுற்றினார்கள்.

        சிறுவயதிலிருந்தே வரலாறு கலை என ஆர்வம் கொண்ட எஸ் ஆர் சந்திரா , கட்டிடக்கலையிலிருந்து ஆர்ட்ஸ் எனச் சொல்லப்படும் சினிமாவுக்குப் பெரிய வரலாற்றுப் படச் செட்டிங்க்ஸ் போட சென்றவரின் கலை தாகம் படத்தை இயக்குவதில் வந்து நின்றது.  இதற்கு நடுவில் பானுமதியை இருவீட்டார் சம்மதத்துடன் மனம் முடித்திருந்தார். டைரக்ஸன் வரை போன போது கூடப் பானுமதி தடை சொல்லவில்லை. அடுத்த அவதாரமாகப் படத்தில் நாயகனாகவும் அவரே களமிறங்கும் போதே கருத்து வேறுபாடு வந்தது.

         அதே சமயத்தில் வீரசிம்மன் இங்குக் காலூன்ற இயலாமல் ஓமன் நாட்டுக்கு வேலைக்குச் சென்றார். ஒரு சிறிய ப்ராஜெட்டுக்கு எஸ் ஆர் சந்திரா பண உதவி செய்தார். அதைப் பிடித்துக் கொண்டு வீரசிம்மன் குறுகியகாலத்தில் வளர்ந்து, தனது குடும்பத்தை அங்கே அழைத்துக் கொண்டார். தம்பி ரத்தனசிம்மாவும் அவருக்கு உதவியாகத் தொழிலைப் பார்க்கத் தொடங்கினார்.

         இங்கு வரிசையாகப் பல படங்களில் வெற்றிக் கொடியை நாட்டவும், பிரச்சினைகளும் கூடவே வந்தது. இவர் அரசியல் களத்திலும் இறங்கினார். அதே சமயம் அடைக்கலமாக வந்த மேனகாவுக்குப் பாதுகாப்பாக நிற்க, இருவரையும் இணைத்துக் கதை பேசியது உலகம்.

       பானுமதியை எல்லாமுமாகச் சேர்ந்து அழுத்தியது. அவர் சகோதரர்களுடன் போய்த் தங்கும் தனது முடிவை அறிவித்தார். சந்திரா இதில் கொஞ்சம் ஆடித்தான் போனார். ஆனால் தான் செய்து கொண்ட கமிட்மென்ட் விட்டு விலகவும் முடியாத நிலை. தற்காலிகமாகப் பானுமதியை நண்பனிடம் அனுப்பி வைப்பதாகக் கேட்டார் சந்திரா.

       வீரசிம்மன் தனது கைகளை விரித்துக் கம்பெனியை விரிவுபடுத்த முதலீடுகளை ஏற்றுக் கொண்டிருந்த நேரம். தனது சம்பாத்தியத்தில் பெரும் பகுதியை பானுமதியின் பெயரில் மச்சினனிடம் முதலீடு செய்தார். வீரன் தங்கையையும் , தம்பியையும் பங்குதாரர்களாகச் சேர்த்து கம்பெனியை தரமுயர்த்தினார்.

      பானுமதி கிளம்பும் முன், மேனகா , திரைத்துறையிலும், கட்சியின் கொள்கை பரப்பு கூட்டங்களிலும் எஸ்ஆர் சந்திராவுடன் பயணித்த தன்னால் தான் இவர்களது மணவாழ்க்கை பாதிக்கிறது எனப் பானுவிடம் பேச வந்தார்.

       பானுமதி, தன் கணவன் தன்னை விட்டுச் சென்று வெகுகாலம் ஆகிவிட்டது. உன்னால் முடியும்னா அவரைப் பிடித்து வைத்துக் கொள் என்றார். மேனகா அதிர்ச்சியாகப் பார்க்கவும், அமைதியான குடும்ப வாழ்க்கை வேணும்னு தான், இவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனால் சந்திரா என்ற பெயர் இருந்தாலும் அவர் சூரியன். என்னால் ஈடு கொடுக்க முடியாது. அவரைத் தனியா விடவும் எனக்கு மனசு வரலை. நீ அவரைப் பார்த்துக்கோ, எனப் பொம்மையை வைத்துக் கொள் என்பது போல் விட்டுச் சென்றார் சூரியனின் பெயர் கொண்ட குளிர் நிலவு பானு.

      சந்திரா கொஞ்ச நாள் இருந்துவிட்டு மனைவி தன்னிடம் திரும்பி விடுவார் என நினைத்தே தனது காலத்தை நகர்த்த, மேனகா அவரை நெருங்கினார். பானு தனது முடிவில் தெளிவாக இருக்க, இங்குத் தனிமைப் பட்டுப் போன சந்திராவும் மேனகாவை நாடினார். சேர்ந்து வாழத் தொடங்கினர். ஹாசினியை கருவுற்ற பிறகு, தாலி கட்டினார் சந்திரா.

        எது எப்படி இருந்தாலும் மகன்களுக்கு விடுமுறை வரும் ஒரு மாதத்தில் அவர்களை அழைத்துக் கொண்டு, உலகத்தைச் சுற்றுவார். மகள் பிறந்து மூன்று வயதிலிருந்து அவளையும் இவர்களோடு அழைத்துச் செல்வார். ப்ரதிபன், அதிபன் மட்டும் போவதைச் சகோதரர் மக்கள் ஏக்கமாகப் பார்க்கிறார்கள் எனச் சொல்லி அடுத்தச் சில வருடங்கள் பானுமதியோடு சேர்த்து எல்லாக் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, ஏதாவது ஒரு நாட்டில் பானுவின் கனவான அமைதியான குடும்ப வாழ்க்கையையும் அவருக்குத் தந்தார். அந்த ஒரு மாதம் பானுவுக்குச் சொர்க்கம் தான்.

          ஆனாலும் சந்திராவின் அரசியல் வளர்ச்சி, அந்த ஒரு மாதத்தையும் அவர்களிடமிருந்து பறித்தது. ஆனால் மகன்களின் திருமணத்தைத் தானே வந்து நடத்தி வைத்தார். இதில் மகன்களுக்குமே தந்தை மீது பாசம் தான். மேனகாவால் தான் தந்தை பிரிந்தார் என அத்தையும் சிறிய மாமாவும் பேசும் வார்த்தைகளை அவர்களும் பிடித்துக் கொண்டனர்.   வீரசிம்மன் சில வருடங்களுக்கு முன் மாரடைப்பில் இறந்து விட, நண்பனின் பிரிவு சந்திராவையுமே பாதித்தது. உடலால்   போதும், உள்ளத்தால் நெருங்கிய நண்பர்கள் அவர்கள். மெளனமாக தனக்குள்ளே நண்பனின் இழப்பை உணர்ந்த எஸ் ஆர் சந்திராவின் உடல் நிலையம் நாளடைவில் குன்றி இந்த நிலைக்கு வந்து விட்டார். 

தங்களது குடும்ப பந்தத்தை, விலகியே இருந்த போதும், தங்கள் தகப்பன்ங்களுக்கு இடையே நட்பும், தங்களுக்கு இடையே நேசமும்  விந்தையை எண்ணி அமர்ந்திருந்த சந்திரப்ரகாஷ் தேவ், ஹாசினியை கண் சிமிட்டாமல் பார்த்திருந்தான். 

ஹாசினியின் போர்வையைச் சரியாகப் போர்த்தி விட்டவன், அவள் முகத்தில் அரும்பியிருந்த வியர்வையைத் துடைத்து விட்டு, பனை ஓலை விசிறி எடுத்து அவளுக்கு வீசி விட்டான்

ஆறு மாதத்துக்கு முன் அவளை ஒரு பொதுக் கூட்ட மேடையில் பார்த்ததை நினைவில் கொண்டு வந்தவன், "ஆளையும், மண்டையையும், கொண்டையையும் பார்க்கனுமே, எனக்கே அக்கா மாதிரி இருந்தடி. அப்பவே தெரிச்சு ஓடியிருக்கனும் , போக முடியாமல் குண்டு கோஸ் இழுத்துடிச்சு. பானு அத்தையைச் சொல்லனும், இவ பன்னெண்டு வயசு இருக்கையிலேயே என் கையால மாலையைப் போட வச்சு. இவளை என் மனசில் ஏத்தி விட்டுட்டாங்க" என நெகிழ்ந்திருந்தான்.

      அந்த நாள் அவன் நினைவில் வந்தது. ஒவ்வொரு முறையும் வரும் ஒருமாத விடுமுறை மாதம். ஹாசினியும் இன்டர் நேசனல் பள்ளியில் படித்ததால் லீவு ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை.

      அந்த வருட லீவுக்குச் சந்திரா மகளை அழைத்துக் கொண்டு லண்டன் வந்து சேர்ந்தார். பானுமதி இவர்கள் ஐவரையும் அழைத்துக் கொண்டு லண்டன் போய்ச் சேர்ந்தார். எல்லாருமே டீன் ஏஜ் பிள்ளைகள். அதனால் பானுவுக்குச் சிரமம் ஏதுமில்லை. நிருபனே ஹாசினியை விடப் பெரியவன். ஆராதனாவும் ஹாசினியுமாக ஓர் அறையைப் பகிர்ந்து கொள்ள, டீன் ஏஜ் பசங்களுக்கு ஓர் அறையும், பானுமதி, சந்திராவுக்கு ஒரு அறையுமென அந்தப் பழங்கால வீட்டில் ஒதுக்கி இருந்தனர்.

      சந்திரா, அப்போதே அடுத்த விடுமுறைக்கு வர முடியுமா எனத் தெரியாது. அதனால் இந்த விடுமுறை முழுவதும் நன்றாக என்ஜாய்ச் செய்ய வேண்டும் என லண்டனில் உள்ள தியேட்டர்கள், பழங்கால மாளிகை, வளாகங்கள் அனைத்துக்கும் அழைத்துச் சென்றார்.

        அதுவும் கட்டிடக்கலை, நாடகம், பழங்கால வரலாறு என வந்துவிட்டால் எஸ்ஆர்சிக்கு உற்சாகம் கரைபுரண்டு ஓடும். அவரின் பேச்சை எல்லாருமே வாயைப் பிளந்து தான் கேட்பார்கள்.

         இந்தச் சிறுவர்களுக்கு என்ன தெரியும் என்ற பாவனை இல்லாமல் ஒவ்வொரு சிறு விசயத்தையும் விளக்கிச் சொல்லி, கிட்டத்தட்ட எல்லாப் பிள்ளைகளையுமே, கட்டிடக்கலை பைத்தியமாக்கி வைத்திருந்தார். ஆராதனாவுக்கு இன்டீரியர் டெகரேசன் பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்தினார். மற்ற ஐவரும் சந்திரா பின்னாடி தெரிந்தால், ஹாசினி பெத்தம்மா என அழைத்துக் கொண்டு பானுமதி பின்னே திரிவாள். சாப்பாடு டைனிங்கில் அடுக்கி வைப்பது எனப் பெரியம்மாவோடு தான் முழு நேரமும். பானுமதியும் எந்த நேரமும் பூக்கத் தயாராக இருந்த மகளை நல்ல ஊட்டமான உணவாகக் கொடுத்துக் கண்ணும் கருத்துமாகப் பார்த்து வந்தார்.

       கிளம்ப ஒரு வாரம் இருக்கும் போது ஹாசினி பெரிய பெண் ஆனாள். ஆராதனா உடன் இருந்ததால் அவளுக்குப் பாதுகாப்பு முறைகளைச் சொல்லிக் கொடுத்தாள். மேனகாவை வரச் சொல்லி பானுமதி போன் போடவும். " அக்கா, அவள் உங்கள் மகள், அவளுக்குச் செய்கிற முறையை நீங்களே செய்ங்க" என்று விட்டார்.

        வீட்டில் எளிமையாக ஹாசினிக்கு தலைக்கு ஊற்றிச் சிங்காரித்து, லெஹங்கா அணிவித்து ஒரு நகையையும் பூட்டி விட்டார். மங்களூர் பெண்மணியான மேனகாவின் மகள், மஞ்சள் அழகியாகச் செழுமையாகவே இருந்தாள். மாமன் முறைக்கு மாலை போட வேண்டும் என யோசித்த பானுமதி சந்திர தேவை மாலையிட அழைத்தார். அவனும் விடலைப் பையனாக முதலில் யோசித்தான்.

       " மாப்பிள்ளை, இவ்வளவு யோசிக்காமல் மாலையைப் போடு. அப்பத்தான் உனக்கும் ஒரு சான்ஸ் கொடுப்போம். இல்லைனா ஜாக்பாட் கையை விட்டு போயிடும்" எனச் சந்திராவும் கேலி செய்தார். ஒரு வழியாகச் சந்திரதேவ் ஹாசினிக்கு மாலையிட்டான். சிறுவர் விளையாட்டாகப் போட்டோக்களும், வீடியோக்களும் எடுத்து வைத்தனர். அதன் ஒரு ஸ்நாப் இன்றும் சந்திரதேவின் பர்சில் ஓர் ரகசிய அறையில் உண்டு.

      ஆனால் ஊருக்குச் சென்ற பிறகு, இதனைப் பார்த்த அனுசுயா , பானுமதியை வெகுவாகக் கோபித்தார். இனி ஹாசினி வருவாள் எனில் தன் மகனை அனுப்ப மாட்டேன் எனச் சண்டை போட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதற்குப் பிறகு சந்திரா மந்திரியானார். வரிசையாக அரசியல் களத்தில் வெற்றி வாகை சூடினார். அவர்களுக்கான விடுமுறையும் பிறகு வரவே இல்லை.

      ஒரு முறை ஹாசினி, மஸ்கட் வீட்டுக்கு போன் செய்தாள், பானுமதி இல்லாத நேரம், அனுசுயா கடுமையாக வார்த்தையை விட்டார். " சந்திர தேவை மயக்கப் பார்ப்பதாகவும், கற்பனையிலும் அதை நடக்க விட மாட்டேன்" என அவர் சுடு சொல் சொன்னதில் ஹாசினி துடித்துப் போனாள். சந்திர தேவ் மாலையிட்டதிலிருந்த மயக்கமும் சட்டெனத் தெளிந்தது. ஆனால் அந்தப் பப்பி லவ் அவ்வப்போது அவளது உள்ளத்தை அசைத்துப் பார்த்தது மட்டும் உண்மை.

       காலேஜ் யூஜியை இங்கே முடித்தவள், மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்ளாள். அங்கே அவளை விட வயதில் மூத்த நண்பன் தான் மேத்யூஸ். அறிமுகம் இல்லாத ஊரில் ஆபத்பாந்தவனாய் அவளைக் காத்தான்.

       ஆனால் விதி வலியது, சந்திரதேவ், அப்பாவின் வியாபாரத்தில் காலூன்றி உலகம் சுற்ற ஆரம்பித்தான். ஹாசினி தங்குமிடம் அறிந்து அவளைக் காணச் சென்ற போது, மேத்யூவுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்ததைத் தான் பார்த்தான். ஹாசினியிடம் அறிமுகம் ஆகாமலே திரும்பியவனுக்கு மேத்யூவின் தந்தையோடு ஒரு பெரிய ப்ராக்ட் செய்ய ஒப்பந்தம் கிடைத்தது. அவள் அமெரிக்காவில் தங்கியிருந்த ஒரு வருடமும் அவளை நேரில் சந்தித்தான் இல்லை. ஆனால் அவள் இந்தியா கிளம்பிய விவரம் மேத்யூஸ் மூலமாகத் தான் அறிந்தான்.

       சந்திரதேவ் மற்றும் ஹாசினியின் குடும்பத்து உறவை அறிந்த மேத்யுஸ், ஹாசினியின் நல் வாழ்வுக்குச் சந்திர தேவை நாடினான். ஆனால் அதற்கு முன்னரே அதே பொறுப்பு வேறு ஒருவரிடமிருந்து சந்திரதேவிடம் ஒப்படைக்கப் பட்டு இருந்தது.

        சந்திரதேவின் செயல்கள், அதிரடியாகத் தான் இருக்கும். ஒரு வேலை ஆரம்பித்தால் தனக்கு எவ்வளவுக்கு எவ்வளவு நன்மை வருமோ, அதில் பத்து பங்கு தன் எதிரிக்கு எழ முடியாத அளவு அடியையும் கொடுப்பான்.

      வீரசிம்ம தேவனோ, ரத்தின சிம்ம தேவனோ சொல்லிப் பார்த்து ஓய்ந்து விட்டனர். இதோ இன்றைய ஹாசினியின் நிலையும் சந்திரதேவின் கோணல் மாணலான மூளையில் உதித்தது தான். நஞ்சப்பாக்களை வேரறுக்க ஆட்களை ஏற்பாடு செய்து விட்டுத் தான், இந்தத் தீவில் பதுங்கி இருக்கிறான்.

           ஹாசினியின் முகத்தை மெல்லிய ஒளியில் ரசனையாகப் பார்த்திருந்தவனின் காதில் " அட் எனி காஸ்ட் அண்ட் கண்டிசன், ப்ளீஸ் சேவ் மை ப்யுட்டி. ஐ வில் கிவ் மை எவ்ரிதிங் டூ யூ" என இவளுக்காக உருகிய மல்டி மில்லினரின் வார்த்தைகள் எதிரொலிக்க அவளை விட்டு காட்டேஜை திறந்து வெளியேறினான் சந்திரதேவ்.

         ஹாசினி- சந்திராவுக்கு இடையில் உள்ள உறவு எப்படி. ஆசையும் காதலும் இருந்தும் இவர்களைச் சேர விடாமல் தடுப்பது எது. எதிலிருந்து ஹாசினியை காப்பாற்ற இந்த நாடகம் எதற்கு ,எல்லா கேள்விகளுக்கும் அந்த அரக்கன் சாரிடம் மட்டுமே பதில் உண்டு. கல்லுளிமங்கன் சாதாரணமாக வாயை திறந்து விட மாட்டான். 

ஹாசினி கொலை வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி, தங்கப்பாண்டியன் இரவு மங்களூருக்கு விமானம் ஏறும் முன் தனது உதவியாளருடன் விசாரணை சம்பந்தப்பட்ட மற்ற கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

      அவருடைய பர்சனல் போன் அடித்தது, குலாப் எனப் பெயரும், மகனையும் மகளையும் இருபுறமும் கட்டியணைத்த படி அவரது மனைவி தான்வி தங்கப்பாண்டியனும் திரையில் ஒளிர்ந்தனர். ஒரே பார்வையில் அவர் கண்களின் மிடுக்கு மறைந்து காதல் வழிய, பாசம் பொங்க போனை காதுக்குக் கொடுத்தார். மாற்றி மாற்றி நான்கு முத்தங்கள் அவர் காதில் ஒலிக்கப் பதில் சிரிப்போடு " பாண்டி மக்கள் என்னடா பண்றாய்ங்கே" என்றார்.

  " ஊருக்கு வராத அப்பனோட மல்லு கட்றாய்ங்க" எனக் கோரஸ் பாடினார். "தங்கம் பாவமில்ல, அவனோட ஒரண்டை இழுக்கக் கூடாது” எனவும், “அப்பா சீக்கிரம் வாப்பா, இந்தத் தானிமாவோட ஒரே போர்.” என்றது மகள் ராகசுதா.

        “ஏண்டா செல்லம், அம்மா என்ன செஞ்சா” எனத் தங்க பாண்டியன் வினவவும், விசாரணை அதிகாரியாக அப்பாவை மாற்றிய அவரது மகள் ,” அவ எதுவுமே செய்யறது இல்லை, மீட்டிங் போயிடுறா, இந்தப் பாட்டிஸ் ,பருப்பு, சாம்பார்னு வச்சு ஒரே போர், ஓமற்றது, நீ வாப்பா “ என மகள் அழைக்கவும், உருகிப்போனார் ஆபீசர், ஆனால் அந்த நேரம் போனில் கத்திய மகன்

       ‘அப்பா, அவ பொய் சொல்றா, இவள் அடம் பண்ணாலேன்னுட்டு , ரகு தாத்தா ரகசியமா ஸ்விகிலப் பிரியாணி ஆர்டர் பண்ணார், நம்ம ஆத்துல வச்சு பிரியாணியை நல்லா மொக்கிட்டா” என மகன் சாட்சி சொன்னான்.

     ‘நீ சாப்பிடலையா கௌசி “ என வினவவும், “நேக்கு வேண்டி வச்சதையும் சேர்த்து தின்னுட்டாப்பா, அதை மறைக்கத் தான் அம்மாவை கம்பளைண்ட் பண்றா” எனக் கௌசிக் பாண்டியன் , தங்கை ராகசுதாவை அப்பாவிடம் பேட்டுக் கொடுத்தான்.

       “அப்பா, கௌசி பொய் சொல்றான், பார்சல் இத்துனூண்டு தான் வந்தது, நீக்கி பத்தலை “ என இரண்டு பிள்ளைகளும், சாப்பிடும் சரி, பாஷையும் சரி, அப்பாவையும், அம்மாவையும் கலந்து கலவையாக இருப்பார்கள். ஆனால் அம்மா வீட்டினரிடம் பிராமணப் பாஷையிலும், அப்பா வீட்டுக்குச் சென்றால் அசல் மதுரைக் காரர்களாக மாறிவிடுவர்.

     இவர்கள் பஞ்சாயத்தைத் தீர்த்து, ”ஐ மிஸ் யூ டா செல்லக்குட்டீஸ்” என மகன் மகளோடு கொஞ்சிக் குலாவி ஒரு வழியாய் மனைவியிடம் போனில் பேசினார் .

    " குலாப், சாப்பிட்டியாடி" என ஆரம்பித்தார் . “சாப்பிட்டேன், நீங்க” எனப் பதில் பெற்றவர், “உங்க மகளைப் பார்த்தேளா, எப்படிப் பேசுறான்னுட்டு, இரண்டு பிளேட் பிரியாணியும் தின்னுட்டு, நான் மீட்டிங் போயிட்டேன்னு குறை சொல்றா “ எனத் தான்வி ஆரம்பிக்கவும்,

     “ ஏன் ,உனக்கும் கொடுக்காமல் சாப்பிட்டுருச்சாக்கும் , ரெட் சில்லி காரம் ஜாஸ்தியா இருக்கு” எனச் சிரித்தார்.

        “அய்யா சாமி, சீக்கிரம் தமிழ்நாட்டுக்கு ட்ரென்சர் வாங்கிண்டு வாங்கோ. உங்க பிள்ளைகள், எங்காத்து மனுசாள் பிராணனை வாங்கிறதுகள், அப்பாவை சிக்கன் ஆர்டர் பண்ண வச்சுருக்கா, நம்ம அபார்ட்மெண்ட்ல டெலிவரி பண்ணிட்டு ,ஒரு மாதிரி பார்த்துட்டுப் போறான் “ எனத் தான்வி அங்கலாய்க்கவும் அவரது கோல்டுக்குச் சிரிப்பு தாங்கவில்லை, அதற்கும் சேர்த்துத் திட்டு வாங்கிக் கொண்டார் மீசைக்காரர்.

      " ஐயே போறுமே, ஹாஸ்யம். ஹாசினி சந்திராவைப் பத்திச் சொல்லுங்கோ , கேஸை உங்களண்டை கொடுத்திருக்காளா. நேத்தே புலம்பினேளே" என்றார் தான்வி. " நீயும் அந்தப் பொண்ணைப் பார்த்திருக்கியே. மறந்து போச்சா" என வினவினார்.

       "நன்னா ஞாபகம் இருக்கு. மகள்னா எஸ்ஆர் சிக்கு உயிராச்சே. அவள் இல்லைனா ஒடைஞ்சு போயிடுவாறே" எனக் கவலையாக வினவினாள் தான்வி.

       " அவருக்கு ஹாஸ்பிடல்ல அப்சர்வேஷன்ல இருக்கிறதால இன்னும் சொல்லலை. அது ஒரு வகைக்கு நல்லது தான். ஆனால் மனுஷன் இன்னொரு வகையில் கொடுத்து வச்சவர்" என்றார் பாண்டியன்.

       " மகளையே தொலைச்சுண்டு உட்கார்ந்திருக்கார். என்னத்தைக் கொடுத்து வச்சார் போங்கோ. " எனப் பாசமிகு ஓர் மகளாகத் தன் தந்தையையும் தன்னையும் வைத்துத் தான்வி ஆதங்கப் பட்டார்.

         " அவர் ஃபர்ஸ்ட், வைஃபும் வந்துட்டாங்க. இரண்டு பேரும், தங்களை மீறி யாரும் புருஷனை நெருங்க விடக்கூடாதுன்னு அவரைக் காவல் காக்குறாங்க. இதில அமேசிங் என்ன தெரியுமா, ஒரு சக்களத்தி சண்டை இல்லை,போட்டி, பொறாமை இல்லை, இரண்டுபேரும் சோகத்தை மறைச்சுட்டு அவரைச் சந்தோசமா வச்சுக்கிறாங்க " என்றார் தான்வியின் கோல்ட்.

     "இப்ப எதுக்கு இதைச் சொல்றேள்" எனத் தான்வி கண்டித்துக் கேட்கவும்,  "ஏய் ரெட் சில்லி, உன் சந்தேகப் புத்தி போகுதா பாரு. ஹாசினி இறப்பால் யாருக்கு முதல் லாபம் , யாரு செய்திருப்பாங்கன்னு, சந்தேகப் படுவோம்ல. ஆனால் முதல் பேமலி, அப்பாவைக் காப்பாற்றிக் கூட்டிட்டு போகனும்னு பார்க்கிறாங்களே ஒழிய. இந்தச் சொத்துச் செல்வாக்கை கண்டுக்கவே இல்லை" என்றார் .

        " முதல் மனைவி ஒதுங்கிப் போனதா தானே சொல்றா. பசங்களும் அப்படியேவா இருப்பா. சந்தேகமா இருக்கே" எனத் தான்வி சந்தேகமாகக் கேட்கவும்,

       " நானும் எல்லா ஆங்கிள்லையும் தோண்டி துருவிட்டு தான் இருக்கேன். ஆனால் அந்தக் குடும்பத்துக்கிட்ட தப்பு செஞ்ச பதட்டம் இல்லை. அது தான் சொல்ல வந்தேன்" என்றவர் ,"தனுமா இந்தக் கேஸ் விஷயமா ,ரேப்பிட் பயர் கேள்வி கேளு, நான் பதில் சொல்றேன் , ஒரு ஐடியா கிடைக்கும் " எனச் சொல்லவும், அதைக் கேட்ட தான்வி, “அப்போ இந்த மாசம், என் அக்கவுண்டுக்கு உங்க சேலரியை கிரெடிட் பண்ண சொல்லுங்கோ. உங்க மைண்ட் வொர்க் புல்லா நான் செய்யறேன் “ எனச் சலித்துக் கொண்டாள் தான்வி .

     “இப்ப மட்டும் காசு என்கிட்டே இருக்க மாதிரி, கார்டு மட்டும் தான் இருக்கு “ என அதற்கு ஒரு வம்பு பேசினர். ஓகே கம் டு த பாயிண்ட். 

  “ஹாசினி சந்திராவை ,யார் கொன்னது, எதுக்கு” - தான்வி.

“ தேர்தலைச் சீர்குலைக்கத் தீவிரவாதி தாக்குதல் , ஹாசினி பிரச்சாரம் பண்றது பிடிக்காத எதிர்க்கட்சி சதி , சொத்துக்காகச் சொந்தகாரங்க செய்தது “ - பாண்டியன்.

“ஹாசினி படுகொலையால் ,தேர்தல் தள்ளி பேச்சா “ -தான்வி. ”இல்லை’- பாண்டியன்

“ஹாசினி சொத்து, அவளுக்கு இல்லைனா யாருக்குப் போகும்” - தான்வி

ஹாசினி அம்மாவுக்கு. அவுங்க பார்த்து யாருக்கு வேணும்னாலும் கொடுக்கலாம்.- பாண்டியன்

“ஹாசினி சொத்து மதிப்பு அதிகமா, மூத்த தாரத்து பசங்க சொத்து மதிப்பு அதிகமா”- தான்வி

எஸ்.ஆர்.சி , சொத்தில் பெரும் பகுதி,மூத்த தாரத்துக்குக் கொடுத்துட்டார். ஹாசினிக்கும் அதுக்குச் சமமான சொத்து, இந்தியாவில் உண்டு” -பாண்டியன்

“ஹாசினி படுகொலையால ,அனுதாப ஓட்டு யாருக்கு விழும்’ - தான்வி

நிச்சயமா கேஜே பார்ட்டிக்கு தான்'- பாண்டியன்

“அப்ப எதிர் கட்சி எதுக்கு ஹாசினியை கொல்லனும் ’ - தான்வி

“ஆமா தேவை இல்லை, ஆனால் கேஜே பார்ட்டிக்கு ஹாசினி , பொன் முட்டை இடும் வாத்து, அவங்க ஏத்துக்கக் கொல்லனும் , சிவராஜ் , ஹாசினியை தன் மருமகள் ஆக்கிக்கணும்னு ஆசைப் பட்டார் “ எனத் தங்கப் பாண்டியன் சொல்லவும்.

“இது அவர் சொன்னது தான், ஹாசினியோ, அவங்க அம்மாவோ கன்பார்ம் பண்ணலை” என ஞாபகப் படுத்தினார் தான்வி.

“ஆமாம், அப்பாவை காப்பாற்றத் தான் அரசியலுக்கு வந்ததா ,அந்த அம்மா புலம்புனாங்க , சோ ,கட்டாயத்தில் தான் அரசியல் பிரவேசம் “

“ கோல்டு, ஹாசினியை கட்டாயப் படுத்துற பிரமாஸ்திரம், சிவராஜ் கிட்ட என்ன இருந்தது” எனத் தான்வி கேள்வியை எழுப்பியவர், மேலும் தங்கப்பாண்டியன் சொன்ன விவரங்களையும் கேட்டுக் கொண்டாள்.

‘கோல்ட் , முதலமைச்சர், உங்களண்டை கேஸை எதுக்குத் தந்திருக்கார்” எனவும்,

“இது என்னமா இப்படி ஒரு கேள்வி” எனச் சிரித்தார் தங்கப் பாண்டியன்.

“இல்லை, உங்க பதில் அதை நோக்கித் தான் போறது” எனச் சூசகமாகத் தான்வி, சிரிக்கவும், தங்க பாண்டியன் சிரிப்பும் விரிந்தது.

‘போரும், உங்க சிரிப்பே, எல்லாம் சொல்லிடுத்து, உங்க கேஸ்க்கு ஒரு பெவர் நான் செஞ்சு தர்றேன். இவா ஆட்சிக்கு வந்தப்ப அந்தச் சிவராஜ் கீழே இருந்த துறையில் தான் நான் இருந்தேன். அந்தாளுக்கு நான் தொல்லையா இருந்தேனுட்டு பர்பஸா ட்ரேன்சர் செஞ்சான். நிலக்கரி காண்ட்ரேக்ட்ல ஏதாவது தில்லு முள்ளு இருக்கும். உங்க அசிஸ்டென்ஸ் இங்கே தானே இருப்பார் " எனத் தான்வி யோசனையாகக் கேட்கவும்,

"ஆமாம் " என்றார் கமிஷனர் சார். " நான் ஒரு ஆளிடம் பேசிட்டு சொல்றேன். உங்க ஆளை அனுப்பி விடுங்கோ. இந்தக் கேஸ்க்கு தேவையான இன்பர்மேஸன் நான் தர்றேன்" என்றாள் தான்வி ஐஏஎஸ்.

"சூப்பர் டி தங்கப் பொண்டாட்டி, பக்கத்து ஸ்டேட்ல உட்கார்ந்துகிட்டே, இங்க வேலை செய்யற பார். ஐ லவ்யூ தனுமா" என்றார் ஆபீஸர்.

" ம்க்கும், பொண்டாட்டிட்ட ஐ லவ்யூ சொல்றதுக்கு, உங்களுக்குன்னு கிடைக்கிற காரணத்தைப் பாருங்கோ. சரி, சரி, நான் தர்ற இன்பர்மேஸனுக்கு, சரியான சன்மானம் வந்துடனும்" என்றார் தான்வி.

' அடி, நீ நேர்மையான ஆபீஸர், என்னடி இப்படி லஞ்சம் கேக்குற" எனக் கேள்வி எழுப்பினார் பாண்டியன்.

" உங்களுக்குத் தான் கடமைனு வந்துட்டா, நேரங்காலம் கிடையாது. இந்த லஞ்சத்துல தான் என் பொழப்பு ஓடுறது" எனச் சலித்துக் கொண்ட தான்வி, ஆபீஸருக்கு ஐடியா தந்து போனை வைத்தாள் சிவராஜ் நஞ்சப்பாவூக்கான ஆப்பு இந்த ஆபீஸர் ஜோடிகளின் மேற் பார்வையில் பிரமாஸ்திரமாக உருவானது.

    தங்கப்பாண்டியன் மங்களூருக்குத் துப்பு துலக்கக் கிளம்பினார். அவர் கேட்ட ஹாசினி , மேனகா,நஞ்சப்பாக்கள் , பசவய்யா மற்றும் முக்கிய நிர்வாகிகள் கால் ஹிஸ்டரி அவர் கைக்கு வந்தது.

     மங்களூருவில் இறங்கிய தங்கப் பாண்டியன், வெடிகுண்டு நடந்த தினத்தில் ஹாசினி சந்திராவின், ஒவ்வொரு மணித்துளியையும் காட்சிப் படுத்தி ஆங்காகே அவளுடைய புகைப்படங்கள், காணொளிகள், சந்தித்த ஆட்கள், ஹோட்டல் சிசிடிவி என அத்தனையம் இணைத்து நிமிடத்திற்கு நிமிடம் ரிப்போர்ட்டை தயாரித்தார். இரண்டு வாகனங்கள் ஹாசினியின் வாகனத்தைத் தொடர்ந்தது தெரிய வந்தது. அதன் என்னை வைத்தும், கட்சிக்காரர்கள் கொடுத்த தகவல்கள் என ஒரு வடிவம் கிடைத்தது.

     இதில் ஹாசினி யுவ்ராஜிடம் பேசியது ஏர்போர்ட் சிசிடிவ் போட்டேஜிலும், கால் ஹிஸ்டரி கொண்டும் உறுதி செய்தனர். அதன் பிறகு தங்கப் பாண்டியன் வேலை இன்னும் வேகமெடுத்தது. ஆனால் அதில் அதிசயமாக ,அவர் தேடிய ஆட்கள் திட்டமிடப் பட்டது போல் அவரிடம் சிக்கினர். அதில் அவருக்கு ஆச்சர்யமும், ஐயமும் ஏற்பட்டது.

     மூன்று நாட்கள் மங்களூரை ஹாசினி கேஸ் விஷயமாகத் தலைகீழாகப் புரட்டிப் போட்டார் தங்கப் பாண்டியன் ஐ.பி.எஸ்.

ஹாசினி சந்திரா-8

 ஹாசினி சந்திரா-8 

           பெங்களூருவில் முதலமைச்சர் இல்லம். முதல்வரை சந்திப்பதற்காகத் தனது கஞ்சி போட்ட காக்கி உடுப்பில் விரைப்பாகத் தோளில் தாங்கியிருந்த பட்டையின் ,நட்சத்திரங்கள் அவர் அந்தஸ்தையும் பேட்ச்கள் வீரத்தைப் பறை சாற்ற மிடுக்காக வரவேற்பறையில் அமர்ந்திருந்தார் அந்த ஐபிஎஸ் அதிகாரி. பணியில் பத்து வருட அனுபவம், அவரது கம்பீரத்தை இன்னும் கூட்டியிருந்தது. முப்பத்தி எட்டு வயது என அவராகச் சொல்லிக் கொண்டாளே ஒழிய வயது தெரியாது. அதிலும் அவருக்குத் திருமணம் ஆனதை அறியாத பல பெண்கள் இன்றும் லுக் விட்டுக் கொண்டு தான் இருந்தனர்.

        ஆட்சிக்கோ, அதிகாரத்துக்கோ வளைந்து கொடுக்காமல், தனக்குச் சரியெனத் தோன்றியதைச் செய்யும் மறத்தமிழன், முறுக்கு மீசைக்காரன், கமிஷனர் கேடரில் இருக்கும் தங்கப்பாண்டியன் ஐபிஎஸ் , முதல்வரை பேட்டிக் காண வரவேற்பறையில் அமர்ந்திருந்தார்.

         தற்போதைக்குக் காபந்து முதலமைச்சராக இருந்தாலும், முக்கியமான கேஜேபார்ட்டியின் தலைவர் எஸ்ஆர்சியின் மகள் படுகொலை என்பதால், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டி இந்தச் சிறப்பு அதிகாரியின் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்தார். அதுவும் பாஸ்ட் ட்ராக் போல் விசாரணையைத் துரிதப் படுத்திப் பத்து நாட்களுக்குள் குற்றவாளி கண்டுபிடிக்கப் பட வேண்டும் என அந்த அதிகாரியைக் கேட்டுக் கொண்டார் அந்த முதல்வர்.

        தற்போது ஆட்சியிலிருக்கும் ஆளுங்கட்சியோடு கூட்டணி அமைத்து அமைச்சரவையிலும் பங்கு பெற்றிருந்தது கேஜேபார்ட்டி. இந்த முதல்வருக்கும் எஸ்ஆர்சிக்கும் நல்ல புரிதல் இருந்தது. ஆனால் ஒரு தேசிய கட்சிக்கு விலை போன நஞ்சப்பா, எஸ்ஆர்சிக்கு பிறகு சாதாரண விசயத்தைப் பெரிதாக்கி, கடைசி ஆறுமாத பதவிக்காலம் இருக்கும் போது கூட்டணியிலிருந்து வெளியேறினார்.

       அதில் முதல்வருக்குக் கோபம் இருந்தது, போதாத குறைக்கு ஹாசினியை வைத்து ஓட்டுப் பிரிக்கும் நஞ்சப்பா மீது தீராத வன்மத்துடன் இருந்தார். எந்த மிரட்டலுக்கும் அடிபணியாத ஐபிஎஸ் அதிகாரியை அழைத்தார்.

        " வாங்க மிஸ்டர். தங்கப்பாண்டியன்" என வரவேற்ற முதல்வர், "முந்தாநாள் நியுஸ் தெரியும்ல ஹாசினி சந்திரா படுகொலை. நீங்க நாலு வருஷம் முன்னாடி எஸ். ஆர். சந்திரா பாதுகாப்பை டீமை ஹேண்டில் பண்ணீங்க. உங்களுக்கு அவரைப் பற்றி ரொம்ப நல்லாத் தெரியும். அதனால் தான் இந்தக் கேஸ்க்கு உங்களை அப்பாயிண்ட் பண்ணியிருக்கேன். கேஸ் ஜெட் ஸ்பீட்ல சால்வ் ஆகனும் " என அர்த்தமாகச் சிரித்தார் முதல்வர்.

          " யெஸ் ஸார். ஐ வில் டூ மை பெஸ்ட்" என வாக்குறுதி தந்தார் தங்கப்பாண்டியன் ஐபிஎஸ். மேலும் சில வாய் மொழி உத்தரவுகள், அதையும் தாண்டிய சிவராஜ் நஞ்சப்பாவைப் பற்றிய முக்கியக் குறிப்புகள் அடங்கிய கோப்பையும் கொடுத்தார் முதல்வர்.

      கிளம்பும் நேரம், " கலெக்டர் மேடம், ஒரு வழியா தமிழ்நாட்டில் செட்டில் ஆகிட்டாங்களா " எனக் கேட்டார். ஒரு புன்னகையோடு, " ஸார், அது உங்க பெருந்தன்மை ,என் மனைவியை  தமிழ்நாட்டுக்கு ரிலீவ் பண்ணீட்டிங்க. தாங்க்யு ஸார். " என்றார் தங்கப் பாண்டியன்.

       ஹாஹாவெனச் சிரித்த முதல்வர், " காவிரியைத் தான் அனுப்ப மாட்டோம். மற்றபடி ஆபீஸர் எல்லாம் சர்வீஸ் முடிச்சு கிளம்பிட்டே இருக்கலாம்" என்றார்.

" அதுவும் மழை நல்லா பொழிஞ்சு, எங்களை மாதிரியே காவிரியும் தமிழ்நாட்டுக்கு வந்துடும் சார்" என்றார் ஆபீஸர். " அப்படியே ஆகட்டும். குட் லக்" என அனுப்பி வைத்தார்.

      விசாரணை செய்யும் ஆணையை வாங்கியவர், அலுவலகத்திற்கு வந்து பொறுப்பெடுத்துக் கொண்டார். கிரிஷ் என்ற உதவியாளருடன் சந்திரபவனத்தை நோக்கிக் கிளம்பினார்.

        நான்கு வருடமாகக் கர்நாடக மாநிலத்தில் பணியாற்றி வருகின்றனர் தங்கப்பாண்டியன் ஐபிஎஸ், மற்றும் அவரது மனைவி தான்வி ஐஏஎஸ். சென்ற வருடம் மனைவிக்கு மட்டும் சென்னைக்கு மாற்றல் கிடைத்துவிட அவர் தனது சொந்த பந்தத்தோடு அடையாரில் மகன் மகளைப் பள்ளியில் சேர்த்துச் செட்டில் ஆகிவிட்டார். இவர் மட்டும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ட்ரைனிலும், ப்ளைட்டிலும் சென்னைக்குப் பறந்து கொண்டிருக்கிறார்.

       கர்நாடகத்தில் முதல் போஸ்டிங்கிலேயே, எஸ்.ஆர்.சி துணை முதல்வராக இருக்கவும், அவரது பாதுகாப்பைத் தங்கப்பாண்டியன் கவனித்துக் கொண்டார். அதனால் வீட்டோடும் அங்கிருக்கும் வேலையாட்கள் வரை நல்ல பழக்கம் உண்டு. ஹாசினியையும் நன்றாகத் தெரியும். நேற்றைய நியுஸ் அவருக்கும் அதிர்ச்சி தான். உடனே மங்களூரு எஸ்பிக்கு போன் அடித்தார். அவர்கள் சொன்ன விவரத்தை மனதில் குறித்துக் கொண்டார்.

       சந்திர பவனம் ஆட்கள் போகவர இருந்தாலும், ஒரு சோகம் அப்பி இருந்தது. அந்த வீட்டையே கலகலப்பாக வைத்திருக்கும் அப்பாவும், மகளும் தான் அங்கு இல்லையே. அதன் வெறுமை தெரியத்தான் செய்தது.

        போலீஸ் வாகனத்தை அதுவும் பழக்கமான அலுவலரைப் பார்க்கவும் வாட்ச்மேன் சல்யூட் அடித்தவன், " சார் என்ன சார் இப்படி. சிக்கம்மாவுக்கா இந்த நிலமை. யாருன்னு கண்டு பிடிச்சு சொல்லுங்க சார். உங்க லத்தியை வச்சே அடிச்சு அவன் முட்டியைப் பேக்கனும் சார்" எனக் கண்கலங்கினார் அந்த விசுவாசமான காவலாளி. தங்கப்பாண்டியன் ஜீப்பை வெளியே நிறுத்த சொல்லிவிட்டு, வீட்டுப் பணியாட்களோடு பேசி, அவர்கள் மனநிலையை அறிந்தபடி, சமீப காலமான நடப்புகளையும் சாமர்த்தியமாகக் கறந்தபடி வீட்டுக்குள் சென்றார்.

       வரவேற்பறையைத் தாண்டிய பெரிய ஹாலில் ஹாசினி படத்தில் மாலையோடு சிரித்துக் கொண்டிருந்தாள். அதன் அருகில் சென்று நின்று பூங்கொத்தை வைத்தவர் ஒரு பெருமூச்சை வெளியிட்டார்.

       பசவைய்யா காலையில் வந்துவிடுவார். இன்றும் வந்து சேர்ந்தார். ஐபிஎஸ் அதிகாரியைப் பார்க்கவும், " சிக்கம்மாவை அநியாயமா பலி கொடுத்திட்டோம் சார்" என வருந்தினார். ஆபிஸரும் அவரின் கையைப் பற்றி ஆறுதல் செய்தவர்.

      " மேடம் ப்ளாஷ்ட் பற்றி விசாரிக்க, சீப்மினனிஷ்டர் என்னை ஸ்பெஷலா அப்பாயிண்ட் பண்ணியிருக்கார். மிசஸ் சந்திரா இங்கையா இல்லை ஹாஸ்பிடல்ல இருக்காங்களா?" என வினவினார்.

      " வீட்டில தான் சார். அண்ணனோட முதல் சம்சாரம் மகனுங்க, மருமகள், தம்பின்னு எல்லாரும் வந்திருக்காங்க" எனப் பசவய்யா விவரம் சொன்னார்.

       சற்று நேரத்தில் ஹாசினியின் குடும்பம், விசாரணைக்கு வந்த அலுவலரைச் சந்தித்தது. மேனகாவுக்கு வணக்கம் சொன்ன தச்கப்பாண்டியன், " ஐயம் எக்ஸ்ட்ரீம்லி சாரி மேம். இப்படி ஒன்னு நடந்திருக்கவே கூடாது. எவ்வளவு அருமையான பொண்ணு. இப்பவும் காலேஜ் போகும் முன்ன , அப்பாவைக் கொஞ்சி சாக்லேட் வாங்கிட்டுப் போன ஹாசினி தான் கண் முன்னாடி நிற்கிது" என ஆபீஸர் தனது துக்கத்தை மேனகாவுடன் பகிர்ந்து கொண்டார்.

       " இப்பவும் அதே ஹாசினி தான் மிஸ்டர் பாண்டியன், உங்களுக்கே தெரியுமே, அவள் அப்பா மேல எவ்வளவு பாசம் வச்சிருந்தான்னு, அவருக்காகத் தான் அரசியலுக்கு வந்தாள். ஆறுமாசத்தில இப்படி ஆகும்னு கனவு காணலையே தம்பி , எலக்சன் முடியவும் அவங்க அப்பாவை வெளிநாட்டுக்கு கூட்டிட்டு போயி வைத்தியம் பார்க்கணும்னு சொன்னாலே " என மேனகா கண்ணீர் விட்டார்.

      " அம்மா, கண்ட்ரோல் யுவர் செல்ஃப். " என அதிபன் சந்திரா மேனகாவுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுத்தான். அவர்கள் தமிழ் பேசும் குடும்பம் என்பதால் ரத்தின சிம்மதேவன், ப்ரதிபன், அதிபனோடு சுலபமாகத் தமிழில் பேசி கலந்து கொண்டார் தங்கப் பாண்டியன். மேனகாவுக்கு, பானுமதியிடமிருந்து போன் வந்தது, அவர் ஒரு எஸ்க்யூஸோடு உள்ளே சென்றார்.

            பசவைய்யாவிடமிருந்து தனது விசாரணையை ஆரம்பித்திருந்தார் ஆபீஸர். இதற்கு நடுவில் அவரது உதவியாளர் கிரிஷ் வீட்டை வலம் வந்து வேலையாட்களிடம் விசயத்தைக் கறந்து அவர்களது பேச்சுக்களை மொபைலில் பதிந்து வைத்திருந்தான். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அப்பாவும் மகனுமாக நஞ்சப்பாக்கள் வந்து சேர்ந்தனர்.

         சிவராஜ் வந்திருக்கும் அதிகாரி யாரெனத் தெரியவுமே, " நல்லா விவகாரம் புடிச்ச தமிழன், செல்வாக்கான குடும்பம், பொண்டாட்டி கலெக்டர், மாமனார் ரிடையர்ட் ஐஏஎஸ், பெரியப்பா ஸ்டேட் மினிஷ்டர். இவன் மேல கை வைக்கவும் முடியாதே. போதாத குறைக்குத் தலைவருக்குச் செல்லப்புள்ளை வேற. அப்பவே ஆடுவான். சிக்கம்மா படுகொலைனா கொலை காண்டில் இருப்பான்' என மனதில் யோசித்துக் கொண்டே தான் வந்தார்.

       அவர்களைப் பார்க்கவும் சம்பிரதாயத்துக்கு முகமன் கூறிய ஆபிஸர், தனக்கு ஹாசினி சந்திரா பாம்ப்ளாஸ்ட்டை விசாரணை அதிகாரியாகச் சிம் நியமித்து உள்ளதைச் சொன்னார். ஆனால் கடமையாற்ற வந்துள்ளவனின் முகத்திலிருந்து எதையும் அறியமுடியவில்லை.

          அதைக் கேட்ட சிவராஜ் முதலில் அதிர்ந்தவர் பின் , " பரவாயில்லையே, இவ்வளவு சீக்கிரம் விசாரணை கமிஷன் போட்டாச்சா. முதலைமைச்சர் அதனால என்ன நிருபிக்க நினைக்கிறார்னு தெரியலையே" எனக் குதர்க்கமாகவே பேசினார். யுவராஜ் அமைதியாக நின்ற போதும், அவன் முகத்தில் தெரிந்த அப்பட்டமான அதிர்ச்சியை அவனறியாமல் கண்டுவிட்டார் தங்கப்பாண்டியன்.

        " அவர் இந்தக் கேஸ்க்கு என்னை அப்பாயிண்ட் பண்ணலைனாலும், நான் இன்வஸ்டிகேட் பண்ணியிருப்பேன் ஸார். " எனக் கூலாகப் பதில் தந்தார் ஆபீஸர்.

        பிரதிபன், அதிபன், ரத்தன் மூவருமாக நஞ்சப்பாக்கள், பசவைய்யா ஆகியோரை வைத்துக் கொண்டே ஒரு கோரிக்கை விடுத்தனர். ரத்தன் தான் பேசினார், " ஸார் ஒரு ரிக்வெஸ்ட், ஹாசினியை படுகொலை செஞ்சவனுக்குக் கட்டாயம் தண்டனை வாங்கிக் கொடுக்கனும். அதுக்கு எங்களுடைய முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். அதே சமயம், எஸ்.ஆர்.சி யோட ஹெல்த் பாயிண்ட்டை வச்சு பார்க்கும் போது, இங்க இருந்தால் அவருக்கு ஆபத்து தான்" எனக் குண்டைத் தூக்கிப் போட்டார்.

        நஞ்சப்பா, பசவய்யா முதற்கொண்டு ஆபிஸருமே அதிர்ச்சியாகப் பார்க்கவும், " டோண்ட் மிஸ்டேங் ஹிம். மாமா என்ன சொல்ல வர்றார்னா, ஹாசினி இல்லைங்கிற செய்தி அப்பா காதுக்குப் போனால் அது அவருடைய உயிருக்கு ஆபத்துன்னு நேற்று டாக்டர் சொன்னதைத் தான் அப்படிச் சொல்றார்" என விளக்கம் தந்தான் ப்ரதிபன்.

        " ஆமாம், ஆமாம் அது தான். அதனால நாங்க எஸ். ஆர்.சியையும், மேனகாவையும் எங்களோட மஸ்கட் கூட்டிட்டு போறோம். அதுக்குள்ள உங்க விசாரணையை முடிச்சிக்குங்க. மீதி அங்கிருந்தே ஒத்துழைப்பு தர்றோம்" என்றார் ரத்தினம்.

     " கட்டாயம் சார். என் பக்கத்தில் எந்தப் பிரச்சனையும் வராது. நான் முழு ஒத்துழைப்பு தர்றேன்" என்றார் ஆபிஸர். சிவராஜ், " ஸார், அதெப்படி சட்டுனு எல்லாத்தையும் விட்டுட்டு கிளம்ப முடியும்" எனக் கேள்வி எழுப்பினார்.

         " ஏன் சார் இவ்வளவு காலம் அப்பா உழைச்சதெல்லாம் பத்தாதா. எல்லாத்தையும் உங்கள்ட்ட விட்டுட்டு அப்பாவை மட்டும் தானே கூட்டிட்டுப் போறோம்" என்றான் அதிபன்.

        " தம்பி அதுக்குச் சொல்லலை, கட்சி பாலிசி , சொத்து நிறைய விசயம் இருக்கு. பொதுக்குழு கூட்டித் தான் இதுக்கு முடிவு எடுக்க முடியும். தேர்தலை வச்சுகிட்டு அது முடியாது" என்றார் நஞ்சப்பா.

         " அப்பா இருக்கிற வரை அவர் தானே தலைவர். தேர்தலில் ஜெயிக்கிறவங்க சட்டமன்ற தலைவரை தேர்ந்தெடுத்துக்குங்க. துணைத் தலைவர், செயற்குழு உறுப்பினர் கள் சேர்ந்து மற்றதை முடிவு பண்ணுங்க" என ப்ரதிபன் சொன்னான்.

           பசவய்யா சிவராஜை அமைதியாக இருக்கச் சொன்னார். ஆபீஸரை வைத்துக் கொண்டு பேச அவர் விரும்பாமல் சிவராஜ் நஞ்சப்பா வாயை மூடிக் கொண்டார். அந்தப் பேச்சு அப்படியே நின்றது.

      மேனகா, போன் பேசி முடித்து வந்திருந்தார். " பாண்டியன் தம்பி உங்களுக்கு என்ன விவரம் வேணும்னாலும் எப்பனாலும் எனக்குப் போன் பண்ணுங்க. நான் சொல்றேன். ஆனால் ராம்ஜி கூட இருந்தால் எடுக்க மாட்டேன். நானே திரும்பக் கூப்பிடுறேன். அர்ஜெண்டா அவங்களைப் பார்க்க போகணும் " என்றவர்.

          " அதிபா, அப்பாவைப் பார்க்க வர்றீங்களா. அக்கா போன் அடிச்சிட்டாங்க." எனப் பானுமதி அழைத்த விவரத்தைக் கூறினார். அதிபனும் மற்றவர்களிடம் சொல்லி விட்டுக் கிளம்பவும். தங்கப்பாண்டியன் சிவராஜிடம் அன்று நடந்தவற்றைக் கேட்டுக் கொண்டார். " காலையில் நானும் என் மகனுமா தான் வந்து சிக்கம்மாவை வழி அனுப்பி வச்சோம். இப்படிப் போகும்னு தெரியாமல் போச்சே" எனப் புலம்பினார். யுவராஜ் வாயையே திறக்கவில்லை.

         " ஓகே சார். நான் மேங்களூர் போயிட்டு வந்து உங்களைச் சந்திக்கிறேன்" எனத் தனது உதவியாளருடன் கிளம்பி விட்டார் தங்கப்பாண்டியன் ஐபிஎஸ். தனது உதவியாளர் கிரிஷ்க்கு சிலருடைய மொபைல் நம்பர்களின் கால் ஹிஸ்ட்ரி வேண்டும் எனக் கட்டளையிட்டார்.

         " ஸார், எதுவும் பிரச்சனை ஆயிடாதே. எல்லாம் பொலிடிகல் பேக்ரவுண்ட். அடுத்து ஆட்சிக்கு வருவாங்கன்னு பேசிக்கிறாங்க. நம்மளை ரவுண்டு கட்டிடப் போறாங்க" எனக் கவலையாகச் சொல்லவும், அவனைத் திரும்பி ஒரு லுக் விட்ட பாண்டியன், " கட்சி ஆட்சிக்கு வரட்டும். ஆனால் யாரு நாற்காலியில் உட்கார்றதுன்னு நாம முடிவு பண்ணுவோம். அப்பாவும் மகனும் பெரிய தில்லாலங்கடியா இருக்கானுங்க" என்றவர். அடுத்து ஒரு டாக்டருக்கு போன் செய்தார். அதன் பிறகு அன்று இரவு மங்களூரு செல்லவும், தங்குவதற்கு ஹாசினி தங்கியிருந்த ஹோட்டலில் ரூம் போட சொன்னார். மதுரைக்காரச் சிங்கம் கிளம்பிடுச்சு. இனி மாட்டப் போவது நஞ்சப்பாக்கள் மட்டுமா அல்லது சுஹானா தீவில் குடி அமர்ந்திருக்கும் அரக்கனுமா எனப் பார்க்க வேண்டும்.

        அதிபன் சந்திரா, மேனகா சந்திரா இருவருமாக மருத்துவமனையில் சந்திராவின் அறையை நோக்கிச் சென்றனர். இவர்கள் காரிடாரில் நடக்கும் போதே எஸ்.ஆர்.சி சிறுவனாக மாறி கதறிக் கொண்டிருந்தார்.

       " பானு இதுக்கு மேல என்னால சாப்பிட முடியாது. என்னை விட்டுடு" எனக் கெஞ்சிக் கொண்டிருந்தார் சந்திரா.

        " சரி போங்க, நான் சொன்னதை எப்ப கேட்டு இருக்கீங்க. இந்தச் சாப்பாடு விஷயத்தில் கேக்குறதுக்கு. எல்லாம் உங்க பிடிவாதம் தான். உங்களுக்கு என்னைக்குத் தான் என்னைப் பிடிச்சிருந்தது. நான் தான் உங்களைக் கட்டுவேன்னு பிடிவாதமா இருந்து கல்யாணம் கட்டிக்கிட்டேன். நீங்க தான் முதல் இராத்திரியிலேயே, எங்க அண்ணனோட நட்புக்காகத் தான் என்னைக் கட்டினதா சொன்னீங்களே. அவள் வரட்டும் நான் வீட்டுக்கு போறேன்" என முறுக்கிக் கொண்டிருந்தார் பானு.

          " பானும்மா, அது விளையாட்டுக்குச் சொன்னது. நீ இன்னும் அதை மறக்கலையா , உண்மை சொல்லட்டா. வீரா கூட உன் வீட்டிலையே வந்து உட்கார்ந்து இருக்கிறதே, இந்தத் தேவதையோட தரிசனத்துக்குத் தானே. " எனக் குழைந்தார். மேனகாவும், அதிபனுமாக வெளியே நின்று இவர்கள் சம்பாஷனையைக் கேட்டு கண்ணால் பேசிக் கொண்டனர். அதி உள்ளே செல்ல முயன்றவனை மேனகா தடுத்து அங்கேயே நிறுத்தினார்.

      " சும்மா பொய் சொல்லாதீங்க. உங்களுக்கு என்னை விடச் சினிமாவும், அரசியலும் தான் முக்கியம்" என்றார் பானு. " உனக்கு இரண்டைக் குடுத்துட்டு உன்னைப் பிசியாக்கிட்டு தானே, அந்த இரண்டு பின்னாடியும் போனேன்" எனச் சிரித்தார் சந்திரா.

      " பேசற பேச்சைப் பாரு, சரி உங்க வழிக்கே வர்றேன். அந்த இரண்டும் இப்ப ரொம்பப் பிஸி ஆகிட்டாங்க. அவங்க குடும்பம் ஆகிடுச்சு. இப்ப என்ன செய்ய" என்றார் பானு.

       " மேனு நான் என்ன வேலை செஞ்சிட்டு இருந்தேன்" எனப் பானுவையே கேட்டார் சந்திரா. பானு சமாளிக்கத் தடுமாறினார், மேனகா சரியாக உள்ளே புகுந்து விட்டார். " ராம்ஜி, யாரு வந்திருக்கா பாருங்க" எனப் பேச்சுக் கொடுத்துக் கொண்டே உள்ள செல்லவும், இவர்களைப் பார்த்தவர் கேள்வியை மறந்தார்.

          "அதிக்குட்டி வாடா" எனத் தனது அருகில் உட்கார வைத்துக் கொண்டார். அவர் அப்போது தான் சாப்பிட்டுத் தட்டில் கைகழுவி இருந்தார். மேனகா அதனைச் சுத்தம் செய்ய எடுத்துச் சென்றார். பானுமதியும் மேனகா பின்னோடு சென்றார். அதிபனுக்கும் அறிவுறுத்திக் கூட்டி வந்திருந்ததால் அப்பாவை ஒத்தே அவனும் பேசினான்.

       சுஹானா தீவு அன்றைய பொழுது ஹாசினியை தேடுவதில் ஆரம்பித்து அவளைக் காப்பாற்றிக் குளிக்க வைத்து, மருந்து போட்டு எனச் சென்றது. காலையில் பவனை அழைத்துச் சென்ற அவர்களது பாஸ் அரக்கனும் மதியத்துக்கு மேல் திரும்பி வந்தனர். ப்ரீத்தி ரெடிமேட் புலாவ் போல் எதையோ பொங்கி வைத்திருந்தாள். நால்வருமாக உட்கார்ந்து சாப்பிட்டனர்.

       ஹாசினி முகத்தை அவ்வப்போது சுழித்துக் கொண்டு இருந்தாள். "ஆர் யூ ஆல்ரைட்" எனத் தனது கூர்மையான கண்களை அவள் மேல் செலுத்திக் கேட்டான் அரக்கன்.

        " நாட் ஆல்ரைட், இட் இஸ் பெயினிங். " என எரிச்சலாகப் பதில் தந்தாள் ஹாசினி. " ப்ரீத்தி, மருந்து கொடுத்தேனே வச்சு கட்டுனியா" என்றான். ப்ரீத்தி தலையை ஆட்டினாள். இன்னும் கொஞ்சம் இலைகளைப் பறித்து வந்து தயார் செய்து வைத்தான்.

    "உன் மெடிக்கல் கிட்ல பெயின்கில்லர் இருந்தா எடுத்துக் கொடு. போட்டுட்டு தூங்கட்டும்" என ப்ரீத்தியிடம் அவளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். அவனையே பார்த்திருந்தவள்,

         " அரக்கன் ஸார், நீ பாட்டுக்கு என்னை இந்தத் தீவுக்குக் கடத்திட்டு வந்திட்டியே. இந்தச் சின்னப் பூச்சிக்குப் பதில் பெரிய பூச்சி கடிச்சு பொட்டுனு போயிருந்தேன்னா என்ன செய்வ" எனக் கேள்வி எழுப்பினாள்.

          அவனுக்குக் கோபம் பலியாக வந்தது, " இடியட் மாதிரி நீ வேலை செய்யாமல் இருந்தாலே போதும். இங்கே வேற ஆபத்துக்கிடையாது. நான் மட்டுமே கூட இங்க வந்து போயிட்டு தான் இருக்கேன். உயிரோட தானே இருக்கேன்" எனக் கனலாக வார்த்தையைக் கொட்டினான். அவள் முகம் விழுந்து போனது.

        " ஆமாம் நான் ஒரு இடியட் தான். கூட இருக்கிறவங்களை நம்பி, நம்பி ஏமாந்து போற இடியட். எங்கப்பா மாதிரி சுத்தியிருக்கவங்களை நல்லவங்கன்னு நம்பறது எங்க முட்டாள்தனம் தான். " எனச் சிடுசிடுத்தவள் எழுந்து காட்டேஜூக்குள் சென்று விட்டாள். அவனும் அதே கோபத்தோடு தனது மலையிலிருக்கும் மர வீட்டுக்குச் சென்று விட்டான்.

      ப்ரீத்தி சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். பவன் அவளுக்கு உதவி செய்து கொண்டே அவளை உற்சாகப் படுத்தினான். " பவன், என்னால தான் நீயும் கஷ்டப்படுற. ஐ யம் சாரிடா" என உருகினாள் ப்ரீத்தி.

          " ஹேய் பேபி, நானே அநாதையா திரிஞ்சவன், உன்னால எனக்கும் அம்மா, பேமலி எல்லாம் கிடைச்சிருக்கே. இட்ஸ் ஓகே. " என்றான்.

       "அப்புறம் ஏன் பாயி கூடச் சண்டை போடுற" என்றாள். " அது அப்படித் தான். அவர் சொன்னோன்ன ஒத்துக்கிட்டேன்னா எனக்கு உடம்பு சரியில்லாமல் போயிடும்" எனச் சிரித்தவன், மற்ற இருவரும் அருகில் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு ப்ரீத்தியை மற்றொரு காட்டேஜூக்கு கடத்திச் சென்றான்.

    " பவன் வேண்டாம் ப்ளீஸ், பாயி டக்குனு வந்திடுவார். எனக்குச் சங்கடமா போகும். " என ஆட்சேபித்தாள்.

     " ஹேய் பேபி, உன்னை என்னடி பண்ணப் போறேன். அந்த அளவுக்கு எல்லாம் நான் வொர்த் இல்லை. அதுவும் அரக்கன் ஸாரை பக்கத்தில் வச்சுக்கிட்டு செய்வேனா." எனக் கொஞ்சிக் கொண்டிருந்தான்.

      அவன் கையில் அடித்தவள், "உனக்கும் அரக்கன் ஸாரா. அவங்க தான் தெரியாமல் சொல்றாங்க. உனக்கென்ன" என்றாள் ப்ரீத்தி.

       " ஹேய் பேபி , உசுரோட இருக்கிற பொண்ணை, பாம் ப்ளாஸ்ட்ல செத்துட்டதா ஊரை நம்ப வச்சு கடத்திருக்காரு. அவருக்கு இந்தப் பேரு சரியான மேட்ச் தான்" என அவள் காதில் கிசுகிசுத்தான் பவன

     ப்ரீத்தி அதிர்ச்சியில் வாயைப் பொத்திக் கொண்டாள். "நீ அன்னைக்கு, நாங்க தான் செத்துட்டமேன்னு சொன்னியே அதுக்கு இது தான் அர்த்தமா. அப்ப உலகத்தைப் பொறுத்தவரை நம்மளும் உயிரோட இல்லை"என அவள் கேள்வி எழுப்பவும்.

         " ஏய் பேபி, ப்ரீத்தி பவன் தான் இல்லை. நாம இருக்கோம்" என்றான். " ஆமாம்ல, நம்ம போனும் அதிலையே போயிடுச்சே. நீ கையில வச்சிருக்கிறது புதுசா" எனக் கேள்வி எழுப்பினாள். "ஹேய்  ஸ்வீட்டி பவனோட போன் போச்சு. என்னோடது இருக்கு" என்றான். "அப்புறம்" என்றாள் ப்ரீத்தி.

         "நான் என்ன கதையா சொல்றேன். உன் பாயி , இந்த மேடத்தை யார்கிட்டையோ, இவங்களை ஒப்படைக்கனும்னு சொல்றாரு. ஆனால் செய்யறதெல்லாம் வேறையா இருக்கு. மனுசன் மண்டைக்குள்ள என்ன ஓடுதுன்னே தெரியலை. போலீஸ் மோப்பம் பிடிக்கிறதுக்குள்ள இங்கிருந்து தப்பிக்கனும். பார்ப்போம்" என்றான்.

    " போலீஸா" ப்ரீத்தி ,"அப்புறம் கடத்துறது, ஆள் மாறாட்டம் ,இதெல்லாம் கேற்றம் இல்லையா, உன் பாயி எவ்வளவு செல்வாக்கான ஆளா இருந்தாலும் கம்பி எண்ண வச்சுருவாங்க. நம்மளையும் சேர்த்து தான். ' என்ற பவனின் வார்த்தகளை கேட்டதில் பயத்தில் ப்ரீத்தி அவனோடு ஒண்டிக் கொண்டு கொண்டாள் .பவனுக்குக் கொண்டாட்டமாக இருந்தது.

        ஹாசினி மாத்திரையைப் போட்டுப் படுத்தவளுக்குக் காய்ச்சல் அடித்தது. சந்திரன் உதயமான பிறகு, ஹாசினி சந்திராவின் உடல் வெப்பம் கூடிக் கொண்டே போனது. ப்ரீத்தி தண்ணீரில் துணி பட்டியை நனைத்து நெற்றியில் போட்டுக் கொண்டே இருந்தாள். காலிலும், தொடையிலும் புதிதாக அரைக்கப் பட்ட குப்ப மேனி இலையை வைத்துக் கட்டினர்.

     " பாயி, அவங்க சொன்னது மாதிரி எதுவும் ஆகாதில்ல" எனக் கண்ணீர் விட்டாள் ப்ரீத்தி. " ஹேய், என்னடா சின்னப் பிள்ளையாட்டம். அண்ணன் மேல நம்பிக்கை இல்லையா. எனக்கே ஒரு தடவை பூச்சி கடிச்ச அனுபவம் உண்டு. நீ பயபாபடாத" என்றான் அரக்கன் ஸார்.

        ப்ரீத்தியும் கொஞ்சம் தள்ளாடுவது போல் தெரியவும், பவனை அழைத்து அவளைக் கூட்டிக் கொண்டு செல்லச் சொன்னான். " இல்லை பாயி. நான் மேமோடையே இருக்கேன். அவங்களுக்கு எதாவதுன்னா என்னால தாங்க முடியாது" என்றாள் ப்ரீத்தி.

        " நைட் நான் பார்த்துக்குறேன். காலையில் நீ பாரு. நீயும் படுத்துக்கிட்டா எங்களுக்கு யாரு பார்ப்பாங்க" எனப் பவனோடு அடுத்தக் காட்டேஜுக்கு அனுப்பி வைத்தான். பவன் ஒரு பெரிய குவளையில் ஓட்ஸ் கஞ்சியைக் கொண்டு வந்து தந்து விட்டுப் போனான்.

          ஹாசினி ஒரு கட்டிலில் அடியற்ற மரம் போல் கிடந்தாள். பூச்சி கடித்ததின் விளைவு, தானே அனுபவித்து இருப்பதால் பயமின்றித் தான் இருந்தான் அரக்கன் ஸார். ஆனாலும் அவள் படும் வேதனை தாங்க முடியாமல் முகத்தைக் கடுகடுவென வைத்திருந்தான்.

        அவளை எழுப்பித் தன் மேல் சாய்த்துக் கொண்டு மெல்ல ஓட்சை குடிக்க வைத்தான். அவள் வேண்டாம் என மறுத்த போதும், சமாதானப் படுத்தி அதனைப் புகட்டி விட்டான்.

       " ம்ப்ச் , வேண்டாம்னா விடேன். எல்லாத்துலையும் உன் பிடிவாதம் தான் ஜெயிக்கனுமா" எனச் சலித்துக் கொண்டாள். " உன் பிடிவாதத்துக்கு விட்டா, எல்லாத்தையும் இழுத்து வச்சுக்குவ" எனக் கடிந்தான்.

       "ஆமாம், அரக்கன் பிடிவாதத்துக்குத் தான் நான் அவதிப்படனும். போடா" என அவன் மீதே மயங்கினாள். கன்னத்தைத் தட்டி, " மது ஒன்னும் இல்லை. சும்மா பூச்சி கடித்ததுக்குக் காய்ச்சல் அவ்வளவு தான். நீ நல்லா இருக்க. பயப்படாத. யூ ஆர் சேஃப்" என்றான்.

" அப்பா, அம்மா, சேஃபா" எனப் புலம்பலாக வந்தது வார்த்தை. " மது , எவ்ரித்திங்க் இஸ் பைன். பயப்படாத. அவங்களை யாரும் எதுவும் செய்ய மாட்டாங்க." என்றான்.

"அப்பாவை காப்பாத்தனும். " என உளறலாகவும் கூட மீண்டும் அந்த ஒன்றை மட்டுமே புலம்பினாள். அவள் மனரீதியாக எவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது.

        காய்ச்சல் அதிகமாகவும், அவளின் உடல் தூக்கிப் போட்டது. அருகே அமர்ந்து கெட்டியாகப் பிடித்துக் கொண்டவன், தனக்காக வைத்திருந்த போர்வையையும் போர்த்தி விட்டு, அழுத்திப் பிடித்துக் கொண்டான். குளிர் நீர் பட்டியை மாற்றி மாற்றி நெற்றியில் போடவும் சூடு இறங்கியது. சற்று நேரத்தில் அவள் மேனி சில்லென மாறியது. அரக்கனே பயந்து தான் போனான். 

        அவளது உள்ளங்கால், கையை மாற்றி மாற்றிப் பரபரவெனத் தேய்த்து விட்டான். சட்டெனக் குளிரும் உடல் சூட்டை ஏற்ற வேண்டும் என யோசித்தவன், தான் ஒரு முறை வந்த போது என்ன செய்தோம் என யோசித்தான். அந்தச் சமயம் அவன் தேவதாசாக மாறி வந்திருந்தான். ஆனால் அதுவே தான் இந்தக் குளிரைத் தாக்குப் பிடிக்க உதவியது என எண்ணியவன், தனது உடைமையிலிருந்து சிறு டின்னை எடுத்து வந்தான். அதிலிருந்த மதுவை மதுவுக்குப் புகட்டினான். அது உள்ளே போகவுமே உடலின் வெப்பம் சீரானது. அவளது நாடியைப் பிடித்துப் பார்த்தவன் அது சரியாக இருக்கவும் திருப்தியற்றவனாகத் தனக்கான படுக்கைக்குச் செல்ல முற்பட்டான்.

         "சந்திரா, நீ என்னை மறக்கவும் இல்லை, கைவிடவும் இல்லைல. எனக்குத் தெரியும் யு லவ் மீ" என்றாள் ஹாசினி. அவளை விட்டு விலகி தனது படுக்கைக்கு வர இருந்தவன் அதிர்ச்சியாக அவளைப் பார்த்து நின்றான் அரக்கன்.

        அவள் கண்ணைத் திறவாமலே தன்னவனோடு மகிழ்ந்திருந்தாள். "நீ என் கூடப் பேசினாலோ, விளையாடினாலோ மாமிக்குப் பிடிக்காதே சந்திரா. அப்புறம் ஏன் வந்த , மாமி உன்னைத் திட்டுவாங்க. நீ போயிடு. நான் சமாளிச்சுக்குவேன்" என்றாள் ஹாசினி. அவன் நம்ப இயலாத பாவனையோடு அவளருகில் கட்டிலில் அமர்ந்து அவள் முகத்தையே பார்த்திருந்தான். அவன் கைகள் தன்னால் சென்று அவளின் முகத்தை வருடின. அந்தக் கையைப் பிடித்துக் கொண்டு, ஒருக்களித்துப் படுத்தவள், "சந்திரா. என்னோட சேர்ந்தா உனக்கும் கஷ்டம் தான். நீ போயிடு "எனப் புலம்பியபடியே நன்றாக உறங்கி விட்டாள்.

         அவன் மெல்ல தன் கைகளை உருவி கொண்டு, அவள் நெற்றியில் முத்தமிட்டவன் "போயிடு போயிடுனா, உன்னை விட்டுட்டு எங்கடி போவேன். உனக்குத் தான் வேற பக்கம் நினைப்பு போயிடுச்சு. நீயா நான் கிடைக்க மாட்டேன்னு முடிவு பண்ணிட்ட. எங்க போய்ச் சிக்கியிருந்தேன்னு கூட உனக்குத் தெரியாது. பிரச்சாரம் பண்ணி எலக்சன்ல ஜெயிச்சா விட்டுடுவானுங்களா. நீ தங்க முட்டையிடுற வாத்துடி. ஆனாலப் பட்ட எஸ் ஆர் சந்திராவையே, அவனுங்க கஷ்டடில வச்சிருக்கானுங்க. நீ எம்மாத்திரம்.

        உன் முழு வாழ்க்கையையும் அவனுங்க கன்ட்ரோல போயிருக்கும். அதுக்காக இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கனுமா. என் அடையாளத்தையே அழிச்சிட்டியேன்னு நாளைக்கு என் கூடச் சண்டை போடுவ. வெறுக்கக் கூடச் செய்வ. ஆனால் அதைப்பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை. நீ நினைச்ச நிம்மதியான வாழ்க்கையை அமைச்சுத் தரவேண்டியது என் கடமை . அதுக்காக எந்த இல்லீகல் வேலை செய்யவும். இந்தச் சந்திரா தயங்க மாட்டேன்டி குண்டு கோஸ்" என்றவன்.

         "சின்னதில் கன்னமெல்லாம் கொழு கொழுன்னு ஆப்பிள் மாதிரி கடித்துச் சாப்பிட ஆசையா இருக்கும். இப்ப பாரு ஸ்டைலிஸ் ப்யூட்டியாகிட்ட. என்னை உயிரோட கொல்றதுக்கே பிறப்பெடுத்தவடி நீ " என அவளையே ஆசையாகப் பார்த்திருந்தான்.

       " அம்மாடி, உன்கிட்ட பேசவே கூடாது. ஒரு வார்த்தை தெரியாமல் வந்துடுச்சு அதுக்கே நான் யாருன்னு கண்டு பிடிச்சிட்டியே. " என அவளைச் சிலாகித்தவன் அவள் நெற்றியில் மீண்டும் முத்தமிட்டான். அவள் "ம்" எனச் சுயநினைவு இன்றியே மகிழ்ந்து திரும்பிப் படுத்ததில் அவனது தாடி பிய்ந்து கொண்டு வந்தது. அதை மொத்தமாக எடுத்தவன். தனது விழியில் இருந்த செயற்கை லென்ஸையும் எடுத்தான். அதே முகம் பெங்களூரு மங்களூரு விமானத்தில் பேப்பரை விரித்தபடி அவளை நோட்டமிட்டு வந்த, பேப்பர் படிக்கிற பரதேசி தான் அதே சி.பி தேவ். 


Sunday, 23 May 2021

சிந்தா-ஜீவா நதியவள் -3

சிந்தா-ஜீவா நதியவள்-3  

        முற்பகல் வேலையில் சிந்தாவின் தகப்பன் அய்யனார், பேரன் சத்திய மூர்த்தியை அழைத்துக் கொண்டு, ஊருக்கு நடுவிலிருக்கும் பெருமாயி டிபன் கடைக்கு வந்தார் . அங்குக் காலையில் பணியாரம், போண்டா, இட்லி, ஆப்பம் எனச் சுட ஆரம்பிக்கும் அந்த ஐம்பதைக் கடந்த பெண்மணி, மதியத்துக்குச் சாப்பாடு பொட்டலத்தோடு ஆமவடை, ஊறுகாய் வைத்துக் கட்டித் தரும். மாலை நேரம் வடை, பஜ்ஜி என எந்த நேரமானாலும் சாப்பிட ஏதாவது இருக்கும். அந்த ஊர் பொடிசுகளிலிருந்து, பெரிசுகள் வரை ஆண், பெண் அத்தனையும் எதையாவது வாங்கி வாயில் அதக்கிக் கொண்டு தான் செல்வார்கள்.

        " ஏய் தாத்தோய், எனக்கு எல்லாத்திலையும் இரவ்வண்டு வாங்கிக் கொடு. இங்கனையே உட்கார்ந்து திண்டுட்டு போயிடுறேன். அம்மா பார்த்துச்சுனா வையும்" என்றான் சாமர்த்திய காரன் மகன் சத்தியமூர்த்தி.

    " ஏலேய், நீ மதியத்துக்கு ஒழுங்கா சோறு சாப்பிடலையின்னாலே உங்க ஆத்தா கண்டுபிடிச்சிடும். இதில எங்கூடத் தானே ரகசியமா கூட்டணி போடுறவன்" எனப் பேரனைத் திட்டினாலும், அவன் கேட்டபடியே வாங்கிக் கொடுத்தார் பாசக்காரத் தாத்தா.

       " ஏன் அண்ணேன் , பேரனுக்கு வாங்கிக் கொடுக்காம யாருக்குச் சேர்த்து வைக்கப் போற' எனக் கை தன்னைப் போல் வேலை செய்து கொண்டே அய்யனாரை வினவினார் பெருமாயி.

        " அட நீ ஒருத்தி, உனக்கே தெரியும், நான் புள்ளைகளுக்கே செய்யவே கணக்கு பார்க்க மாட்டேன், பேரப் புள்ளைகளுக்கா திங்கிறதுக்கு வாங்கித் தர மாட்டேன்னு சொல்லுவேன். இவன் பொல்லாத வாலுப் பய, என் கூட இங்க வந்து வாங்கித் திங்கிறானா, மாமன் கூட வடக்காலப் போய்த் தின்னுட்டு வருவான். அவுங்க அப்பன் கூடப் போய் ரோட்டுக் கடையில பாக்கெட்ல அடைச்ச சமாச்சாரமா வாங்கித் தின்பான். கடைசியில் சோறு திங்க மாட்டேன்கிறான்னு, இவுங்க ஆத்தா எங்க எல்லாரையும் சேர்த்து பேசுவா" எனத் தங்கள் வீட்டுப் பஞ்சாயத்தைக் கடையில் பேசிக் கொண்டிருந்தார் அய்யனார்.

       " எல்லாப் புள்ளைகளும் அப்படித்தான்னே இருக்குது. இந்தா நான் இத்தனை சுட்டு அடுக்குறேன், என் பேரன் நீ சொன்ன மாதிரி பாக்கெட்ல உள்ளது என்னதோ கிருக்கோ, முறுக்கோ அதை வாங்கித் தின்றான். " எனத் தன் பங்குக்கு அங்கலாய்த்தார் பெருமாயி

        "அப்பத்தா கிழவி, அதுக்குப் பேரு குர்குரே " என்றான் சத்தியமூர்த்தி. “அப்படியா ராசா, நீ சொன்ன சரி தான் “ என்ற பெருமாயிக்கு, இவன் ஆத்தாளைக் கட்டியிருந்தாலும், என் மகன் உறுப்புட்டு இருப்பான், எங்க திரியிறான்னே தெரியலை, அவனால பொம்பளை புள்ளையுமில்லை வாழாவெட்டியா நிக்குது ‘ என மனதில் நொந்து கொண்டார்.

         ஊருக்கே தெரியும், சண்டியராகத் திரிந்த சிங்காரவேலு, இப்போது குடும்பஸ்தனாக மதிப்போடு இருப்பது, சிந்தாவினால் மட்டுமே சாத்தியமானது என்பது தெரியும். அது மட்டுமின்றிப் பெருமாயி மகன் சோமு சிந்தாவிடம் வம்பு செய்ததும் தெரியும், ஆனால் நாள் போக்கில் சிந்தா பெருமயியிடமோ , அவரது மகள் ராசாத்தியிடமோ அதனைக் காட்டிக்கொள்ள மாட்டாள். மாறாக வாழாவெட்டியாய் நிற்கும் ராசாத்திக்கு மகளிர் குழு லோன் வாங்குவது, மற்ற அரசின் நலத்திட்டம் தொடர்பான வேண்டிய உதவிகளைச் செய்தாள்.

      " பார்த்தியில்லை, முளைச்சு மூணு இலை விடலை அதுக்குள்ள நம்மளை திருத்துங்க. காலங் கெட்டுக் கிடக்கு. " என்றார் அய்யனார்.

           “ஆனால் விவரமா இருக்குதுங்க, நம்மளை மாதிரி வெள்ளந்தியா, வெளுத்ததெல்லாம் பாலுங்கிற சங்கதி இதுக்கங்க கிட்ட கிடையாது. அதுவும் நல்லது தான்.” எனப் பெருமாயி இந்தத் தலைமுறையைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க, ஆண்டிச்சி கிழவி , பெரிய வீட்டு விவரம் சேகரித்து , நாலு இடம் பரப்பி அங்கு வந்து சேர்ந்தது.

        அய்யனார், பெருமாயிடமும், “ ஆறு மாசபுள்ளையோட சின்னவரு பொண்டாட்டியைத் தனியா விட்டுபுட்டு மதுரையிலிருந்து வந்திருக்காரு, என்னெண்டு தெரியுமா.“ என வினையமாகக் கேள்வி கேட்டது.

        “ நீ தான் நம்மூரு ரேடியா பொட்டி, உனக்குத் தெரியாமலா எங்களுக்குத் தெரிய போகுது, அதையும் சொல்லிட்டு போ, இல்லையினா உனக்கு மண்டைக்குள்ள கொடையுமே” என்றார் பெருமாயி. அய்யனார் வேடிக்கை மட்டும் பார்த்தார், அத்தை முறையாகும் இந்தக் கிழவியிடம் எப்போது தள்ளியே இருந்து கொள்வார்.

       “மகளை இங்க விட்டுட்டு போயி , பெண்சாதிக்கு ஏதோ வைத்தியம் பார்க்க போறாங்களாம், என்னாவா இருக்கும்” என அய்யனாரையும் ஆராய்ச்சி பார்வையோடு பார்த்தார் ஆண்டிச்சி.

       இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, பெரிய வீட்டில் தற்போது பண்ணையம் பார்க்கும் கருப்பன் வந்தான். அய்யனாரிடம் , " ஏய் சித்தப்பு உன்னைப் பெரிய வீட்டு ஐயா கூட்டிட்டு வரச் சொன்னார்" என்றான். அதில் சற்றே குழம்பிய அய்யனார், "அவுகளுக்கும், நமக்கும் தான் ஒன்னும் இல்லையே, எதுக்குக் கூப்புடுறாங்க " எனக் கருப்பனிடமே கேட்டார்.

      ஆண்டிச்சி காதை தீட்டிக் கொண்டார்,.“கிழவி, சீக்கிரம் வந்தா தான் சோறுன்னு, உன் மருமகள் சொல்ல சொல்லுச்சு, இல்லையினா பானையைக் கவுத்திடுமாம்” என ஒரு இளவட்டம் ஆண்டிச்சிக்குச் சொல்லிச் செல்ல, பெரு மாயியிடம்,இரண்டு வடையை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு நடையைக் கட்டிய கிழவி, சாயந்திரம் ஒரு நடை சிந்தா வீட்டுக்குப் படையெடுக்கும் திட்டத்தை என மனதில் வகுத்துக் கொண்டார்

            "அதெல்லாம் நமக்குத் தெரியாதப்பு, சொல்லச் சொன்னாக, சொல்லிப்புட்டேன். " என்றவன், "சோமன் எங்குட்டு இருக்காப்ல" எனப் பெருமாயியிடம் அவரது மகனைப் பற்றி விசாரித்தான் .

        " ஏன் அவனையும் கூட்டிட்டு வரச் சொன்னாரா உங்க ஐயா. எங்களைக் கண்டா தான் ஆகாதே. " எனப் பேச்சில் அளந்தார் பெருமாயி.

       "அந்தக் கதை எல்லாம் நமக்குத் தெரியாது. ரொம்ப வருசமா அவனை ஊருக்குள்ள காணமேண்டு தான் கேட்டேன்" எனப் பெருமாயியின் பதிலுக்கும் காத்திருக்காமல் நடையைக் கட்டினான் கருப்பன். அய்யனாருக்கு மனதில் பலவாறாக யோசனை ஓடியது. பேரனைக் கொண்டு போய் வீட்டில் விட்டவர், கூப்பிட்ட மரியாதைக்குப் போக வேண்டும் எனப் பெரிய வீட்டுக்கு விரைந்தார்.

           அதே நேரம், தன் வேலைகளை முடித்துக் கொண்ட சிந்தா, மகளைத் தொட்டிலில் போட்டு விட்டுத் தங்கை முத்துவிடம் சொல்லி விட்டு, தன் சினேகிதி வள்ளியின் வீட்டுக்குச் சென்றாள். வேலு ஒரு சவாரிக்கு மானாமதுரை வரை சென்றிருந்தான்.

         சிந்தாவின் வீட்டுக்கும், பெரிய வீட்டுக்கும் இடைப்பட்ட இடத்தில் ஒரு குறுக்குத் தெருவில் வேளாளர் வீடுகள் வரிசையாக இருந்தன. அங்கு ஐந்தாறு குடும்பங்கள் அப்பா, அம்மா, மகன் எனக் குடும்பங்கள் வழிவழியாக மண்பாண்டம் செய்து விற்பனை செய்து வருகின்றனர். மானாமதுரை மண்ணுக்கும், மண்பாண்டத்துக்கும் நல்ல பெயர் இருந்தது. அதனால் ஒவ்வொரு ஊருக்கும், சில சமயம் நாடு தாண்டியும் வியாபாரம் செய்தனர்.

        அந்தக் குடும்பத்தில் மானாமதுரையில் சிந்தாவோடு படித்த பள்ளித் தோழி வள்ளியைத் திருமணம் முடித்துக் கொடுத்து உள்ளார்கள். சிந்தா சிறுவயதிலேயே திருமணம் முடித்திருக்க வள்ளியை பன்னிரண்டு வரை படிக்க வைத்து இரண்டு வருடம் கழித்தே மணம் முடித்தனர். திருமணம் ஆகி நான்கு வருடம் ஆனது நடுவில் இரண்டு பிள்ளைகள் அவளுக்குத் தக்காமல் போனது. அதில் உடலும் மனமும் சோர்ந்து இருக்கும் வள்ளிக்குச் சிந்தா தான் ஆறுதல். சிந்தாவின் பிள்ளைகளைக் கொஞ்சி மகிழ்வாள் வள்ளி. வள்ளியைத் தேடி வந்தாள் சிந்தா.

     மண்பாண்டம் செய்வதற்காகக் கல் தூசு துரும்பு நீக்கி சலித்த நைசான களிமண்ணின் பெரும் பகுதியோடு, செம்மண், சிறிதளவு ஆற்று மணல் எனப் பக்குவமாக, கலந்து தண்ணீர் சேர்த்து குழைத்து வைப்பார்கள். மண்பாண்டம் செய்ய ஏதுவாகப் பிசைந்து வைத்த மண்ணை, ஒன்று சேர்த்து காலால் மிதித்து மென்மையாக்குவார்கள். அடுத்த அடுத்த நாட்களுக்காக முதலிலேயே மண்ணை ஒன்று சேர்த்து நெகிழ வைப்பார்கள். அப்படி மண்ணைக் காலால் குழைத்துக் கொண்டே சிந்தா வருவதைப் பார்த்து விட்டு

      " இன்னைக்கு என்னமோ தெற்குத் தெருக்காரி காத்து நம்ம பக்கம் அடிச்சிருக்கு. மச்சான் சட்டி பானை பச்சையா இருக்கிறதெல்லாம் பத்திரப்படுத்தனும், மழை வரப் போகுது " என்றாள் வள்ளி தன் கணவன் கந்தனிடம்.

         அவன் சக்கரத்தில் குழைத்து வைத்திருந்த மண்ணிலிருந்து ஒரு உருண்டையை எடுத்து வைத்து, ஒரு கையில் குச்சி கொண்டு சக்கரத்தைச் சுத்தி விட்டு அதன் ஓட்டத்தில் மண்ணில் இரண்டு கையையும் லாவகமாகக் கொடுத்துக் குழம்பு சட்டி செய்து கொண்டிருந்தவன், எட்டிப் பார்த்து விட்டு, " வாத்தா சிந்தா. உன்னையத்தான் வக்கணை பேசுறாலாக்கும்" எனத் தன் தொழிலில் கவனத்தைச் செலுத்திக் கொண்டே வரவேற்றான் வள்ளியின் கணவன் கந்தன்.

      " ஆமாம் அண்ணேன். குழம்பு சட்டி தான் செய்யிறீங்களா. எனக்குக் கூட மீன்குழம்பு வைக்க ஒன்னு வேணும்" என்றபடி, இருவருக்கும் நடுவிலிருந்த மண் மேட்டில் அமர்ந்தாள்.

     " ஏற்கனவே செஞ்சு வச்சது இருக்கு. போகும் போது எடுத்துட்டு போத்தா " என்றான் கந்தன். வள்ளி, " ஏண்டி சின்னக்குட்டியையாவது தூக்கிட்டு வந்திருக்கலாம்ல. நீ மட்டும் கையை வீசிக்கிட்டு வர்றவ " என்ற படி மண்ணிலிருந்து இறங்கினாள் வள்ளி.

     " அது இப்பத் தான் தூங்குச்சு. முத்துகிட்ட விட்டுட்டு வந்தேன். நேத்து அம்மா வீட்டுக்கு, திருவிழா பார்க்க போனியே வந்திட்டியா இல்லையான்னு யோசிச்சுகிட்டே வந்தேன்" என்றவள், இடுப்பிலிருந்து ஒரு பாலீதின் பொட்டலத்தை எடுத்து நீட்டினாள்.

  மண்ணை மிதிப்பதை முடித்து விட்டு இறங்கி காலை கழுவி வந்த வள்ளி  முந்தானையில் துடைத்துக் கொண்டே, " நேத்து செத்த நேரம் இருந்துட்டு வந்துட்டோம். அத்தையும், மாமனும் கடையைப் போட்டு அங்கியே தங்கிட்டாங்க. எங்களுக்கு இன்னொரு ஆர்டர் இருக்கு. அது தான் நேரமே வந்துட்டோம்" எனப் பேசியபடியே, சிந்தா கொடுத்ததைப் பிரித்துப் பார்த்தவள், அதிலிருந்த மயில் டிசைன் கல் வைத்த கிளிப்பைப் பார்த்து முகம் மலர்ந்தாள்.

      " சிந்தா நல்லா இருக்குடி, என்னத்தைச் சொல்லு உன் செலக்சன் நல்லா இருக்கும்டி" என மற்றவைகளையும் பார்த்தாள். " ஏண்டி உனக்குன்னு எதாவது வாங்குனியா, இல்லை சின்னவளுக்கும் எனக்கும் மட்டும் வாங்குனியா " எனக் கேள்வி எழுப்பினாள்.

         " மூணு பேருக்கும் தான் எடுத்தோம். இப்போல்லாம் முத்துவே, வள்ளியக்காவுக்கு இது நல்லா இருக்கும்னு எடுத்துடுறா" எனப் பேசியபடியே வீட்டுக்குள் சென்றனர். வள்ளி மோர் கலயத்திலிருந்து இரண்டு டம்ளர்களில் சாய்த்தவள் கருவேப்பிலை, சீரகத்துடன் மணக்க மணக்க சினேகிதியிடம் கொடுத்து விட்டு , தான் ஒன்றை எடுத்துக் கொண்டாள். " அண்ணனுக்கு" எனச் சிந்தா, கந்தனைப் பார்த்துக் கேட்கவும்.

      " அவரு குடிச்சிட்டாரு. குடிச்சிட்டு தான் சட்டி செய்ய உட்கார்ந்தார். அடிக்கிற வெயிலுக்கு, ஆளையே உருக்குதே. அப்பப்ப எதாவது குடுத்துடுவேன்" என்ற வள்ளி.

       " சிந்தா, இந்தக் கல்லு தோடு வேலு அண்ணன் வாங்கிட்டு வந்துச்சே, அதுதானே. உன் முகத்துக்கு அம்சமா இருக்குடி" என வள்ளி பாராட்டவும், சிந்தாவுக்குச் சிறு வெட்கமும் வந்தது.

       " ஆமாம், அவுக அம்மா சின்ன வயசில் இப்படிப் போட்டு இருப்பாங்கலாம். அந்த நினைப்புக்கு வாங்கியாந்து குடுத்துச்சு" என்றாள் சிந்தா.

        " பாரப்பா, ஆத்தா இல்லாமல் வளர்ந்ததில தான், அண்ணன் முரடனா போச்சுன்னு வைவியே, அவுக ஆத்தாளையே உன்னுல பார்க்குது பாரு" என உசத்தி பேசினாள் வள்ளி.

      " ஆமாம் பாவத்தில், அதுவும் எங்களையாட்டம் தாயில்லாத புள்ளைத் தான். எங்கப்பா மறுகல்யாணம் பண்ணிகிடலை. அவுங்க அப்பா பண்ணிக்கிட்டாரு" என்றாள் சிந்தா.

        " உங்கப்பாவுக்குப் புள்ளைகளை வளர்க்க நீ கிடைச்ச. தம்பி தங்கச்சிக்கு அம்மாவா மாறிட்ட. மறு கல்யாணம் செஞ்சுகலை. பயலுங்க மட்டும் இருக்கிற வீடுன்னா சிரமம் தான்" என்றாள் வள்ளி.

        " அது மட்டும் இல்லடி, அவுங்க சின்னாத்தா அதைப் பள்ளிக் கூடத்துக்குப் போற வயசுலையே வேலைக்கு அனுப்பிவிடுமாம். லேத் வேலைக்கெல்லாம் போயிருக்கு. கை எல்லாம் காய்ச்சு போய் அவதிபடுமாம். காசு கொண்டாந்தா தான் இடி சோறாவது கிடைக்கும். இல்லைனா அதுவும் இல்லையாம். அதிலையே வெளிய சுத்தியிருக்கு. அந்த மட்டும் எந்தச் சாமி புண்ணியமோ , தப்புத் தண்டாவுக்குப் போகலை" எனச் சிந்தா கணவனுக்காக வருந்தினாள்.

       " எல்லாம், எங்க சிந்தா செஞ்ச புண்ணியம் தான். அவுக வேலனை கொண்டாந்து சேர்த்திருக்கு" என வள்ளியும் சிந்தா, வேலு கல்யாணத்தை எண்ணி பெருமையாகச் சொன்னாள். சிந்தாவுக்கும் பெருமை தான் இருந்தாலும் நொடித்துக் கொண்டாள்.

    " உங்கண்ணனுக்கு வரம் கொடுக்கிறதுக்கு, அந்தச் சாமி என்னைப் போட்டு பார்த்துருச்சு போடி." என சிரித்தாள் சிந்தா.

" அடியே, எதுக்கு இப்படிச் சலிச்சுக்கிறவ, நீ நடந்தின்னா உன் கால் நோகுமுன்னு ,எங்கண்ணேன் உன்னைத் தாங்கிட்டு திரியுது" என்றாள் வள்ளி.

     " வண்டி தானே சொமக்குது, ஏதோ உங்க அண்ணன் சொமக்குற மாதிரி பெருமை பீத்திக்கிற" எனச் சிந்தா சொல்லவும்,

      " அடி இவளே, உன்னைய தூக்கி வேற சொமக்கனுமாக்கும். வெள்ளந்தியா ஒரு மனுசன் மாட்டிறக் கூடாதே, அவுக தலையில் மிளகாய் அரைச்சுடுவிங்கடி " எனத் திட்டினாள் வள்ளி.

     " நான் ஒருத்தி தானே, எனக்குத் தெரியாமல் வேற எவ" என வேண்டுமென்றே கேட்டாள் சிந்தா. " உன்னைக் கட்டின பாவத்துக்கு உன்னைச் சொமக்குறது பத்தாதுன்னு, உன் தங்கச்சிக்குமில்ல பாடிகார்ட்டு வேலை பார்க்குது. வேலு அண்ணனுக்குப் பயத்துகிட்டு தான், நம்ம ஊரு இளவட்டப் பயிலுக வாலை சுருட்டிகிட்டு இருக்கானுங்க" என்றாள் வள்ளி.

     " அது என்னமோ நெசந்தாண்டி. எங்குப்பாவுக்கு ரோசத்தைக் காட்டுற அளவு கோபத்தைக் காட்டத் தெரியாது. அதனால் தான் நான் அவதிப் பட்டேன். ஆனால் முத்துவுக்கு அந்த நிலைமை இல்லை. மச்சான் இருக்கிறதால தகிரியமா போயிட்டு வர்றா. எனக்கும் கொஞ்சம் நிம்மதி" என ஒத்துக் கொண்டாள் சிந்தாமணி.

        திருமணத்துக்கு முன் அவள் பட்ட பாடு யாருக்கும் வரக் கூடாது என நினைத்தாள் சிந்தா. அப்படி ஒரு இக்கட்டான நிலையில் தன் மானத்தைக் காப்பாற்றிய சிவநேசனின் நினைப்பும் வந்தது. காலையில் கிழவி சொன்னதும், நேற்றைய இரவில் குழந்தையோடு நின்றதும் மனதில் நிழலாட வள்ளியிடம் விவரம் கேட்டாள்.

      "அது தானே பார்த்தேன் , கத்தரிக்கா சந்தைக்கு வந்திடிச்சில்ல , இதுக்குத் தான் வந்தியா " எனச் சிந்தாவிடம் பேச்சில் கிடுக்கு பிடி போட்டாள் வள்ளி.

     " ஏண்டி உன்னைப் பார்க்க வரக் கூடாதா" எனக் கோபித்தவளைப் பார்த்து அழகு காட்டிய வள்ளி,

         " அடியே, சோழியன் குடுமி சும்மா ஆடுமா. இம்புட்டுத் தொலைவு மெனக்கெட்டு நடந்து வந்திருக்கேன்னா. விசயம் அறியத் தானே. உனக்கு எதுவும் சொல்றதுக்கு இல்லை. உன் புருஷன் புள்ளைனு பொழப்பை பாரு. " எனத் திட்டினாள் வள்ளி. சிந்தாவின் முகம் வாடிப் போனது.

     " நான் பாட்டுக்கு சும்மா தான் இருந்தேன், இந்த ஆண்டிச்சி கிழவி வந்து குட்டையில கல் எறிஞ்சிட்டு போயிடுச்சு. நினைக்கவே கூடாதுன்னு நினைச்சா, அதே நினைப்பா இருக்கு. என்ன பண்ணச் சொல்ற" எனத் தன்னிலை விளக்கம் தந்து , தனக்காகத் தன்நிலையைப் பற்றித் தோழியை விளங்கிக் கொள்ளச் சொன்னாள்.

         " உனக்கு எத்தனை பட்டாலும் புத்தி வராதுடி. உன் மனசில் என்ன இருக்குன்னு எனக்குத் தெரியும். ஊர்க்கார சிறுக்கிகளுக்குத் தெரியுமா. எவளாவது அசிங்கமா பேசுனாளுங்கன்னா, வேலு அண்ணன் மனசு நோகும். நீயாவது பொம்பளை கண்ணீர் விட்டுவிட்டுப் பேசாமல் இருந்துடுவ. அது தண்ணியைப் போட்டுட்டு வந்து அலப்பறையைக் குடத்துச்சுண்டா, அப்பவும் உனக்குத் தான் சங்கடம். பேசாத வீட்டுக்கு போ" என்றாள் வள்ளி.

       சிந்தா தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு இருக்கவும், மனசு கேளாதவளாக " சின்னையா, மகளை இங்க விட்டுட்டு போக வந்திருக்காரு. " எனவும் சிந்தா விழுக்கென அவளை நிமிர்ந்து பார்த்தாள்.

        " அவர் சம்சாரத்துக்கு ஏதோ மேலுக்கு முடியலையாம். மெட்ராஸ்ல கொண்டி வச்சு பார்க்கப் போறாறாம். அதுவரைக்கும் பெரியம்மாளை பார்த்துக்கச் சொல்றாரு. பிறகு வந்து இங்கையே ஏதோ தொழில் தொடங்குற யோசனை போல. அல்லி வந்து சொன்னா" என வள்ளி விவரம் சொன்னாள்.

      " சின்னம்மாளுக்கு உடம்புக்கு என்னவாம். பால்குடி மறக்காத புள்ளையவா விட்டுட்டு போறாங்க" என விவரம் கேட்டாள் சிந்தா.

    " இந்தா, இதுவே அல்லி சொன்னதை வச்சு தான் சொல்றேன். எனக்கு அதுக்கு மேலத் தெரியாது. இந்தக் கங்கா தன் நாத்தனாரைத் தான் அண்ணனுக்குக் கட்டனுமுன்ன அடப் பிடிச்சு கட்டி வச்சால்ல அனுபவிக்கட்டும்" என்றாள் வள்ளி.

      " அப்படிச் சொல்லாத வள்ளி, அவுகளும் அத்தை மகள் மாமன் மகன் கட்டுற முறை தானே. சின்னையாவ கட்டனுமுன்னு, அவுகளும் மனசில ஆசையை வளர்த்தவுகன்னு சொல்லுவாங்க. என்ன நோவோ. பாவமில்ல. புள்ளை பெத்த உடம்பு, கை குழந்தை இருக்கு. அந்தப் பச்சை மண்ணு என்னா செய்யும். அது நம்ம சத்யாவுக்குப் பத்து பதினைந்து நாள் மூத்ததா இருக்கும் " என அங்கலாய்த்தாள் சிந்தா.

       " இந்தா அவுகளுக்காகக் கவலைப் பட ஆரம்பிச்சுட்டியே, இதுக்குத் தாண்டி உன்கிட்ட சொல்றது இல்லை, ஊருக்குள்ள யாருக்கு என்னனாலும், அழகி மீனாவுக்குப் பதிலா நீதான் என்னெண்டு ஓடி வர்ற " எனப் பேசிக் கொண்டிருக்கும் போது தெருவில் வேலுவின் பைக் சத்தம் கேட்டது.

      " இப்பத் தான் மானாமதுரை போறமுன்னு கிளம்புச்சு. அதுக்குள்ள வந்து நிக்குது " எனச் சிந்தா கணவனைப் பார்க்க வேகமாக வெளியே வந்தாள். வண்டியை நிறுத்தி விட்டு, மகளை முன் பேனட்டிலிருந்து தூக்கிக் கொண்டிருந்தான் வேலு.

     " அடியாத்தி, இதுல உட்கார வச்சா தூக்கியாந்த" எனச் சிந்தா சத்யாவை நோக்கி வேகமாக ஓடினாள்.

       " அது பாட்டுக்கு உட்கார்ந்து வருது. நீ பதறதா" என மகளைத் தூக்கி மனைவியிடம் கொடுத்தான். சத்யா அழுது வடிந்த கண்ணீரோடு இருந்த சத்யா , சிந்தாவைப் பார்க்கவும் கன்று போல் தாவியது. "உன்னைக் காணமுன்னு ஊரையே கூடிடுச்சு, சரியா நான் அந்த நேரம் வந்தவன் தூக்கிட்டு வந்தேன்" என விளக்கம் தந்தான் வேலு.

    " வாங்கண்ணேன். மருமகளைத் தூக்கியாந்தீகளா" என வள்ளி சத்யாவைக் கொஞ்சவும், அது அம்மாவை இறுகக் கட்டிக் கொண்டது.

       " அது வேலை ஆகாமல் உன்கிட்ட வராதுத்தா . இப்ப கூப்பிடாத வேஸ்ட் " என்றவன் கந்தன் எங்க எனக் கேட்டபடியே அவன் சட்டி செய்து கொண்டிருந்த இடத்தில் நிழலில் சென்று அமர்ந்தான். சிந்தா மகளோடு வள்ளி வீட்டுக்குள் சென்றாள்.

       " வா மாப்பிள்ளை. மானாமருதை போயிருக்கேன்னு தங்கச்சி சொல்லுச்சு" என விசாரித்தான். " ஆமாம் கரி மூட்டையைக் கொண்டு போகக் கூப்புட்டானுங்க. இன்னும் மூட்டையையே கட்டலை. சரி அப்புறம் கூப்புடுச்கடான்னு வந்துட்டேன்" என்றான் வேலு.

       " அது சரி, இன்னும் இரண்டு நாள்ல ஒரு லோடு காளையார் கோயில்ல கொண்டு போய் இறக்கனும் மாப்பிள்ளை, நீயா வந்துடு " என்றான் கந்தன்." ரெடியாகவும் சொல்லு போயிட்டு வந்துடுவோம்" என்றான் வேலு.

      " ஆமாண்ணேன், நீங்களே பொறுமையா கூட்டிட்டு போங்க. மத்ததுங்க வந்தா மேடு பள்ளத்தில் விட்டு நாலு சட்டியை உடச்சிடுதுங்க" என்றாள் வள்ளி.

" சரித்தா. நீங்க கூப்பிடும் போது நான் வர்றேன். " என்றவன், " ஏன் மாப்பிள்ளை, இந்த ஏழைகளின் ப்ரிட்ஜ்னு ஏதோ சொல்றாங்களே. அது என்னாது. ஒரு ஆள் விவரம் சொல்லி கேட்டார். நான் உன்னைக் கேட்டு சொல்றேன்னு சொன்னேன்" என விவரம் கேட்டான் வேலு.

      "அது ஒனும் இல்லை, இந்த மண்ஜாடி தான். இரண்டு அடுக்கா வரும். இரண்டுத்துக்கும் நடுவில் தண்ணீர் ஊத்தி வைக்கிறாப்ல கழுத்து பகுதில ரெண்டு மூணு ஓட்டை போடுவோம் . அதில சிலுசிலுன்னு தண்ணியை ஊத்திட்டு உள்ளுக்குள்ளே காய்கறி வச்சமுன்னா, ஒரு வாரம்னாலும், காய்கறி பச்சு, பச்சுன்னு இருக்கும்" என்ற கந்தன்,

      " ஆனால் நிறைய வேலைப்பா. அது ஒன்னு செய்யற நேரத்தில் இதில் பத்து செஞ்சுடுவேன். இப்ப தான் ப்ரிட்ஜ் வந்துருச்சே. இதை யாரு தேடுறா" எனக் கேள்வி கேட்டான்.

      " அதைத் தான் சொல்ல வந்தேன், இரண்டு நாள் முன்னே கமுதி பக்கம் போயிருந்தேன். வடநாட்டுச் சிங் ஆளுங்க வந்து விவசாயம் பண்றாக. அங்க ஆர்கானிக் காய் கறின்னு இயற்கை உரம் போட்டு விளைவிக்கிறாக. அதை வாங்கிறவுக எம்புட்டு விலையின்னாலும் கொடுத்து வாங்குறாக. அதே ஆளுங்களுக்குத் தான், இந்தக் குடுவையும் கேட்டாங்க. நீ விலை விவரம், வண்டி வாடகை எல்லாத்தையும் சேர்த்து எம்புட்டுக் குடுத்தா கட்டுபடியாகும்னு யோசிச்சுவை. அவுகள்ட்ட சொல்றேன். சரிபட்டு வந்தா செஞ்சு குடுய்யா மாப்பிள்ளை" என்றான் வேலு.

      "சரிப்பா. எங்கய்யாகிட்டையும் கலந்துகிட்டு சொல்றேன். இந்த வேலை எல்லாம் அவருக்குத் தான் தெரியும்" என்றான் கந்தன். சிந்தா, சத்தியாவோடு வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தாள். அது இப்போது சிரித்துக் கொண்டு வள்ளியிடம் சென்றது.

       பெரிய வீட்டில் காலையில் சிவநேசனை வந்து குமரன் காலை உணவுக்காக எழுப்பினான். குளித்து முடித்துக் கீழே இறங்கியவன், புட்டிப் பால் கொடுத்தும் சிணுங்கிக் கொண்டிருந்த மகளைத் தூக்கிக் கொண்டான். அப்பாவிடம் போகவும் சிந்துஜா என்ற சிவகாமச்செல்வி சற்றே அமைதியானது.

     " இங்க பாருங்க, அவுங்க அப்பன்கிட்ட போகவும் பேசாம இருக்கிறதை. " என இராஜி கணவனிடம் முறையிட்டார். முற்றத்தின் ஒரு ஓரத்தில் டைனிங்க் டேபிள் போட்டு அதில் தான் அப்பா மகன்களுக்குப் பரிமாறிக் கொண்டிருந்தார் இராஜி.

        " அவன் தான் பிறந்ததிலிருந்து தூக்கி வளர்க்கிறான். அப்புறம் பெத்தவன்கிட்ட போகாதா" என்றார் பெரியவர். "நேசா, உன் மகளுக்கு, எப்பப்ப என்ன குடுக்கனுமுன்னு சொல்லிடு. நான் பார்த்து குடுக்குறேன். நீ கவலைப் படாமல் மத்ததைப் பாரு" என்றார் தாய்.

        "ஏன் பெரியம்மா, அண்ணனைப் பார்க்காமல் இந்தச் சிவகாமி கொஞ்ச நேரம் இருக்க மாட்டேங்குதே, தனியா எப்படிச் சமாளிப்பீங்க' என்றான் குமரன்.

       "அது தான், இரண்டு பேரும் பத்து நாள் இருப்பீங்கல்ல, அதுக்குள்ள என் பேத்தியை பழக்கிடுவேன்" என்றார் ராஜி.

      " அம்மா பாப்பாவை நாள் பூரா பார்த்துக்கிற மாதிரி, ஒரு ஆளை ஏற்பாடு பண்ணிக்குங்க" எனச் சிவநேசன் யோசனை சொன்னான்.

         " இங்க என்ன ஆளுக்கா பஞ்சம், ஆனால் நம்ம புள்ளைய பொறுப்பா பார்த்துக்குற மாதிரி ஆள் வேணும்" என்றார் ராஜி, 

         சிவனேசனுக்குச் சிந்தாவை கேட்கச் சொல்லி வாய்வரை வந்து விட்டது. அவளை விடப் பொறுப்பாக யார் பார்ப்பார்கள். அந்தச் சிறுவயதிலேயே தம்பி, தங்கைகளையே தன் பிள்ளைகள் போல் பார்த்தவள். ஆனால் இன்றைய அவளின் நிலை, பண்ணைக்காரன் மகள் என்பதிலிருந்து உயர்ந்து விட்டது. சிங்காரவேலு நாலு பக்கம் திரிந்து சம்பாதிக்கும் உழைப்பாளி என்பதை அறிந்திருந்தான். சிறுக சிறுக ஊருக்குள் நிலத்தை வாங்கிப் போட்டுள்ளான் என்பது காற்று வாக்கில் அவன் செவிகளில் விழுந்திருந்தது. ஏன் அவன் தங்கை கங்காவே ஒருமுறை ' அவளுக்கு வந்த வாழ்வைப் பார்' என அங்கலாய்த்துச் சொல்லி இருக்கிறாள்.

      குமரன் வேகமாகச் சாப்பிட்டு அண்ணன் மகளை வாங்கிக் கொண்டு ஹாலுக்குச் சென்று விட்டான், சிவநேசன் அதன் பிறகு அம்மாவின் கை பக்குவத்தில் அந்தச் சீய உருண்டையை ருசித்தான். சீய உருண்டை என்பது கடலை பருப்பு வெல்லம் சேர்த்துப் பூரணமாகக் கிண்டி அதை உருண்டைகளாக உருட்டி பச்சரிசி, உளுந்து கலந்து அரைத்த மாவில் முக்கி எடுத்து எண்ணெய்யில் பொரித்து எடுப்பார்கள்.

        இராஜேஸ்வரி, ஏற்கனவே பூரணம் கிண்டி வைத்திருந்தார் , அதனால் அதிகாலையில் பேத்தியைச் சமாளித்துக் கொண்டிருந்தவர் அரிசி, உளுந்தை ஊற போட்டு விட்டார். காலையில் ஆட்டி சுடசுட சுட்டு வைத்தார். மேல் வேலைக்கு வரும் அல்லியைத் தவிரச் சமையளுக்கு ஒரு சாமந்தியம்மாள் அவர்களது தூரத்து உறவினர் வீட்டோடு இருந்தார். அதனால் இராஜேஸ்வரி நினைத்த மாத்திரத்தில் பக்குவமாகப் பண்டங்களைச் செய்து விடுவார்.

        சிவநேசன், பிரியமாகச் சாப்பிடவும், கூடவே உட்கார்ந்து மகனுக்குப் பார்த்துப் பார்த்துப் பரிமாறினார். சாப்பிட்டு அறையில் வந்து அமர்ந்தவர்கள், அடுத்து அதே ஊரில் தொழில் ஆரம்பிப்பதைப் பற்றிப் பேசினார்கள்.

       " ஏம்பா தென்வயலும் கருவேலமா தான் மண்டி கிடக்கு, அதுல போய் என்ன செய்யலாம்கிற" என யோசனையாகக் கேட்டார் பெரியவர்.

“ கருவேலம் மரத்தை வேரோட எடுக்கணும் பா, அது தான் முதல் வேலை. நிலத்தைச் சுத்த படுத்திட்டா, அதுக்கப்புறம் அதுலையே விவசாயம் செஞ்சுக்கலாம் . இடம் மட்டும்  தான் நம்மளோடது. மத்தபடி மூலிகை பயிரிட்டு வளர்கிறதுக்கு ஒரு வெளிநாட்டு அறக்கட்டளை ஸ்பான்ஸர் பண்றாங்க. குமரன் அது விஷயமா தான் வந்துருக்கான் “ என அதன் விவரங்களைத் தெரிவித்தான் சிவநேசன். 

“இதைப் பொறுப்பா பார்க்க ஆள் வேணும் பா. எனக்கு அய்யனார் தான் சரியா வருவார்னு தோணுது “ என மகன் சொல்லவும், மகாலிங்கம் யோசித்தார், “அவன் ரோஷக்காரன் பா, திரும்ப வரமாட்டான்.“ என்றார். 

“நீங்க ஒரு தரம் கூப்பிட்டு விடுங்கப்பா, வந்தார்னா நான் பேசுறேன்” என்றான், மகனின் பேச்சைக் கேட்டு, மகாலிங்கம் அய்யா அய்யனாரை அழைத்து வர ஆள் அனுப்பினார். பெரிய வீட்டுக்கு வந்த அய்யனார், சிவநேசனிடம் வேலை பார்க்க ஒத்துக் கொள்வாரா, இந்த குடும்பங்களிடையே நடந்தது என்ன, நடக்கப் போவது என்ன பொறுத்திருந்து பார்ப்போம்.  




Friday, 21 May 2021

ஹாசினி சந்திரா-7

 ஹாசினி சந்திரா-7

       ஹாசினி சந்திராவைக் காணவில்லை எனவும், ப்ரீத்தி முதல் கேள்வியாக, "பாயி இங்க அனிமல்ஸ், இன்ஸெக்ட்ஸ் எதுவும் டேஞ்சரஸ்ஸா இருக்கா" எனப் பதட்டமாகக் கேட்டாள்.

        " அனிமெல்ஸ் இருக்காதுமா, ஏதாவது இன்ஸெக்ட்ஸ் இருக்கும். பயப்படாத ஒன்னும் ஆகாது. நீ இங்கயே இரு, பவன் யூ கோ தட் ஸைட். " என்று விட்டுச் சாதாரணமாகத் தான் இவளோடு ஒரே தொல்லை என்ற சலிப்போடு முதலில் கிளம்பினான் அவன் . ஓடைக்கு முன்னால் அவளது கொலுசு கிடைத்தது. அதைக் கொண்டு அந்தத் திசையில் வேகமாகக் குரல் கொடுத்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தான்.

       அவன் வேக நடைக்கே ஒரு மைல் தூரம் வந்திருப்பான். இவ்வளவு தூரமா வந்திருப்பாள் என யோசித்தவன் , " ஹாசினி, ஹாசினி சந்திரா" என நீட்டி முழங்கிக் கொண்டே தான் வந்தான். மேடும் பள்ளமுமாக , தான்தோன்றித் தனமாக வளர்ந்த காட்டுச் செடிகள். இங்கே யார் பாதையைப் போட்டு வைத்திருப்பார்கள், அவனே சிரமப்பட்டுத் தான் வந்தான். ஹாசினி எப்படி இதனைக் கடந்தால் என்ற யோசனை ஓடியது. இதற்கு மேல் இன்னும் அடர் மரங்கள் தான்.

      எங்கிருந்தோ அவளது சத்தம் கேட்டது, ஒளிந்து மறைந்து விளையாடுகிறாள், வேண்டுமென்றே தன்னைப் பழி தீர்க்கிறாள் என எண்ணியவன், "ஹேய், லூக் மரியாதையா வந்துடு. இல்லைனா, எப்படியோ தொலைன்னு போயிட்டே இருப்பேன். அனிமல்ஸ் வராதே தவிரப் பாம்பு எல்லாம் இருக்கும்" எனக் கத்தினான்.

        " ஹேய், ஹெல்ப் மீ, ப்ரீத்தி, பவன்" என அவள் தனியாகக் கத்திக் கொண்டிருந்தாள். இவன் தனியாகக் கத்திக் கொண்டிருந்தான். பின்னர் அவன் தான் சுதாரித்துத் தன் குரலை நிறுத்தவும், " டேய் ஆறடி அரக்கா காப்பாத்துடா. கடத்தினது தான் கடத்தின , வீடு ஹோட்டல் எதுவுமே கிடைக்கலையா. தீவுக்குக் கடத்திட்டு வந்திருக்க" எனக் கத்தலே புலம்பலாக வந்தது.

      அக்கம் பக்கம் பக்கவாட்டில் தேடினான். ஆள் நடமாட்டம் இல்லாத காடு என்பதால் எல்லா இடத்திலும் சத்தம் எதிரொலித்தது. மீண்டும் அவன் " மது "எனக் குரல் கொடுத்தான். அவளுக்கு அது எங்கிருந்தோ தனது அப்பாவோ, அம்மாவோ அழைப்பது போல் இருந்தது.

       " அம்மா, அப்பா உங்களைக் காப்பாற்ற முடியாம போயிடும் போலையே. அரக்கன் ஒன்னும் செய்யலனாலும் இந்தத் தீவு பலி வாங்கிடும் போல. ஹாசினி செத்தடி. உன் சந்திராவைப் பார்க்காமலே செத்துப் போகப் போற. " எனப் புலம்பியவள்,

      " டேய் அரக்கா, ப்ரீத்தி, பவன்" எனக் கத்தினாள். இந்த முறை கீழே இருந்து சத்தம் வருவதைக் கண்டு பிடித்தவன், கீழே கவனமாகத் தேடினான். காய்ந்த இலைகள் கொட்டிக் கிடந்தன. இரண்டு மூன்று அடி சுதாரித்துக் காலை வைத்து நடந்தவன் அங்கிருந்த மரக்கம்பை எடுத்துக் கொண்டான். அதை ஊண்டி ஒவ்வொரு அடியாக முன்னே வைக்கச் சில அடிகள் தொலைவில் கம்பு உள்ளே இறங்கியது. அதே இடத்தில் வைத்துக் குத்தவும் இரண்டு ஆள் புகும் அளவு இருந்த குழி பெரிதானது.

       " அடேய், நான் உள்ள இருக்கேன். யாரது குழியை மூடி சமாதி வச்சிராதீங்க. ஏதாவது அனிமல்ஸ்ஸா ஹெல்ப், ஹெல்ப் " எனக் கத்தினாள்.

        " மது , இதுக்குள்ளையா இருக்க" என அவன் குனிந்து பதட்டத்தோடு குரல் கொடுக்கவும். தன் தலையில் விழுந்த இலை தூசிகளைத் தட்டி விட்டுக் கொண்டே. " டேய் அரக்கா. தூக்கி விடு" என முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு உதவிக் கேட்டாள். அவன் மண்டியிட்டு உள்ளே பார்த்தான். முகம் எல்லாம் மண்ணும் தூசியும், இலையுமாக அடையாளம் தெரியாத படி இருந்தாள். அவள் தோற்றத்தில் அவனுக்கு முதலில் சிரிப்பு வந்தது. பின் இது புதைகுழியோ எனப் பதட்டம் வந்தது.

      " ஹாசினி , புதை குழி இல்லைல " என்றான். அவளுக்குப் புரியவில்லை, "புதைஞ்சு தான் இருக்கேன், எங்க அப்பா, அம்மாட்ட கூட்டிட்டுப் போறேன்னு சொன்ன. அதுக்கு முன்ன சமாதி கட்டிடாத. இங்கே வந்து யாரும் மலர் வளையம் கூட வைக்க முடியாது" என்றாள்.

      " ஓ ஷிட்" என்றான். 'ஹோய் என்னா ஷிட், இடியட்" எனக் கையில் கொஞ்சம் மண்ணை அள்ளி அவன் மீது எறிந்தாள். " அவன் கண்ணை மூடிக் கொள்ள, மண் உதிரியாக அவன் முகத்தில் பட்டு உதிர்ந்தது. அவன் கேள்விக்குப் பதில் கிடைத்து விட்டது. ஹேய் இடியட், முட்டாள் கூஸ்" எனத் திட்டினான், அந்த வார்த்தை தந்த அதிர்ச்சியில் அவள் அவனையே பார்த்திருந்தாள்.

       பதினைந்தடி ஆழத்திலிருந்தாள் ஹாசினி. இவன் கை கொடுத்தாலும் எட்டாது. அவன் அவ்விடத்தை விட்டு நகர முற்படவும், சுதாரித்தவள், " சாரி, சாரி,சாரி. என்னைக் காப்பாத்துங்க. ப்ளீஸ் அரக்கன் ஸார்" என்றாள். அவனுக்குச் சிரிப்பு வந்தது , இருந்தாலும் சமாளித்து அவளை முறைத்தான். இரண்டு கையாளும் காதை பிடித்துக் கொண்டு, "சாரி, அரக்கன் சார் ,ப்ளீஸ் காப்பாத்துங்க" என்றாள் ."உன்னை யாரு இவளவு தூரம் வர சொன்னது " எனச் சிடுசிடுத்தான்.

     " தயவு செஞ்சு மேல ஏத்தி விட்டுட்டு ,எவ்வளவு வேணும்னாலும் திட்டு" எனக் காய் எடுத்து கும்பிட்டாள் . "அது' என்றவன், அவளை,"ரொம்ப படுத்துற" என  முறைத்து விட்டு, " கொஞ்சம் வெயிட் பண்ணு. இதோ வந்திடுறேன்" எனச் சுற்றி பார்த்தான்.

      " அரக்கன் ஸார் என்னை விட்டுவிட்டுப் போகாதே. எனக்குப் பயமா இருக்கு" என்றாள் ஹாசினி. அவளைப் பார்த்த பார்வை மாறியது,

     " குச்சி எடுத்துட்டு வர்றேன். தைரியமா இரு, உன்னைப் பிடிக்க இந்த அரக்கன் எவ்வளவு கஷ்டப் பட்டிருக்கேன், அப்படி ஈசியா விட்டுருவேனா " எனப் பக்கத்தில் பார்த்தவன், பாக்கெட்டில் உறையோடு வைத்திருந்த கத்தியை எடுத்து. நீண்டு வளர்ந்து சென்ற கனமான கொடிகளை வெட்டினான். இரண்டு மூன்றை வெட்டிக் கொண்டு அவளிருக்கும் இடத்தின் அருகில் வந்தவன் அவளோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டே, அதனை ஒன்று சேர்த்து, மற்றொரு மெல்லிய கொடியைக் கொண்டு கட்டி நீளமாக்கினான்.

     "எதுக்கு இந்தப் பக்கம் வந்த, இந்தப் பக்கம் தப்பிக்கிற வழி எல்லாம் இல்லை " என்றான். " எனக்கும் தெரியும். சும்மா தான் வந்தேன். " எனத் தன் பயத்தை மறைத்துப் பேசியவள்,

     " மிஸ்டர். அரக்கன், சீக்கிரம் கட்டேன். " என்றாள். அவன் என்ன என்பது போல அவளைப் பார்க்கவும், " ஏதேதோ பூச்சி மேல ஊறுது. ஐ ஃபீல் அன்ஈஸி " எனச் சொல்லி முகத்தைக் குனியவும், அவனுக்கு அவளது அவஸ்தை புரிந்தது. " இதோ ஆயிடுச்சு " என்றவன், அந்தத் தடிமனான கொடியின் ஒரு முனையை ஒரு மரத்தில் கட்டினான். அந்தக் குழியின் அருகே வந்து உட்கார்ந்து அதனை விட்டான். அவள் இடுப்பு வரை வந்துவிட்டது ."அதை பிடிச்சுக்கிட்டு மேலே ஏறு. நான் இழுத்துத் தூக்கிக்கிறேன் " என்றான்.

       ஆனால் அவள் கையில் சிராய்ப்பு இருந்தது. அவளால் அதனைப் பிடிக்க முடியவில்லை. முயன்று விட்டு " கை வலிக்குது" எனச் சிறுபிள்ளையாகக் கூறினாள். " கையில் என்ன" என்றான். " மரம் குத்திடுச்சு " என உலகத்தில் இருக்கும் பெரிய சோகமே அது தான் என்பது போல் உதட்டை பிதுக்கினாள்.

        அவனுக்குத் தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது. 'இனிமே எக்காரணம் கொண்டும் பெரிய இடத்து பேபி டால்களைக் கடத்தக் கூடாது ' என மனதில் முடிவெடுத்தான். அவன் மனசாட்சியே அவனைப் பார்த்துச் சிரித்தது. அதனைப் புறம் தள்ளியவன், அவளைப் பற்றி யோசித்து, " இங்க பாரு, உன் சேரி முந்தானையை மட்டும் எடுத்து கொடியோட உடம்பில் சேர்த்துக் கட்டிக்கோ" என்றான் , அவள் முறைத்தாள். 

      "நீ பார்க்க , நான் எல்லாத்தையும் செய்யணும்' என நெற்றிக் கண்ணைத் திறந்தாள். அவன் ஓர் தோள் குலுக்களோடு, "இதை விடப் பெட்டரா ஐடியா இருந்தா சொல்லு. நீ பெரிய அப்சரஸ், உன்னையைப் போய் ஜொள்ளு விட்டு பார்ப்பானுங்க, ஐயம் நாட் இன்டெரெஸ்ட்டேட் வித் யு " என்றான் மிகவும் அசட்டையாக. நியாயப் படி இதற்க்கு ஹாசினி மகிழ்ந்திருக்க வேண்டும், ஆனால் அவன் தன்  அழகை குறைத்து சொன்னதுக்காகக் கோபம் வந்தது, "கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை. வாட் எவர், எனக்கும் உன்னை மாதிரி அரக்கன் என்னைப் பார்க்கிறத வேருக்குறேன்" எனப் பதிலடிக் கொடுத்தாள் .

      " நேத்து, டேக் மீ ன்னு சொன்ன" என விடாமல் வம்பிழுத்தான். " அது தான் , நீ டீலை ரிஜெக்ட் பண்ணிடேல்ல, அங்குட்டுத் திரும்பு" என ஆணையிட்டாள் , அவனும் கண்ணியமான அரக்கனாகத் திரும்பிக் கொண்டான். அவன் கொடுத்த யோசனைப் படி முந்தியை மட்டும் கழட்டி கொடியை தன் மார்போடு சேர்த்து வைத்து, இரண்டு மூன்று சுற்றிக் கட்டிக் கொண்டாள்.

        " குட்" என அவளைச் சொன்ன வேலையைச் சரியாகச் செய்த பணியாள் போல் தான் பார்த்தான். கொடியை இழுத்துப் பார்த்து விட்டு அவளைப் பிடித்து இழுத்தான். முதலில் இழுக்கச் சிரமமாக இருந்தது.

       " ஆள் பார்க்க ஒல்லியா இருக்க, ஆனால் சரியான குண்டு கோஸ்" என்றான். இது இரண்டாவது வார்த்தை அவள் அதிசயமாகப் பார்த்தாள். சற்றுப் பலமாகப் பிடித்து இழுக்கவும் கொடி பிய்ந்து விடும் போல் இருந்தது. அவன் நினைத்தது போல் காய்ந்த மண்ணாக இல்லாமல் முழங்கால் அளவு சகதி இருந்தது. மேலே படுத்தபடி சமயோசிதமாகக் கொடி அறுந்து விழும் நிலை இருந்ததால், வேகமாகக் கொடியை இழுத்து அவள் கையைப் பற்றிக் கொண்டான். அறுந்து போக இருந்த கொடி சற்றுப் பொருந்தியிருந்தது. ஆனால் அவன் பற்றிய கரமும் அவளுக்கு வலிக்கத்தான் செய்தது. அவள் முகம் சுழித்தாலும் வேறு வழியின்றித் தூக்கினான்.

        " மது , என் கையை விடாமல் பிடிச்சுக்கோடி" எனக் கத்தியவன், அவளை மேலே இழுத்தான். அவளது அகன்ற விழிகள், மேலும் விரிந்தது. அவளை இழுக்கும் போதே எழுந்து விட்டான். அதனால் அவளை இழுத்துத் தரையில் போட அவள் குப்புற விழுந்து இருந்தாள். சேலை கீழே சகதியாக அவன் இழுத்ததில் கொஞ்சம் ஏறியுமிருந்தது. காலில் ஸேண்டல் ஹூ பக்கில்ஸ் வைத்து காலை கவ்வி இருந்ததால் அதவும் கழண்டு விழாமல் பத்திரமாக இருந்தது. அவன் திரும்பி நின்று கொண்டான்.

     அவள் எழுந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளட்டும் எனத் திரும்பியிருந்தவன், அவள் பேசாமடந்தையாகி இருக்கவும், மயக்கமடைந்து விட்டாலோ எனப் பயந்தவனாக, தலையை லேசாகத் தோள் பக்கம் திருப்பி, " ஆர்யூ ஓகே" என்றான்.

      அவளது , " ஸ்ஸ் ஆ" என்ற சத்தத்தில் தன்னிச்சையாகத் திரும்பியவன், அவளைத் தொட்டுத் திருப்பினான். கண்களைத் தழைத்துக் கொண்டு, அவள் மீது இருந்த கொடியை உருவி விட்டவன், மீண்டும் திரும்பி நின்று கொண்டான். அவன் செய்கைகளைப் பார்த்திருந்தவள், " யார் நீ" என்றாள்.

      " சேரியை ஒழுங்கா கட்டிட்டு வா. எவ்வளவு சகதி. ஏதோ ஊருதுன்னு சொன்னியே" என ஞாபகப்படுத்தினான். அவள் தன் சேலையை மட்டும் சரியாகப் போட்டவள், தன் கையை நீட்டி, " குண்டு கோஸா இருந்தாலும் பரவாயில்லை தூக்கி விடு" என்றாள்.

       " ஓஹோ, நீ வச்ச ஆளாக்கும். தன்னால எந்திரிச்சு வர்றதுன்னா வா. இவ்லைனா இங்கேயே கிட. " என இரண்டடி வைத்தான்.

       அவள் எழுந்து வருவதாக இல்லை. " ம்ப்ச். சீக்கிரம் எழுந்திரு. உன்னை அருவியில் விட்டுட்டு, ப்ரீத்தியை அனுப்பி விடுறேன்" என்றான்.

     " நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதிலே சொல்லலை" என அப்படியே அமர்ந்திருந்தாள். " நான் யாருன்னா, கடத்துறவன் அட்ரெஸ் எல்லாமா சொல்லுவேன். அது தான் சொல்லுவியே அரக்கன். அவன் தான் நான்" என்றான்.

    " அது நான் வச்ச பெயர். நான் உங்க பெத்தவங்க வச்ச பெயரைக் கேட்டேன்" என்றாள். அவன் நிற்காமல் நடக்கவும், " நான் திரும்ப அந்தக் குழிக்குள்ள குதிப்பேன்" என்றாள்.

     " தாராளமா குதிச்சுக்கோ எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. ஆனால் திருப்பிக் காப்பாற்ற மாட்டேன்" என மேலும் இரண்டடி வைத்தான். தொப்பெனக் குதிக்கும் சத்தம் கேட்டது. "மது" அவன் திரும்பிப் பார்க்க, அவள் ஒரு கல்லைத் தள்ளிவிட்டு அதே இடத்தில் அசையாமல் நின்றாள். ஒன்றும் பேசாமல் அவளை நோக்கி நடந்தவன், அவள் உள்ளங்கையைப் பற்றாமல் முன்னங்கையைப் பிடித்து இழுத்து வந்தான்.

    "என் பேரு உனக்கு எப்படித் தெரியும். நீ யாரு உண்மையைச் சொல்லு" என்றாள். " நீ தான் கேஜேபார்ட்டியோட கொள்கை பரப்பு செயலாளர், தி க்ரேட் எஸ். ஆர். சந்திராவோட மகள். உன்னை யாருன்னா தெரியாமலா கடத்தியிருக்கேன். " என்றவன் மறந்தும் அவள் பக்கம் திரும்பாமல் பாதையில்லாத இடத்தில் பாதையை உருவாக்கிக் கொண்டே நடந்தான்.

       " ஹாசினி சந்திராவை எல்லாருக்கும் தெரியும். ஆனால் நீ மதுன்னு கூப்பிட்ட. எங்க வீட்டு ஆளுங்கள் மட்டும் தான் இந்தப் பெயர் சொல்லுவாங்க" என்றாள்.

       " ஸோ வாட், ப்ரீத்தி பவன், உங்க வீட்டில் தானே இருந்தாங்க. அவங்க சொன்னது தான்" என அவசரமாக அவளை அழைத்துச் செல்லவும், "கொஞ்சம் மெதுவாதான் போயேன். சேலை தடுக்குது " என்றாள். அப்போது தான் திரும்பிப் பார்த்தான் இடுப்புக்குக் கீழே சேரும், சகதியுமாக இருந்தது. சற்றே வேகத்தைக் குறைத்தான்.

     " இந்தத் தீவில் நிறையப் புதைகுழி இருக்கும். இனிமே தனியா போகாத. ப்ரீத்தியையாவது கூட்டிட்டு போ. " என்றான். அவள் சிரித்தாள். அவன் முறைக்கவும்,

      " நீ என்னைக் கடத்திட்டு தானே வந்த. பிக்னிக் வந்த மாதிரி யோசனை சொல்ற. கடத்தல்காரன் இப்படிப் பேசமாட்டான் பாஸ். " என்றாள்.

    " பொம்பளைப் புள்ளையாச்சேன்னு பார்த்தது தப்பா போச்சு. இரு காட்டேஜ்ல போயி கையையும் காலையும் கட்டிப் போடுறேன்" என்றான்.

   " கால்கட்டு போடறதுன்னு பசங்களுக்குத் தான் சொல்லுவாங்க. பொண்ணுங்களுக்கு இல்லை" என்றாள். " யூ ஆர் க்ராசிங் யுவர் லிமிட். பேசாமல் வா" என ருத்ரமூர்த்தி அவதாரமெடுத்தவன் அவளுக்குப் பேச வாய்ப்புத் தராமல் அருவிக் கரைக்குக் கூட்டிச் சென்றான்.

        சட்டென மாறிய வான்நிலை போல், செங்குத்தான மலையிலிருந்து ஓர் அருவி விழுந்தது. பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் அளவாக விழுந்தது. விழுந்த இடத்தில் பாறையும் அதன் கீழே குளம் போல இருந்தது, அதிலிருந்து இரண்டு புறம் பிரிந்து ஓடையாக ஓடியது.

     அவளைக் கைப்பிடித்துச் சென்றவன், ஓடை போலிருந்த பகுதி ஆரம்பிக்கும் இடத்தின் விளிம்பில் உடையைச் சுத்தப்படுத்தச் சொன்னான். ஹாசினிக்கு அந்த அருவியில் குளிக்கும் ஆசை வந்தது.

" அந்தத் தண்ணீர் விழற இடத்துக்குக் கூட்டிட்டு போயேன். நல்லா இருக்கும். " என்றாள். " நோ" என்றவன். " அங்க போய் ரிஸ்க் எடுக்க முடியாது" என்றவன் ஓடையில் கால் வைத்துப் பார்க்க இரண்டடி தான் இருந்தது. உட்கார்ந்து குளித்தால் நன்றாகக் குளிக்கலாம்.

     ஹாசினி ஆசை நிறைவேறாத குழந்தையாக முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு ஓடைக் கரையில் அமர்ந்து காலை உள்ளே விட்டாள். அவளது கெண்டைக்காலில் ஏதோ அட்டைப் பூச்சி ஒட்டியிருந்தது. அதைப் பார்க்கவும், வீல் எனக் கத்தினாள். கிளம்பப் போனவன் என்ன வெனப் பார்க்க அவளது காலை அட்டைப் பூச்சி உறிஞ்சிக் கொண்டிருந்தது.

       " இடியட், இவ்வளவு நேரம் இது கூடவா சொரணை இல்லை. எவ்வளவு இரத்தத்தை உறிஞ்சினதோ. " எனத் திட்டிக் கொண்டே ஓடையில் குதித்தவன், அவள் வாழை தண்டு காலை பற்றி , அட்டை பூச்சி இருந்த இடத்தை , காலின் அடியில் கை  கொடுத்து ஏந்தி கொண்டு ஓடையில் கிடந்த கல்லை வைத்து அதனை அழுத்தமாகத் துடைத்து தட்டி விட்டான். அதன் பின் இரண்டு கால்களையும் ஆராய்ந்தவன். தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தான். அவள் அவனையே கண் எடுக்காமல் பார்த்திருந்தாள். 

      அவளை ஏறிட்டுப் பார்த்தவன், " கீழே இறங்கு. சேரிக்குள்ள வேற எங்கையாவது இருக்கான்னு செக் பண்ணு" என்றான். அவன் சொல்லுக்கு முதன் முறையாக வாக்குவாதமின்றிக் கீழ்ப்படிந்தால் ஹாசினி சந்திரா. அவன் திரும்பி நின்று கொண்டான். சிறிது நேர மௌனமே நிலவியது. முகத்தை லேசாகத் திருப்பி " ஆர் யூ ஓகே" என்றான்.

        " இன்னோன்னு இருக்கு " என முகத்தைச் சுருக்கிக் கொண்டு அலறினாள். ஒரு கல்லை எடுத்துக் கொடுத்து, " இதை வச்சு எடு " என்றான். "ம்  என சிறிது நேரம் தாமதப் படுத்தியவள், அவனின் உருட்டலில் சற்றே தணிந்து, அவன் சொன்னபடி செய்தாள்  "எடுத்துட்டேன்" என்றாள்.

       " ஓகே குட், இங்கே நம்மளை தவிர யாரும் இல்லை, குளிச்சிட்டு இரு. அருவிகிட்ட போகக் கூடாது, ப்ரிதியை அனுப்பி விடுறேன் " எனக் கண்டிப்பாகச் சொல்லி விட்டு அவன் செல்ல முற்பட, "ஹலோ அரக்கன் ஸார். நீ யாருன்னு சொல்லவே இல்லையே" என்றாள். அவளைத் திரும்பி பார்த்தவன் 

" ஆறடி அரக்கன்" எனப் பதிலிருத்தி விட்டுச் சென்றான்.

பெங்களூரு நஞ்சப்பா இல்லம், சிவராஜ் சந்திர பவனத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். யுவராஜ், " அப்பா இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே கூஜா தூக்குறது" என்றான் எரிச்சலாக.

       " யுவன், உன்னை எஸ். ஆர். சந்திரா மருமகனாக்கிட்டா, கட்சியும், ஆட்சியும் நம்மகிட்ட வந்திடுமென்று கணக்குப் போட்டேன். அநியாயமா சிக்கம்மாவை  எவனோ கொன்னுபுட்டானே" என நிஜமாகவே வருந்தினார் சிவராஜ் நஞ்சப்பா.

        அவர் வருந்துவது யுவராஜின் எரிச்சலை மேலும் தூண்டியது, "அப்பா, அவ எல்லாம் ஒரு பொம்பளையா, ஆள் அழகா இருந்தா மட்டும் போதாது, கொஞ்சமாவது அடக்கம் ஒடுக்கம் வேணும். அவளைப் போய் என் தலையில் கட்டப் பார்த்தியே. எங்க அம்மா கும்பிட்ட சாமி புண்ணியம் நான் தப்பிச்சேன். அந்தப் பிடாரி போய்த் தொலைஞ்சிடுச்சு. விட்டுது தொல்லை" என நிம்மதி பெருமூச்சு விட்டான்.

           " கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை ன்னு சொல்லுவாங்க.(ஆகா சிவராஜும்  சொல்றார். ஹாசினிக்கு வாச்சதெல்லாம் கழுதை  தான் போல)  என்னத்தைச் சொல்லு நீ கழுதை தான். பொம்பளை புள்ளைங்க தாலி ஏறமுன்ன தாண்டா எல்லா ஆட்டமும். தாலி ஏறிடுச்சு புருஷனுக்காக எதையும் செய்யுங்க. இது புரியாமல் பொன் முட்டை இடுற வாத்தை தொலைச்சிட்டு அந்த வருத்தம் கூட இல்லாமல் இருக்க. வெளியே போய் வாய் விட்டுறாதே. உன்னைச் சந்தேகப்படுவாங்க" என முறைத்தவர், மகனை மேலும் பல வசவுகளைத் தந்து தன்னோடு ஹாசினி வீட்டுக்கு வருமாறு கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றார். 

        அங்கே விசாரணைக்காக நியமிக்கப்பட்ட போலீஸ் உயரதிகாரியைப் பார்க்கவும், சிவராஜுக்கு அப்பட்டமான அதிர்ச்சி. 'இந்தத் திமிர் பிடிச்ச தமிழ் ஆளா. நீதி நேர்மைன்னு டயலாக் அடிச்சாலும் பரவாயில்லை, அதையும் செய்யாமல் போட்டு தள்ளிட்டு போயிட்டே இருப்பானே. ஸ்டேட்டு சென்டர்னு எல்லா பக்கமும் செல்வாக்கு.  சொந்தக்காரன் மினிஸ்டர், பொண்டாட்டி கலெக்டருன்னு எங்குட்டும் கை வைக்க முடியாதே' என ஒரு மீசைக்கார மறத்தமிழனைப் பார்த்து விக்கித்து நின்றார்.  ஆனால் பிரச்சனை சிவராஜுக்கு மட்டுமில்லை, தீவுக்குக் கடத்தி இராஜாங்கம் செய்யும் அரக்கனுக்கும் தான்.

      ஹாசினியும், ப்ரீத்தியுமாகக் கட்டோடு குழலாட ஆட பாட்டுப் பாடாதது தான் குறை, ஏனெனில் அது ஒரு தமிழ்ப் பாடல், அதுவும் எம்ஜிஆர் காலத்துத் தமிழ்ப் பாடல் அதனால் அதைப் பாடவில்லை. ஆனால் அதே போல் எஸ்ஆர்சி யும் மேனகாவும் இணைந்து நடித்த ஒரு கன்னடப் படத்தின் பாடலை ஹம்மிங்க் செய்தபடி நீராடினாள் இந்த மேனகை பெற்ற மகள்.

" மேம் பாட்டெல்லாம் தூள் பறக்குது. எனிதிங் ஸ்பெஷல்" என்றாள் ப்ரீத்தி  "யெஸ், அது ஸ்பெஷலா இல்லையான்னு நீதான் சொல்லனும். " எனப் பீடிகை போட்டாள் ஹாசினி.

        " மேடம், அப்பா, அம்மாவுக்கு எந்த ஆபத்தும் இருக்காது பயப்படாதீங்க. உங்களைப் பற்றின நியுஸ் கேட்டுட்டு உங்க பெத்த" என ஆரம்பித்தவள் நொடியில் சமாளித்து " பெத்த மனுசங்கள், தொண்டர்கள் கொந்தளிப்பாங்க. அதனால் அப்பா, அம்மாவை நஞ்சப்பா நல்லாவே பார்த்துக்குவார்" என்றாள் ப்ரீத்தி.

      " ம்கூம்" என்ற ஹாசினி ப்ரீத்தியை குறுகுறுவெனப் பார்க்கவும், அவளுக்குச் சங்கடமாகிப் போனது. " ஏன் மேடம், நான் சொன்னதில் நம்பிக்கை இல்லையா" எனத் தயங்கியபடி கேட்டாள்.

      " நான் ஹேப்பியா இருக்கேன்னா, அப்பா, அம்மா சேஃபா இருப்பாங்கங்கிற நம்பிக்கை தான். ஆனால் நீ சொல்லவந்தது வேற, இப்ப சொன்னது வேற. ஆமாம் நீ மஸ்கட்லையே தான் பிறந்து வளர்ந்தியா " எனக் கேட்டு ப்ரீத்தியை அதிர விட்டாள் ஹாசினி. " மேம்" என அதிர்ந்து நின்றவளை, " நான் சரியாகத்தானே கேட்டேன்" என்றாள்.

       " இல்லை மேம். " எனச் சொல்ல வரும் போதே, " நீ அந்த அரக்கனுக்கு வேலை செய்யிற ஓகே. அவன் உன்னை ஒரு வார்த்தை சொல்ல விடமாட்டேங்குறான். உன்னைத் திட்டுனேன்னு என் கழுத்தை நெறிக்க வர்றான். அவ்வளவு ஸ்பெஷலா நீ" என அடுத்த அஸ்திரத்தைத் தொடுத்தாள்.

       " மேம் நீங்க நினைக்கிற மாதிரி, தப்பான ரிலேசன்சிப்லாம் இல்லை" என அவள் முகம் வாடிப் போய்ச் சொல்லவும், ஹாசினி அவசரமாகக் குறுக்கிட்டு, " தப்பான ரிலேசன்சிப்னு நான் எப்ப சொன்னேன், அந்த அரக்கனுக்குக் கூட உன் மேல அதிகமான பாசம் இருக்குன்னு சொல்றேன்" என்றாள்.

      " மேம், பாயி ஒன்னும் அரக்கன் இல்லை. நீங்க அந்த வார்த்தையைச் சொல்லாதீங்க" என்றாள் ப்ரீத்தி. " ஓஹோ, அரக்கன்னு சொல்லக் கூடாதா. அப்ப அவன் பேர் என்னன்னு சொல்லு. " எனக் கிடுக்கிப்பிடி போட்டாள் ஹாசினி. ப்ரீத்திக்கு வாயைக் கொடுத்துத் தான் மாட்டிக் கொண்டது புரிந்தது. மௌனமாகி விட்டாள்.

       இவர்கள் இருவருமாகக் குளித்து உடை மாற்றி, தலைமுடியை விரித்து உதறிக் கொண்டே வந்தனர். கையில் ஈர உடை அதையும் அலசி இருந்தனர்.

         காட்டேஜ் அருகே வரவும், அவன் வெகு தொலைவிலிருந்தே தன்னையே பார்ப்பதை உணர்வால் உணர்ந்தவள், வேறு எங்கோ வேடிக்கை பார்ப்பது போல் வந்தாள். ஆனால் காட்டேஜ் அருகில் வரவும் ஹாசினி சத்தமாக, " ப்ரீத்தி உன் பாயியை அரக்கன்னு சொல்லக்கூடாதுன்னா வேற எப்படிச் சொல்றது. கிட்னாப்பர், கடத்தல்காரன், கொள்ளைக்காரன் இது மாதிரி சொல்லவா இல்லை உன்னை மாதிரி அரக்கன் ஸாருக்கு ராக்கி கட்டி விட்டுட்டு பாயி ன்னு சொல்லவா" என்று வினவினாள்.

        அவனது கண்கள் சிவப்பை அதிகம் காட்டியது. பவன் சட்டெனச் சிரித்து விட்டான். ஹாசினி பவனைப் பார்த்து, " அரக்கனா இருந்தாலும் அண்ணன்னு சொல்லிட்டா, பாசக்காரனா ஆகிடுவானில்லை, பிரிதிக்கே அவ்வளவு புரிஞ்சிட்டு வந்தான் உன் பாஸ். அதுக்குத் தான் , ஒரு தற்பாதுகாப்புக்குக் கேட்டேன்" என்றாள் ஹாசினி.

       "உங்களுக்கு அறிவோ, அறிவு . நீங்க அப்படியே கூப்புடுங்க, பாஸுக்கு சிஸ்டர்ஸ்னா ரொம்பப் பிடிக்கும்." என இளித்து வைத்தான்.

      ப்ரீத்தி, " ஏன் மேம் உங்களுக்குத் தான் இரண்டு அண்ணன் இருக்காங்க இல்லை. ஏன் எனக்குப் போட்டிக்கு வர்றீங்க" எனச் சமாளித்தாள் .

      ஆனால் அரக்கன் பவனிடம் தன் முறைப்பை இன்னும் அதிகமாகக் காட்டிய படி , "நீ சாப்பிட்டு , அந்த ரூம்ல சாக்கில் கட்டி வச்சிருக்கச் சாமானத்தை எடுத்திட்ட என் கூட வா. உனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு" எனக் கடுமையாகச் சொன்னவன். ப்ரீத்தியை அழைத்து மீதி சப்பாத்தியைப் போட சொன்னான்.

           சுற்றிலும் பச்சை வண்ணத்தில் இயற்கை எழில் நிறைந்திருக்க, முழங்காலுக்குச் சற்று கீழே வரை வெள்ளையில் கருப்பு பூ போட்ட போட் நெக் ப்ராக் போட்டுக் கொண்டு, ஈரமான விரிந்த தலைமுடியில் சிடுக்கெடுப்பது போல், தன் விரலால் கோதிக் கொண்டே வந்தவளைத் தூரத்தில் பார்க்கும் போதே அவன் மனம் விம்மியது. அவளது தோற்றத்தை விட்டு விழி எடுக்க முடியாமல் சிக்கியிருந்தவன், அவள் அருகில் வரவர தான் சுதாரித்தான்.

       ஆனால் அதற்குள் அவள் அவனை, கடத்தல்காரன், கிட்னாப்பர், கொள்ளைக்காரன் என்று சொன்னதுக்கெல்லாம் பெருமையாகப் பேசாமல் இருந்தவன், அரக்கன் என்ற போது கூட அலட்டிக் கொள்ளாமல் இருந்தவன், அவள் பாயி- அண்ணா என அழைக்கட்டுமா எனக் கேட்கவும் நெருப்பாக உள்ளே கனன்று கொண்டிருந்தான். அதிலும் பவன் சிரித்தது மேலும் அதில் நெய் வார்க்க, அவனே பலிகடாவாக மாறினான்.

    "சாப்பிட்டு" எனச் சொன்னதைக் காதில் வாங்காமல் பவன் உடனே போய்ச் சாக்கைத் தூக்கி வந்தான். ப்ரீத்தி சப்பாத்தி சுடச் சென்று விட்டாள். மூன்று கல்லை வைத்து தீ மூட்டி சப்பாத்திக் கல்லை வைத்துப் போட்டுக் கொண்டிருந்தனர். எல்லாம் செட்டப்பா இருக்கே என வியந்தபடி வந்த ஹாசினி காட்டேஜ் வாசலில் உட்கார்ந்து அவர்களை வேடிக்கை பார்த்தாள். காற்று சிலுசிலுவென அடித்து அவளது முடி அடங்க மறுத்துப் பறந்து கொண்டிருக்க, அங்கே அரக்கனின் மனமும் அதே போல் அடங்க மறுத்து அவளையே நோட்டமிட்டது.

      ஒரு நிமிடம் இருவர் பார்வையும் சந்தித்து விட ஹாசினி என்ன எனக் கண்களால் வினவினாள். அவன் வேறு புறம் திரும்பிக் கொண்டான். " பாஸ் என்னா இது" என அலறினான் பவன். மண் வெட்டி, கடப்பாரை, அருவாள் எனக் கொத்தனார் சாமான்களாக இருந்தது.

        " ஏன்டா கத்தற. சாப்பிட்டு வா போகலாம்" என்றவன். தனக்கு ஒரு தட்டில் சப்பாத்தி சப்ஜியை வைத்துக் கொண்டு அமர்ந்தான்.

     " பாஸ், என்னா பாஸ் கொத்தனார் வேலை எல்லாம் பார்க்கச் சொல்றீங்க. போங்க பாஸ் நான் வேலையை ரிசைன் பண்றேன்" என்றான்.

       அவனை முறைத்த ஆறடி அரக்கன் ப்ரீத்தியிடம் திரும்பி, "ப்ரீத்தி என்கிட்ட வேலை செய்யறவங்களுக்கு மட்டும் தான் சாப்பாடு தங்குற இடம், இங்கிருந்து போறதுக்கு வசதி எல்லாம் செஞ்சு கொடுக்க முடியும். பவன் ரிஸைன் பண்றான் மா. அதுனால அவனுக்கு நம்ம சப்பாத்தி தரவேண்டியது இல்லை. பத்திரமா எடுத்து வை. மதியம் சாப்பிட்டுக்கலாம். " என்றான்.

        பவன் அதிர்ந்தவனாக, " பாஸ் இதெல்லாம் ஞாயமே இல்லை. " என முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு போய் உட்கார்ந்து விட்டான். ப்ரிதியிடம், "உன்னை நினைச்சதுக்கு, என்னவெல்லாம் அனுபவிக்கிறேன்" எனச் சண்டையிட்டான். "பவன், ஏதா இருந்தாலும், இங்கே என்கிட்டே காட்டு, ப்ரீத்தியை எதுக்கு முறைகிற" எனத் திட்டினான் பாஸ்.

       "பாஸ், உலகத்துல ஆம்பளையா பிறக்க கூடாது, பிறந்தாலும் அழகான பொண்ணை நினைக்கக் கூடாது" எனத் தத்துவம் பேசினான் பவன் . "அது சரி, அழகான பொண்ணு யாரு, ஒன்னு அட்டை பிகருன்னு , இன்னொன்னு அழகான ராட்சசின்னு நேத்து சொன்ன' எனப் பாஸ் இரண்டு பெண்களின் மத்தியிலும் பவனைக் கோர்த்து விட்டான். இருவரும் அவனை முறைத்தனர். "நான் உனக்கு அட்டை பிகரா" என ப்ரீத்தி அவனோடு சண்டையிட்டால் , "இல்லை பேபி, உன்னை அப்படிச் சொல்லுவேனா, நீ தான் அழகான ராட்சசி" என்றான் .

         "அப்ப உன் மேம் தான், அட்டை பிகரு, சரி தானே, கொஞ்சம் உன் மேடத்துக்கு விளங்குற மாதிரி நல்லா சொல்லு, அம்மணிக்கு, அது ஏதோ உலக அழகின்னு நினைப்பு" எனக் கூட இரண்டு பிட்டை சேர்த்துப் போட்டான் பாஸ்.

            "பாஸ், உங்களுக்கு ஏதாவது சொல்லனும்னா, தைரியமா எங்க மேடத்துகிட்டையே நேரா சொல்லுங்க. அவங்களைப் பாருங்க, எவ்வளவு கெத்தா, உங்க முன்னாடியே உங்களை அரக்கன் அப்டின்னு கெத்தா சொல்றாங்க" எனப் பேச்சை திருப்பிப் பாஸையே மாட்டி விட்டான்.

      "எனக்கெனப் பயம், இது ஒரு அட்டை பிகரு, காசு தரேன்னு சொன்னானுங்க, அதனால கடத்தினேன்" எனத் தனது பழுப்புக் கண்களில் நக்கலைக் காட்டி சொன்னான் பாஸ்.

         "ஆமா ஆமாம், அட்டை பிகருக்கே, வாயில கொசு போறது தெரியாம பார்த்துட்டு இருந்ததை நானும் பார்த்தேன். பை த பை, எந்த அடிமை அரக்கனும், அவனோட வேலைக்கார அரக்கனும் என்னைப் பார்க்க வேண்டாம் , போங்கடா " என எள்ளும் கொள்ளும் வெடிக்கக் காட்டேஜ்க்குள் சென்றாள் .

         ப்ரீத்தி கெஞ்சி கூத்தாடி சாப்பிட அழைத்து வந்தாள் , ஆனால் சப்பாத்தியை பிய்த்து சாப்பிட முடியாமல் அவதி படவும், அரக்கன் அவளுக்குச் சப்பாத்தியை சபிஜி வைத்து ரோலாகச் சுத்திக்குக் கொடுத்தான், வேண்டா வெறுப்பாகவே அதையும் முழுங்கினாள் ஹாசினி சந்திரா.

      அரக்கன் தன்னால் சாப்பிட்டு விட்டு, அதே சாக்குப் பையைத் தான் தூக்கிக் கொண்டு கிளம்பினான். அவனைப் பார்த்த ஹாசினி " நான் வரவா. நான் வந்து ஹெல் பண்ணவா" எனக் கேட்டாள் . அவள் குரலில் திரும்பியவன் அவளை ஆச்சரியமாகப் பார்க்கவும்.

      " லுக், இந்தத் தீவைச் சுத்த படுத்தினா நோபல் ப்ரைசா தரப் போறாங்க. நிச்சயமா இல்லை. அதனால் அதைச் செய்யமாட்ட. இதுக்கு வேற சாலிட் ரீசன் இருக்கும். நான் என்சிசி ல இருந்திருக்கேன். ஐ கேன் டூ" என்றாள்.

     " இது ஒருநாளில் முடியாது. நீ நாளைக்கு வா. உன் காலில் பூச்சி கடிச்சிருக்கு அப்படி யே உட்கார்ந்து இரு. நான் மருந்தோட வர்றேன்" என அவன் கிளம்ப

       " பாஸ், இருங்க நானும் வர்றேன்" என்றான் பவன். அவனைச் சாப்பிடச் சொல்லி விட்டு, அவனுடைய பாஸ் மட்டும் சென்று சில பச்சை இலைகளை எடுத்து வந்தான்.

        ஒரு பாறை கல்லைச் சுத்தம் செய்து அங்கு அந்த இலையை வைத்து மற்றொரு கல்லால் அதனை அரைத்தவன் அதனை எடுத்துக் கொண்டு ப்ரீத்தியிடம் சென்று ஹாசினிக்குப் பூச்சி கடித்த இடத்தில் வைத்துக் கட்டிவிடச் சொன்னான்.

      ஹாசினி மீண்டும் அவன் யாரெனக் கேட்கையில் பதில் சொல்லாதவன், அன்று இரவு அவள் சுர வேகத்தில் தன்நிலை மறநத மயக்கத்தில் இருக்கும் போது தான் யாரெனச் சொன்னான்.