யார் இந்த நிலவு -1
" யார் அந்த நிலவு
ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று
யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம்
இங்கு நான் வந்த வரவு"
காதில் மாட்டியிருந்த ஒலிப்பான்கள் ஆயிரமாவது தடவையாக ஒலிக்க, பனிப்புகைக்குப் போட்டியாய், ஓர் புகையை வளையங்களாக வெளியிட்டபடி நடிகர் திலகமாகவே மாறி, முகத்தில் பாடலுக்கேற்ற உணர்வுகளைக் கசிய விட்டபடி , மலைப் பாதையில் நடை பழகிக் கொண்டிருந்தார் அந்த பவள விழா கண்ட நாயகன் பால நாயகம்.
" மாலையும் மஞ்சளும் மாறியதே
ஒரு சோதனை
மஞ்சம் நெஞ்சம் வாடுவதே
பெரும் வேதனை
தெய்வமே யாரிடம் யாரை
நீ தந்தாயோ
உன் கோயில் தீபம் மாறியதை
நீ அறிவாயோ ஹோ.
ஹோ..ஹோஹஓஹோ..
என மீதி பாடலை தானே வாயசைத்துப் பாடி மெய்மறந்து நின்றவரை, அவரது
மெய் மறந்து நின்ற பலநாயகத்தின் தோளைத் தட்டிக் கூப்பிட்ட, பன்னீரை, "
"
"யார் அந்த நிலவு" எனப் பாடியபடி
"வசந்த விலாசம்" இது வயதான வாலிப நண்பர்கள்
இயந்திர கதியான உலகில் காலில் சக்கரம் கட்டி பறக்கும் பிள்ளைகள், பேரன் பேத்திகளுக்கு அவர்களுக்கான இடம் கொடுத்து இங்கே குன்னூரில் ஒரு
அந்தி சாயும் நேரம், மலைப் பிரதேசமான இங்குச் சூரியன் சீக்கிரம் ஓய்வெடுக்கச் சென்று விடுவான், அவன் மறைந்த பிறகு, ஒளியூட்டப்பட்ட வசந்த விலாசத்தின், வட்ட வடிவில் சுற்றி ஓடும் வராண்டாவைத் தவிர, புல்வெளியிலோ, மலைப் பாதையிலோ , ஏதேனும் விசப்பூச்சிகள் உலாவும் அபாயம் இருப்பதால் இந்த வயதான வாலிபர்களுக்கு நடைப்பயிற்சி செய்ய அனுமதிக்க மாட்டார் பவானி. வசந்த விலாசத்தை அந்த டீ எஸ்டேட்டின் நடுவே ,வாசலிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தார் ரோடில் பயணித்து, அழகிய தோட்டத்தை அரை வட்டமடித்தால் அதன் முகப்பை அடையலாம். முகப்பில் வராண்டாவைக் கடந்து, நல்ல அகலமான தலை வாசல். உள்ளே வட்ட வடிவில் பெரிய ஹால் ஷோபாக்களும் போட பட்டிருக்கும். இடது புறத்தில் அடுப்படியும் , டைனிங் அறையும் உண்டு. வலது புறத்தில் மாடிப்படி, அருகிலேயே லிப்ட். வட்டத்தின் மீதி பகுதியில், ஒரு பூஜையறையும் நான்கு சூட்களும் இருந்தன. இதில் ஒரு சூட் என்பது, இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு புறம் பெட்ரூம், அட்டேச்ட் பாத்ரூம் , வாட்ரோப் , மற்றொரு புறம் ஒரு ஷோபா செட்கள், மேஜை நாற்காலியில் போடப்பட்ட ஹாலும் அதிலிருந்து வராண்டாவுக்குச் செல்லும் வழியும் இருக்கும். முதல் மாடியில் இதே போல் ஆறு சூட் இருந்தது. இவர்களுடைய பிள்ளைகள், பேரன் பேத்திகள் ஆசைப்படும் போது வந்து தங்கிச் செல்வார்கள் எனக் கட்டப் பட்டது, ஆனால் அப்படி வந்து செல்லத் தான் ஆள் இல்லை. ஆனால் இவர்களுடைய ஏனைய நண்பர்கள் நாட்கள் கணக்கில் வந்து தங்கிச் செல்வார்கள். அவ்வப்போது ராமுவின் பேரன் மட்டும் வந்து செல்வான். நான்கு ஜோடிகளுக்கும் கூப்பிட்ட குரலுக்குச் சேவை செய்யப் பணியாட்கள், சமையல்காரர், ட்ரைவர் என ஒரு கூட்டமே உண்டு. இதைத் தவிர எஸ்டேடில் வேலை செய்யும் ஆட்களும் வந்து செல்வர். ஓய்வெடுக்க என வந்தவர்கள் பொழுது போக்காகப் பழங்கள், கிழங்கு வகைகள் எனப் பயிரிட்டு அது வளர்வதை , பிள்ளை வளர்ப்பு போல் ஆர்வமாகப் பார்த்துப் பூரித்திருந்தார்கள். பவானியும் இந்த இடத்திற்கு வந்து ஒரு வருடம் தான் ஆகிறது. ஆனால் அதற்குள்ளாகவே மூத்த தலைமுறைக்குப் பிடித்தவராகவும், நிறைய விஷயங்களில் இவர்களின் கண்ணோட்டத்தை மாற்றுபவராகவும் இருந்தார். ஹாலில் , பால நாயகம் மனைவி சௌந்தரி, ராமசாமி மனைவி அபரஞ்சி, சுப்பிரமணியம், சாரதா என எல்லாருமே ஆளுக்கு ஒரு வேலையைச் செய்து கொண்டு உட்கார்ந்திருக்க, ராமசாமியைக் காணவில்லை.
'அப்பாடி, அவனைக் காணோம்' என ஆசுவாசமாகப் பாலா மூச்சு விட, பூஜையறையிலிருந்து பவானியோடு வந்தார் ராமு. அதுவும் பக்தி பழமாக, விபூதி பட்டையெல்லாம் பூசி வர, பவானி சாமிக்குக் காட்டிய ஆரத்தித் தட்டோடு, பெரியவர்களிடம் கண்ணில் ஒற்றிக் கொள்ளக் கொண்டு வந்து நீட்ட, தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டவர்கள், குங்குமத்தை எடுத்துத் தாலியில் வைத்துக் கொண்டவர்கள், பவானிக்கும் நெற்றி வகிட்டில் வைத்து விட்டனர். " எங்களோட இன்னும் மூணு மாசமா, ஆறு மாசமா ,எவ்வளவு நாள் இருப்ப, உன் புருஷனும், பொண்ணும் எப்போ வெளிநாட்டிலிருந்து வர்றாங்க" எனக் கேட்டார் அபரஞ்சி. "வரும் போது வரட்டும் மா, அதுவரைக்கும் உங்களைப் பார்த்துக்கிறேன். நான் கிளம்பினாலும், என்னை மாதிரியே ஒரு ஆளை வச்சுட்டு தான் போவேன்" என்றார் பவானி.
" யார் வந்தாலும், உன் இடத்தை நிரப்ப முடியாதும்மா " எனச் சகஜமாகப் பேசியபடி உள்ளே வந்தார் பால நாயகம், சற்றுத் தள்ளியிருந்த இரட்டை சோபாவில் ஒன்றில் சென்று அமர்ந்து கொண்டார். பின்னாடியே பன்னீரும் உள்ளே நுழைந்தார். " எல்லாம் , நீங்க பார்க்கிற பார்வையிலையும், உங்க மனநிலையும் தான் மாமா இருக்கு " என்றார் பவானி. " நல்லாச் சொல்லு, உன் மாமாட்ட, நீ சொன்னாலாவது புரிஞ்சுக்கிறாரா பார்ப்போம்" என்றார் சௌந்தரி, அவருக்கு மகனுக்கும், கணவருக்கும் இருக்கும் பிணக்கு எந்த விதத்திலாவது சரியாகாதா என்ற ஏக்கம். இருவருக்கும் முட்டுக்குக் கொடுத்தே, அவர் மூட்டுத் தேய்ந்தது தான் மிச்சம், மகள்களும் வெளிநாட்டிலிருக்க, இவர்கள் இங்கே வந்து விட்டனர். ராமு, பவானியிடம், " ஏம்மா சாம்பிராணி வாசத்தோட, வேற புகை வாசமும் வரலை" என எடுத்துக் கொடுக்க, " என்னப்பா சொல்றீங்க. கேஸ் கூட லீக்காகச் சான்ஸ் இல்லையே" என அவரும் மூக்கை உறிஞ்சி நுகர்ந்து பார்த்துக் கொண்டே , தனிச் சோபாவிலிருந்து பாலவிடமும் நீட்ட, ஆரத்தியைப் பெயருக்கு எடுத்துக் கொண்டவர், பிரசாத லட்டை வாயில் போட்டுக் கொண்டார். பன்னீர் அவரருகில் ஒரு புன்னகையோடு வந்தமர்ந்தார். பாலா தள்ளிச் சென்று தனி ஷோபாவில் உட்காரவுமே சௌந்தரி புரிந்து கொண்டவர். " நீங்க தானா" என மிரட்டவும், மனைவியை முறைத்தார் பாலா. " தங்கச்சிமா, நீ உன் புருஷன் ஸ்டைலைப் பார்க்கிறியா. நடிகர் திலகம் தோத்து போவார்" என , அவரருகில் வந்தமர்ந்து இப்போது தான் குறும்படத்தை வெளியிட்டார் ராமு. " டேய்" எனப் பாலா மிரட்ட, க்ருப்ல போட்டுட்டேன். நீ அங்கயே உட்கார்ந்து பாரு" என இளித்தார் ராமு. பாலா , பவானியை மாட்டிக் கொண்டோமே எனப் பார்க்க, பவானியும் வீடியோவில் பாலா புகை விடுவதைப் பார்த்தவர், அவரை எதுவுமே சொல்லாமல், மருத்துவருக்குப் போன் செய்து, நாளை பெரியவர்களுக்கு முழுப் பரிசோதனை செய்ய வரச் சொன்னார்.
" அண்ணா,உங்களால நாங்களும் மாட்டிக்கிட்டோம்" என அபரஞ்சியும். " ஏனுங்க மாமா இப்படிப் பண்றீங்க" எனச் சாரதாவும் மூக்கால் அழுதார்கள், ஏனெனில் சர்க்கரை நோயாளிகளான அவர்களுக்கும் பரிசோதனை நடக்கும். சாதாரணமாகப் பரிசோதனை தேதி வரும் முன் வாயைக் கட்டும் இருவரும் இடைப்பட்ட நாட்களில், பவானி அறியாமலே இனிப்பை உள்ளே தள்ளுவார்கள். இதில் பன்னீரும் கூட்டு. எனவும் சேர்ந்து பாலாவை முறைத்து நிற்க, பாவானி ஒரு போன்காலில் பேச வராண்டாவிற்குச் சென்றார். இந்தப் பெரியவர்களில், பால நாயகம் மற்றும் சுப்பிரமணி ஜோடியை மாமா, அத்தை எனவும், பன்னீர் மற்றும் ராமசாமி ஜோடியை அப்பா அம்மா என்றும் பவானியை அழைக்கச் சொல்லிக் கொடுத்திருந்தனர். எனவே அவரும் முறைச் சொல்லியே அழைத்தார். பெங்களூர் ஓசூர் ரோட்டில் இருக்கும் புறநகர்ப் பகுதி, தமிழர்கள் அதிகம் வசிக்கும் அந்த நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதியில் , வெளிப் பார்வைக்குச் சாதாரணமாக இருந்த அந்த வீட்டின் முன்பகுதி வராண்டா அந்தப் பகுதிக்குப் பொருந்திப் போவதாக இருந்த போதும், அதைக் கடந்த பகுதி சகல வசதிகளோடான உயர் தட்டு மக்கள் வாழும் அமைப்பை உடையதாகவே இருந்தது. அதில் யாருடனோ அலைப் பேசியில் பேசிக் கொண்டிருந்த பெண்ணின் தோரணையும் அந்த அந்தஸ்திற்கு ஏற்றதாகவே இருந்தது.
அருகில் நின்று கொண்டு ஒரு நடுத்தர வயது பெண்மணி அவளைக் கொஞ்சம் தணித்துப் பேசச் சொல்லி, கண்ணால் கெஞ்சிக் கொண்டிருந்தார். ஆனால் அவளோ, " ஆயி, மீ நிர்ணய கேதலா, யாவேலீ மஜா நிர்ணய கோடூன் காட்தா நாஹி (அம்மா, நான் முடிவெடுத்துட்டேன். இந்தத் தடவை என் முடிவை மாத்திக்க முடியாது)" என மராத்தி மொழியில் தன் அன்னையிடம் தனது பிடிவாதத்தை நிலைநிறுத்திக் கொண்டிருக்க,
அந்தப் பக்கத்தில் அவளது ஆயி என்ன சொன்னாரோ, " மஸ்து, தூ நேஹ்மி அஸேச் ம்ஹணத் ஹோதாஸ், மீ முல்கா ம்ஹணூன ஸஹமத் ஆஹே, மீ ஸாம்னா கரேன். தும்ஹி கால்ஜி கரூ நக ( ரொம்ப நல்லது, நீங்க எப்பவும் சொல்றது தான், இதுவே நான் ஒரு பையனா இருந்தா ஒத்துக்குவீங்க தானே. நான் சமாளிச்சுக்குவேன். நீங்க கவலைப் படாதீங்க) என்றவள், மேலே தன் அம்மாவுக்குப் பேச வாய்ப்புத் தராமல். " பைரூ, டென்ஷன் ஆகாத, நான் பார்த்துக்குறேன். டே கேர், பை பை பைரூ" எனப் பேச்சை முடித்தவள், தன் போனையும் அணைத்துப் போட்டாள். அடுத்த நிமிடமே, அவளருகில் நின்ற கௌரிக்கு போன் வர, " மாஸி, போனை எடுக்காதீங்க. நீங்க குடுத்தாலும் நான் பேச மாட்டேன்" எனக் காதைப் பொத்திக் கொண்டாள் அவள். " நல்ல பொண்ணு" எனக் குறைபட்டுக் கொண்டே, கௌரி , பைரவியின் அலைப்பேசிக்குப் பதிலளித்துக் கொண்டே உள்ளே சென்றார். நீள் வட்ட முகமும், நேரான நாசியும் அதில் அமர்ந்த கோபமும் , அகன்ற கண்களும், அதில் மின்னலின் ஒளியும் , பட்டை புருவமும் , சற்றே தடித்த உதடுகளும் அவளின் பிடிவாதத்தைச் சொல்ல, சந்தனம் பூசியது போன்ற கன்னங்களும், அலையலையான கேசமும், அவள் கம்பீரத்தை எடுத்துக் காட்ட, அவள் அமர்ந்திருந்த தோரணையும் அவளின் வாளிப்பான மேனியும், வாட்ட சாட்டமான உயரமுமே அவளது பிறப்பு மேல் குடி வீரப் பரம்பரையில் வந்தது எனப் பறை சாற்றியது. அவள் ஆதிரா பாய் போஸ்லே, மராத்திய வீரப் பரம்பரையில் வந்த துணிச்சல் மிக்கப் பெண். அவளது ஆயி, (அம்மா) சொல்லும் வீரப்பரம்பரை கதையில் வரும் , சிவாஜி மகராஜ் போல், அவர்களும் இப்போது அஞ்ஞாத வாசத்தில் இருக்கின்றனர். இவளுக்கு இருபத்தியோரு வயது ஆகும் வரைப் இதனைப் பொறுத்துக் கொள்ளச் சொல்லி அவளது ஆயி அன்பு கட்டளையிட்டிருக்க, அவளும் தனது முழு அடையாளத்தை மறைத்து ஆதிரா பி கே எனத் தமிழர்களைப் போல் தனது தனது பெயரை மாற்றி வைத்துக் கொண்டு இருக்கிறாள். இந்த இளவரசி இப்போது முதுகலைப் பட்டப் படிப்பு, அதுவும் டெக்ஸ்டைல்ஸ் சம்பந்தமான வடிவமைப்புத் துறையில் கடைசிப் பருவத்தில் இருக்கிறாள். இது சம்பந்தமான ஒரு கம்பெனியில் ப்ராஜக்ட் ட்ரைனியாகச் சேருவதற்கு , நேர்முகத் தேர்வு இருக்கிறது. அவர்கள் பயிலும் கல்லூரியே இதற்கு ஏற்பாடு செய்து உள்ளனர். இரண்டு மூன்று கம்பெனிகள் கேம்பஸ் இன்டர்வ்யு வருகிறார்கள், அதில் பங்கேற்கவே அவளது 'ஆயி"யிடம், இவ்வளவு போராட்டம். கௌரி பேசி முடித்து வந்தவரைப் பார்த்து, ஆதிரா காதுகளைப் பொத்திக் கொள்ள, " முலே(குழந்தை)" என அவர் அழைக்க, " நான் முலே இல்லை, முல்கி ( குழந்தை இல்லை பொண்ணு) " என அவள் பதில் தரவும். " சரிங்க முல்கி, அது எப்படிக் காதை அடைச்சுக்கிட்டாலும் , இது மட்டும் கேக்குது" என வம்பு பேச,