Thursday, 10 July 2014

திருவிளையாடற் புராணம் முகவுரை.

திருவிளையாடற் புராணம் முகவுரை.

"தென்னாடுடைய சிவனே போற்றி.
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி."

நம்மை எல்லாம் ஆட்டிவைக்கும் அந்த ஆடவல்லானின் திருவிளையாடல்கள் எண்ணற்றவை.ஒவ்வரு நொடிப் பொழுதும் அவன் கருணையினால் தன கழிகிறது.அவன் மதுரை மாநகரில் நிகழ்த்தி காட்டிய அற்புதங்கள் பல,அவற்றுள் 64 திருவிளையாடல்களை ,தொகுத்து 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவா ஞான ஞானி பரஞ்சோதி முனிவர் நூல் செய்தார்.

இந்த நூல் அன்றிருந்த ஆன்றோர்கள் விருப்பபடி,அன்னை மீனாட்சியின் ஆணைப்படி உருவானது.எளிய தமிழில்,வாசிக்க இனிமையாக நூலை செய்து வைத்துள்ளார்.அவர் வழி  நின்று நான் வாசித்தவற்றை உரைநடையாக தரவும்,அதன் சுவையை அனைவருடனும் பகிரவும் ஆசை பட்டே இந்த பகுதி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழர் மரபில்,நம் தமிழ் மொழியில் எம்பெருமானின் மூன்று கண்களையும் சூரியன்,சந்திரன்,அக்னி என செப்புகிறது.
அதில் வலது கண் -சூரியன் ,சோழர்கள்  ,அவர்கள் காலத்தில் தோன்றியது பெரிய புராணம்,. இடது கண் -சந்திரன் -பாண்டியர்கள்  அவர்கள் காலம் தோன்றியது திருவிளையாடற் புராணம், நடுக் கண் அக்னி-அக்னி வழி தோன்றியது கந்த புராணம்.இவை மூன்றும் தமிழ் மொழியின் முப்புரானங்கள் என வழங்கப்படுகிறது.
இவற்றுள்-
பெரிய புராணம் -அருளாளர்களின்,இறைவனின் அருள் பெற்றவர்களின் புராணம்.
கந்த புராணம்-இறைவனை துதித்தவர்கள் ,மற்றும் நிந்தனை செய்தவர்கள் பற்றிய புராணம்.
திருவிளையாடற் புராணம்-இறைவன் நிகழ்த்திக் காட்டிய புராணம்.

புராணம் என்ற சொல்லுக்கு நிறைவு தருவது,தொன்மை வாய்ந்தது என்று பொருள் படும்.இது சிறப்பும்,பெருமையும் இணைந்தது.

திருவிளையாடற் புராணம்.
நூல் குறிப்பு
3 காண்டங்களை உடையது-மதுரை காண்டம்,கூடல் காண்டம்,ஆலவாய் காண்டம்.
மொத்தம் 3363 பாடல்களை கொண்டது.
16 ஆம் நூற்றாண்டில் வேபத்தூராரால் எழுதப்பட்டது.பின்னர் 
17 ஆம் நூற்றாண்டில் பரஞ்சோதி முனிவரால் விவரித்து  எழுதப்பட்டது.

ஆசிரியர் குறிப்பு.
பரஞ்சோதி முனிவர் 17 ஆம் நூற்றாண்டில் திருமறைக்காடு என்ற தலத்தில்,தற்போது வேதாரண்யம் சைவம் போற்றும் குளத்தில் அபிதேகத்தர்,மரபில்,மீனாட்சி தேசிகர் என்பவர்க்கு மகனாய் பிறந்தார்.இவர் தமிழ் மற்றும் வடமொழியில் புலமை பெற்றிருந்தார்.பல நூல்களை கற்றறிந்து பண்டிதராய் இருந்தார்.இவர் துறவறம் பூண்டவர்.இவர் மதுரையம்பதிக்கு அம்மை,அப்பனை வணங்கி வாழ்ந்து வந்த போது ,இவரது பக்தியையும்,புலமையும் கண்ணுற சான்றோர்கள் இப்புராணத்தை பாடுமாறு வேண்டிக்கொண்டனர்.அங்கையர் கண் அம்மையும்,ஓர் நாள் இவர் கனவில் எழுந்தருளி இப்புராணத்தை பாடுவாயாக என பணித்தார்.அன்னை இட்ட கட்டளைக்கு அடிபணிந்து அவர் பக்தியுடன் படித்த சுந்தர புராணம் இது.இதுவே மதுரையின் தல புராணமாகவும் உள்ளது.

இந்த நூல் கடவுள் வாழ்த்து,நட்டு,நகர சிறப்பு என பல வற்றை உணர்த்தி புரானத்தினுள் செல்கிறது .அவற்றை இனி வரும் பதிவுகளில் காண்போம்.




No comments:

Post a Comment