திருநாட்டுச்சிறப்பு
திருவிளையாடற் புராண ஆசிரியர் பரஞ்சோதி முனிவர், கடவுள் வாழ்த்து பகுதியை அமைத்த பின்னே நூற் செய்த காரணம் மற்றும் அவையடக்கம் ஆகிய பகுதிகளை அமைத்துள்ளார்.
நூற் செய்த காரணம்.
அண்ணல் பால் தெளிந்த நந்தி அடிகள் பால் சனற்குமாரன்
உள் நிறை அன்பின் ஆய்ந்து வியாதனுக்கு உணர்த்த வந்தப்
புண்ணிய முனிவன் சூதற்கு ஒதிய புராணம் மூ ஆறு
எண்ணிய இவற்றுள் காந்தத் தீச சங்கிதையின் மாதோ
அண்ணல் பால் தெளிந்த-என்பது சிவபெருமானிடம் உபதேசம் பெற்று தெளிந்த நந்திஎம்பெருமான் அதனை சனகர் குமாரர் நால்வர்க்கு உணர்த்த,அவர் உள்நிறை அன்பின் ஆய்ந்து வியாசனுக்கு உணர்த்த,அதை பெற்ற அப்புண்ணிய முனிவன் சூத முனிவர்க்கு எடுத்துரைத்தது மூஆரு -பதினெட்டு புராணங்கள்.சிறந்திடும் இவ்வடநூல் தன்னை தென் சொல்லால் சொல்ல ,பெரியோர் வேண்டுகோளும் விடுத்திட தளம்,மூர்த்தி,தீர்த்த சிறப்புகளையும் ,அவற்றுள் இறைவனின் அருள் விளையாடல் எட்டெட்டு .அத்துடன் அருச்சனை,வினை ஆகா அறுபத்து எட்டு என்று படலமாக பரஞ்சோதி மாமுனி வகுத்த அருள்நிறை திருவிளையாடற் புராணம் கேட்பீர்.
அவையடக்கம்.
அவையடக்கம்.
நாயகன் கவிக்கும் குற்ற நாட்டிய கழக மாந்தர்
மேய அத் தலத்தினோர்க்கு என் வெள்ளறி உரையில் குற்றம்
ஆயுமாறு அரிது அன்றேனு நீர் பிரித்து அன்னம் உண்ணும்
தூய தீம் பால் போல் கொள்க சுந்தரன் சரிதம் தன்னை.
நாயகன் -நம் புராண நாயகனார் ஆகிய சிவபெருமானார் கவிக்காக,தருமி என்ற புலவனுக்காக பாடல் புனைந்த புனித தலம் ,அதையும் குற்றம் நாட்டிய மாந்தர் வாழ்ந்த தலம் ,அத்தகைய தலப்புரானமாய் அமைந்த இந்த நூல் பரஞ்சோதி மாமுனிவன் ,அங்கயற்கண் அம்மை ஆசியோடு உரைத்த நூல் .இதில் குற்றம்,குறை இருப்பினும்,பால் மட்டும் பிரித்து அருந்தும் அன்னம் போல் ,சுந்தரன் சரிதம் அதன் நல்லனவற்றை மட்டும் அகம் கொள்வீர்.
திருநாட்டு சிறப்பு.
புராணம் என்றும் அமையுங்கால் நாட்டுசிறப்பு ,நகரசிறப்பு ,தலம் ,மூர்த்தி,கோவில் தீர்த்தம் மற்றும் இதில் கைலாய சிறப்பினையும் இதில் செப்புகிறார் முனிவர்.
திருநாட்டு சிறப்பு எனும் இப்பகுதியில்
வான்சிறப்பு,
ஆற்று சிறப்பு,
மலைசிறப்பு ,
திணை மயக்கம்,
உழவர் செயல்கள் மற்றும்
தமிழ் சிறப்பையும் உரைக்கின்றார்.
கறை நிறுத்திய கந்தர சுந்தரக் கடவுள்
உறை நிறுத்திய வாளினால் பகை இருள் ஒதுக்கி
மறை நிறுத்திய வழியினால் வழுதியாய்ச் செங்கோன்
முறை நிறுத்திய பாண்டிய நாட்டு அணி அது மொழிவாம்.
நஞ்சுதனை தன கண்டத்தில் தாங்கிய சுந்தரக் கடவுள் பாண்டியன் மருகனாகி வாளினை பகை இருள் ஒதுக்கி,செங்கோலோச்சி,தம் வகுத்த மறையை தானே ஓதி நீதி நிறை வழுவாமல் முறை நிறுத்திய பாண்டிநாட்டு அணி மொழிவோம் என்கிறார்.
வான்சிறப்பு
வான்சிறப்பு
தெய்வ நாயகன் நீறு அணி மேனி போல் சென்று
பௌவம் ஏய்ந்து உமை மேனி போல் பசந்து பல் உயிர்க்கும்
எவ்வம் ஆற்றுவான் சுரந்திடும் இன் அருள் என்னக்
கௌவை நீர் சுரந்து எழுந்தன கனைகுரல் மேகம்.
பௌவம் ஏய்ந்து உமை மேனி போல் பசந்து பல் உயிர்க்கும்
எவ்வம் ஆற்றுவான் சுரந்திடும் இன் அருள் என்னக்
கௌவை நீர் சுரந்து எழுந்தன கனைகுரல் மேகம்.
தெய்வநாயகன் மேனிபோல் வெண்மையாய் இருந்த ஒலிகுரல் மேகம் கடல் நீரை பருகி உமையவள் மேனிபோல் பசியநிறம் கொண்டது.
பின்னர் பல்வகை உயிர்களுக்கும் துன்பம் தணிப்பான் போல இறைவன் அருளாய் நீரை சுரந்து ஒல் என இடித்து எல் எனும் சூரியனை பகைத்து மின்னல் எனும் வாள்படை கொண்டு வானவில்லை வளைத்து அம்பென நீரை பாய்ச்சி கொடையாகிய பகைவன் மீது வெம்போர் புரிந்தது என மழை வளம் மிக்க பாண்டிநாடு என்றும் அவை அகத்திய முனிவன் வாழ் இருப்பிடமாம் பொதிகை மலை மீது பொழிந்தது என்றும் உரைக்கிறார்.
ஆற்றுசிறப்பு
கரு நிற மேகம் என்னும் கச்சு அணி சிகரக் கொங்கை
அருவி ஆம் தீம்பால் சோர அகன் சுனை என்னும் கொப்பூழ்ப்
பொருவில் வேய் எனும் மென் தோள் பொதியம் ஆம் சைலப் பாவை
பெருகு தண் பொருநை என்னும் பெண் மகப் பெற்றுள் அன்றெ.
இங்கு பொதிய மலையின் திருமகளாய் பொருணை நதியை உருவகம் செய்கிறார்.அகன்சுனை என்ற கொப்பூழினையும் ,மெல்லிய மூங்கிலை தோளாக கொண்டவளான போதியம்மலை பாவை,கரும் மேகம் எனும் கச்சை அணிந்து ,சிகரமாகிய கொங்கையில் இருந்து மதுரம் பொருந்திய தீம்பால் பெருக அதுவே பொருநையாம் அவள் மகவு ஆனது என்றார்.கல் என ஒலித்து வீழ்ந்த கடிய வேகத்தினை உடைய பொருநை நீராகிய குழந்தை முல்லை நிலத்தினில் தவழ்ந்து உழவர்களின் பண்ணை தோறும் விளையாடுகிறாள் என்றார்.
ஈறி லாதவ ளொருத்தியே யைந்தொழி லியற்ற
வேறு வேறுபேர் பெற்றென வேலைந ரொன்றே
ஆறு கால்குளங் கூவல்குண் டகழ்கிடங் கெனப்பேர்
மாறி யீறில்வான் பயிரெலாம் வளர்ப்பது மாதோ.
|
அழிவு இலாவதளாகிய சிவசக்தி ஒருத்தியே படைப்பு முதல் ஐந்தொழில் புரிய வெவ்வேறு பெயர்பெற்றார்போல,நதி,கால்வாய்,குளம்,
கிணறு ஊற்று எனப்பெயர் கொண்டு பொருநை நல்லாறு எண்ணிறைந்த உயர்ந்த பயிர்களை வளர்கிறது என்றார்.
உழவர் செயல்கள்
| களமர்கள் பொன்னேர் பூட்டித் தாயர்வாய்க் கனிந்த பாடற் குளமகிழ் சிறாரி னேறு மொருத்தலு முவகை தூங்க வளமலி மருதம் பாடி மனவலி கடந்தோர் வென்ற அளமரு பொறிபோ லேவ லாற்றவாள் வினையின் மூண்டார். |
உழவர்கள் பொன்னேரை பூட்ட எருதுகளும்,எருமைகடாக்களும் மகிழ்ச்சியுடன் வர, அவை அன்னையரின் வாயினின்று வரும் பாடலுக்கு மனம் மகிழ்கின்ற சிறுவர்களை போல் மருதப்பண் பாட்டுக்கு மகிழ்ந்து உழவர் சொல்லுக்கு இணங்க உளவு தொழில் செய்தன என்பார்.பல வண்ண எருதுகளை பூட்டி வழிய கால்களை உடைய உழவர்,பூமியில் உழவு செய்ய பூமியின் அங்கம் கிழித்து செந்நெல் பயிர்கள் செழித்து அசைந்து ஆடின என்பார்.
கற்றவை களைந்து தூற்றிக் கூப்பியூர்க் காணித் தெய்வம்
அற்றவர்க் கற்ற வாறீந் தளவைகண்* டாறி லொன்று
கொற்றவர் கடமை கொள்ளப் பண்டியிற் கொடுபோய்த் தென்னா
டுற்றவர் சுற்றந் தெய்வம் விருந்தினர்க் கூட்டி யுண்பார்.
செழித்து வளர்ந்த பயிர்களை வைகோல் களைந்து தூற்றி நெல்மணிகளை பொலிகலாய் குவித்து,அதில் கிராம தேவதை,வளியவர் ,ஆறில் ஒரு பகுதி வரியை மன்னவர்க்கு என அளவை அளந்து கொடுத்து பின்னர் விருந்தினர் உபசாரம் செய்து,தாமும் உண்பர் என உழவர் தம் புகழ் செப்புகிறார்.
திணை மயக்கம்.
இன் தடம் புனல் வேலி சூழ் இந் நில வரைப் பில்
குன்ற முல்லை தண் பணை நெய்தல் குலத்திணை நான்கும்
மன்ற உள்ள மற்று அவை நிற்க மயங்கிய மரபின்
ஒன்றொடு ஒன்று போய் மயங்கிய திணைவகை உரைப்பாம்.
இனிய பாண்டிய நாடானது அகன்ற நீர் வேலியால் சூழப்பட்ட பகுதி ஆகும்.இங்கு உறர்ந்த நாள் வகைதிணைகளும்,குறிஞ்சி,முல்லை,
மருதம்,நெய்தல் ஆகியன ஒருதலையாக,ஒன்றோடு ஒன்று நெருங்கி உள்ளது அதன் சிறப்பினை உரைப்போம் என்றார்.
முல்லை நிலத்தில் பசுக்களை மேய்க்கும்,இடையவர்கள்,குறுந்த மரத்தின் மீது,விரைந்து ஏறி ,அதன் பால் படர்ந்த மிளகு கொடிகளை உகுப்பர் ,அதனை வேட்டுவ சிறுமிகள் பொன்பதித்த சிறு கிண்ணியில் முல்லை சோறென கொண்டு அதில்,தேன் விரவி விளையாடுவர்.
மருத நிலத்தில் எருமை,தன் கன்றோடு குளிர் கரும்புகளை உண்டு பொன் போல் பூக்களை உதிர்க்கும் வேங்கை மர நிழலில் உறங்கும்.
முறம் போன்ற செவிகளை உடைய களிறுகள்,குறுஞ்சி நிலத்தின் முதிரா தினை பயிர் உண்டு, மறுத்த மாற நிழலின் கீழே,தான் துயுலுமிடம் அதுவென கருதி தலை சாய்த்து உறங்கும்.
நெய்தல் நிலத்தில் வேட சிறுமியர் கட்டிய மண் வீடுகளை அலைகள் விரைந்தோடி வந்து, அழிக்கும் ,அதன் பால் சினந்த சிறுமியர் பற்றட்டார் போல் மணிகளை வீச,அதை பரதவர் சிறுமியர் பொருக்கி யெடுத்து சங்குடன் சேர்த்து கோர்ப்பார் என்றார்.
மலை சிறப்பு
அவம் மிகும் புலப் பகை கடந்து உயிர்க்கு எலாம் அன்பாம்
நவமிகும் குடை நிழற்றி மெய்ச் செய்ய கோல் நடத்தி
சிவ மிகும் பரஞான மெய்த் திருவொடும் பொலிந்து
தவம் இருந்து அரசு ஆள்வது தண் தமிழ்ப் பொதியம்.
நவமிகும் குடை நிழற்றி மெய்ச் செய்ய கோல் நடத்தி
சிவ மிகும் பரஞான மெய்த் திருவொடும் பொலிந்து
தவம் இருந்து அரசு ஆள்வது தண் தமிழ்ப் பொதியம்.
உயிர்கள் அனைத்திற்கும் கேடு மிகுந்த புலன்களின் பகையை வென்று,அருள் எனும்,புதுமை குடையை நிழலாக செய்து,வாய்மை எனும் செங்கோல் நடத்தி சிவ ஞானமாகிய அழியா செல்வத்துடன் ,சிவபேறு அடைய காரணமாய் தவமாய் தவமிருக்கும் செந்தமிழை உடைய பொதியமலை என்பார் முனிவர்.
மாயவன் வடிவாய் அது வைய மால் உந்திச்
சேய பங்கயமாய் அது தென்னன் ஆடலர் மேல்
போய மெல் பொகுட்டு ஆயது பொதியம் அப் பொகுட்டின்
மேய நான்முகன் அகத்தியன் முத்தமிழ் வேதம்.
சேய பங்கயமாய் அது தென்னன் ஆடலர் மேல்
போய மெல் பொகுட்டு ஆயது பொதியம் அப் பொகுட்டின்
மேய நான்முகன் அகத்தியன் முத்தமிழ் வேதம்.
மாயவன் வடிவு போன்றது பாண்டிய நாடு ,அதில் தொற்றிய தாமரை போன்றது பொதிய மலை,அதில் தோன்றிய நான்முகன் போன்றவர் அகத்தியன்,நான்முகன் வேதம் போன்றது,அகத்தியன் திருவாய் உத்தித்த செந்தமிழ்.
பொதியிலே விளைகின்றன சந்தனம் பொதியின்
நதியிலே விளைகின்றன முத்தம் அந் நதி சூழ்
பதியிலே விளைகின்றன தருமப் அப் பதியோர்
மதியிலே விளைகின்றன மறை முதல் பத்தி
நதியிலே விளைகின்றன முத்தம் அந் நதி சூழ்
பதியிலே விளைகின்றன தருமப் அப் பதியோர்
மதியிலே விளைகின்றன மறை முதல் பத்தி
பொதிகை மலையினில் விளைகின்றன சந்தனம்.அதன் மகளாம் பொருநை நதியில் விளைகின்றன முத்துக்கள்.அப்பொருநையாற்றின் சூழ் நகரில் உண்டாகின்றன இறைவனை துதிக்கும் அடிபத்திகள்,அதனால் அந்நகர் வாழ் மனிதர் மத்தியில் விளைகின்றன மறைகள்.
இவ்வாறு மலையின் சிறப்பை எடுத்துரைத்தார் மாமுனிகள்.










