யார் இந்த நிலவு- நிறைவு பகுதி.
"சூழ்கின்ற பண்பெல்லாம் கோவையில்தான்
சுவையெல்லாம்
திருப்பூர்
அப்பப்பா கோவைக்கு விருந்து வந்தால்,
ஆறுநாள் பசியும் வேண்டும்
வயிறும் வேண்டும்!
தப்பப்பா , கோவைக்கு வரக்கூடாதே
சாப்பாட்டாலே சாகடிப்பார்."
- கண்ணதாசன்.
யார் இந்த நிலவு- நிறைவு பகுதி.
"சூழ்கின்ற பண்பெல்லாம் கோவையில்தான்
சுவையெல்லாம்
திருப்பூர்
அப்பப்பா கோவைக்கு விருந்து வந்தால்,
ஆறுநாள் பசியும் வேண்டும்
வயிறும் வேண்டும்!
தப்பப்பா , கோவைக்கு வரக்கூடாதே
சாப்பாட்டாலே சாகடிப்பார்."
- கண்ணதாசன்.
யார் இந்த நிலவு- 59 part-2 .
"நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால்
அல்லல்வினை எல்லாம் அகலுமே - சொல்லரிய
தும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும்
நம்பிக்கை உண்டே நமக்கு."
யார் இந்த நிலவு-59-பார்ட்-1
யார் இந்த நிலவு-58
ஆயி துல்ஜா பவானி, பைரவிபாயின் முழுமுதல் கடவுள். கைலாஷ் ராஜன் தான் அவரது வாழ்க்கைத் துணை எனத் தன் சன்னதியிலேயே, அவருக்கு உணர்த்தி வரமாக அவரையே மணாளனாகத் தந்தவரும் கூட, இத்தனை வருடப் பிரிவு போதும் கூட அம்பிகையைக் குறை சொல்லாமல், தன விதியை தான் நொந்து கொள்வார். உலகின் தலை சிறந்த ஜோடிகள் என வணங்கப் பெற்ற கடவுள் அவதாரங்களும், புகழப் பெற்ற காதல் ஜோடிகளும் வாழ்க்கையெனும் உரைகல்லில் தோய்ந்த பின் தான், அந்தப் பெயரைப் பெற்றனர். அதே வரிசையில் நம் கைலாஷ், பாருவையும் சேர்த்துக் கொள்ளலாம். அத்தனை சோதனைகள் பிரிவுக்கும் பின்னும் இன்னும் மாறாத காதலோடு இருக்கிறார்களே.
இதோ மாலை நேர ஆயி பவானி ஆராத்தியை முடித்து விட்டு, கலாச்சாரச் சங்கமமாக நடக்கும் அவர்களின் வித்தியாசமான மணவிழாவுக்கெனச் சடங்குகள், சாங்கியத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
சற்று முன் தான், சௌந்தரியின் விருப்பத்தின் பேரில் ,அவர்கள் மரபுப் படி, அவர்கள் இணத்துப் பெரியவர்களை வைத்து பந்தற்கால் ஊன்றுதல் , பிறைமண் எடுத்தல், பேய்க்கரும்பு நட்டல், எனும் மூன்று முறைகளையும் செய்து முடித்திருந்தனர்.
திருமணம் நடக்கும் மேடையை, முற்காலத்தில், குலதெய்வ கோவிலுக்குச் சென்று, புற்று மண் எடுத்து வந்து மங்கலன் மூலம் கல் நீக்கி சதுர வடிவ மேடையை, அருமைக்காரப் பெரியவர் சொற்படி அமைப்பார்களாம், இதைப் பிறைமண் எடுத்தல் என்றும், அதில் பந்தற்கால் ஊன்றும் போது, ஆல் ,அரசு, பால் மரங்களில் ஏதேனும் ஒன்றியிலிருந்து மூன்று கிளையுள்ள முக்கவர் குச்சியை வெட்டி, அதைச் சீவி, மஞ்சள் தடவி அரச இல்லை சேர்த்து வைத்திருப்பர், அதில் தான், நவதானியங்களை மஞ்சள் துணியில் முடிந்து, அதில் கட்டி விடுவார்.
அதே போல், அடிக்கக் கரும்பைச் சேர்த்து நடும் பழக்கமும் முன்னாளிலிருந்துள்ளது. அதனைக் கொங்கு மலைகளில் அதியமான் மூலம், முதன் முதலாகப் பயிராக்கப் பட்டதாகவும், அதற்குக் கவுரவம் தந்தே அடிக் கரும்பை நடுவார்களாம். கரும்பும், கணுவிலிருந்தே வளரும் வான் பயிர், வாழை மரம் போலவே இதற்கும் சிறப்பு உண்டு. அதற்குப் பதிலாகத் தான் இந்தக் காலத்தில் வட்ட கருப்பட்டியை பயன் படுத்துகிறார்களோ என விஜயன் துணை மாப்பிள்ளையாக அமர்ந்து சந்தேகமும் கேட்டுக் கொண்டிருந்தார்.
"ஒவ்வொரு சாங்கியத்துக்கும் பின்னாடி பெரிய காரணம் இருக்குதுங்க" என அந்தப் பெரியவரும், படைகாலம் வைத்தல் என , திருமணத்தை வெற்றிலைபாக்குடன் நிச்சயித்த காலத்திலிருந்தே, திருமணத்துக்குத் தேவைப்படும் பொருட்கள், அதனைச் செய்து தரும் இனத்தவருக்குத் தாங்கள் செய்யும் மரியாதையம், சீரையும் விளக்கி சொல்ல, ராஜனும் கேட்டுக் கொண்டார்.
புற்று மாரியம்மன்வாசம் செய்யுமிடம், அதில் நாற் சதுர மேடை அமைத்துப் பிரம்மத்தானம் -எனப் பிரம்மநை எழுந்தருளச் செய்து , அதில் ஊன்றும் கரும்பை வான் பயிர், மன்மதன் அடையாளம் என விளக்கம் தந்து அருமைக்காரப் பெரியவர், அந்தச் சாங்கியங்களைச் செய்ய, முதலில் கடமையே எனச் செய்ய வந்த ராஜன், “ஓ, அப்படிங்களா விஷயம்”என அதில் ஆர்வாமானார். நாயகமும், அவர் நண்பர்களும் நடுவயதில் மணமகனாக அமர்ந்திருக்கும் ராஜனை மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தனர். நாயகம் மட்டுமின்றி மற்றவர்களுக்கும் ராஜன்- பவானி திருமணம் மனதில் ஓர் நிறைவை தந்தது.
“ ம்க்கும், உன்ர மகன் ,யார் வீட்டுக் கல்யாணமா இருந்தாலும், சாப்பிட கூட நிற்காத , சாங்கியத்துக்குத் தலையைக் காட்டிட்டு வருவான். இப்ப பாரு, பெரியவரைக் கேள்வி மேல கேள்வி கேட்டுகிட்டு இருக்கறதை “ என நாயகம் மகனைக் குறை பேச,
“அடுத்தடுத்து, மகன், மகளுக்குச் செய்யோனுமில்லைங்க , அதுக்காக அக்கறையா கேட்கிறான்னு , பெருமை படுவீங்களா, அதுக்கும் லொள்ளு பேசுறீங்க, உங்களுக்கு என்ர மகனை பேசாட்டி தின்ன சோறு செமிக்கதாக்கும் ” எனச் சௌந்தரி நொடிக்க,
"உன்ர மகனா, நீ மட்டும் , தனியா அவனைப் பெத்தியாகும், என்ர பங்கும் இருக்குதில்லை "என நாயகம் மீசையைத் தடவ, யாரும் அறியாமல், கணவனின் கைகளில் கிள்ளிய சௌந்தரி, " நல்ல கிரகம் புடிச்ச மனுஷா, சந்தோசத்தில் பேச்சு விளையிதாக்கும், யார் காதிலையாவது விழுகப் போகுது, ராமு அண்ணன் கேட்டாரு, மானத்தை வாங்கிப் போடுவாரு" எனச் சுற்றி முற்றி தேட,
"தங்கச்சிமா , என்ன தேடுறியாம்மா , நான் இங்க தான் இருக்கேன். நான் இவனைப் பார்த்துக்கறேன், நீ சாங்கியத்தைப் பாரு" என ராமசாமி சொல்லவும், நாயகம் அவரை முறைத்தார்.
"சரிங்கண்ணா " என அவசரமாக நகர்ந்தவர், "அண்ணி வாங்க" என அபரஞ்சியை அழைத்து, பெரியவர் சொல்லச் சொல்ல பந்தற்கால் ஊன்றுவதற்காக , கவிதா, ஆதர்ஷ், ஆதிரா, கஸ்தூரி,ராதாபாய் ஆகியோரை அழைத்தார். நான், நீ எனப் போட்டிப் போட்டு, ராஜனோடு பந்தற்கால் ஊன்ற, பாசக்கார பிள்ளைகளாக மற்ற பிள்ளைகளும் இணைந்தனர்.
அடிக்கரும்பை கையில் வைத்திருந்த ராஜனை, “ஏனுங்க மாமா, கரும்பை வேற பிடிச்சிட்டு நிக்கிறிங்களே, பட்டினத்தாராட்டமா சாமியாராகப் போறிங்களா”என அபிராம் கேட்க, “ஆறு உன்ர மாமன், அது உன்ர அத்தை வரும் முன்ன கேட்டிருந்தினாலும், ஆமான்னு சொல்லியிருப்பான், இப்போ கேளு, அதுக்கு வேற ஒரு வியாக்கியானம் சொல்லுவான்” என விஜயன் வம்பிழுத்தார்.
“அட சொன்னாலும், சொல்லலைனாலும் அது தான் நிஜம் . கரும்பு ரொமென்ஸ் கடவுள் மன்மதன் வச்சிருப்பாரமாம். கண்ணால வாழ்க்கை , இனிக்க இருக்கோணுமில்ல, அருமைக்காரே சொன்னாரு. நான் சொன்னது சரிதானுங்களே “எனப் பெரியவரையும், துணைக்கு அழைக்க, “சரிதானுங்க”என அவர் சிரித்து விட்டுச் சௌந்தரியிடம் அடுத்தடுத்த சடங்குகளுக்கு ஆட்கள் யாரெனக் கேட்டுக் கொண்டிருந்தார்.
“அதுசரி, ஆனாக்க அது மன்மதன் வச்சிருந்தது, கைலாஷ் இல்லை, அவர், இவரு மேல அம்பு உட்டாருன்னு தான் , கைலாச நாதர் எரிச்சே போட்டாரு”என நாயகம் புராணத்தைச் சொல்ல, “ஆம்பளைக்கு, ஆம்பளை எதுக்குடா அம்பு உடோணும் , அந்த அம்மணி கையில கொடுத்துப் போட்டிருந்தா, எல்லாச் சரியா போயிருக்குமில்ல. இந்த மாப்பிள்ளை , இத்தனை வருஷம் கழிச்சும், என்ர மகளைக் கண்டவுடனே தலை குப்புற விழுந்துட்டாரா என்ன’ என ராமாசாமி உடைசல் விட,
“அதையே குப்பாரி கொட்டி சொல்லி போட்டு வா”என நாயகம் கேலி பேச, ஆதர்ஷ் விளக்கம் கேட்டான். “ தண்டோரா போடறது, மைக் வச்சு ஊருக்கு எல்லாம் அறிவிக்கிறாங்கல்ல கண்ணு, அந்தக் காலத்துல குப்பாரி கொட்டுறதுன்னு சொல்லுவாங்க” எனப் பன்னீர் விளக்கம் தந்தார்.
“அப்படினா, பாபா நாளைக்கு , விழா வச்சு எங்களை அறிமுகப் படுத்துறாரே அதுக்கு அந்தப் பேர் வச்சுக்கலாம்” என ஆதர்ஷ் மண விழாவுக்கு ஓர் பெயர் சூட்டினான். இங்கு ராஜனுக்கு அருமைக்காரர், நிறை நாழி நிறைத்து, மஞ்சள் பிள்ளையார் பிடித்து, நெல் பரப்பி, தூம தீபம் காட்டி , தெய்வங்களை வணங்கி ,கணு இல்லாத விரலி மஞ்சளில் , மஞ்சள் நூலை கட்டி, கணபதியை வணங்கி திருமணம், சீரும் சிறப்புமாய் நடக்க மணமகனுக்குக் கங்கணம் கட்டினார். அதே போல், பைரவியை வந்து மூத்த சுமங்கலி பெண்கள், அதெற்கெனச் சீர் செய்து கொண்டவர்களை வைத்துக் கங்கணம் கட்டினார். சிறுவயது பிள்ளைகளாக இருந்தால், அதிகாரம் செய்யலாம், இது கைலாஷ்-பைரவிக்கு அறுபதாம் கல்யாணம் போல் தான் , அதனால் தேவையான சடங்குகளை மட்டுமே செய்தனர்.
அடுத்தச் சட்டங்களுக்கு முன், பெண்வீட்டாரின், ஹல்தி சடங்குக்காக நேரத்தை ஒதுக்கித் தந்தார் சௌந்தரி. ரமாபாய் அந்தச் சடங்கை முன்னெடுத்து , தன ஆட்களை வைத்து வேலை வாங்கினார். எப்போதும் இந்தச் சடங்குகளைச் சிரத்தையாகக் கடைப்பிடிக்கும் பைரவி, முதல் நாள் முக்காடு தரித்து, கணவருக்கு முகத்தைக் கூடக் கட்ட மறுத்தவர் , இன்று ஹல்தி எனும் மஞ்சள் பூசும் சடங்குக்காக, சாங்கியமெனச் சற்று நேரம் இருவருக்குமிடையில் மெல்லிய திரைப் போட்டதைத் தாங்க இயலாதவராக ஆட்சேபித்தார்.
ரமாபாய், “ ஆஹா, தாமாத்ஜி தான், இதெல்லாம் சொல்லுவார், இப்போ நீயுமா”என மகளைக் கடியவும், “போங்க ஆயி, இத்தனை வருசமா எதுக்கெல்லாம் பயந்தானோ, அது எல்லாத்தையும், ராஜ் ஒவ்வொண்ணா சரி செய்திட்டார், அவரைப் பார்க்காமல், உங்களைப் பார்க்கத் சொல்றிங்களா” எனப் பதின்ம வயது பெண்ணாக மாறி அவர் சண்டையிட, ஆதிரா, ஆராதனா ,ரஞ்சி என இளையவர் கூட்டமே தங்கள் நானிமாவை பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரிக்க “சுத்தம்”என நொடித்துக் கொண்டே, முதலில் மாப்பிள்ளைக்குச் செய்யும் சடங்கை செய்யச் சென்றார்.
ஆதிரா, "ஆயி, செம அழகா, எனக்குத் தீதி மாதிரி இருக்கிங்க, பாபா பார்த்தா, பிளாட் ஆகிடுவார். "எனவும், வழக்கம் போல் சாரம் நஹி ஆயி , எனக் கேட்காமல், "நிஜமாவா" எனக் கேட்ட ஆயியை , "பாபா ப்ரோமிஸ்" என்றவள் , "சோ க்யூட் ஆயி"எனக் கட்டிக் கொண்டு , அவர் கன்னத்தில் முத்தமிட,
கௌரி மாஷி ,"முலே, என் தீதியை கண்ணு வைக்காதே " எனச் சொல்லவும், பெரிய மனுஷியாக, கண்மையை எடுத்து, ஆயின் காதுக்குப் பின்னால் திருஷ்டி போட்டு வைத்தவள், "இனி பாபா கண்ணு மட்டும் தான் படும், படியா மஸ்து" என ஆயின் அழகை வர்ணிக்கப் பாபாவிடம் சென்றாள். பைரவி முகம் மலர்ந்த புன்னகையோடு கணவர் வந்து அமர்வார் எனத் திரை தாண்டி பார்த்திருக்க, கௌரி, "என் தீதியின் குடும்பத்துக்கு எப்போதும் இந்த மகிழ்வை தா "என ஆயி பவானியை வேண்டிக் கொண்டார்.
மாப்பிளைக்கு மஞ்சளோடு கலந்த சந்தனத்தைப் பூசி, அவர் மேனியிலிருந்து வலித்த மஞ்சளைக் கொண்டே, மணமகளுக்கு மஞ்சள் தடவ வேண்டும், என்ற விதிமுறையின் கீழ், அபரஞ்சி, சௌந்தரி, சாரதா முதல், அவரது தங்கை கவிதாவும், கஸ்தூரியும் முறையைச் செய்ய, ஒதுங்கி நின்று அதிகாரம் மட்டுமே செய்த, சாசுமாவையும் அழைத்து , வற்புறுத்தி அந்தச் சடங்கை செய்ய வைத்தார் கைலாஷ்.
ஆதிரா, " பாபாவுக்கு நானும் பூசுவேன். உலகத்திலேயே, ஆயி பாபாவுக்கு, சடங்கு செய்யும் முல்கி நான் தான்" எனப் பெருமையாகவே மஞ்சளை எடுத்து, தன் அப்பாவின் கன்னத்தில் பூசவர " கொஞ்சமா பூசு கண்ணு, தாடி வளராத போயிடப் போகுது" என அவர் பதறவும்,
" உங்க கன்னத்தில் இருக்கிறதை எடுத்துத் தான், ஆயிக்கு தடவனும். அதுக்காகவாவது வச்சுக்குங்க பாபா, ஆயி அதுக்காகத் தான் ஆசையா காத்திருக்காங்க" என மகள் சலுகையாகச் சொல்ல, "அப்படியா அம்மணி" எனப் பக்கவாட்டில், மெல்லிய திரைக்கு மறுபுறம் அமர்ந்து, அவரையே மையலோடு பார்த்திருந்த பைரவியைக் கேட்க, அவர் ராஜாவின் பார்வை, ராணியின் பக்கம் திரும்பியது என விழியசைக்காது பார்த்தார்.
பாருவின் பார்வையே, கைலாஷின் மனதைத் துளைத்து, இதயமடைந்து உடலில் ஓர் மின்சாரத்தைப் பாய்ச்சியது. இந்தப் பார்வை, தன் பாரு, முழு மனமகிழ்வோடு, தன்னை அவருக்கு ஒப்புக் கொடுக்கும் காதல் பார்வை.
கைலாஷின் உடல் சிலிர்த்து, உணர்வுகள் மேலேழ, "பாபா, மஸ்து, படியா மஸ்து. ஆயி பார்வைக்கே பீஸாகுறீங்களே" என மகள் சலுகையாய் அவர் காதில் துடைத்துவிடுவது போல் மெல்லக் கேலி பேச, " ஆமாங்கண்ணு, உன்ர ஆயி பார்வையே சரியில்லை. ஊரே கூடியிருக்குது. எதனா வில்லங்கமா செஞ்சுப் போட போறா" என அவர் கலவரமாகச் சொல்ல,
ஆதிரா, " பஹூத் படியா. ஆயி டயலாக்கை நீங்க அடிக்கிறீங்க" எனச் சிரித்து எழ, ஆராதனா, ஶ்ரீநிதி, ஶ்ரீமதி "நாங்களும் , மாமாவுக்குப் பூசுறோம்" என உற்சாகமாக வர, " வாங்கடா கண்ணுங்களா, உங்களுக்கு இல்லாத உரிமையா" என்றவர், அபிராமிடம் ரஞ்சியையும் அழைத்து வரச் சொன்னார்.
வரிசையாக அனைவரும் அள்ளி வழங்கிய அறிவுரையிலும், சங்கீதா அங்கு இல்லாததில் நிம்மதியும் பெற்று, மலர்ந்த முகத்தோடே வந்து, ஒற்றைக் கையால் மாமனின் தோளில் தடவ, அவரும் வாஞ்சையாய் கொஞ்சி மகிழ்ந்தார். ஆதர்ஷ் மகிழ்ச்சியோடுபார்த்து நின்றான்.
ஒற்றைப் படை கணக்கில் ஹல்தி வைக்கவும், ரமாபாய், ஆதிராவை அழைத்து, அவள் பாபாவின், கன்னத்தில், கையில் தடவிய மஞ்சளை வலித்து எடுக்கச் சொன்னார். பைரவி என்ன தான் ஆசையோடு கணவரைப் பார்த்திருந்த போதும், ராதாபாய், கௌரி போல், கைலாஷை முறைச் சொல்லி, கேலி பேசி சிரித்தவர்களைப் பார்க்க, சற்றே பொறாமை எட்டித் தான் பார்த்தது. கடைசிச் சடங்கை, மகள் செய்யவும் கொஞ்சம் ஆசுவாசமடைந்தார். கைலாஷ் மனைவியின் மாற்றங்களைக் காணாமல் கண்டு ரசித்துக் கொண்டு தானிருந்தார்.
ரமாபாய், ஆதர்ஷ், அபிராமை அழைத்து, " தாமாத்ஜியை குளிக்கக் கூட்டிட்டு போங்க” எனச் சொல்ல, சாரதா வேகமாக , “அதுக்குச் சாங்கியம் இருக்குதுங்க, நீங்க இருங்க, நாங்க பார்த்துக்குறோம்” என்றவர் ,”ஏனுங்க அக்கா, மங்கலன் எண்ணெயை வைக்கிறது, செஞ்சோறு கழிப்பெல்லாம், இப்போவே செயறதுங்களா , பொண்ணு வீட்டிலிருந்து மங்கலன் அனுப்பவங்களா”என விவரம் கேட்க, அவர் கணவர், சுப்பிரமணி, “அதெல்லாம், பிரம்மச்சாரிகளுக்குச் செய்யறதாக்கும், பேரன், பேத்தி எடுக்கிற வயசில ராஜாவுக்கு எதுக்கு”என்றவர்,
மனைவியின் காதில் ரகசியமாய், " எண்ணை தடவற சாக்குல, பிள்ளை பெத்துகிற தகுதி இருக்கானு பார்ப்பாங்க" எனச் சொல்ல , “அயே, போங்க மாமா, அப்படிப் பார்த்தா நம்மாளுக்குக் கல்யாணம் கட்டுனாங்க “ என வெள்ளந்தியாய் வாயை விட, சுப்பிரமணிக்கு முகம் சிறுத்து அங்கிருந்து அகன்று விட்டார். அபரஞ்சி தான் வேகமாக வந்து,
“ அண்ணி, உங்களுக்குக் கொஞ்சமாவது ஏதாவது இருக்குதுங்களா, அண்ணன் பொக்குனு போயிட்டார் பாருங்க” எனக் கடியவும், “நான் அந்த அர்த்தத்தில் சொல்லலீங்க அண்ணி, எங்களுக்கு இந்தச் சாங்கியமெல்லாம் செய்யலைன்னு சொல்ல வந்தேனுங்க “ எனக் கணவரை நோக்கிச் செல்ல,
ராமசாமி , “நான் ஒத்தையோட நிருதினேன்னா, நீ அதுவுமில்லாமல் நிறுத்திகிட்ட, தங்கச்சி வெள்ளந்தியா பேசுது, இதெல்லாம் பெரிசு படுத்தாதப்பா “ என நண்பரைத் தேற்றிக் கொண்டிருந்தார். சாரதா, "மாமா, அப்படியேனாலும் என்ரகிட்ட தானுங்களே குறை" என வருந்தவும், "பேசாத போ" என அடக்கினார் சுப்பு.
மணவறையில் , பைரவிக்குச் சடங்குகள் ஆரம்பித்து இருந்தனர், ஆதர்ஷ், “பாபா, வேற சடங்கு இல்லையாம், நீங்க குளிச்சிட்டு வந்துடுங்க”என ஆத்தா சொன்ன செய்தியைச் சொல்ல, " உன்ர ஆயி மட்டும், எனக்குச் செய்யிற சாங்கியத்தைப் பார்த்தால்ல, நானும் பார்த்துப் போட்டுத் தான் வருவேன்" எனப் பிடிவாதம் பிடிக்க, இளையவர்கள் சிரித்துக் கொண்டனர்.
பைரவிக்கும் பெண்கள் வரிசையாய் ஹல்தி வைக்க, ரைட் ராயலாகப் பார்த்துக் கொண்டிருந்தவர், ஆதர்ஷை அழைத்து, " ரஜ்ஜும்மா எனக்கு வச்சால்ல, நீயும் போய், உன்ர ஆயிக்கு ஹல்தி வச்சுவிட்டு வா கண்ணு" எனச் சத்தமாகச் சொல்ல, ஆதர்ஷ் புன்னகையோடு தயங்கியே நின்றான். பைரவி, “ஆதர்ஷ் பாபா, உள்ள வா” என அழைத்தவர், “என் பாபா இருந்தா, எனக்கு இந்தச் சடங்கை செஞ்சிருப்பாங்க, அவர் ஸ்தானத்தில் நீ செய்” என அழைக்க, “நிச்சயமா ஆயி, இதை விட எனக்கு என்ன பெருமை வேணும், இந்த நாளுக்காக, நீங்க பாபாவோட சேர்ந்து வாழறதை பார்க்காத தானே காத்திருந்தோம்” என உருகியவன், மஞ்சள் எடுத்து தன் ஆயியின் கன்னத்தில் தடவ, “ ஜீத்தே ரஹோ பாபா, நீ அதிரடியா இறங்கலைனாலும், நான் என் பாத்துகிட்டே , தைரியமா வந்திருக்க மாட்டேன்” எனக் கண் கலங்க, அதைக் கேட்டபடி,
“அது தான் தெரியுமே”என ராஜனும் உள்ளே வர, தன வாயால் மாட்டிக் கொண்டோமே, எனப் பைரவி நாக்கை கடிக்க,
“தாமாத்ஜி , புருசனும், பொண்டாட்டியும் ,ஒரு வார்த்தையும் கேட்கக் கூடாதுன்னு இருக்கீங்க, அப்புறம் எதுக்கு இந்தச் சம்பிரதாயம் எல்லாம் செய்யறது”என ரமாபாய் நடுவில் வந்து கேட்க,
“சாஸுமா, உங்க பொண்ணு பேசினதை கேட்டீங்களா, அதுனால தான் வந்தேன்”என அவர் சமாளித்தாலும், கண்கள் மஞ்சள் பூசிய மனைவியின் எழில் முகத்தைத் தான் ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தது.
பைரவியும், தன் ராஜின் சமாளிப்பை ரசித்துப் பார்த்துக் கொண்டு தானிருந்தார், நேற்றைய இரவில் தங்கள் வாழ்வின் வேதனையான ரகசிய பக்கங்களைச் சொன்னது தான். அது முதல், மந்திரக்காரன் போல் இன்று ஒரு நாளில் பைரவியின் அத்தனை மனக்காயங்களுக்கும் சரியான நடவடிக்கைகள் மூலம் தீர்வு கண்டு கொண்டிருந்தார். முதலில் உடன் பிறந்தவளையே தள்ளி வைத்தவர், மகளைக் கடத்திய மஹந்த் போஸ்லேக்கும் பாடம் கற்பித்து, ஜெயத்தையும் ஓட வைத்துக் கொண்டல்லவா இருக்கிறார்.
மையலோடு கொண்டவரைப் பார்த்திருந்த பைரவி, பிற்பகல் வேளையில், அவரது ஒன்று விட்ட சகோதரர்களான போஸ்லேகள் , தொடுத்த வழக்கு, மற்றும் அதனைக் கைலாஷ் எதிர் கொண்ட விதம் ஆகியவற்றை நினைவு கூர்ந்தார்.
கே ஆரின் அலுவலக அறையில் , தன் மதியூக மந்திரி சின்ன மருமகன் பாலாஜி ராவ், தன் வாரிசு ஆதர்ஷ் சகிதமாய் வந்து சேர, ஏற்கனவே கைலாஷ், விஜயன், பைரவி, அபிராம் அங்கே இருந்தனர். மற்ற பெரியவர்கள் ஓய்வெடுக்கட்டும் என அவர்கள் வரை செய்தி சென்றடையாமல் பார்த்துக் கொண்டனர்.
ஆனந்த் ராய் போஸ்லே, கைலாஷ் ராஜன் அழைப்பின் பேரில், தங்கை கணவரைக் கவுரவிக்க, அவர்களது மணவிழாவில் நல்ல முறையில் கலந்து கொள்வார், என எதிர்பார்த்து, சோட்டி ராணி ரமாபாய் நிறையத் திட்டங்களைத் தீட்டி வைத்திருந்தார். தன் மூத்தார் மகள் பவானிபாயும் வருவாள், சோலாப்பூர் மாளிகை, பீபீ மில்ஸ் ஆகியவற்றை , ஜெயத்தை மட்டும் அகற்றி விட்டு மீண்டும் கைப்பற்றிக் கொள்ளலாம் எனக் கனவு கொண்டிருக்க, மச்சினன் மகன் தொடுத்த வழக்கும், அதில் மருமகனைக் குற்றம் சுமத்தியதும் கண்டு வெகுண்டு தான் போனார்.
" ஆயி, பாவு செஞ்சது கொஞ்சம் கூட நல்லா இல்லை, ராஜ் தான், அவர் மகனை, அப்பவே விட்டுட்டாரே. பிரச்சினை நம்மளோட தான, அவர் மேல எதுக்குக் கம்ப்ளைண்ட் கொடுக்கனும்" எனப் பைரவி பொரிந்து தள்ள, ரமாபாய்,
" எனக்கும் எதுவும் புரியலைடி பையு . உன் புருஷனைத் தான் கேட்கனும். தாமாத்ஜி, நிஜமாவே மஹந்தை வெளியே விட்டிங்களா, இல்லையா சொல்லுங்க. நம்ம கஷ்டடில அவன் இல்லையினா, அப்புறம் இருக்கு ஆனந்தராய்க்கு. நான் யாருன்னு காட்டுறேன்" என ரமாபாய் சூளுரைக்கவும்,
" சாஸுமா, நீங்களும் எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க. கொஞ்சம் நேரம் உட்காருங்க. மச்சானுங்க வருவாங்க, பேசி தீர்த்துக்குவோமுங்க" எனக் கைலாஷ் அசால்ட்டாகச் சொல்லவும்,
" யாரு, யாரை வரச் சொல்லியிருக்கீங்க. அவங்களும், அவங்க மகனுங்களும் செய்த வேலைக்கு, நாம தான் அவன் மேல கம்ப்ளைண்ட் கொடுக்கனும்" என ரமாபாய் வேகமாகப் பேசியதில் அவருக்கு மூச்சு வாங்க, " அமைதியா உட்காருங்க" என மாமியாரை ஒரு புறம் அமர்த்தினார் ராஜன்.
அவரது போன் சிணுங்கியது, எடுத்து காதுக்குக் கொடுத்தார், காவல் துறை மேல் மட்டத்திலிருந்து போன் வந்தது. " பெரிய இடம், ஹை ப்ரொபைல் கேஸ், சொந்தங்காரங்க, உங்களுக்குள்ள பேசி முடிச்சுக்குங்க. நான் பெரிய ஆபீஸரோடவே உங்க இன் லாசை அனுப்பி விடுறேன்" என அந்த முனையில் ஆலோசனை தர, கைலாஷ் சிரித்துக் கொண்டவர்,
" என்ர இடத்துக்கு, அவிக போலீஸ் பந்தோபஸ்து இல்லாதையே வரலாம். இருந்தாலும் என்ர மச்சானுங்களுக்கு, என்ர மேல நம்பிக்கையில்லையாட்டத்துக்கு. ஆபீஸர் யாரு " என வினவ அவர்கள் தந்த பதிலில், " அனுப்பி விடுங்க. அந்தத் தம்பிக்கும் பத்திரிக்கை அனுப்பியிருந்தேன், விருந்தாளியாவே வரட்டும்" எனப் பேசி வைத்தார்.
மற்றவர்கள் விசயமறிய ஆவலாகக் கே ஆரை பார்த்திருக்க, " ஏனுங்க அம்மணி, வீர பரம்பரைனு சொல்லிக்கிறீங்க. பொறகு, தங்கச்சி வீட்டுக்கு வர்றதுக்கு , உன்ர அண்ணன்களுக்கு எதுக்குப் போலீஸ் பாதுகாப்பு. அந்த ஐபிஎஸ் ஆபீஸரை பார்க்கவும், நான் பயந்திருவேணாக்கும்" என லொள்ளு பேச,
" ராஜ், விசயத்தைச் சொல்லிட்டு, இந்தக் கேலி பேச்செல்லாம் வச்சுக்குங்க" எனப் பைரவி வார்த்தைகளில் பதட்டத்தைக் காட்ட, மற்றவர்கள் பொறுமையற்று முகத்தில் காட்ட, கைலாஷ் போஸ்லேக்கள் வருகையைச் சொன்னார்.
" அதுக்குனு, யார் மேல கேஸ் போடுறது." எனப் பைரவி கொதிக்கவும்,
ஆதர்ஷ், " ஆயி, கூல். யார்னாலும் வரட்டும் சமாளிச்சுக்கலாம். அப்படிப் பாபா மேல கை வைக்க விட்டுருவோமா" என, கைலாஷை பொருள் படிந்த பார்வை பார்த்து ஆறுதல் சொன்னான்.
“ ஆமாங்க அத்தை, அப்பாவும், மகனுமா, ரிஸ்க் எடுத்து நம்ம வாழ்க்கையில விளையாடுவாங்க நாம கூலா இருப்போமுங்க.”என அபிராம் எரிச்சலாகப் பதில் தர, விஜயன், “அதெல்லாம் உன்ர மாமன், பேக்கப் பிளான் போட்டிருப்பான், நீ டென்ஷனாகாத “என மகனைத் தேற்றினார் விஜயன்.
“ஏன்ரா மாப்பிள்ளை, என்ர மகளுக்காக ஒரு ஜெயிலுக்குக் கூடப் போக மாட்டியா” எனக் கைலாஷ் வம்பிழுக்க, அபிராம் மாமனை ஆட்சேபனையாய் பார்க்க, “ராஜ், சீரியஸா பேசுங்க. பேட்டாஜியையும் இதில எதுக்கு இழுத்து விட்டீங்க” எனப் பைரவி ஆட்சேபித்தார்.
“அவன் தான் அம்மணி, என்னை இதில இழுத்து விட்டான். ரஜ்ஜுமாவை அன்னைக்கு மலைக் கோவிலுக்குக் கூட்டிட்டி போகாத இருந்திருந்தான்னா, இந்தப் பிரச்சனையே இல்லை” என மருமகனைக் குறை சொல்லி, அவன் டென்ஷனை ஏற்றிவிட்டுக் கைலாஷ் வேடிக்கை பார்க்க. “மாமனும் மருமகனுமா, ஜெயிலுக்குப் போயிட்டு வாங்க, அப்பா தான் உங்களுக்குப் புத்தி வரும்” என விஜயன் தன பங்குக்கு வார, “இம்புட்டு தான உங்களுக்கு ஆசை, என்ர ஆரா பேபிம்மாவுக்காக, நான் பழியை ஏத்துக்கிட்டு ஜெயிலுக்குப் போறேன் போங்க” என ஆபிராம் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அமர, “மச்சி கூல்” என ஆதர்ஷ் அவனைச் சமாதானம் செய்தான்.
அரை மணி நேரத்தில், அதி நவீன போலீஸ் வாகனம் முன்னே வர, இரண்டு கார்களில் ஆனந்த், முகுந்த் போஸ்லேக்கள் வந்தனர். கே ஆரின் உத்தரவின் பேரில், எம் டி அறை வரை, மில்ஸ் பாதுகாவலர்கள் அவர்களை அழைத்து வந்தனர்.
அந்த ஐ பி எஸ் ஆபீஸரும், கே ஆரின் வேண்டுகோள் படி , மப்டியில் தான் வந்திருந்தார். ஸ்டைலாக இறங்கி கூலர்ஸை கழட்டியவர், ஒரு சுற்று வட்டப் பார்வையிலேயே, அந்த இடத்தை, மதிப்பிட்டு, " போஸ்லே சாப், வாங்க" என அழைக்க, கைலாஷ் ராஜன், அபிராம், விஜயன் மற்றும் அவரது உதவியாளர்கள் புடை சூழ, முகத்தில் மாறாத புன்னகையோடு முகப்புக்கே வந்துவிட்டார்.
" வாங்க, வாங்க. வாங்கத் தம்பி , தங்கப்பாண்டியன் ஐபிஎஸ், எங்க ஊருக்கு டெபுடேஷன்ல வந்திருக்கீங்கன்னு சொன்னாங்க , விழாவுக்குப் பத்திரிகை அனுப்பி வச்சேன் வந்ததுங்களா." எனக் கே ஆர் வினவவும்,
" எஸ் ஸார். டெபுடேஷன் தான், உங்க பத்திரிக்கையும் வந்தது. ஆனால் நான் பேமலி பங்சன் தவிர மற்ற இடங்களுக்கு ஆன் டூட்டியில மட்டும் தான் வருவேன். நீங்க உங்க ரிலேடிவ்ஸை இன்வைட் பண்ணுங்க. விஷயம் சுமூகமா முடியறது தான், இரண்டு பக்கத்துக்கும் நல்லது" என மிடுக்காகவே நாற்பதைத் தொடும் அந்த அதிகாரி சொல்லவும், ராஜனும் மென்னகையோடு தலையசைத்து,
" என்ர அழைப்பை ஏத்துக்கிட்டு, என்ர மச்சானுங்களையும் , கூப்பிட்டு வந்ததுக்கு ரொம்பச் சந்தோஷமுங்க. நாங்க உறமுறையா வர்றவிககிட்ட பகைமை பாராட்ட மாட்டோம்." என வினயமாகச் சொன்னவர், போஸ்லேக்களை நோக்கி "நீங்க உறமுறையா தான் வருவீங்கன்னு நினைச்சேனுங்க. " எனக் கும்பிட்டபடி நிற்க,
ஆனந்த், முகுந்த் போஸ்லேக்கள் உயர்ரக ஷெர்வானி அணிந்து, மீசையை முறுக்கிக் கொண்டே இறங்கியவர்கள், " நாங்களும், சம்பந்தியா தான் வரனும்னு நினைச்சோம். ஆனால் சூழ்நிலை இப்படிக் கொண்டு வந்து விட்டுடிச்சு. என் மகன் இருக்க இடத்தைச் சொன்னீங்கன்னா, குறைந்த பட்ச தண்டனையோட விசயம் முடியும்" என ஆனந்த் போஸ்லே சொல்ல, இளையவர் முகுந்த் , " பாவு, அவசரப்படாதீங்க." என்றவர், தங்கை கணவரோடு நல்ல விதமாகவே அறிமுகம் ஆனார்.
"பேச வந்துட்டோம், தேவையில்லாத வார்த்தையை விட வேண்டாம். உள்ளே போய்ப் பேசலாம்" எனத் தங்கப் பாண்டியன் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு சொல்ல, கே ஆர் , அதே புன்னகையோடு வழி காட்டியபடி முன்னே நடந்தார்.
அபிராமுக்கு, தன் மாமாவிடம் முகம் திருப்பும் போஸ்லேக்கள் மீதும், உடன் வந்த ஆபீஸர் மீதுமே கோபம் வந்தது. சந்தேக லிஸ்ட்ல வேறு இருக்கிறானே, ஒரு நாள் எனினும் கோர்ட் கேஸ் என அலைய முடியாது, என்ற யோசனையில் அமைதியாக வந்தான்.
ஆலோசனை அறையில், ரமாபாய், பைரவி பாய், ஆதர்ஷை நேருக்கு நேர் சந்தித்த போஸ்லேக்கள் சற்றே ஆடித் தான் போனார்கள். ஆனாலும் பரம்பரை மாறாமல், தங்கள் சிற்றன்னையும், சோட்டி ராணியுமான ரமாபாயின் காலைத் தொட்டு வணங்கியவர்கள், " நமஸ்தே சோட்டி ஆயி. நீங்க தலைமறைவு வாழ்க்கை வாழ்றதை, எங்களுக்காவது தெரியபடுத்தியிருக்கலாம்" என ஆனந்த் போஸ்லே மொழிய,
“நான், உங்க ஆயி கூடப் பிறந்தவளா இருந்திருந்தா தேடியிருப்பிங்க, நான் சாச்சி ராணி தானே “எனக் கூர் அம்புகளைச் செலுத்த, “மறைஞ்சு வாழணும்னு நினைக்கிறவங்களை , எப்படித் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது” என ஆனந்த் பதில் தர,
“என்னைக் கண்டு பிடிக்கவும், இந்தக் கேஸ் போட்டிங்களா என்ன”என ராமாபாய் குதர்க்கமாகவே பதில் கேள்வி எழுப்பினார்.
முகுந்த் போஸ்லே, பைரவிபாயை அணுகி, " கித்தனே பரஸ் ஹோ கயி, சோட்டி" இத்தனை வருடப் பிரிவை , அவர் இறந்து விட்டதாக நினைத்ததை எண்ணி உணர்ச்சி வயப்பட்டுத் தங்கையின் கையைப் பிடிக்க, சம்பிரதாயமாக வணக்கம் மட்டும் சொன்ன பைரவி,
" அதுக்குப் பரிசா தான், என் புருஷன் மேலையே கேஷ் போட்டிருக்கீங்களே பாவு. பவானி தீதி புருஷனெல்லாம் நல்லவனா போயிட்டான். என் ராஜ் தான் உங்களுக்குக் கெட்டவரா போயிட்டாரோ" என மராத்தியிலேயே அவர் சண்டையிட,
" இல்லை பையு, நாங்க மஹந்தை காணோம்னு தான் கேஸ் போட்டோம். அது உங்க வரை கொண்டு வரும்னு நினைக்கலை" எனச் சமாதானம் சொல்ல,
" ஜூட் மத் போலியே பாவு, படே பாவு, ராஜ் பேரில் தெளிவாவே கம்ப்ளைண்ட் கொடுத்திருக்காரே" எனப் பாய, கைலாஷ் மனைவியைச் சமாதானப் படுத்தியவர், எல்லாரையுமே அமர வைத்தார்.
ஐபிஎஸ் அதிகாரி, தங்கப்பாண்டியன், இரு தரப்பையுமே அமர வைத்து, "இரண்டு பக்கமுமே பெரிய குடும்பம். ஒரே குடும்பத்தில் இருக்க மாமன் மச்சினன் பிரச்சினை. பையனை, தூக்குறதோ, புள்ளையைத் தூக்கிறதோ, காலம் காலமா நடக்கிறது தான். எங்க ஊர்ல எல்லாம், பஞ்சாயத்திலேயே பேசி முடிச்சிடுவோம். ஆனால் இது இரண்டு வேறு பட்ட குடும்பம், மில்ஸ், மொழி, ஸ்டேட்டுனு பெரிய பிரச்சனையா மாறுது. இதில் பாதிப்படைய போறது, உங்க குடும்பங்கள். உங்க மில்ஸ் ஷேர்ஷும் தான். தயவு செய்து பேசி முடிச்சுக்குங்க. " என்றவர்,
" கே ஆர் ஸார், உங்க ஒத்துழைப்பு எங்களுக்கு ரொம்ப அவசியம். மஹந்த் போஸ்லேயை உங்களோடா தான் கடைசியா பார்த்ததா சொல்றாங்க" எனக் கைலாஷின் பதிலை எதிர் நோக்கி கேள்வியைத் தொடுத்தார்.
" ஒன்றை மாசம் முன்னை, என்ர சம்சாரம் முடியாத இருக்கையில, பீபீ மில்ஸ் விசயமா பேசணோம்னு வந்தாப்ளை. அது தான் நான் அவரைப் பார்த்தது. அப்பலைய புடிச்சேவா காணலை" எனக் கைலாஷ் வினயமாகவே கேட்டார்.
ஆனந்த் போஸ்லே, " நோ, இப்ப பத்து நாளா தான் காணோம். கோவைக்கு ப்ளைட் ல வந்து இறங்கின தகவல் இருக்கு. கடைசியா பழைய மில்ஸ்ல கே ஆரை பார்த்ததா தகவல். இவரும், இவர் ப்ரெண்டோட பையனுமா ஏதோ செய்திருக்காங்க" என ஆனந்த் குற்றம் சாட்ட, கைலாஷ் அமைதியாக இருந்தார்.
" சாட்சி இருக்குதுங்களா" எனப் பாலாஜி ராவ் கேள்வி எழுப்ப, அவர்கள் ஓர் பதில் சொல்ல, ஆளாளுக்குப் பேச, தங்கப்பாண்டியன் பஞ்சாயத்துச் செய்ய எனப் பிரச்சினை தீர்வை எட்டப்படாமலே சென்று கொண்டிருந்தது.
ஆதர்ஷ், " நீங்க சொல்றது தப்பு, உங்க மகன் வேற எங்கையாவது இருந்தார்னா, நாங்க மான நஷ்ட வழக்குப் போடுவோம் " என மிரட்டினான்.
" போதும் பாவு , இத்தனை வருஷமா, அந்த ராட்சசன் மட்டும் தான், என்னைக் குறி வச்சிருக்கான். என் குடும்பத்தை அழிக்கத் துடிக்கிறான்னு நினைச்சிருந்தேன். அவன் அழிக்கட்டும்னு நீங்க வேடிக்கை பார்த்து இருந்திருக்கீங்க. ஆயி உங்களைக் குறை சொல்லும் போது கூட, நான் உங்களை நல்ல விதமா தான் நினைச்சிருந்தேன். என் புருஷன், பிள்ளைகளோட என் பங்கைக் கேட்க வந்துடுவேன்னு, உங்க முல்காவை மறைச்சு வச்சுக்கிட்டு நாடகமாடுறீங்கன்னு நான் சொல்றேன். ராஜ் மேல நீங்க பழி சுமத்தினா, என்னையும் என் மகளையும் கொல்ல திட்டம் போட்டிங்கன்னு நான் கம்ளைண்ட் பண்ணுவேன்" எனப் பைரவி ஆக்ரோஷமாகப் பேசவும்,
" பாரு, இவ்வளவு எமோஷனல் ஆகாத அம்மணி. உன்ர உடம்புக்கு நல்லதில்ல. அவிக சொல்றது எதுக்குமே ஆதாரம் கிடையாது. அதனால தான், ஐ பி எஸ் ஆபீஸரோட வந்து பேரம் பேசுறாங்க. ஸ்ட்ராங் எவிடென்ஸ் இருந்தா, அவிக ஆக்சனே வேற மாதிரி தான் இருக்கும்" எனக் கே ஆர் தங்கப் பாண்டியனையும், போஸ்லேக்களையும் பார்த்துக் கொண்டே சொல்லவும், சற்றே நகைத்த பாண்டியன்,
" ஓகே ஸார். நானும் இவ்வளவு நேரம் பொம்பளை புள்ளை விசயம் வெளியே வரவேண்டாமேன்னு அமைதியா இருந்தேன். வேற வழியில்லை, உங்க மகளை வரச் சொல்லுங்க. நான் விசாரிக்கனும்" எனவும்.
" யார் இடத்தில வந்து யாரை விசாரிக்கிறது. என்ர மகள் மேல எவன் பார்வையும் படக் கூடாது. கேக்கிறதுக்கு ஆள் இல்லைனு, இத்தனை வருஷம் அலைய விட்டுருக்கானுங்க. இனி என்ர மகளுக்கு அப்பன் நானிருக்கேன். என்ர மகள் மேல தப்பான பார்வை பட்டாலும், அது எவனா இருந்தாலும் தேடினாலும் கிடைக்காத இடத்துக்குப் போயிடுவானுங்க" எனக் கைலாஷ் , ருத்திர ஆட்டத்தைக் காட்ட, பாண்டியனைத் தவிர மற்ற எல்லாருக்குமே சற்று அச்சமாகத் தான் இருந்தது.
அப்படியும் விடாக் கொண்டானாகா பேசிய தங்கப் பாண்டியன், "ஸார், நானும் அக்கா தங்கச்சியோட பிறந்தவன் தான். என் தங்கச்சியைத் தூக்கினதுக்காக, சொந்தக்காரப் பையனையே வெளுத்தவங்க தான். பையனோட லட்சணம் என்னன்னு, அவரைப் பெத்தவங்களும் தெரிஞ்சுக்கட்டும். இனிமேலாவது, ஒரு பொண்ணைத் தூக்கினாலே, அவள் தனக்கு அடிமைங்கிற ஆணாதிக்கச் சமூகம் ஒழியட்டும். " என நீளமாகப் பேச, அப்போதும் கே ஆர் அசைந்தாரில்லை.
ஆனால், விசாரணையில் ஓர் திருப்பமாக, இந்த விசயத்தைக் கேள்விப் பட்டு, தன் பாபாவையும், ராமையும் கைது செய்வார்கள் எனப் பயந்து ஆதிரா ஓடி வந்தாள். " கே ஆர் ஸார், அந்தப் பையனை மட்டும் பெத்தவங்ககிட்ட ஒப்படைச்சிடுங்க. உங்க மேல எந்த ஆக்சனும் எடுக்காமல், உங்க பொண்ணு விசயமும் வெளியே வராமல் நான் பார்த்துக்குறேன்" எனத் தங்கப் பாண்டியன் பேரத்தில் இறங்க.
கைலாஷ் நகைத்தவர், " க்ளவர் மூவ் ஆபீஸர். ஆனால் அவன் என்கிட்ட இல்லை" எனக் கூலாகப் பதில் சொல்ல,
ஆனந்த் போஸ்லே, " இன்னும் எதுக்கு ஆபீஸர் வெயிட் பண்றீங்க. அவரை அரஸ்ட் பண்ணுங்க. ஹெட் லைன் நியூஸ் ஆனாலும் பரவாயில்லை" எனச் சொல்லவும்.
" கே ஆரை அரஸ்ட் பண்றது, அவ்வளவு சுலபமில்லை போஸ்லே சார் , ஆனால் அவர் மருமகனை அரஸ்ட் பண்ணலாம். மிஸ்டர். அபிராம் போகலாமா. லவ் பண்ணப் பொண்ணுக்காக, போலீஸ் ஆபீஸ் வரைக்கும் வந்துட்டு வரலாமே" எனத் தங்கப் பாண்டியன் வேண்டு மென்றே கேட்கவும், மற்றவர்கள் " முடிஞ்சா செய்" எனத் தெனாவெட்டாகப் பார்த்திருக்க. " நோ" எனக் கத்திக் கொண்டு வந்த ஆதிரா, அபிராமையும், தன பாபாவையும் மறைத்தபடி நின்று தங்கப் பாண்டியன் சொன்ன அத்தனையும் உண்மை என உளறிக் கொட்டினாள்.
" பாய் சாப், என்னை ஒருத்தன் மயக்க மருந்து கொடுத்து வலுக்கட்டாயமா கடத்திட்டு போய், தாலிகட்டப் பார்த்தான். அவன் நல்லவன், அவன்கிட்ட இருந்து, என்னைக் காப்பாற்றின என் ராம் கெட்டவரோ. நோ. நான் விடமாட்டேன். " என அபிராமை நெருங்க விடாமல் குறுக்கே நிற்க, தங்கப் பாண்டியன் ,' இப்போ என்ன சொல்றீங்க' என்பது போல் கே ஆரைப் பார்த்தார்.
" சுத்தம்" என நகைத்தவர், " ரஜ்ஜும்மா, அப்படியெல்லாம் , என்ர மருமகனைக் கைது பண்ண விடமாட்டேன், இங்க வா" என மகளைக் கை வளைவில் அணைத்துக் கொண்டவர், ஆதர்ஷிடம், " அவிக மகன், எங்கன்னு காட்டு கண்ணு. " என்றார்.பதட்டமாக வந்த தங்கை மகளையே பார்த்திருந்த போஸ்லேக்களுக்கு, அன்று பைரவியும் இப்படித் தான் இருந்திருப்பார் ,என ஒரு நொடி தோன்றினாலும், “மஹந்த், தன் அத்தை மகளை மணக்கத் தானே கேட்டான்” என மற்றொரு நியாயத்தையும் பேசியது.
கைலாஷ் மச்சினன்களிடம் திரும்பி, " நீங்க நல்லவன்னு கொடி பிடிச்சு, இரண்டு சம்பந்தம் பண்ணிங்கல்ல, அந்த அரக்கன் பார்த்த வேலை தான் இதுவும். உங்க மகனை நான் கஷ்டடி எடுத்து வச்சது நெசந்தான். என்ர மகளைத் தூக்கினான்னு, அவன் மேல கொலை வெறி வந்ததுங்க. ஆனால் நீங்க வளர்த்த விதம், அவிகளைச் சொல்லி என்ன செய்யறதுன்னு விட்டுப் போட்டேன். அன்னைக்கு ரசாபாசமானதில், உங்க மகன் கண்ணுல மண்டபத்தில் தட்டில் வச்சிருந்த குங்குமம் கவிந்திடுச்சு. கண் ஆஸ்பத்திரியில் சேர்த்து வைத்தியம் பார்த்தேனுங்க.
ஆனா பாருங்க. உங்க பெரிய தாமாதஜிக்கு, நீங்க எங்க உங்க சின்னத் தங்கச்சியோடவும் சம்மந்தம் செஞ்சுக்கிட்டு, பெரிய மச்சானைக் கழட்டி விட்டுருவீங்களோன்னு பயம். கையோட வைப்பாட்டி மகனை அனுப்பி விட்டார். பீமான்னு ஒருத்தன்,
நேத்திக்கு, என்ர கிட்டயிருந்து தப்பிச்சு ஓடினவன், உங்க மகனையும் கூட்டிக்கிட்டு போயிட்டானுங்க. அவனும் உங்க ஆளு தான பத்திரமா கொண்டு வந்து சேர்த்திடுவான்னு நினைச்சேன். இன்னும் கொண்டு வந்து சேர்க்கலைங்களா" என வினவியவர், ஆதர்ஷிடம் அவர் சொன்னதற்கான ஆதாரங்களைக் காட்டச் சொன்னார்.
மஹந்துக்கு அளிக்கப்பட்ட சிகைச்சைக்கான நகரின் பெரிய மருத்துவமனையின் அறையில் எடுக்கப்பட்ட போட்டோக்கள், வீடியோக்கள், சிகிச்சை விவரமும் மருத்துவர் கையொப்பத்தோடு இருந்தது. அதன் பின் பீமன், மஹந்தை யாருக்கும் தெரியாமல் அழைத்துச் செல்லும் காட்சிகளும் பதிவாகியிருந்தது.
" இதெல்லாம் ஏன் ஸார் முதவே காட்டலை" என ஆபீஸர் கேள்வி எழுப்ப.
" என்ர பொண்டாட்டிச் சொன்ன காரணம் தான், இவிக, அவங்க மகனை மறைச்சு வச்சிட்டு பொய் கேஸ் போடுறாங்கன்னு நினைச்சேன்" என முகத்தைச் சீரியஸாக வைத்துக் கொண்டு சொல்லவும், சுற்றி இருந்தவர்களுக்கு, ' என்னா நடிப்புடா சாமி' என்றே தோன்றியது.
ஆனந்த் போஸ்லே, " தாமாத்ஜி, நான் கேஸ் போட்டது தப்பு தான். மஹந்த் உங்க பொண்ணைத் தூக்கினதும் எனக்குத் தெரியாது. நான் கண்டிச்சு வைக்கிறேன். தயவு செய்து, அவன் எங்கேனு மட்டும் சொல்லிடுங்க" எனக் கெஞ்சவும்.
" நிஜமா , என்னை நம்புங்க. உங்க தங்கச்சி, அண்ணன் மகனை வெளியே விடுங்கன்னு ஒரு வார்த்தை சொன்னாளுங்க, விட்டுப் போட்டேன். உங்க மகனுங்க சோலாப்பூர் ல தானுங்களே இருக்காங்க, ஜெயந்தை கண்காணிக்கச் சொல்லுங்க. நேத்து எனக்குப் போன் போட்டு, போஸ்லேக்களோட நெருங்கப் பார்க்கிறாயா. அது எப்படி நடக்குதுன்னு நானும் பார்க்கிறேன்னு மிரட்டினாருங்க. பீமன் எங்க இருக்கானோ, உங்க மகனும், அங்க தான் இருக்கோணும்" எனத் தன் யூகத்தைச் சொல்லி, கைலாஷ் குழப்பி விட, ஆளுக்கு ஒரு போனை பிடித்துச் சோலாப்பூருக்கு தொடர்பு கொண்டனர்.
அதே நேரம் சரியாக உள்ளே நுழைந்த, டிடெக்டிவ் ஏஜெண்ட் ரஞ்சன், தங்கப் பாண்டியனிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, " கே ஆர். ஸார் சொல்றது உண்மை தான் ஸார். எங்க டீம் இன்வஸ்டிகேட் செய்தது. " என ஒரு வீடியோவை ஓட விட்டார்.
போஸ்லே மாளிகையின் வேலையாட்கள் குவாட்டர்ஸில் ஜெயந்தை, பீமன் கைத் தாங்களாக அழைத்து வந்து, மயக்க நிலையிலிருந்த மஹந்தை காட்ட, " இவன் அப்பன், ஹேபியஸ் போட்டிருக்கான். அந்தக் கைலாஷ் மாட்டனும். இவனை மறைச்சு வை. இரண்டு பேரும் அடிச்சிட்டு சாகட்டும்" எனச் சொல்வது பதிவிடப் பட்டிருந்தது.
போஸ்லேக்கள், அதிர்ச்சியோடு பார்த்து, "இது எப்போ " என ரஞ்சனை வினவ, "பத்து நிமிஷம் முன்னாடி. " எனப் பதில் தர, ஆனந்த், முகுந்த் இருவரும் தங்கள் மூத்த மகன்களுக்குப் போனடிக்க, தங்கப்பாண்டியன் சோலாப்பூர் போலீஸுக்கு உத்தரவிட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு மணி நேரம் டென்ஷனாகக் கழிய, ரஞ்சன் சொன்னது போலவே, மஹந்தை சோலாப்பூர் போஸ்லே மாளிகையிலிருந்தே மீட்டனர்.
ஆனந்த், போஸ்லே கே ஆரிடமும், பைரவியிடமும், ரமாபாயிடமும் மன்னிப்பு கேட்டுக் கிளம்ப, முகுந் தங்கை வீட்டு விசேசத்தை முடித்து வருவதாக அங்கேயே தங்கினார்.
தங்கப் பாண்டியன், அங்கிருந்தபடியே, சோலாப்பூர் போலீஸை ஆட்டிப் படைத்து, மஹந்தை மீட்டு, அவன் அண்ணன்களிடம் ஒப்படைக்கச் செய்தவன். அதனை வீடியோ பதிவாக, ஆவணமாக்கி அனுப்பச் சொல்லி விட்டு, ஜெயந்தையும், பீமனையும் விசாரணைக்குக் கைது செய்து, ஸ்டேசனுக்கு அழைத்துச் செல்ல ஆணையிட்டு விட்டு, ஆனந்த் போஸ்லேவை, சில ஃபார்மாலிட்டிசை முடிக்க வேண்டும், என வரச் சொன்னார்.
கே ஆரிடம் வந்து, " நீங்க சொன்னதை எல்லாம் ஸ்டேட்மெண்ட் ரெடி பண்ணி, அனுப்புறேன் சார், கையெழுத்துப் போட்டு அனுப்புங்க" என்றவர், விடை பெறும் முன்,
" தி க்ரேட் பிஸ்னஸ் டைக்கூன், கே ஆர் மில்ஸ் ஓனர், உங்களைப் பற்றி இப்படியெல்லாம் கேள்விப் பட்டதை விட, யூ பி எஸ்சி பாஸ் பண்ண வசதியில்லாத பொண்ணுங்க , எங்க வெற்றிக்குக் காரணம், எங்க அப்பா, எங்க சேர்மன் சார், கே ஆர் மில்ஸ் ஓனர், கைலாஷ் ராஜன் கொடுத்த ஆதரவுதான்னு சொன்னது மனசை தொட்டுச்சு சார். ரியலி ஐ இம்ப்ரஸ்டு. ஐ சல்யூட் யு சார். அவர்களுடைய வாழ்த்து தான், இத்தனை வருஷம் கழிச்சு,உங்கள் மனைவி மக்கள் கிடைச்சிருக்காங்க. இனி உங்கள் வாழ்க்கை இனிமையாய் அமையட்டும் . வாழ்த்துக்கள் சார். " எனக் கை நீட்ட, அதே புன்னகை முகத்தோடு,
" ஒரு சின்சியரான போலீஸ் ஆபீசரை சந்திச்சதில எனக்கும் சந்தோஷம்" என வழி அனுப்பினார் கே ஆர்.
முகுந்த் போஸ்லே, தன அண்ணனுடன் சென்று, பார்மாலிட்டிகளை முடித்துக் கொண்டு தான் வருவதாகவும், அண்ணன் உறவு முறையோடு கைலாஷ்-பைரவி உறவு முறையோடு அதில் கலந்து கொள்ள விரும்புவதாகவும் சொல்ல, “உறமுறையா எப்பவேணாலும் வரலாங்க “எனக் கே ஆர் மனம் திறந்து வரவேற்க,
முகுந்த், சோட்டி ஆயியிடம் சென்றவர், “உங்க மனசுக்கு பிடிச்ச டீலிங்கோட வர்றேன் ஆயி, நாளைக்குப் பேசுவோம்” என ஆதர்ஷை பார்த்து அர்த்தத்தோடு புன்னகைக்க, ஆதிரா அண்ணனை விவரம் கேட்டாள்.
“ இவர் தான் பொண்ணு வச்சிருக்கார், லண்டன் ரிட்டர்ன், ஆலியா பட் மாதிரி இருப்பா “எனக் கண் சிமிட்ட, அவள் வாயைப் போற்றி அதிர்ச்சியை வெளிப்படுத்த, அபிராம் அவனை முறைத்தபடி கடந்தான்.
ஆதிரா, ஆதர்ஷ் வாழ்க்கையில், முகுந்த் போஸ்லேயின் வருகை என்ன மாற்றத்திற்கு வித்திடும், பொறுத்திருந்து பார்ப்போம்.