Monday, 14 July 2014

திருவிளையாடற் புராணம் பகுதி-1

தென்னாடுடைய சிவனே போற்றி 
என்னாட்டவர்க்கும் இறைவா  போற்றி.

திருவிளையாடற் புராணம்  பகுதி-1

                   திருவிளையாடற் புராணம் மதுரை காண்டம்  என்பதை முதற் பகுதியாக கொண்டு தொடங்குகிறது.எம்பெருமான்  மதுரையெம்பதியில் நிகழ்த்திய திருவிளையாடல்கள் இதில் இடம் பெறுகின்றன.இந்த காண்டமானது.புராணத்தின் உள்ளே செல்லும் முன்னே காப்பு செய்யுள் மற்றும் வாழ்த்து துதி செய்யப்பட்டு பயணப்படுகிறது.

படலங்கள் 
காப்பு 
வாழ்த்து.
நூற்பயன் கடவுள் வாழ்த்து.
திரு நாட்டு சிறப்பு.
திரு நகர சிறப்பு 
திருக்கைலாய சிறப்பு 
தலச்  சிறப்பு 
தீர்த்தச் சிறப்பு 
மூர்த்திச் சிறப்பு 
                   
                   என எல்லா சிறப்புகளையும் அழகாக பாடல் செய்த பின்னரே புராணம் நோக்கி பயணிக்கிறது.இவை அனைத்தையும் சிவஞான பரஞ்சோதி முனிவர் வர்ணிக்கும் விதம் படிக்க படிக்க இன்பம் தரும். இறைவனின் நாமாம் கேட்க புண்ணியம் கோடி பெரும்.
                      
                        அத்தனை பாடல்களையும் சொல்லி அர்த்தம் தர நான் தமிழ் ஆசான் அல்ல.எம்பெருமான் பாகத்தில் திளைக்க எண்ணி அவரை பற்றிய சிறு செய்திகளை பகிர்ந்து நான் பெற்ற இன்பத்தை ஒரு சிலருடன் பகிர அவன் தந்த அருள் என்றே சிலவற்றை உங்கள் முன் சமர்பிக்கிறேன்.


                       காப்பு 
சத்தி ஆய்ச் சிவம் ஆகித் தனிப் பர 

முத்தி ஆன முதலைத் துதி செயச் 

சுத்தி ஆகிய சொல் பொருள் நல்குவ 
சித்தி யானை தன் செய்ய பொன் பாதமே

                           மதுரை மாநகரில் கோவில் கொண்டிருக்கும் விநாயகருக்கு சித்திவிநாயகர் என்பது திருப்பெயர் ஆகும்.அவர் தம் பாதம் பணிந்து ,பரமுக்க்தி தரும் மேலான வீடு பேரை அளிக்க வல்ல அவர் தம் தந்தை தாயாகிய  சிவத்தையும்,சக்தியையும் வணங்க நல பொருள் மிகு சொல் அருள செய்ய  பரஞ்சோதி முனிவர் வேண்டுகிறார்.
                           எச்செயல் தொடங்கும் முன்னும் முதற் பரம்பொருளாகிய மூஷிக வாகனனை வணங்கி தொடங்குதல் நம் மரபு.இவர் மங்களம் தரும் வள்ளல்.இவரின் துணை வேண்ட அவரே நம் தடம் வந்து துணை தந்து வேண்டிய செயலை தவறாது முடித்து தருவார்.இங்கும் என் இந்த கன்னி முயற்சியை வெற்றி பெறச்செய்ய விக்ன விநாயகன் பாதம் பணிந்து நூல் ஆசிரியர் பின் செல்கிறேன்.

வாழ்த்து  

மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம் 
பல்குக வளங்கள் எங்கும் பரவுக அறங்கள் இன்பம் 
நல்குக உயிர் கட்கு எல்லாம் நால் மறைச் சைவம் ஓங்கிப் 
புல்குக உலகம் எல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க.
                              புராணங்கள் தொடங்கப்படும் முன் காப்பு செய்யுள் பாடப்பட்ட பிறகு அந்த நாடும் மக்களும் எல்லா வளங்களும் பெற வாழ்த்தி பாடல் புனைவார்கள்.
இங்கும் வேதங்களும்,வேள்விகளும் பெருகி ,வானம் நீர் சுரந்து,வளங்கள் பெருகி,அறங்கள் எங்கும் பெருகி ,உயிகட்ட்கு இன்பம் தந்து,நான் மறை வேதங்கள் ஓதப்பட்டு,சைவத்தை வளர்த்து ஒழுக்கம் தந்த வழியில் உலகம் செழித்து செங்கோல் சிறக்க முனிவர் வாழ்த்துகிறார்.
வாழ்த்து பாடல் தந்தானது.இந்த நூல் படிப்பதனால் ஆன  பயன் யாது.அதை அடுத்து தருகிறார்.
                                                                      நூற் பயன் 
திங்கள் அணி திரு ஆலவாய் எம் அண்ணல் திரு 
           விளையாட்டு இவை அன்பு செய்து கேட்போர் 
சங்க நிதி பதுமநிதிச் செல்வம் ஓங்கித் தகைமை தரு 
           மகப் பெறுவர் பகையை வெல்வர் 
மங்கல நல் மணம் பெறுவர் பிணி வந்து எய்தார் வாழ் 
           நாளும் நனி பெறுவர் வான் நாடு எய்திப் 
புங்கவர் ஆய் அங்கு உள்ள போக மூழ்கிப் புண்ணியர் 
           ஆய்ச் சிவன் அடிக்கீழ் நண்ணி வாழ்வர்.
                                          பிறை சூடிய பெம்மான் இந்த ஆலவாய் நகரினில் திருவிளையாட்டு  படிப்போர்,கேட்போர் -சங்கநிதி,பதுமநிதி,செல்வம் ஆகிய செல்வம் பெறுவார்.பெருமை தரும் பிள்ளை பெறுவர் ,பகையை வெல்வர்,அனைவர்க்கும் மங்களம் செய்யும் மனம் பெறுவார்.எந்த பிணியும் இவரை வந்து அடையா.ஒவ்வரு நாளும் மிகுந்த நன்மை அடைவர். சிவா புண்ணியம் பெறுவார்.அதன் பயனாய் அமரர் உலகம் சென்று அதன் இன்பமும் அடைவர்.என பரம்ஜோதி முனிவர் இயம்புகிறார்.
கடவுள் வாழ்த்து பகுதி அடுத்து வருகிறது அதில் அத்தனை அழகாக சிவகுடும்பம் அனைத்தையும்  செய்யுட் படுத்தியுள்ளார் பரஞ்சோதி மாமுனிவர்.அவை அடுத்த பகுதியில் காண்போம்.




1 comment:

  1. Starburst - Quickspin Game | CasinoSiteGuru
    Starburst 카지노사이트 was released on April 1st, 2019 and continues, 카지노사이트 having been ported across all platforms and making the rounds on the Genesis.

    ReplyDelete