Monday, 28 February 2022

யார் இந்த நிலவு- 28

 யார் இந்த நிலவு- 28 

கே ஆர் மில்லில் ஆதர்ஷ் காலெடுத்து வைத்ததிலிருந்தே பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் இருந்தது. அவனது என்ட்ரியே, அதிரடியாக இருக்க, அப்போதே, தொழிலாளர்கள், என்ன ஏதென்று பேச ஆரம்பித்து விட்டார்கள். போதாத குறைக்கு ராஜனின் குரல் உசந்து கேட்கவும், ஏதோ பிரச்சனை என அரசல் புரசலாகப் பேச்சு வந்தது.

இரண்டு மணி நேரத்தில் மீண்டும் ஆதர்ஷின் கார்கள் மட்டுமின்றிக் கே ஆர், வீட்டில் உள்ளவர்களும் வாகனங்களும் வரிசையாகக் கிளம்பவும், என்ன என்ன வென விசாரிக்க ஆரம்பித்தார்கள். அதில் வீட்டில் வேலை பார்க்கும் வேலையாட்கள் மூலமாக , யாரோ முக்கியமான ஒருவருக்கு முடியவில்லை என்று மட்டும் செய்தி பரவியது.

மில் ஹாஸ்டலில் தங்கியிருந்த சங்கீதா , சத்தியனிடம் விசயத்தைக் கேட்டறிந்தவள், " நான் அப்பளையே நினைச்சேனுங்க, ஆதிரா, அப்பாவோட மகளா தான் இருப்பாங்கன்னு, அப்ப அவிக அம்மாவுக்குத் தான் முடியலையாக்கும்" என்றவள், இரவு உணவின் போது, அனைவரையும் பவானிக்காகக் கூட்டுப் பிரார்த்தனை செய்யச் சொன்னாள்.

ஹாஸ்பிடலுக்கு, குன்னூரிலிருந்தே மருந்தின் வீரியத்தில் மயக்க நிலையில் வந்த, பவானியை, நாயகமும், சௌந்தரியும் கண்ணீர் விட்ட படி வந்து பார்க்க, ஆதிரா, " ஆயி, ஆயி" என எழுப்பப் போனாள். ஆதர்ஷ் அவளை அழைக்க விடாமல் தடுத்தவன், " ட்ரிட்மெண்ட் நடக்கட்டும், அவங்களை எமோஷனல் ஆக்காத" எனக் கட்டுப்படுத்தினான். அதே சொல்லே பெரியவர்களுக்கும் போதுமானதாக இருந்தது. 

கௌரி, அவரது தீதியை அருகில் வந்து தொட்டுப் பார்த்தவர், " எல்லாம் கூடி வர்ற நேரம். எந்திருச்சு வாங்கத் தீதி. உங்கள் தனிமை தவத்துக்கான காலம் முடிஞ்சுது. நீங்க ஜீஜு வோட சேர்ந்து வாழறதை, நாங்கல்லாம் ஆசை தீர பார்க்கனும்" எனப் புலம்பவும், " மாஸி" என ஆதர்ஷின் குரலில், ஆதிராவை அழைத்துக் கொண்டு, காரிடாரில் அமர்ந்தார். கஸ்தூரி, ரஞ்சனியும், பவானியை கவலையோடு பார்த்தனர்.  பைரவி ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார்.

அபிராம், பெரியவர்களை அழைத்துக் கொண்டு, அடுத்து இரண்டு கார்களில் வந்திறங்க, சௌந்தரியும், நாயகமும் அவர்களிடம் நடந்ததை அறிந்தனர். 

" கூடவே இருந்து, சேவை செஞ்சது. என்ர மருமகள்னு தெரியாமல் போச்சேடா" என நாயகம் புலம்பவும்,"புருசனோட வாழ முடியலைனாலும், மாமனார்,மாமியாருக்குச் சேவை பண்ணனும்னு வந்திருக்கே, பவானிக்குப் பெரிய மனசு தாண்டா " என்றார் ராமு. 

"ராஜ வம்சத்தில் பிறந்தும், கௌரதை பார்க்காத, நமக்குச் சேவை செஞ்சுதே, என்ர வீட்டுப் புள்ளைகள் கூடச் செய்ய மாட்டாங்க" எனப் பன்னீர் நெகிழ்ந்தார்.

"அது நல்லமனசுக்கு, நம்ம வாழ்த்து எல்லாம் இருக்கு, அதுக்கு ஒன்னும் ஆகாதுடா. கவலைப் படாத" என்றார் சுப்பு.

" இப்படி ஒரு மருமகளை வச்சு, சீராட எனக்குக் கொடுத்து வைக்கலையே" எனச் சௌந்தரியும் அபரஞ்சி, சாரதாவிடம் கண்ணீர் விடவும்,  "அழுவாதக்கா, இனிமேட்டுக்கு நம்ம, நம்ம மறுமவளை பார்த்துக்குவோம்" என்றார் சாரதா. "உண்மையிலே, எனக்கு மகாளில்லாத குறையைத் தீர்த்ததே பவானி தான் அண்ணி. இரண்டு நாள்ல, மாத்திரை போட்டிங்கிளா, இனிப்பு சாப்பிடாதீங்கன்னு வரும் பாருங்க.  பவானியாட்டமே இருக்குனீங்களே, உங்க பேத்தி, அது  எங்க" என அபரஞ்சி கேட்கவும்,சௌந்தரி , ஆதிராவை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

"அழுவதா கண்ணு, அம்மாளுக்கு ஒன்னும் ஆகாது. இனிமேட்டுக்கு உங்க குடும்பத்துக்கே நல்ல காலம் தான்" எனச் சமாதானம் சொல்லவும்,ஆதிரா பொட்டு பொட்டாகக் கண்ணீர் வடித்தாள் .

அதே தளத்தில் நான்கு அறைகளைக் கைலாஷ் புக் செய்து வைத்திருந்தார், அபிராம் பெரியவர்களை, அங்குத் தங்க வைக்க . கஸ்தூரியும், ரஞ்சியுமாகப் பெரியவர்கள் தேவையைக் கவனித்தனர். 

ஆதர்ஷ் யாரெனக் கேட்டார்கள். "ஆதிரா , அம்மத்தா அவிக சொத்துக்கு வாரிசாமாம். நல்ல பையனாத் தான் இருக்கான்" என சௌந்தரி  விவரம் சொன்னார். 

அபிராமும் ரஞ்சியுமாக ஐசியூ வாசலுக்கு வர, ஆதிரா, ஒரு பக்கம் கௌரி மாஷி அமர்ந்திருக்க, அவர் மேலில்லாமல்,மற்றொரு புறம் அமர்ந்திருந்த ஆதர்ஷ் தோள்களில் தலையைச் சாய்த்து மெல்ல ஆயியைப் பற்றியே புலம்பிக் கொண்டிருந்தாள். அவன் தட்டிக் கொடுத்தவன், தன நானிக்கு போன் போட்டு ஆதிராவிடமும் பேசச் சொல்லிக் கொடுத்தான். இவர்கள் அந்யோனியத்தைப் பார்க்கவும், ரஞ்சனி, அண்ணனிடம் காட்ட, அவன் அவளை முறைத்தான்.

விஜயன், ஆம்புலென்சிலிருந்து பவானியை இறக்கும் போதிலிருந்து, ஐசியூ வரை உடன் வந்தவர், கைலாஷை தேட, அதே தளத்தில் இவர்களுக்காக ஒதுக்கிய அறையில், கைலாஷ், ஜன்னல் வழியே, வானத்தை வெறித்துக் கொண்டிருந்தார்.

அவரது நினைவுகள், இவர் சந்தன் கட்டை விட்டுக் கிளம்பிய நாளுக்குச் சென்றது. இரண்டு மாத கால இனிமையான இல்லறத்தில், மழை சற்றே தணியும் நாட்களில், அணைக்கட்டை ஒட்டிய பகுதிகளில் இருவரும் கைகோர்த்தபடி ஒட்டியே சுற்றித் திரிவார்கள். உண்மையில் தலைமறைவு வாழ்க்கை, தேனிலவு காலமாகத் தான் இருந்தது. ராஜன் அவரைச் சீண்டிக் கொண்டே இருக்க, அவர் ராஜ் என்ற சிணுங்கலோடு, அவருக்கு ஈடு கொடுப்பார்.

இரண்டு மாத காலத்தில், கைலாஷ் தனது மில்ஸ் ஆரம்பிக்கும் கனவுத் திட்டத்தை அதில் என்னவெல்லாம் செயல்படுத்த வேண்டும் எனப் பட்டியலிடும் போது, பைரவியும் தங்கள் மில்லில் சந்திக்கும் பிரச்சனைகளை வைத்து நிறையச் சொல்லுவார். அவர் சொன்னதில் ஒன்று தான், பெண் தொழிலாளர்களுக்கான ஹாஸ்டலும், அங்கே அவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளப் படிக்கும் வசதி ஏற்படுத்தித் தருவதும். அதை எல்லாம் நினைவில் வைத்துத் தான், தன் பாரு சொன்னது என ஒவ்வொரு வார்த்தையையும் நினைவாக்கினார்.

சந்தன்கட் பகுதியில், லேண்ட் லைன் தொலைப் பேசி வெகு நாட்களுக்குப் பின் சீரானது. விஜயனுக்கு அழைத்தார் ராஜன்.

அவர், தானே சந்தன்கட் வர இருந்ததாகவும், சௌந்தரி உடல் நிலை சரியில்லையாம், உடனடியாக உன்னை வரச் சொல்கிறார்கள் எனச் செய்தி சொன்னவுடன், பைரவி நொடி தாமதிக்காமல் , " நீங்க கிளம்புங்க ராஜ்" என்றார்.

" இருங்க அம்மணி, வீட்டுக்கும் போன் போட்டு பேசிடுறேன்" என ராஜன் வீட்டுக்கு அழைக்க, ராஜி தான் எடுத்தார். பேசுவது ராஜன் என அறியவுமே, " நல்லா இருக்கீங்களா, எங்கிங்க ஆளையே காணோம், எங்களையெல்லாம் மறந்துட்டீங்களாக்கும்" என அவரை நீண்ட நாள் பார்க்காத ஏக்கத்தில் உரிமையாகப் பேசிவிட,

" அம்மணி, உங்களுக்கு இப்படியெல்லாம் பேச தெரியுமாக்கும். என்னைப் பார்க்கும் முன்னை ஓடி ஒளிஞ்சிடுவ. அப்ப அதெல்லாம் பொய்யாக்கும்" எனச் சிறுவயது முதலே பழகியவர் என்பதால், இவர் கேலி செய்து பேச, அருகிலிருந்த பைரவி முறைத்தார். அதில் உற்சாகமானவர் மேலும் ராஜியோடு, நாலு வார்த்தைகள் பேச, விளையாட்டு வினையானது.

" தாய் மாதா, இருந்தா கூப்பிடுங்க அம்மணி" எனவும், ராஜி அந்தப் பக்கம், ராஜன் இல்லாத கவலையிலேயே சௌந்தரிக்கு என்னவெல்லாம் ஆனது எனப் பட்டியலிட்டவர், " அத்தை டாக்டர்கிட்ட போயிருக்காங்கங்க. டைபாயிடு ஜொரம் வந்து ரொம்பப் பாடு பட்டாங்கங்க, ஆளே, பாதியா மெலிஞ்சு போயிட்டாங்க. நீங்க ஒருக்கா, வந்து பார்த்துட்டு போகலாமில்லிங்க. உங்களைய தான் கணண்ணு தேடுதுன்னு கிடக்குறாங்க" என ராஜி அழைப்பு விடுக்கவும்.

" வர்றேன் ராஜி, அம்மா வந்தா போன் போட்டேன்னு சொல்லு. கிளம்பும் முன்ன மறுக்கா போன் போடுறேன்" என வைத்தார்.

" நிஜமாலுமே, அம்மாவுக்கு முடியலையாட்டுத்துக்கு" என அவர் கவலை தேய்ந்த முகத்தோடு சொல்லவும், பைரவி, " பாய்சாப், பொய் சொல்றார்னு நினைச்சிங்ஙளா" என விஜயனுக்காகப் பேசவும்.

" அதுக்கு இல்லைங்க அம்மணி, அவன் பொய் சொல்றான்னு யாரு சொன்னா, முடியலைனா, ரொம்ப முடியலையா, பரவாயில்லையான்னு தெரிஞ்சுக்க அடிச்சேன். உன்னையும் கூட்டிட்டு போகனுமில்ல" எனக் கைலாஷ் சொல்லவும்

' ராஜ், நீங்க, உங்க அம்மாவைப் பார்க்கிறது ரொம்ப அவசியம், அங்க இருக்கிற நிலைமையைப் பார்த்துட்டு, என்னை வந்து கூட்டிட்டு போங்க. இன்னைக்கும் கலப்பு மணம், காதல் மணத்தை அவ்வளவு சீக்கிரமா யாரும் ஒத்துக்கிறது இல்லை. உங்களுக்கு இரண்டு தங்கைகள் இருக்காங்க. தேவை பட்டா, அவங்க ஷாதி முடிச்சிட்டு கூட நம்ம ஷாதி பற்றி உங்கள் பெற்றவர்களிடம் சொல்லிக்கலாம்' என அவர் அனுப்ப, கைலாஷ்க்கு தான் மனமே இல்லை. அவர் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ளவும், அவரை இயல்புக்குக் கொண்டு வரும் நோக்கோடு,

" ஆமாம், அது யார் போன்ல, அம்மணி, அம்மணின்னு கொஞ்சி, கொஞ்சி பேசுறீங்க" எனப் பைரவி சண்டைக்கு வரவும்.

" ஆகா, என்ர பொண்டாட்டிக்குப் பொறாமையைப் பாருடா. அது ஒரு மாமா மகள், பேமலி ப்ரெண்ட். இந்தப் பொண்ணைத் தான் நான் கட்டினாளே, கட்டனுமின்னு எங்கப்பா ஒத்துக் கால்ல நிக்கிறார். அந்த ஹிட்லர் சொன்னா, நான் கேட்டுருவேனாக்கும். " என அவர் சிரித்துக் கொண்டே பதில் தரவும் .

" ஓஹோ, உங்க அப்பா பேச்சை மீறனும்னு தான், என்னை ஷாதி பண்ணிக்கிட்டிங்களா" எனப் பைரவி முறைக்கவும், அவரை இழுத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டவர், " இந்த ராஜா, மடங்கின ஒரே இடம் இந்த ராணிக்கிட்ட மட்டும் தான்" எனக் காதல் வசனம் பேச , " போதுமே" எனப் பொய்யாய் கோபித்து எழுந்தவரை, விடாமல் ஆட்கொண்டார் கைலாஷ் ராஜன். அடுத்த நாள் அவர் கிளம்பும் வரை, பாருவுமே, ஏதாவது காரணம் சொல்லி, கணவனை உரசிக் கொண்டே தான் இருந்தார்.

மனைவியின் மனதை அறிந்தவர், " அதுக்குத் தான் நீயும் கூட வான்னு சொல்றேன். அங்க போனாலும், நீ என்ன செய்றியோன்னு மனசு கிடந்து அடிச்சுக்கும்" எனத் தன் கைவளைவில் வைத்து அழைத்தவரின் மார்பில் சாய்ந்தவர், தங்கள் பிரிவை, கண்ணீராய் வெளியேற்றி, 

" இல்லை ராஜ், நீங்க உங்க அப்பா, அம்மாக்கிட்ட சம்மதம் வாங்கிட்டு, என்னைக் கூட்டிட்டு போங்க. அவங்களோட மனபூர்வமான ஆசீர்வாதம் வேணும். என்னை அவங்க முழு மனசோட மருமகளா ஏத்துக்கனும்" என அவரை அடுத்துப் பேச விடாமல், அது தான் முடிவு எனும் படி தடுத்தவர், இரண்டு நாட்கள் இரயில் பயணத்துக்குத் தேவையான உணவைச் சமைத்து, தனித் தனிப் பேக்கிங்களாக வைத்தவர், அவரது உடுப்புகளோடு, அவர்கள் வாழ்க்கை ஆரம்பிக்கச் சாட்சியாக இருந்த ரஜாயையும் மடித்துப் பேக்கிங் செய்தார்.

"இவ்வளவு பெரிசு எதுக்குமா" என ஆட்சேபித்தவரை, " ரயிலில் குளிரும். அதோட இதைப் போர்த்திக்கிட்டிங்கன்னா, நான் உங்க கூடவே இருக்க மாதிரி" என்றவர், வழிச் செலவுக்குப் பணத்தையும், தன் கையில் போட்டிருந்து விலையுயர்ந்த குடும்ப வளையல்களையும் தந்தவர், " அவசரமா பணம் தேவை பட்டா, இதை வச்சுப் பணம் புரட்டிக்குங்க. " என அவர் மறுத்தும் கேட்காமல் அனுப்பி விட்டார். அன்று உள்ளம் துடிக்க, கட்டாயத்தில் பிரிந்தவர் தாம். பற்பல துன்பங்களை அனுபவித்து, அப்பா, அம்மாவின் கடமை முடித்த பிறகு, விண்ணுலகில் இருக்கும் தன் பாருவோடு சேரும் காலத்தை அவர் எதிர் நோக்கியிருந்தார்.

ஒரு மாதத்தில் பாருவை நினைவூட்டும் ஒவ்வொரு நிகழ்வுகளாய் நிகழ்ந்து, இன்று பாருவே அவர் முன். ஆனால் உயிருக்குப் போராடும் நிலையில். அதைத் தாழ மாட்டாதவராக 'நான் , என்னம்மா தப்பு செஞ்சேன். உன் மேலே வச்ச காதலும் நிஜமில்லையா. உனக்கு என் மேல நம்பிக்கையில்லையா. தூக்குத் தண்டனை கைதி கூட, ஒரு தடவையில் செத்துருவான். நான் இருபது வருஷமா, தினம், தினம் பட்ட வேதனை பத்தாதுன்னு, பெரிய தண்டனையைக் கொடுக்க வந்திருக்கிற, என்ர அப்பா,அம்மாவுக்குத் தான் நல்ல மருமகளா இருக்கனும்னு நினைச்சவ, என்ன நினைக்கலை பார்த்தியா " எனத் தன்னுள் புழுங்கிக் கொண்டிருக்க,

" ராஜா, தங்கச்சிமா வந்திட்டாங்கடா, நீ வந்து பாரு வா. உன் பாருவை வந்து பாரு வா" என அழைத்தும் பதிலேதும் சொல்லாமல் வெறித்தபடியே நின்றார்.

" ராஜா, என்னை நாலு அடி கூட அடிச்சிடுடா. இப்படி வெறிச்சிட்டு நிற்காத. உன் குரல் கேட்டா, தங்கச்சிமா, எந்திரிச்சு வந்துரும்" என விஜயன் நண்பனைக் கரைக்கும் வழியைத் தேட, பதிலேதும் சொல்லாமல் நின்றார்.

விஜயன் மேலும் வற்புறுத்தவும், " டாக்டர் கிட்ட பேசி வச்சிருக்கேன். பெரிய டாக்டர் தான், ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கச் சொல்லு. பிழைச்சு வந்தாள்னா பார்த்துக்கிறேன், இல்லைனா பழைய பாருவே என் மனசில இருக்கட்டும் " என பிடிவாதமாக நின்றார் ராஜன். இந்த வார்த்தையை அவர் சொல்லும் முன் என்ன பாடு பட்டிருப்பார் என உணர்ந்த விஜயன், அடுத்து பேசும் முன், ஆதர்ஷ் கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தான். 

ஒரு நிமிடம் முன் தத்துவமாக பேசிய ,ராஜன் பயத்தோடு பார்க்க "அவங்களுக்கு ஆன்ஜியோ பண்ணனுமாம். பேமலி மெம்பர் சம்மதம் வேணும், நீங்க போடுறீங்களா, இல்லை போஸ்லே குடும்ப வாரிசா, நான் போடவா" என அவரைப் போலவே இறுகிய முகத்தோடு அவனும் கேட்டான்.

விஜயன், இருவருமாக முடிவுக்கு வரட்டும் எனத் தான் வெளியேறி, ஆதிராவை அனுப்பி வைத்தார் விஜயன்.

அவள் வரும் வரை இருவரும் அந்தப் பேப்பரையே வெறித்துக் கொண்டிருக்க, ஆதிரா உள்ளே வந்தவள், " டாக்டர்ஸ், ஆப்பரேஷன் தியேட்டர்ல தயாரா இருக்காங்க. பேப்பர் வேணும்." எனப் பொதுப்படையாகச் சொல்ல,

" இருபது வருஷம் கழிச்சு, மறுபடியும் அதே பழியைச் சுமக்கோனோம்னு தலையில எழுதியிருக்கு " எனக் கைலாஷ் வேதனையோடு திரும்பிக் கொள்ள, 

" எனக்கு முதல் சான்ஸே , இதுக்குத் தான்னு எழுதியிருக்கு போல " என மனம் நொந்தான் ஆதர்ஷ். கைலாஷ், இவன் என்ன அர்த்தத்தில் சொல்கிறான் என அதிர்ச்சியாகத் திரும்பிப் பார்க்க, ஆதிரா அவனை அறிந்தவள் போல்,

" இரண்டு பேருமே, போட வேண்டாம். என் ஆயி, எனக்காகத் தானே, என் உயிரைக் காப்பாற்ற தான போராடுனாங்க. நானே அவங்க உயிரை காப்பாற்றக் கையெழுத்து போடுறேன்" என அந்தப் படிவத்தை நோக்கி வர, மற்ற இருவருமே, " நானே போடுறேன்" " இந்தக் கொடுமை உனக்கு வேண்டாம்" என அவளை நோக்கி வந்து அணைத்துக் கொண்டனர். 

ஆதர்ஷ், ஆதிராவை கைலாஷ் கைகளில் தந்து விட்டு, நகரப் பார்க்க, அவனை ஒரு கையில் பற்ற, அந்த ஸ்பரிசம் பேச்சு வார்த்தைகள் தேவையற்ற ஓர் ஆறுதலைத் தந்தது. இவ்வளவு நேரமும் பெரிய மனித பாவனையில் வேலை செய்த ஆதர்ஷ் ,கைலாஷின் வார்த்தைகளுக்குப் பொருத்தமான பால் புட்டியை பிடுங்கப்பட்ட பாலகனாக அவர் தோள்களில் சாய்ந்து அழுதான். 

 "நான்,உங்களை டார்கெட் பண்ணி தான் ஏற்பட்டோட வந்தேன், அவங்க இப்படிப் பலியாவாங்கன்னு நினைக்கவே இல்லை. எனக்கு பயமா இருக்கு. நானிமாக்கு என்ன பதில் சொல்வேன்" எனவும் 

" நாம எதிர்பார்க்காக்கத்தை,எதிர் பார்க்காத நேரத்தில தர்றது தான் கண்ணு வாழ்க்கை, அதை ஒன்னும் பண்ண முடியாது" என்ற கைலாஷ். 

 "பெரிசா,ராணியம்மாவை காப்பாத்துற ,சிப்பாய் மாதிரி வந்துட்டான் .சின்னப் பசங்களை,பசங்களாவே இருக்க விடாம என்ன தான் ராஜக் குடும்பமோ" என ஆதர்ஷை செல்லமாகக் கன்னத்தில் தட்டியவர், தன்னோடு அனைத்துக் கொள்ள , அவனும் தந்தையெனும் ஆளுமையின் அரவணைப்பு எத்தகையது என ஆதிராவோடு சேர்ந்து அனுபவித்தான்.

கைலாஷின் ஒரு கை வளைவில் ஆதிராவும், மறு கை வளைவில் ஆதர்ஷும் இருக்க இருவரையும் ஒரு சேர அணைத்துக் கொண்டவர், 

"உங்க ஆயி, ஒரு நிமிசத்தில என்னை ராஜனா ஆக்குறா, மறு நிமிசம் கைலாஷ் ஆக்கிடுறா. இப்ப என்ன செய்யக் காத்திருக்காளோ செய்யட்டும்" என ஒரு முடிவுக்கு வந்தவர், கண்ணீரைத் துடைத்துக் கொண்டு,  தானே கையெழுத்துப் போட்டவர், டாக்டர் அறை நோக்கி நடந்தார்.

சௌந்தரி, ஆபரேஷன் அறை காரிடாருக்கு வந்த மகனின் கையைப் பிடித்து, தன் கையிலிருந்த பாருவின் கருகமணியில் பொட்டு போல் கட்டப்பட்ட தாலியையும், மெல்லிய நீண்ட செயினில் கே ஆர் ஆங்கில எழுத்தோடு போடப்பட்டிருந்த தங்கச் சங்கிலியையும் திணித்தார், 

" ஒவ்வொரு பொம்பளையும், இதைப் பிடிச்சிக்கிட்டு தான், தான் புருஷனுக்காக வேண்டுவா. இந்த மகராசி தினம், புருஷன் நீண்ட ஆயுளோட இருக்கனும்னு நெற்றியில் குங்குமம் வாங்கிக்கும். அப்போவெல்லாம், என் மகனோட ஆயுசுக்குத் தான் வாழ்த்தியிருக்கேன்னு தெரியலை. " எனக் கண்ணீர் விட்டவர்,

 " நீயும், இதைக் கையில வச்சுக்கிட்டு, அவ ஆயுசுக்காக, மருத மலை ஆண்டவனை வேண்டிக்க. என் வீட்டுக்கு மகாலெட்சுமி வந்து சேரட்டும்" என்று விட்டு போய் அமர, கைலாஷ் தன் கைகளிலிருந்த, பாருவின் தாலியையே பார்த்திருந்தார்.

அடுத்த ஒரு மணி நேரம், பாரு, ஆயி, பைரவி, பவானி என எந்தெந்த பெயர்களில் அவரைப் பெரிதும் விரும்பினார்களோ, அந்தந்த உயிர்கள் அந்த ஒரு உயிருக்காகப் பிரார்த்தனையோடு துடித்தது. அதோடு கே ஆர் மில் வளாகத்தில் சிறப்புக் கூட்டுப் பிரார்த்தனை யாக , தங்கள் சேர்மன் அப்பாவிற்குத் துணையை, தங்களுக்கு ஒரு தாயை காப்பாற்றித் தர, பிரார்த்தனை செய்யப்பட்டது.

" ஆஞ்சியோ சக்ஸஸ், ப்ளாக்ஸை ப்ளாஸ்ட் பண்ணியாச்சு. இருபத்தி நான்குமணி நேரம் அப்சர் வேசன்ல ஐசியுல இருப்பாங்க. யாரும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்" என்ற மருத்துவர்கள், வார்த்தையில் எல்லோரும் ஆசுவாசமடைந்தனர். 

ஆதிரா, " ஆயி நம்மகிட்ட வந்துட்டாங்க பாபா. " என அவரைக் கட்டிக் கொண்டாள். ஆதர்ஷ் முகத்திலும் ஒரு நிம்மதி வந்தது. 

மருத்துவர்கள், கே ஆரையும், ஆதர்ஷ், ஆதிராவையும் மட்டும் ஐசியூவுக்குள் அழைத்து, " உங்க மூணு பேரையும் பார்க்கனும்னு, ஒரே புலம்பல், கொஞ்சம் ஹோப் ஃபுல்லா பேசிட்டு வாங்க. அப்பத் தான் நிம்மதியா தூங்கு வாங்க. இல்லைனா, அதுவே பெரிய ஸ்ட்ரெஸ்ஸாகி, காம்பிகேஷன்ல கொண்டு வந்து விட்டுரும்" என அறிவுருத்தினர்.

"என்னால அவளை அப்படிப் பார்க்க முடியாது" எனக் கைலாஷ் மறுத்தவர்.

" அவளைப் பத்தி உங்களுக்குத் தெரியாது, நம்மளை சேர்த்து பார்த்தாள்னா, கடமை முடிஞ்சுதுன்னு கிளம்பிடுவா. நான் வரலை" என அவர்  சிறுவனாக அடம் பிடிக்க,

" ஆயிக்கிட்டையே, வந்து அதைச் சொல்லிடுங்க. அப்பத் தான், எனக்கா வருவாங்க. நானும் பாபாவோட டூன்னு சொல்லிடுறேன்' என ஆதிரா ஐடியா சொன்னாள்.

" நல்ல குடும்பம்" என்ற ஆதர்ஷ், " அவுங்களுக்கு, என்கிட்ட தான், கேள்வி நிறைய இருக்கு, நானே போறேன்" என்றான் . 

" டேய், அவளை ஸ்டைன் பண்ண விடக் கூடாது. நீ எதாவது எகத்தாளமா பேசி, என் பாருவுக்கு எதாவது ஆச்சு பிச்சுப் போடுவேன். " எனக் கைலாஷ் மிரட்ட, " அப்ப நீங்களே போங்க" என்றான். " இரண்டு பேரும் வேண்டாம், நான் போறேன்" என ஆதிரா, சொல்லவும், 

" நீ போயி, அவுங்களை, எமோசனலா அழுக வச்ச, பிச்சுப் போடுவேன்" என ஆதர்ஷ், கைலாஷ் போலவே சொல்ல, " என்ன நடக்குது இங்கே" என ஐசியுவுக்குள் இருந்து வந்தான் அபிராம்.

" டேய் மாப்பிள்ளை, நீ எப்படா உள்ள போன, அத்தை நல்லா இருக்காளா' என ராஜன் தவிப்பாக வினவவும்.

" நல்லா இருக்காங்க. உங்க எல்லாரையும் விட, எனக்கு அவிக ப்ரெண்ட், அது தான் பார்க்கப் போனேனுங்க," என்றவன், " ஆனால் மாமா, நீங்க உங்க பாரு, பாருன்னு ஓவர் பில்டப் குடுத்துட்டீங்க. என் ஆரா பேபி மாதிரி கொஞ்சம் அழகா இருக்காங்க, ஆனால் நீங்க, பில்டப் விட்ட அளவு இல்லை" எனவும், "பிச்சு போடுவோம் பிச்சு" என மூவரும் கோரஸ் பாடி, பைரவியைப் பார்க்கச் சென்றனர்.

ஆதிரா, " ஆயி" என ஓடி கையைப் பிடிக்கமெல்ல கண் திறந்தவர், " ரஜ்ஜும்மா" என வாயசைக்க, " பயமுறுத்திட்டிங்க ஆயி, கெட் வெல் சூன்" என, அவர் கன்னத்தில் முத்தமிட, கண்களில் சந்தோஷம், அடுத்து ஆதர்ஷ், " பைரவி பாய், சீக்கிரம் வாங்க. ஜங், அபி பீ பாக்கி ஹை" என்றான். அவன் முகத்தைத் தடவ, அவர் கையை உயர்த்த அதைப் பற்றி, தன் கன்னத்தில் வைத்துக் கொண்டவனை ஆசை தீர பார்த்தவர், ஆக்சிஜன் மாஸ்க்கை கழட்ட முயல, " நோ, நோ" என பற்றினான். 

ராஜன் மக்களை உள்ளே விட்டு, தவிப்போடு பார்த்து நின்றார், பாருவின் கலையான முகம் சோர்வடைந்து இருந்தது.  முகம் தான் பார்தாத சின்னப் பெண் பாருவாக இல்லாமல், வயதுக்கு ஏற்ற முதிர்ச்சி தெரிந்தது. பிள்ளைகளை ஆர்வமாக பார்த்திருந்த மனைவியைப் பார்த்தவர், தான் உணர்ச்சி வயப்பட்டால், அவளும் உணர்ச்சி வயப்படுவாள், என, இதுவரை எதுவுமே நடக்காதது போல், மிகவும் சாதாரணமான முக பாவனையோடு, தன்னை கட்டுப்படுத்தி இருந்தவர் ஆக்சிஜன் மாஸ்கை கழட்ட போனதில் பதட்டமாகி, அவர் அருகில்  வந்தார். 

பாருவின் பார்வை, இப்போது கணவரை மொய்த்தது. கணவரையே கண் எடுக்காமல் பார்த்தவர், அவர் தன் முகத்தை பார்க்காமலே, பார்வையை சுற்றி அலையவிட்டு, தன்னை கட்டுப்படுத்துவதை உணர்ந்து, ஈசிஜிக்காக போடப்பட்டிருந்த க்ளிப்போடு, அவர் கைகளைத் தொடவும், அவர் தொடுகையில் மீண்டவர், தன்  மனைவியை நேராகப் பார்த்தார். எத்தனை முயன்றும் அந்த பார்வை,  ' இத்தனை வருஷம் மறைச்சிட்டியே' என்பது போல் பாருவை கூறு போடத் தான் செய்தது. 

பாரு கண்களால் இறைஞ்சவும், " இந்தப் பார்வை பார்த்துத் தான் நீ என்னை ஏமாத்துற" எனக் கோபித்தவர். " இந்த மாஸ்கை எதுக்கு எடுக்கிற" எனக் கடிந்தவர், அவரைத் தொட்ட கையை பற்றிக் கொண்டது. அந்த தொடுகையில், பைரவியின் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டு விழ, அவருக்கும் பொங்கியது. 

பெரும் மூச்செடுத்து, கண்களையும் பாருவிடமிருந்து அவர் பிரித்தெடுக்க முயற்சிக்க, " ராஜ், நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்குறேன்" என்ற பைரவியின் கண்களில், கண்ணீர் அருவியாக கொட்ட, அதற்கு போட்டி போட கைலாஷின்  கண்களும் கலங்க ஆரம்பித்தது. 

பெற்ளவர்கள், சந்திப்பை பார்த்த ஆதிரா  ஏற்கனவே உணர்ச்சி வேகத்தில் கண்ணைத் துடைத்துக் கொண்டு,  சத்தம் வெளியே வராமல்  அழுதபடி இருந்தாள். 

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ. கட்டுபாடுடைய சிப்பாயாக வளர்க்கப் பட்டவனே, பால் புட்டியாக கலங்கியிருக்க, வேறு யாரை என்ன சொல்வது. 

ஆனாலும், பைரவியின்  ஒரு ஏக்கப்  பெருமூச்சில் மற்ற மூவருமே சுதாரித்தனர். " ஆயி நோ" என பிள்ளைகளும், 

" இந்த அழுவாச்சி வேலை எல்லாம், வச்சிக்கிட்டையினா, பிச்சு போடுவேன் பார்த்துக்க. தண்டனை கேட்டியில்ல, கட்டாயம் தருவேன். அதைய அனுபவிக்கிறதுக்காகவாவது, உடம்பை தேத்திக்கிட்டு வா .அது தான் நீ எனக்கு செய்யற பிராயசித்தம். " என்றவர் 

"ஆமாம்,  எனக்கு எத்தனை புள்ளைங்க பிறந்திச்சு. அதைய கூட எண்ணிக்கை கணக்கு வைக்கலையா  நீ. ஆளாளுக்கு எம்பட வாரிசுன்னு வருதுங்க. " என அவர் கேள்வி எழுப்பவும், நிஜமாகவே பைரவி முழித்தார். 

" ரஜ்ஜும்மா, உங்க ஆயி முழிக்கிறதை பார்த்தா, இன்னும் இரண்டு மூணு இருக்குமாட்டதுக்கு" என அவர் ஜோக்கடிக்கவும், ஆதிரா சிரித்தாள். ஆயி மேல் எவ்வளவு கோபமிருந்த போதும், நேரில் பார்த்தவுடன், அதை காட்டாத பாபா மீது, ரஜ்ஜும்மாவுக்கு பாசம் பொங்கியது. 

"பாஸ், நிஜமாவே அவுங்களுக்குத் தெரியாது. அதுனால தான் முழிக்கிறாங்க. நானிமாவை தான் கேட்கனும்" என்ற ஆதர்ஷ்.  "அப்படியே இல்லைனாலும்  இன்னும் இரண்டு பேரை, தத்தெடுத்துக்குவோம். இரண்டு பக்கமும் சொத்து நிறையா இருக்கே. " என்றான். 

" தத்து எல்லாம் வேண்டாம். நான் இன்னும் எலிஜிபில் தான் " என ராஜன் கமெண்ட் அடிக்கவும், முகம் சிவந்த, பைரவி சிரித்த வண்ணம் மெல்லக் கண்களைச் சொருகினார்.

மூவரும் பதறவும், அங்கிருந்த செவிலியர், " நோ, ப்ராப்ளம் சார். ஊசி போட்டிருக்கு, நிம்மதியா தூஙாகுவாங்க. இப்போ தான் ஸ்டேபிளா இருக்காங்க. இனி ஆபத்து இல்லை " என மானிடரிலிருந்த எண்களைக் காட்டி, விளக்கி, அவர்களை வெளியே காத்திருக்கச் சொன்னார். .

மனைவிக்காக, தன் கோபத்தை மறந்து , அவரோடு பேசி விட்டு வந்த பின்னும், கைலாஷ்க்கு மனம் தெளியவே இல்லை. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, தன்னை வந்து பார்க்காததற்கு என்ன காரணம் என அவர் உள்மனம் குடைந்துக் கொண்டே இருந்தது. பாரு உடல் நலம் தேறி வரட்டும் என்றும், தனது மாமியார் வரவுக்காகவும் காத்திருந்தார்.

ஆனால் , கைலாஷை சந்திக்க, அடுத்த நாள் அப்பாயிண்மெண்ட் வாங்கியிருந்த மஹந்த் ராய் போஸ்லே, பைரவி பாய் உடல்நிலையை அறிந்து, புவாஜி(அத்தையம்மா) யை பார்க்க, அத்தை கணவரை விசாரிக்க மருத்துவமனைக்கு நேரடியாகவே வந்து சேர்ந்தான். 

கைலாஷ் ராஜனின் மொத்த குடும்பமே அங்கிருக்க, அத்தை மகளை அடையாளம் கண்டு, ஒரு திட்டத்தோடு சென்றான்

Friday, 25 February 2022

யார் இந்த நிலவு-27

யார் இந்த நிலவு-27 

குன்னூர் வசந்த மாளிகையில், மாலை நேரத்தில்,வழக்கம் போல் சாமி அறையில் ,விளக்கேற்றி,துதி பாடி ஆராத்தி காட்டிய போதும், பவானியின் மனதில் ஒரு சலனம், எதோ நடக்கப்போவது போல் உள்மனம் அடித்துக்கொண்டே இருந்தது, சௌந்தரி ,பாலநாயகம் இருவரும் அவர்கள் மகன் வீட்டுக்கு சென்ற பிறகு, மற்ற பெரியவர்களும் கொஞ்சம் தனிமையாகவே உணர்ந்தனர்,

“இந்தப் பாலா, ஒட்டுக்க மகனூட்டுலையே செட்டிலாயிட்டானாட்டத்துக்கு, நம்ம கிட்ட ஒப்புக்கு வரேன்னு சொல்றான்” என ராமு நண்பர்களிடம் குறை பேசிக்கொண்டிருக்க,

“நீ, தங்கச்சியை ,விட்டுப்போட்டு இருந்திடுவ,பாலாவை விட்டுப்போட்டு இருக்கத் தான் மனசு கேக்கலையாக்கும்” எனச் சுப்பிரமணி கோர்த்து விட,

:இது சொன்னிங்களே,இது நூத்துக்கு நூறு சரிங்க அண்ணா, இவருக்குப் பாலாண்ணா இருந்தார்னா போதுங்க,நான் கூடத் தேவையிலிங்க” என அபரஞ்சி கணவனை முறைத்தார்.

“போதுமா,இப்ப உனக்குச் சந்தோசமா, அவகிட்ட கோர்த்து விட்டச்சுல்ல,இனி ஊருக்கு போகந்தட்டியும்,இதையே சொல்லி உசிரே வாங்கிடும்” என ராமு மனைவியைக் குறை சொல்ல, பன்னீர், “ அது உசிர காப்பாத்திர புண்ணியவதிடா. பொண்டாட்டி இருக்க வரைக்கும் தான் புருசனுக்கு மதிப்பு தெரிஞ்சுக்க” என்ற படி வந்து உட்கார்ந்தார்.

“அப்படிக்கா ,திரும்பி உங்க மச்சினனுக்கும் சொல்லுங்க.சும்மா நேத்த புடிச்சு, என்னைப் பேசிக்கிட்டே இருக்காருங்க ” எனச் சாரதா முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு வந்து சுப்பிரமணி மேல் குற்றம் வாசித்தார்.

“நீ எதுக்குடா,தங்கச்சியைப் பேசின” எனப் பன்னீர், சுப்புவை வினவ, அவர் மனைவியை முறைத்தார்.ஏனெனில் கஸ்தூரி,விஜயன் திருமணநாளுக்குக் கோவைச்செல்வது பற்றித் தான் பிரச்சனையே, சாரதா,தாங்களும் போகலாமென்று சொல்ல, ஏற்கனவே ராமு போறான்,நாமளும் போனா,பன்னீர் தனியாக இருப்பான் எனக் காரணம் சொல்லிக் கொண்டிருந்தார். அதைச் சாரதா சபை ஏற்றுவதாக வழக்கம் போல் பவானி தான் சமாளித்தார்.

“மாமா,ஏற்கனவே, விஜயன் பாய்ஸாப்பும், கஸ்தூரி பாபியும் ,அவங்க வெட்டிங் ஆனிவேர்சரிக்கு இன்வைட் பண்ணிட்டாங்க. நாம எல்லாருமே போறோம், இந்த முறை நானும் வர்றேன், பன்னீர் அப்பாவும் வரேன்னு சொல்லிட்டாங்க, நீங்க அத்தையை , எதுவும் சொல்லாதீங்க” என்றபடி, ஆராத்தி தட்டை ஒவ்வொருவருக்கும் நீட்டினார், வழக்கம் போல்,அபரஞ்சியும், சாரதாவும் பவானியின் நெற்றியில் குங்குமத்தை வைத்து விட்டவரக்ள், “சீக்கிரமே புருசனோட சேர்ந்து தீர்க்க சுமங்கலியா வாழோணும்” என வாழ்த்தினர். விஜயன் திருமண நாளை பற்றியே பேச்சு ஓடிக் கொண்டிருக்க, பவானியின் போன்இசைத்து, அழைத்தது.

புன்னகையோடு அதை எடுத்தவர், “விஜயன் பாயிஸாப் தான் கூப்பிடுறாங்க, பேசிட்டு வரேன்” என ஆராத்தி தட்டையும் எடுத்துக் கொண்டு , பூஜை அறைக்குச் சென்றார்.

வெகு நேரம் ஆகியும், பவானி வரவில்லையே, என யோசித்த சாரதா , பூஜையறையில் சென்று பார்க்க, அவரது போன் தரையில் காணொளிக் காட்சியைக் காட்டிக் கொண்டிருக்க, பவானி தரையில் அம்பாள் விக்ரகம் முன் விழுந்து ,

, " ஹே, ஆயி பவானி, என் குடும்பத்தை, இந்த இழப்பும் இல்லாமல் ஒண்ணு சேர்த்து வை. என் உயிரைக் கூடப் பலிதான் கொடுக்குறேன்" எனக் கைகளைக் கூப்பி அவர் மன்றாடிக் கொண்டிருந்தார்.

“பவானி” எனப் பதறியபடி வந்த சாரதா, “என்னமா, ஏன் கண்ணு அழுவுற ” என்றவர், பக்கத்திலிருந்த அலைபேசியில் ராஜன் வீட்டைக் காணவும் ,

“ஏனுங்க, இங்க வாங்க, அண்ணா, அண்ணி,மாமா “எனக் குரல் கொடுக்க, ஹாலில் இருந்தவர்களில் ராமு தான் முதலில் ஓடி வந்தார்.

பவானி இடது கையை அழுத்திக் கொண்டவர், “ ஒண்ணுமில்லை பா, ராஜ்,ராஜ்” என்றவர், அதற்கு மேல் எதுவும் சொல்லமாட்டாமல் அலைப்பேசியைக் காட்ட, அதில் அப்பாவும் மகளுமாக அழுது கொண்டிருந்தார்கள்.

“ஆமாம், ராஜா தான், ராஜாவுக்கு என்னமா “ என்றார் ராமு, அதற்குள் பவானிக்கு முகமெல்லாம் வேர்த்தது, வலிக்குதுப்பா, என்றபடி பூஜை அறையிலேயே மயங்கிச் சரிய, “பவானி, பவானி” எனப் பெரியவர்கள் அரற்றினர்.

“ராமு, தூக்குடா” எனப் பன்னீரும் ராமுவுமாக, ஹாலில் கிடந்த சோபாவுக்கு அவரைத் தூக்கி வர, சுப்பு, சுதாரித்தவர், ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வரும் போது, செய்ய வேண்டியவை என அறிந்து வைத்திருந்த அவசர சிகிச்சையைச் செய்தனர். அபரஞ்சி, டாக்டருக்கு போன் அடித்தார். வீட்டு வேலையாட்கள், பறந்து திரிந்தனர்,

சற்றே உணர்வு திரும்பிய பவானி, தான் எங்கே கணவரிடம் பேசாமலே சென்று விடுவோமோ எனப் பயந்து, போனை தேட, சமையல்காரம்மா கொண்டு வந்து கொடுத்தார், அவசரமாகப் போனை வாங்கியவர், அபரஞ்சி, சாரதா பேசாத இறுமா, எனத் தடுத்த போதும், கேட்காமல் ராஜுக்கு அழைத்தார்,

ராமசாமி வாசலில் சென்று நின்று விஜயனுக்கு அழைத்து விட்டு, அவர் எடுக்கவில்லை எனவும், பேரனுக்கு அழைத்தார், " தாத்தா, மாமா வீட்ல இருக்கோமுங்க" என அவன் விவரம் சொல்ல ஆரம்பிக்க, " அப்பா பக்கத்தில இருந்தான்னா குடு கண்ணு " எனப் பதட்டமாகப் பேசியவர், விஜயனிடம் , "

பவானிக்கு ஹார்ட் அட்டாக், வேர்த்து, வேர்த்து ஊத்துது . எனக்குக் கையும் ஓடலை. காலும் ஓடலை " எனப் பதறியபடிச் சொல்ல

" என்னப்பா சொல்றீங்க. " என்றவர் லைன்லையே இருங்கப்பா, என்றபடி தனது போனை கட் பண்ணி விட்டு, குன்னாரிலிருக்கும் பேமலி டாக்டருக்கு போன் செய்து, " சார் எமர்ஜென்சி, வசந்த விலாஷ் போங்க." எனவும், "ஒன தி வே" என்றார்." நான் மத்ததுக்கு ஏற்பாடு பண்றேன்" என விஜயன் பதட்டமாக, ராஜன் பைரவியிடம் பேச ஆரம்பித்து இருந்தார்.

அதற்குள் , ராஜுக்கு ஆதிராவின் ஆயியிடமிருந்து போன் வந்தது, ராஜன், மிகுந்த கோபத்துடன், “ஹலோ “ என ஆரம்பிக்க, மறுமுனையில், தீனமான குரலில், “ என்னை மன்னிச்சிடுங்க ராஜ், நான் உங்க வாழ்க்கையில் வந்திருக்கவே கூடாது, ரஜ்ஜுமா உங்க பொறுப்பு, ஆதர்ஷ்” என்றவருக்கு அதற்குமேல் பேச இயலாமல் மூச்சு வாங்க, “ நம்ம, பிள்ளைகளைப் பார்த்துக்குங்க” என மயக்கமடைய, “பவானி “ எனச் சாரதாவும், அபரஞ்சியும் கத்த, டாக்டர் . உள்ளே நுழைந்தார்.

கைலாஷ், போனில் ‘பாரு, பாரு “ என அழைக்க, பன்னீர் அதை எடுத்துப் பேசியவர், “என் மகள் மயங்கிடுச்சுப்பா, கடவுளுக்குக் கண் இருந்தா இந்த மகளையாவது , காப்பாற்றிக் கொடுக்கட்டும்” எனப் பன்னீர் குரலில், ராஜன் குழம்பியபடி, “பன்னீர் மாமாவா பேசுறீங்க, பாரு, பாரு அங்க எப்படி” எனக் குழம்ப, நாயகம் போனை வாங்கிப் பேசினார

சௌந்தரி யாருக்கு என்னவெனப் பதற, " தங்கச்சிமா, மயங்கிக் கிடக்குதாம். நான் ஒரு கிறுக்கன்" எனத் தலையில் அடித்துக் கொண்டு, விஜயன் அழவும், ராஜன் நண்பனைச் சந்தேகமாகப் பார்க்க, சௌந்தரிக்குச் சாரதா அழைத்து விட்டார். " அக்கா, பவானி போன்ல பேசிட்டே இருந்தது. மயங்கிக் கிடக்குதுக்கா" என அழுதார்.

ராஜன், விஜயனைக் கொத்தாகப் பிடித்து, " டேய் விஜயா,இப்ப பேசினது பாரு, பன்னீர் மாமா எப்படி அதே போன்ல பேசுறார், அவர் மகள்னு சொல்றது யாரைச் சொல்றாரு. என் மேல சத்தியமா சொல்றா" எனக் கண்ணீரோடு கேட்க,

ஆதிரா ஒரு பக்கம், கௌரியைக் கட்டிக் கொண்டு " ஆயி" என அழுதாள். அவளைத் தாங்கியவர், டயனிங்கிற்கு அழைத்துச் சென்று

" ஆயிக்கு, ஒண்ணும் ஆகாதுடா. ஆயி, ஸ்ட்ராங் லேடில்ல" என ஆறுதல் சொல்ல, “நான் அன் லக்கி கேர்ள், பாபா கிடைச்சிட்டாங்கன்னு பார்த்தா, ஆயியை தொலைச்சுடுவேன் போல “ என அழுதவளிடம் வந்த ஆதர்ஷ்,

அவள் கண்ணைப் பார்த்து, “பைரவி பாய் போஸ்லே,பிறவியிலேயே போராட்ட குணத்தைக் கொண்டவங்க நம்ம ஆயி, மரணம் அவ்வளவு, சுலபமா அவங்களை நெருங்காது, ஆயி கும்பிடுற மாதிரி, ஆயி பவானிகிட்ட , இதைக் கடந்து வர்றதுக்கு அவங்களுக்கு சக்தியைக்கொடுக்கச் சொல்லி பிரார்த்தனை பண்ணு , நமக்கு நம்ம ஆயியை, மற்ற எல்லாரையும் விடப் பத்து மாசம் அதிகமா, அவங்க வயித்துக்குள்ளையே இருந்து உணர்ந்தவங்க, அவுகளுக்கு ஒன்னும் ஆகாது” என அவளைத் தனியே அழைத்துச் சென்று மற்றவருக்குப் புரியாமல் மராத்தியில் சொல்ல, அவனை அதிசயமாகப் பார்க்க, ஆம் எனத் தலையாட்டியவனின் தோளில் “பாவு” எனச் சாய்ந்து கொண்டாள் . இனி தான் தனி இல்லை என ஒரு தைரியம் தோன்றியது.

அவளையும் அழைத்துக் கொண்டு, ராஜனிடம் வந்தான் ஆதர்ஷ், அபிராம், ஆதிராவின் உள்ளங்கையில் அழுத்தி, தைரியம் தந்தான்.

நாயகமும்,சௌந்தரியும் கண்ணீர் விட்டபடி, “ டாக்டர் வந்துட்டாராம், பவானியை பார்த்துட்டு இருக்காங்க” என விஷயம் சொல்ல,

விஜயன் மீதே ராஜனின் பார்வையும் இருந்தது. " கைலாஷோட பாரு, ஆதிராவோட ஆயி, ஆதர்ஷ் சொன்ன பைரவி, நான் தங்கச்சிமான்னு சொல்றது, மாமா மருமகளேன்னு கூப்பிடுறது, எல்லாமே ஒரே ஆள் தான். குன்னூர் வசந்த விலாஷ் கேர் டேக்கர், பவானி . பைரவி பாய், கைலாஷ் ராஜ் போஸ்லே" என்றார் கண்ணீரோடு.

“ நாங்க மருமகளேன்னு கூப்பிட்டது,நிஜமாவே எங்க மருமகளைத் தானா “ என நாயகமும், “இந்தப் பொண்ணு ஒரு வார்த்தை என்கிட்டே உண்மையைச் சொல்லையே “ என மகனை ஒரு புறம் கட்டிக் கொண்டும் மறு புறம் பேத்தியையும் கட்டிக் கொண்டு அழுதார் சௌந்தரி.

ஆதர்ஷ் கொடுத்த தைரியத்தில்,”ஆயிக்கு ஒன்னும் ஆகாது ஆத்தா “ என்பதையே உரு போட்டாள் ஆதிரா.

ராஜனுக்கு , இன்றைய நாளின் அதிர்ச்சி தாங்காமல் , “ ஆசை காட்டி மோசம் பண்றதே ,இந்தக் கடவுளுக்கு வேலை “ தடுமாறவும் அவரைத் தாங்கிய ஆதர்ஷ், " பாஸ் சியர் அப். பயப்படாதீங்க. அவங்களுக்கு ஒண்ணும் ஆகாது." என அவரைத் தேற்றினான். “நீ யாருடா , ஒரே நேரத்தில் சந்தோஷத்தையும், துக்கத்தையும் சேர்த்து கொடுத்துருகியே” என அவர் கண்ணீர் விடவும்,

" பாஸ், முதல்ல உங்க பாருவை பாருங்க. மற்றெதெல்லாம் அப்புறம் தான்" என்றவன், அபிராம்,விஜயனோடு சேர்ந்து, ஏற்பாடுகளைக் கவனிக்க, ஆதர்ஷின் விரலசைவில் வேலைகள் நடந்தது.

குன்னூரில், பவானியைப் பரிசோதித்த மருத்துவர், " மைல்ட் அட்டாக் தான். செடேஷன் குடுக்குறேன். கோவைக்குக் கூட்டிட்டுப் போகலாம்" என்று சொல்ல, சற்றே ஆசுவாசம் அடைந்தனர். கௌரியும், ஆதிராவும் பூஜை அறையில் சென்று மனமுருகி வேண்டி நிற்க,”அந்த மருத மலைமுருகனை வேண்டிக்குவோம் கண்ணு, கண் கண்ட தெய்வம், உங்க அம்மா நல்லபடியா வந்துருவாக”எனத் தேற்றினார் கஸ்தூரி.

ஆதர்ஷ் ஸ்பெஷல் பர்மிஷன் பேரில், தனது ஹெலிகாப்டரில் குன்னூர் பறந்தான். கைலாஷ் தானும் வருவதாகச் சொல்ல, " இரண்டு பேருமே, இவ்வளவு எமோஷனலா பார்த்துக்கிறது நல்லது இல்லை. இங்கே ஹாஸ்பிடல்ல ரெடியா இருங்க. இரண்டு மணி நேரத்தில் உங்க பாரு, உங்க முன்னாடி இருப்பாங்க" என்றவன், அபிராமை அழைத்துக் கொண்டு மலைகள் ஊடான பாதையில், தனது தேர்ந்த பைலட்டின் திறமையை நம்பி,உயிர் தந்தவளின் உயிர் காக்கப் பறந்தான்.

பவானி தூக்க மருந்து கொடுத்திருந்ததால் மயக்கத்திலிருந்தார். ஆதர்ஷ் என்ன தான் கலகலப்பாகப் பேசி, எல்லாருக்கும் நம்பிக்கை தந்த போதும், பைரவியைப் பார்த்தவுடன் சத்தமில்லாமல் அழுதான். " உங்களை முதல் தடவையே இப்படித் தான் பார்க்கனுமா ஆயி , என்னைப் பார்த்ததில் தான் அதிர்ச்சியானீங்களா, நான் தான் உங்களுக்கு எமனாகிட்டனா "என மனதில் அழுது புலம்பியவன், அவர் கைகளைத் தொட,அதனை இறுக பற்றிக் கொண்டார் பைரவி.

அபிராம் , ஆதர்ஷ் இருவருமாகக் குன்னூரிலிருந்த பெரியவர்களையும் அழைத்துக் கொண்டு, கோவை வந்து சேர்ந்தனர்.

கைலாஷ், கோவையில் மனைவியின் சிகிச்சைக்காக, அந்த உயர் தரமருத்துவ மனையில் ,மருத்துவர்களிடம் பேசி தயாராகவே இருந்தார். கோவையின் முக்கியத் தொழிலதிபரான அவர் சொல்லி யார் மறுப்பார்கள். அதற்குள் குன்னூர் மருத்துவர் பைரவியின் நிலை குறித்துப் பேசியிருந்தார்.

ராஜன் முதலில் அதிர்ச்சியிலிருந்தவர் பின் அழுது அரற்றியவர், நேரம் செல்லச் செல்ல தனக்குள் இறுகி இருந்தார். யாருக்கும் அவர் அருகில் செல்ல கூடத் தைரியம் வர வில்லை, 

விமான நிலையத்துக்கு வந்து,அங்கிருந்து ஆம்புலன்ஸில் கொண்டு வந்து பைரவியை ஐசியூவில் சேர்க்கும் முன் ஆதிரா, கௌரி,சௌந்தரி,நாயகம், விஜயன் குடும்பம் என எல்லாருமே பார்க்க, விஜயன் அழைத்த போதும்,ராஜன் பிடிவாதமாகப் பைரவியைப் பார்க்க மறுத்து விட்டார். 

ஒரு பொறுப்புள்ள கணவனாக , பைரவிக்காக, மருத்துவர்களிடம் பேசுவது, லீகல் பேப்பர்களில் கையெழுத்து போடுவது, அவர்களது பாதுகாப்பு, வசதி என அத்தனையும் பார்த்தவர், ,"நல்லபடியா வந்தாள்னா பார்த்துக்கறேன்,இல்லைனா, பழைய பாருவே என் மனசில இருக்கட்டும்." என மனைவியை நேரில் பார்க்க மட்டும் மறுத்தார் கைலாஷ் ராஜன்.

பாரு பிழைப்பாரா, கைலாஷ் நிலை என்ன.பொறுத்திருந்து பார்ப்போம்.

நிலவு வளரும்.

Thursday, 24 February 2022

யார் இந்த நிலவு-26

 யார் இந்த நிலவு-26

கே ஆர் கோட்டையை முற்றுகையிட்டு, மந்திர வார்த்தையாய், ஒரு சொல்லைப் பயன்படுத்தி, கைலாஷ் ராஜனின் மனக்கதவையும் திறந்து அதிரடியாய் , கொங்கு நாட்டுக்குள் உள்ளே நுழைந்தான், கொங்கணி மண்ணில் பிறந்த பிறந்த போஸ்லே குடும்பப் பெயரைத் தாங்கி நிற்கும் ஆதர்ஷ் ராஜ்.

ஆம் , கே ஆர் கோட்டையின் வாசலில், இவரின் உதவியாளர் சம்பத் , சற்று பவ்யமாகவே சென்று, ஐம்பது கார்களின் அணிவகுப்பில் நடுநாயகமாக இருந்த விலையுயர்ந்த வெளிநாட்டுக் காரில் , காதில் ப்ளு டூத் இயர் போன் மாட்டியபடி, இதழில் தவழும் இளமுறுவளோடு , இவ்வளவு பெரிய அமளியை ஏற்படுத்தியிருக்கிறோமே என்ற பதட்டம் சிறிதுமின்றி, ரிலாஸ்டாக இளம் ராஜகுமாரனை போல் அமர்ந்திருந்தான் ஆதர்ஷ் ராஜ்.

எந்தக் கணமும், கே ஆர் அழைப்பார் என எதிர் பார்த்திருக்க, அவர் அவனுக்குத் தகப்பன் சாமி கைலாஷ் எனக் காட்டி, அவரும், " வெயிட் பண்ணட்டும், நாமளும் யாருன்னு காட்டுவோம்" என வைத்து விடநடுவிலிருந்தவர்களுக்குத் தான் பதட்டம்.

ஆதர்ஷின் காரியதரிசியிடம், தன் முதலாளி சொன்ன தகவலைக் கடத்தினார். ' இரண்டு பேரும் ஒருத்தருக்கு, ஒருத்தர் சளைச்சவிக இல்லை போல" என அந்த இளைஞனும் புலம்பி விட்டுச் செல்ல, மில் தொழிலாளர்கள், அடுத்த ஷிப்டுக்கு, வருவோர் , போவர் என அது ஒரு கூட்டம் சேர்ந்தது.

ஆதர்ஷின் அஸிடென்ட் விசயத்தைச் சொல்லவும்" ஓகே, என்ன இருந்தாலும் பெரியவர், கைலாஷ் ராஜ், நெற்றிக் கண்ணைத் திறக்கும் முன்ன, நானே கூப்பிடுறேன்." என்றவன், அவருடைய பர்சனல் நம்பருக்கு அழைத்து விட்டான்.

சற்று நேரம் அடித்த பின், போனை எடுத்தவர், " ஒரு பிஸ்னஸ் மேனுக்கு, அப்பாயிண்மென்ட் இல்லாமல், இப்படி வர்றது அழகில்லை மிஸ்டர் போஸ்லே. பிஸ்னஸ் எதிக்ஸ்க்கு எதிரானது. இது ஒண்ணு உங்களுக்கு எதிரான இம்பிரஷனை உருவாக்கும் " என்றார் கறாராக.

" நமஸ்கார் பாஸ், நான் பிஸ்னஸ் மேன் கே ஆரையே பார்க்கவே வரலையே . நோ பிஸ்னஸ் டாக்ஸ். உங்க ஸாஸுமா, ரமாபாய் போஸ்லேக்கிட்ட இருந்து செய்தி கொண்டு வந்திருக்கேன். என்னைச் சந்திக்கிறதுல உங்களுக்கு நிறைய லாபம் இருக்கு. இது நாள் வரை உண்மை நினைச்சது, பொய் ஆகலாம். தி கிரேட் கே ஆர்கிட்ட சொல்லப் பயந்துகிட்டு மறைச்சு வச்சிருக்க உண்மையை உடைச்சு சொல்ற ஒரே தைரியசாலி ஆதர்ஷ் ராஜ் ஆக இருக்கலாம். உங்க பாருவுக்கு என்ன ஆச்சுன்னு கூடத் தெரிஞ்சுக்க நீங்க விரும்பலையா" என்ற கடைசி அஸ்திரத்தில் கே ஆர் தாக்கப் பட்டார். அவர் அதிர்ந்து பேச்சிழந்து நின்ற நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஆதர்ஷ், " தமிழர்கள், விருந்தோம்பலில் சிறந்தவங்கன்னு சொன்னாங்க. உங்க குடும்பத்து வாரிசையே வெளியே நிறுத்தி வச்சிருக்கீங்களே" என அவன் அடுத்த அம்பையும் விடவும், அது சரியான இலக்கை அடைந்து, " சரி வாங்க . " என மட்டும் அழைப்பு விடுத்தவர், சம்பத்துக்கும் கட்டளையைப் பிறப்பித்து இருந்தார்.

சம்பத் ஆதர்ஷை பேட்டிக் கண்டு, " சார், எல்லாக் காரும் உள்ள போகனுமா. எங்க செக்யூரிட்டி அமைப்பையும் நீங்க மதிக்கனும்" எனவும். ஆதர்ஷ், தன் உதவியாளரைப் பார்க்க,

" சார் காரைத் தவிர, இன்னும் இரண்டு கார் இங்க இருக்கும், மற்றது, உள்ளே ட்ராப் பண்ணிட்டு, வெளியே வந்துரும். நீங்கள் செக் பண்ணிக்கலாம்" எனப் பேச, பத்து காரை மட்டும் அனுப்புவதாக, சம்பத் பேரம் பேசினார். மனதிற்குள், என்ட்ரியே, இப்படியா, என அதிர்ந்தார். அவர்கள் அனுமதித்தபடியே ஆதர்ஷ் உள்ளே வர ஒப்புக் கொண்டான்.

கே ஆர் மாளிகையில், அரை வட்டமாகப் போடப்பட்டிருந்த ஷோபாவில், கே ஆர் நடுநாயகமாக அமர்ந்திருக்க, ஒரு புறம் தாத்தா, ஆத்தா ஜோடியாகவும், மறுபுறம், விஜயன், அபிராம், அப்பா, மகன் ஜோடியும் அமர்ந்திருந்தனர். ஆதிரா, ரஞ்சனியை மாடிக்கு அனுப்பி விட்டனர். கௌரி ஓர் மென்னகையோடே, ப்ருந்தாவனக் கண்ணனைக் கண்டு ரசிக்கும் யசோதையாக நின்றிருக்க, இது யாரு புதுசா என்பது போல் கஸ்தூரி பயந்திருந்தார்.

சத்தியன் தான் ஓட்டும் கே ஆரின் வாகனத்தை, செட்டில் நிறுத்தி விட்டு, வாசலில் தயாராக நின்றான்.

இந்தக் கேப்பில் விஜயனின் பைரவிக்கு அழைத்து விவரத்தைச் சொல்ல, " பாய்சாப், ஒரு ஹெல்ப், நான் அந்த முல்காவை பார்த்ததே இல்லை. வீடியோ கால் போடுறீங்களா. " எனவும் சரி என ஒத்துக் கொண்டவர், தன் மொபைல் வழியாக, பைரவிக்கு லைவ் ரிலே காட்டிக் கொண்டிருந்தார். பைரவி யாரவன் எனும் கேள்வியோடு உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

கே ஆர் மாளிகை வாசலில் வரிசையாக முதலில் மூன்று வாகனங்கள், கடந்து போக, நான்காவது வாகனமும், அதைத் தொடர்ந்த இரண்டு வாகனங்களும் கேஆர் வீட்டு வாசலில் நின்றது, அதைப் பின் தொடர்ந்து, ஒரு வண்டி மட்டும் நிற்க, மற்றவை சொன்னது போலவே வெளியே கிளம்பி விட்டன.

கருப்புச் சீருடை ஆட்கள், முன், பின் வாகனங்களிலிருந்து, இறங்கிப் பாதுகாப்பை உறுதி செய்ய, நடுவிலிருந்து காரிலிருந்து ஆதர்ஷ் இறங்கினான். கறுயானை வண்ணத்தில் கோர்ட், சூட், உள்ளே வெள்ளைச் சட்டை, கூலர்ஸ் சகிதமாய், ஆறடி உயரமும், எக்ஸர்ஸைஸ் பாடியும் இருந்த போதும், முகம் இளங்குருத்தாகத் தான் இருந்தது. அதுவும் இன்று அவன் முகத்தில் குடி கொண்டிருந்த கனிவு, அவன் அழகையும் கம்பீரத்தையும், இன்னும் அதிகப்படியாகக் காட்டியது.

மாடி பால்கனியிலிருந்து, பார்த்த ரஞ்சனி, " அண்ணி, இங்க வந்து பாருங்க, என் ஷாகித் பேபி மாதிரியே செம டக்கரா இருக்கானுங்க" எனக் குதிக்க, " சும்மா இரு, ரஞ்சி, மை தோ, டரி ஹுயி ஹூம்" என ஆதிரா அவனை மிரட்சியாகவே பார்த்துக் கொண்டிருந்தாள்.

காரிலிருந்து இறங்கியவன், பேச்சுக் குரல் கேட்டு மேலே பார்த்தவன், நொடி நேரத்தில் ஓர் வசீகரச் சிரிப்பையும் உதிர்த்து விட்டு, வீட்டை நோக்கி நடக்க, இருவர் மட்டுமே அவனோடு உள்ளே வந்தனர். அவன் பார்வையில் ரஞ்சி," ஹாய், ஹாய்" என நெஞ்சில் கை வைக்க, ஆதிரா சட்டெனத் தன் முகத்தை, அவனுக்குக் காட்டாமல் மறைத்தாள்.

சத்தியன், கையை நீட்ட, " பேமலியை மீட் பண்ணும் போது, ஸ்மைஸ் மட்டும் தான் ஆயுதம் " எனச் சத்தியனையும் ஓர் புன்னகையில் ஆஃப் செய்து விட்டு , வீட்டுக்குள் நுழையும் முன், நிலைப்படியைத் தொட்டு வணங்கி முன்னேறியவன், கே ஆரை விடுத்து, தாத்தா, ஆத்தா காலில் விழுந்து வணங்கி, " என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க, தாத்தா, ஆத்தா" எனப் பாசமாக அழகு தமிழில் அவன் குரல் கேட்கவுமே , ' யாரோ, எவனோ, என்ன மொழி பேசுவானோ, என யோசித்துக் கொண்டிருந்தவர்கள், " நல்லா மகராசனா இரு கண்ணு" என நாயகம், சௌந்தரி அவன் தலையில் கை வைத்து ஆசிர் வாதம் செய்தனர்.

அப்படியே ஷோபாவின் கீழ் ஒரு கால் மடக்கி மண்டியிட்டு குனிந்தவன், தாத்தா, ஆத்தாவை இரு கைகளாலும் அணைத்துக் கொண்டு, " பெரியவங்க ஆசீர்வாதம் , அதை விட என்ன வேணும்" என்றவன், எழுந்து, உதவியாளரிடமிருந்து அலங்கரிக்கப்பட்ட பழக்கூடையை, வாங்கி அவர்களிடம் கொடுத்தவன் , " என் நானிமா, பெரியவங்களையும்,குழந்தைகளையும் பார்க்கப் போகும் போது, வெறுங் கையோடு போகக் கூடாதுன்னு சொல்லுவாங்க. " எனப் புன்னகையோடு நீட்டியவன், அவர்கள் கை வைக்கவுமே, பின்னால் நின்ற கௌரி மாஸியிடம் அதை வாங்கப் பணித்தான். 'ரொம்ப ஓவரா பண்றானே ' என மனதில் பொருமினான் அபிராம்.

அதன் பிறகே கே ஆரிடம் வந்தவன், மற்றொரு ரிப்பன் சுத்தப்பட்ட பரிசை, " பாஸ், இது உங்களுக்கு, உங்கள் ஸாஸும்மா, ஐ மீன் மாமியார், ரமாபாய் கணபத்ராய் போஸ்லே, தன் தாமாஜ்ஜிக்குக் கொடுக்கச் சொன்ன அன்பளிப்பு." என அவரிடம் நீட்டவும், கைலாஷை பெற்றவர்கள் இருவரும் அதிர்ந்து பார்த்தனர்.

கைலாஷ், ஆதர்ஷை பார்த்த கணம் முதல் நெகிழ்ந்து இருந்தவர், ஆதர்ஷ் சொன்ன, மாமியார் என்ற வார்த்தையில் உணர்ச்சி வயப்பட்டவராக, " அவங்க மகளே இல்லைனாலும், என்னை அவங்க மருமகனா நினைக்கிறாங்களே. என் நன்றியும், வணக்கத்தையும் சொல்லிடுங்க" என்றவர், அதை வாங்கிக் கொண்டு தன் அருகில் அமரச் சொல்லி, விஜயனையும், அபிராமையும் அறிமுகப் படுத்தவும்,

" உங்களைப் பற்றியும் நானிமா நிறையச் சொல்லியிருக்காங்க மாமாஜி . நீங்க பைரவி பாய்க்கு படே பய்யாவா இருந்து, நிறைய உதவி செய்திங்கன்னு. நானிமா சார்பா, உங்களுக்கும் சுக்ரியா " என நெஞ்சில் கைவைத்து , தலை வணங்கியவன். " ப்ரோவை தான், பெங்களூர்லையே பார்த்துட்டேனே. நைஸ் டூ மீட் யூ அகைன்" என்றான்.

கஸ்தூரி முதலில் பயந்தவர், பால்வடியும் முகத்தோடு, மகனை விடவும் வயதில் இளையவனாக வந்தவன், தன் கணவரை மாமாஜி என்று அழைத்திலேயே, வீட்டுக்கு வந்த பிள்ளை எனத் தண்ணீர் கொடுத்து உபசரித்தவர், பழங்கள், சில மராட்டிய பதார்த்தங்களையும் கௌரி எடுத்துத் தர, நன்றி நவின்ற படி, ஒரு ஸ்வீட்டை மட்டும் எடுத்துக் கொண்டான்.

ஆதர்ஷ் கடந்தகால நிகழ்வுகளை, ஒவ்வொன்றாகக் கொளுத்திப் போட்டான்.

" நீங்க பைரவிபாயை, எவ்வளவு ஆபத்துகளுக்கு இடையில், தைரியமா, ரிஸ்க் எடுத்து ஷாதி பண்ணிக்கிட்டிங்கன்னு, உங்களை என் நானிமா, பெருமையா பேசுவாங்க" என ஆதர்ஷ் அடுக்கிக் கொண்டே போனான்.

காணொளி வழியாக, ஆதர்ஷை உன்னிப்பாகக் கவனித்த பைரவிக்கு நெஞ்சில் ஏதோ செய்தது. தனக்குக் கொடிபிடிக்கும் யாரிவன், இவன் நிச்சயமா ராதா மகன் இல்லை. இதில ஆயியோட சூழ்ச்சி என்னமோ இருக்கு" என யோசித்தவர், தன் பிரசவ காலத்தை யோசித்தும் சரியாக நினைவில் வரவே இல்லை. ஆதிராவையே, அவள் முகம் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்த பிறகு தான் அவருக்கு நினைவிலிருந்தது. ஜெயந்தின் சூழ்ச்சியால், உடல் நொந்துபோயிருந்தவருக்கு, கைலாஷ் பற்றிய அதிர்ச்சியில் மனமும் பேதலிக்க, அவரைப் பாதுகாத்துப் பிரசவம் பார்க்கும் முன், ரமாபாய் படாத பாடு பட்டுப் போனார்.

ராஜன், " சாஸும்மா, என்னைப் பத்தி பெருமையா பேசறது இருக்கட்டும். இப்ப என்கிட்ட இருந்து என்ன எதிர் பார்க்கிறாங்க. பாருவுக்கு என்ன நடந்ததுன்னு சொல்றேன்னு சொன்னிங்களே அதைச் சொல்லுங்க " என அவர் இறுகிய முகத்தோடு கேட்கவும், "அதைச் சொல்லத்தான் வந்தேன்,அவங்களோட சுவடே இங்க இல்லையே " என ஆதர்ஷ் வருத்தப்படவும், "நீங்க என்ன சொல்ல வரீங்க" என்றவரின் குரலில் சுருதி கூடியிருந்தது.

" ராஜா, அன்னைக்கு நீ சொன்ன அந்தப் பாருவும், இந்தப் பைரவியும் ஒரே பொண்ணா. இல்லை வேறவேற பொண்ணுங்களா. இதுனால தான் ராஜியை மறுத்தியா. விஜயா நீயும் மறச்சிட்டியே" எனப் பாலநாயகம் அடுக்கடுக்காகக் கேள்வி கேட்க,

நாரதர் வேலையை நன்றாகப் பார்த்திருந்த, ஆதர்ஷ், " சாரி பாஸ், பெரியவங்களுக்கு விசயமே தெரியாதோ. நான் தான் உளறிட்டனோ." என வினையமாகவே கேட்டான். கண்களில் ஓர் எள்ளலும் இருந்தது. இத்தனை நாள் தான் பாருவில் நினைவுகளிலேயே உருகி , மனைவி இடத்தை வேறு ஒருவருக்குத் தர முடியாது எனத் தனிமையில் கரைந்திருக்க, தான் பாரு மேல்வைத்திருந்த காதலையே ஒரு பால் டப்பா, கேள்வி எழுப்புகிறான் என ராஜனுக்குக் கோபம் வந்தது.

" என்னுடைய பர்சனலை, யார்க்கிட்டையும் பகிர்ந்துக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. " என அன்று ஆதிராவிடம் காட்டிய அதே கண்டிப்பைக் காட்டியவர், " பை த வே, மிஸ்டர். போஸ்லே" எனவும் இடைமறித்த ஆதர்ஷ், " யூ கேன் கால் மீ ஆதர்ஷ், ஆதர்ஷ் ராஜ் தான், என் பெயர், போஸ்லே பீபீ மில்ஸ்காகச் சேர்த்துக்கிட்டது" என அவன் சொல்லவும்,

" ஆதர்ஷ் ராஜ்னு ஏன் சொல்றான். ராதா மகன்னா, ஆதர்ஷ் ராவ்ல சொல்லனும்" எனச் சிந்தித்த பைரவி, அவன் சாயல் யாரை ஒத்திருக்கிறது என ஆராய்ந்தார்.

அதே போல் அவனையே உறுத்துப் பார்த்த கைலாஷ், சற்று எரிச்சலாகவே, " நீங்க யாராவேனா இருந்துக்குங்க. நான் இன்னைக்கு உனக்கு அப்பாயிண்மெண்டே கொடுக்கலை. இவ்வளவு பிடிவாதமா மீட் பண்ணது , என்னோட பர்சனாலிக்குள்ள தலையை நுழைக்கத்தான், இது தான் உன் பிஸ்னஸ் டெக்டிஸ்னா, ஐயம் நாட் இன்டரெஸ்டேட், ப்ளீஸ் அவுட், இது என்னோட ஃபேமலி டைம்" எனக் கைலாஷ் ,இழுத்துப் பிடித்த பொறுமையோடு வாசலைக்கட்டி விரைப்பாகவே சொன்னார். விஜயன் தான் அமைதியாகப் பேசும்படி நாபனைகேட்டுக்கொண்டார்.

அவன், பிஸ்னஸ் பேச, இப்படி முறையைக் கையாண்டு வந்திருக்கிறானோ என மற்றவர்களும் சந்தேகமாகப் பார்க்க , ஆதர்ஷ், "என் பிஸ்னஸ் மட்டும் பார்க்கணும்னா, அதுக்கு நிறைய வழி இருக்கு, உங்ககிட்ட வரணும்னு அவசியமே இல்லை. , நானும் உங்க பேமலில ஒருத்தன், அதுனால தான் உங்க ஃபேமலி டைம்ல வந்தேன்" எனப் பதிலுக்கு,பதில் மனதில்பட்டதைப் பயமின்றிப் பேசினான்.

" நீ எப்போதிலிருந்து, என் ஃபேமலி ஆன" என்றதற்கு, ஒரு மர்மப் புன்னகையைச் சிந்தியவன்,

" உங்கள் அப்பாவும், அம்மாவும் என்னைப் பேரனை தத்தெடுத்தா, உங்களுக்கு நான் உறவு முறை, பேமலி இல்லையா" எனக் கேள்வி எழுப்ப,

" ஆமாம், கரெக்ட் தானே, இப்ப ஆதிராவை ராஜா, மகளா தத்தெடுத்துக்கிட்டா, நமக்கும் பேத்தியாகிறா இல்ல" என நாயகம் லாஜிக்காக ஒரு உதாரணத்தை வைத்து, ஆதர்ஷை ஆதரித்தார்.

" எக்ஷாக்ட்லி, அதே தான் தாத்தா. நீங்க தான் ப்ரில்லியண்ட். கேட்ச த பாயிண்ட் இமீடியட்லி. " எனத் தாத்தாவுக்கு ஐஸ் வைத்தவன்,

" அதே மாதிரி, பாஸோட மாமியார் என்னைப் பேரனா தத்தெடுத்தா, நம்ம பாஸ்க்கு நான் என்ன முறையாகுறேன். " என ஆதர்ஷ் வினவவும், " புடலங்கா ஆகுற. விசயத்து வா மேன்" எனக் கடுப்படித்தான் அபிராம். விஜயன் மகனை அடக்கினார்.

" கூல் ப்ரோ. பேசிட்டு இருக்கேன்ல, ரமாபாய் பேரனா தான், இங்க பாஸை பார்க்க வந்தேன். ஆனால் அவர், இந்த ஊரில் இன்னுமும் எலிஜிபில் பேச்சலரா, அவங்க ஆயி அவருக்குக் கல்யாணத்துக்குப் பொண்ணு எல்லாம் பார்த்திட்டு, பைரவிபாயோட ஷாதி ஆனதைக் கூட மறைச்சு ஒரு வாழ்க்கை தான் வாழறார்ங்கிறது, உண்மையில் எனக்கு ஷாக். ஏன் பாஸ், பைரவிபாயோட கணவர்ங்கிறதை, நீங்க ஏன் மறைச்சு இருக்கீங்க. உங்க கிட்டப் போயி, பைரவி பாய் பற்றி எதுக்குச் சொல்லனும்னு தோனுது. உங்கள் பெத்தவங்களுக்குக் கூட அவங்க மருமகளைப் பற்றித் தெரியலையே. அப்படி நீங்க சொல்லிக்கிற அளவு, அந்த மேரஜ், லீகலானது, உண்மையானது இல்லையா" எனக் கைலாஷின் பொறுமை எல்லை கடக்கும் கேள்வியை ஆதர்ஷ் கேட்டு விட்டான். அவன் அப்படிக் கேட்கவும் தான், ஆதிராவுக்குமே அதே கேள்வி மனதில் தோன்றியது. கைலாஷின் பதிலை அவளும் எதிர் நோக்கியிருந்தாள் .

ஆனால் ராஜனின் பொறுமை எல்லைத் தாண்டியது," ஷட் அப், யூ ப்ளடி. நீ யார்ரா என்னைக் கேள்வி கேட்க, என்னையும், என் பாருவையும் பத்தி என்ன தெரியும் உனக்கு. ஆமாம் இந்த ஊர்ல நான் , என் அப்பா,அம்மாட்ட, என்னைச் சுத்தி இருக்கவங்கள்ட்ட, எனக்குக் கல்யாணம் ஆனதைச் சொல்லவும் இல்லை, மறைக்கவும் இல்லை. ஆனால் அதுக்கு அர்த்தம், எங்க கல்யாணம் பொய்ங்கிறது இல்லை. எங்கள் காதல் தெய்வீகம், கல்யாணம் சத்தியமானது, சட்டப்பூர்வமானது." என்ற கைலாஷின் வார்த்தைகளில் பைரவிக்குக் கண்ணீர் பெருகியது. " ஐ லவ் யூ ராஜ்" என்றார்.

" இன்னைக்கும் பீபீ மில்ஸ்ல பைரவியோட புருஷனா, எனக்கு உரிமையுண்டு. அதுக்காகத் தான இரண்டு பக்கமும் போஸ்லேஸ் படை எடுக்குறீங்க.

என் பாருவே, போனதுக்கப்புறம், மற்றதெல்லாம் எதுக்குன்னு விட்டுட்டேன். பாருவை கல்யாணம் பண்ணதை சொல்ல வந்தப்ப, ராஜியோட எனக்குக் கல்யாணம் நிச்சியம் பண்ணியிருந்தாங்க. ராஜிக்கிட்ட, அவ்வளவு பக்குவமா, பருவைக் கல்யாணம் பண்ணதை எடுத்துச் சொன்னேன். சரிசரின்னு போயிட்டு, அவள் தன் வாழ்க்கையை முடிச்சுக்கிட்டா. எல்லாரும் என்னைக் குற்றம் சொன்னாங்க. சரி கட்டினவளுக்காவது உண்மையா இருப்போம்னு வந்தா, பாரு மட்டுமில்லை, அவங்க அம்மாவும் உயிரோட இல்லைனு தெரிஞ்சது. உலகமே வெறுத்துப் போச்சு. யாருக்காக வாழப்போறோம்னு, அவனுங்க அடிச்ச அத்தனை அடியும் , என் பாருவை நிராதரவா விட்டுட்டு வந்த எனக்கான தண்டனையா ஏத்துக்கிட்டேன். " என ராஜன் ஆக்ரோஷமாகப் பேசியவர்.

" கடவுள் அருளாள என் சாஸும்மா நல்லா இருக்காங்க. அதை என்கிட்டச் சொல்லவும், அவங்களுக்கு இருபது வருஷம் தேவைப்பட்டதா" என ராஜன், ஆதர்ஷ் மீது பாய்ந்தார். "ராஜா டென்ஷன் ஆகாத" என விஜயன் நண்பனைச் சமாதானப்படுத்திக் கொண்டே இருந்தார். ஆனாலும் அவர் கண்கள் சிவந்து கோபத்தைக் கொப்பளிக்க, இருபது வருட ஏமாற்றத்தில் ,பொங்கும் அவர் கோபத்தை, உணர்ந்த சௌந்தரி, " அதை ஏங்கண்ணு, அம்மாகிட்ட முதவே சொல்லலை" என மகனின் தோளைத் தொட்டார்.அந்த நொடியில், கோபம் உடைந்து

" எப்படிங்கமா சொல்றது. ஏற்கனவே ,ராஜியோட உசிரு என்னால தான் போச்சுன்னு, எல்லாரும் நினைக்கும் போது, பாருவோட மறைவைச் சொல்லி, உங்க இரண்டு பேருக்கும் மனகஷ்டத்தைக் கொடுக்க விரும்பலைங்கமா" எனக் கண்ணில் விரல்களை வைத்துக் கொண்டு, அவர் குலுங்க. பைரவிக்கு அங்கு ஆவி துடித்தது. இங்குச் சௌந்தரி மகனை அனைத்துக் கொண்டார்.

" இல்லைடா கண்ணு" எனச் சௌந்தரி ஒரு பக்கம் ராஜனை அணைத்துக் கொள்ள, எதற்கும் கலங்காத நாயகத்தின் கண்களிலேயே அன்று கண்ணீர். ராஜன் டென்ஷனாகவுமே, விஜயன் ஆதர்ஷின் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டார்.

" மிஸ்டர் போஸ்லே" என அபிராம் அவனை ஓரம் கட்ட, " கால் ஆதர்ஷ்" என மறுபடியும் சொன்னான். " எதோ ஒண்ணு இருந்துட்டு போ. இப்போ வேற எதுவும் பேசாத. மாமா .ஹெல்த்துக்கு நல்லதில்லை" என மரியாதையை விட்டு ஆதர்ஷை அபிராம் எச்சரிக்க,

" தெரியட்டும் ப்ரோ. எல்லா உண்மையும் தெரியட்டும். , நான் எல்லாத்துக்கும் ரெடியா தான் வந்திருக்கேன்" என அவனும் அதே போல் பதிலளித்தான்.

" ராஜா, கண்ட்ரோல் யுவர் செல்ஃப்" என விஜயன் ராஜனை உணர்ச்சி வயப்படாமலிருக்கச் சொல்வி தட்டிக் கொடுக்க,

" எதுவுமே இல்லாமல் போச்சுடா விஜயா. நான் வாழ்ந்த வாழ்க்கைக்கே அர்த்தம் இல்லையே. தலைமறைவா இருந்தாலும், எவ்வளவு ஆசையா இரண்டு மாசம், எவ்வளவு நிறைவா, சந்தன்கட் ல என் பாருவோட வாழ்ந்தேன். அதுக்கான அடையாளம் கூட எதுவுமே இல்லாமல் போச்சுடா" என ராஜன் கண்ணீர் விடவும்.

" ராஜ், நம்ம வாழ்க்கைக்கு அடையாளம் இருக்கு ராஜ்" என மற்றொரு புறம் கதறினார் பைரவி. இப்போதே கணவனிடம் சென்று விட மாட்டோமா' என ஏங்கியது அவர் உள்ளம்.

" ஹே, ஆயி பவானி, என் குடும்பத்தை, இந்த இழப்பும் இல்லாமல் ஒண்ணு சேர்த்து வை. என் உயிரைக் கூடப் பலிதான் கொடுக்குறேன்" எனக் கைகளைக் கூப்பி அவர் மன்றாட, ஆயி பவானிக்கு, பைரவியின் குரல் கேட்டது போலும்,

" பாபா" என அழுதபடி, மாடிப்படிகளில் இறங்கி ஆதிரா ஓடி வந்தாள். இவ்வளவு நேரம் பொறுத்தவளால் தன் காதலுக்கான அடையாளம் கூட இல்லாமல் போனதாகப் புலம்பியது, அவளைக் கடுமையாகத் தாக்கியது. அவளும் இப்போது தானே காதலை உணர்ந்து இருக்கிறாள்.

அந்தக் கவலையிலும் " ரஜ்ஜும்மா, பார்த்துடா" என்றார் கைலாஷ். தாய்மடி தேடி ஓடி வரும் கன்றாக அவரை நோக்கி ஓடி வந்தவள், ஷோபாவில் அமர்ந்திருந்தவரின் முன் முழங்காலிட்டு அமர்ந்து, " நான் இருக்கேன்ல பாபா, உங்க பாருவோட அம்சமா" என அவர் முகத்துக்கு நேரே கேள்வி கேட்க,

" ஆமாம்டா ரஜ்ஜும்மா, நீ என் பாரு மாதிரி யே தான் இருக்க" எனப் பதில் தந்தார்.

" இல்லை பாபா, பாரு மாதிரி இல்லை, உங்க பாருவோட அம்சம் தான். உங்கள் காதலுக்கான சாட்சி தான். உங்க முல்கி தான். உங்க ரஜ்ஜும்மா, ராஜ்ஜோட முல்கி, பாபா வோட லாட்லி. ஆதிரா பிகே, பி ஃபார் பைரவி, கே ஃபார் கைலாஷ் ராஜ் . நான் உங்க மகள் தான் பாபா" என அவள் ஒவ்வொரு வார்த்தையும் சொல்லச் சொல்ல, " என்னடா சொல்ற, பாபா மனசு உடைஞ்சு போயிடுவேணோன்னு சமாதானம் சொல்றியா " என அப்போதும் நம்ப மாட்டாதவராகக் கேட்க, " நான் உங்க பொண்ணு தான் பாபா , பைரவிபாயி என்னோட ஆயி. " என மீண்டும், மீண்டும் சொல்ல,

இதைத் தான் சொல்ல வந்தியா என்பதைப் போல் ஆரதர்ஷை தேடினார்.

" பாஸ், அவள் சொல்றது உண்மை தான். ஆதிரா உங்க பொண்ணு, ஆயி பவானி, சொந்த பாபா கிட்டையே, அவருடைய முல்கியை ரொம்பக் காலம் முன்னாடியே சேர்த்துட்டாங்க" எனவும்,

"ரஜ்ஜும்மாவாடா, என் பொண்ணு. " எனக் கட்டிக் கொண்டவர், " அம்மா, என் மகள் தான்மா. இங்க பாருங்க, உங்க பேத்தி. அப்பா, உங்க பேத்தி தான் பா" என மகளை மீண்டும் அணைத்து உச்சி முகர்ந்தவர்.

திடீரெனப் புத்தியில் உரைக்க, " அப்ப உன் ஆயி. என் பாரு. என் பாரு உயிரோட தான் இருக்காளா. போன்ல பேசுற ஆதிரா கி ஆயி, பாருவா, பைரவியா " எனவும் அவள் தலையாட்ட, கௌரியைத் திரும்பிப் பார்த்து, ராஜன் கேட்க, அவரும் ஆம் என உறுதிப் படுத்தினார்.

மகளை, அணைத்து, ஆசை தீர உச்சி முகர்ந்து கொஞ்சியவர்,எழுப்பித் தன்னோடு ஷோபாவில் அமர்த்திக் கொண்டு, உன் ஆயி, இப்ப எங்க இருக்கா" என வினவினார்.

" ஆயி எங்க இருக்காங்கன்னு எல்லாம் எனக்கு எக்சாக்டா தெரியாது. ஒரு அனுமானம் தான்" என அவள் சொல்லவும்.

" இரு, நானே கண்டு பிடிக்கிறேன். உயிரோட இருந்துக்கிட்டு இருபது வருஷமா என்கிட்ட விளையாடுறாளா. " எனக் கோபமானவர் தன் போனிலிருந்து, ஆதிரா கி ஆயிக்கு போன் அடிக்க, எங்கேஜ்ட் டோண் கேட்டது.

ஆனால் அதே நேரம், குன்னூரிலிருந்து, ராமசாமி பதறியபடி, அபிராமுக்கு போன் அடித்தார்.

யாருக்கு என்ன ஆனது.

நிலவு வளரும்.


யார் இந்த நிலவு-25

யார் இந்த நிலவு-25 

ராஜன் , விஜயன் போனிலிருந்து தங்கச்சிமா, என்ற எண்ணிற்கு அழைக்கவும் , பைரவி தா போனை எடுத்து, “பாய் சாப் “ என அழைத்தார். விஜயனை,பாரு ,பாய்சாப் எனத் தான் அழைப்பார், அதனால் சந்தேகமுற்ற ராஜன், அவர்களாகவே பேசட்டுமென அமைதி காக்கவும்,

“ பாய் சாப் லைன் ல இருக்கீங்களா, ஆதிரா உங்க வீட்டுக்குத் தான் வைத்திருக்கலாம், நேற்றே சொல்லிட்டா, கேயார் சாப் கூடத் தானே வந்திருக்கா, உங்க வீட்டுக்கு தானே, அதுனால, எனக்கு நிம்மதி தான். கொஞ்சம் வேலையா இருக்கேன், அப்புறம் கூப்பிடவா பாய் சாப். பாபியையும் கேட்டேன்னு சொல்லுங்க” என இயல்பாகப் பேசவும், சரிங்க மா,இதைச் சொல்லத் தான் போன் போட்டேன். வேற ஒண்ணுமில்லை” எனப் போனை அனைத்தவ்ர்,

“ம் ஹும் ,கட்டின பொண்டாட்டிக்கும் நம்பிக்கை இல்லை, கூட வளர்ந்தவனுக்கு நம்பிக்கை இல்லை. அன்னைக்கு உன் வூட்டுல போன் பேசினேன்ல, அதிலிருந்து, அப்ப அப்ப மகளைப் பார்த்துக்கச் சொல்லி போன் போடுவாங்க.” எனப் பாதி உணவில் எழுந்து கைகழுவி விட்டு ,கோபமாக முறைத்துச் செல்ல, கஸ்தூரி “அண்ணா,நான் தான்ங்க அவசர பட்டுட்டேன், பாபினா,அண்ணி தானுங்களே. ஆதிரா அம்மா தான பேசுறாங்க, அபிக்காக அவிகளோட பேசியிருப்பாங்களா இருக்குங்க. நான் ஒரு மட்டி” எனத் தன்னையே நொந்து கொண்டு கஸ்தூரி கணவனைச் சமாதானப்படுத்த செல்ல,

“என்ர கிட்டையே நாடகமா,பார்த்துகுறேண்டா “ என்றவர், நண்பனைச் சமாதானம் செய்யும் விதமாக, அவர்களது திருமண நாளை,தானே சிறப்பாக நடத்துவது என முடிவோடு, குடும்பத்தோடு மீண்டும் கேஆர்மில் வந்தார்.

சோலாப்பூர் பீபீ மில்ஸ் ன் போட் மீட்டிங்கில், அன்று ரமாபாயை எல்லாரும் எதிர் நோக்கியிருக்க, ஆதர்ஷ் மட்டுமே தரை இறங்கினான். ஜெயந்த் கெய்க்வாட் , ஆனந்த், முகுந்த் போஸ்லேக்களும் அன்று கணபத்ராய் போஸ்லேயின் இளைய ராணியை வரவேற்க தயாராகவே வந்தனர். எத்தனை பகை இருந்த போதும், உறவுகளுக்குள் அதனை நேராகக் காட்டிக் கொள்ள முடியாதே. அதுவும் இப்போது இருப்பதில் அவர் தான் முந்தைய தலைமுறை, அனைவருக்கும். மூத்தவர்.

ஆதர்ஷ், ஒரு எஸ்க்யூஸுடன், " இன்று நானிமா, என்னோட வர்றதா தான் இருந்தாங்க. திடீரென உடல்நிலை சரியில்லாததால் பயணம் செய்ய முடியவில்லை. வீடியோ கான்ப்ரன்ஸ் ல பேசுவாங்க" என்ற அறிவிப்போடு, அங்கிருந்த டீவி ஸ்கிரீனை உயிர்ப்பித்து, அவரை நேரடியாகக் காட்டினான்.

நேரலையிலிருந்தாலும், நேரடியாகப் பேசுவது போல், மச்சின் மகன்கள், பேரன்களிடம் உரிமை பாராட்டியவர், தனது கணவர் மற்றும் மூத்தவரின் ஒற்றுமையைப் புகழ்ந்து பேசி, தனது வாரிசான தத்துப் பிள்ளை, ஆதர்ஷ் ராஜே போஸ்லேக்கு, ஆதரவைத் தருமாறு கேட்டுக் கொண்டு, சட்டப்படியான வாரிசாகவும் அறிவித்தார்.

காணொளி முடியும் வரை, சம்பிரதாயமாக யாரும் எதுவும் பேசவில்லை. ஆனால் அதன் பிறகு, மூத்த மருமகனான பாவானிபாயின் கணவன் ஜெயந்த் கெய்க்வாட் முதல் ஆட்சேபனையைத் தெரிவிக்க, பேச்சு வளர்ந்தது. அவர் தான், பைரவியுடைய புருஷன் இருக்கார் கைலாஷ் ராஜனைக் குறிப்பிட்டுச் சொல்லி, அவருடைய ஒப்புதலும் வேண்டும் என ஒரு கண்டிசனை வைக்க, ஆதர்ஷ் ஓர் மர்மப் புன்னகையையும், மற்றவர் அதிர்ச்சியையும் காட்டினர்.

நான் கைலாஷ் ராஜனையே கூட்டிட்டு வர்றேன், என்ற ஆதர்ஷ் அதுவரை தங்கள் ஒப்புதல் இன்றி மில் சம்பந்தப்பட்ட முடிவுகள் எடுக்கக் கூடாது எனக் கண்டிசனோடு கூட்டத்தைக் கலைத்தான்.

கூட்டம் முடியவும், கைலாஷை வேற எதுக்கு இதில் இழுக்கிறீங்க என மற்ற போஸ்லேக்கள் ஜெயந்த் மீது பாய்ந்தனர்.

" இல்லைனா, இன்னைக்கே ஆதர்ஷ் மொத்த சொத்துக்கும் உரிமையா உட்கார்ந்திருவான். அரண்மனைக்கும் வருவான். அதுக்குத் தான் மாற்றி விட்டேன். இப்போ இன்னும் மூன்று மாதம் டைம் இருக்கு. அதற்குள் எவ்வளவோ விசயத்தை மாற்றலாம்" எனத் தனது யோசனையைச் சொல்ல, தேவையில்லாத இன்னொரு பிள்ளைப் பூச்சியை இழுத்துவிட்டதாகப் போஸ்லேக்கள் ஜெயந்தை பேசினர்.

எந்தச் சூழலையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த நினைத்த மஹந்த் போஸ்லே, கே ஆரை சந்திக்கும் தனது திட்டத்தைச் சொல்ல, அவனது தந்தை ஆனந்த்தும் அதை வழி மொழிந்து, கே ஆருடன் சம்பந்தம் பேசுவது எனப் பழைய கால,சம்பந்தம் செய்து சொத்தை அடையும் முறையையும் சொன்னார். அதன்படியே மஹந்தை களம் இறக்கினர்.

ஆதர்ஷ் ஒரு பக்கம் கோவையை நோக்கி தனது பார்வையைத் திருப்ப, எந்த முடிவையும் அதிரடியாக எடுக்கும் கைலாஷ் ராஜன், ஆதர்ஷ்க்கு முன் மஹந்தை சந்திக்க அனுமதி கொடுத்தார்.

விஜயன், பைரவியை அழைத்து விசயத்தைக் கேட்க, ஆதர்ஷ் பற்றிய தகவலே தனக்கு இல்லை என அதிர்ந்தவர், தனது ஆயி ரமாபாயிடம் கேள்வி எழுப்பினார்.

" ஆயி, ராதா பாயோட மகனை, நமக்கு ஆதரவா வளர்க்கிறதாகத் தானே பேச்சு. இதென்ன உங்கள் வாரிசா , தத்து எடுத்துக்கிட்டதா அறிவிச்சு இருக்கீங்க. ஏன் நானும், என் மகளும் செத்தா போயிட்டோம்" என ஆக்ரோஷமாகச் சொல் லம்புகளைத் தொடுத்தார்.

" பைரு, கொஞ்சம் பொறுமையா கேளு, உன் ஒருத்தியால, இந்தக் கேங்கை சமாளிக்க முடியாது. ஆதர்ஷ் இதுக்காகவே வளர்க்கப் பட்டவன், சோடே தாமாத்ஜி, பாலாஜி ராவ் சேர்ந்து பார்த்துக்குவாங்க. நீ தான் சொத்துச் சுகம் எதுவும் வேண்டாம்னு சொல்லுவ. உன் புருஷன் வச்சிருக்கச் சொத்தே போதும்னு சொல்லுவ. உன்னை நம்பி பிரயோஜனம் இல்லைனு தான், இன்னொரு சிப்பாயியை இறக்கிட்டேன்" என அவரும் விடாப்பிடியாகவே பேசினார். இருவருக்குமான வாக்குவாதம் வலுத்து, "இதுனால என் மகளுக்கோ, புருஷனுக்கோ ஆபத்து வந்தா, நான் சும்மா இருக்க மாட்டேன்" என மிரட்டினார் பைரவி.

" நீ முதல்ல தாமாத்ஜியோட சேர்ந்து வாழப் பாரு. ஏற்கனவே உன் ஸாஸும்மா, மகனுக்குப் பொண்ணு தேடுறார். கடைசியில் புருஷனையும் கை நழுவ விட்டுட்டு ஏமாந்து நிற்கப் போற. " என ரமாபாய் மகளின் பொறாமையைத் தூண்டி விட்டார்.

பைரவி, மீண்டும் விஜயனுக்கு அழைத்தவர், " பாய்சாப், நான் நம்புனவங்க எல்லாம் என்னை ஏமாத்திட்டாங்க. நீங்கள் சல்றது நிஜம். என் ஆயி, அந்தப் பையனை தன் வாரிசா அறிவிச்சு இருக்காங்க" என மனவேதனையோடு சொன்னார்.

" அடுத்து என்னமா செய்யப் போறீங்க" என விஜயன் வினவவும், " ஆயி, முதலேயே, ராஜ்கிட்ட போகச் சொன்னாங்க. நான் தான் மறுத்தேன். இப்போ இன்னொரு சிப்பாயை ரெடி பண்ணிட்டேன்னு சொல்றாங்க. அவங்க எப்படியோ போறாங்க, எனக்கு ஆதிராவை மட்டும் காப்பாற்றி, ராஜ்கிட்ட ஒப்படைச்சா போதும்" என்றார்.

" தங்கச்சிமா, நான் உங்க சந்திப்புக்கு ஏற்பாடு பண்றேன். இன்னும் பத்து நாள்ல எனக்கும் கஸ்தூரிக்கும் வெட்டிங் டே வருது. ராஜா இப்படி இருக்கானேன்னு, நான் சில்வர் ஜூப்ளி கூடக் கொண்டாடளைங்க. இந்த வருஷம் தான், அவன் பேசிட்டானே, ஏற்கனவே மாமா அத்தை இங்க தான் இருக்காங்க. குன்னூர்ல இருக்கப் பெரியவங்களையும் வரட்டும். நீங்களும் வாங்க. ஒரு சுமூகமான முடிவு வரட்டும். எல்லாருமா, ராஜனையும் சமாளிச்சுக்கலாம். " என அவர் திட்டம் தீட்ட, பைரவியும் அதற்கு ஒப்புக் கொண்டார். ஆனால் இவர்கள் திட்டத்தையெல்லாம் தவிடு பொடியாக்கி , அதிரடியாய் காய்களை நகற்ற ஒருவன் கோவையில் தரை இறங்கி இருந்தான்.

விஜயன் குடும்பம், மீண்டும் கே ஆர் மாளிகை வந்து, தங்கள் மணவிழா பற்றி அறிவிக்கவும், பெரியவர்களுக்கும் ஒரே கொண்டாட்டம்.

" அப்ப, ராமு, பெரிய ரஞ்சி, சுப்பு, சாரதா,பன்னீர் எல்லாரையும் கூட்டிட்டு பவானியையும் வரச் சொல்லுவோங்கிறேன்" எனப் பாலநாயகம் திட்டமிட ஆரம்பிக்க,

" அதே தான் நானும் சொல்லனும்னு இருந்தேனுங்க, கஸ்தூரிக்குப் பிறந்த வூட்டு சீர் நம்பளுது தான்" என்றார் சௌந்தரி.

" அம்மத்தா, ஆனிவர்ஸரி தான கொண்டாடப் போறாங்க, அறுபதாம் கல்யாணமா செய்யிறாங்க" என ரஞ்சி கேள்வி எழுப்பினாள்.

" என்ர தங்கச்சிக்கு, தினம் தினம் சீர் இறக்குவோம் உனக்கென்ன கண்ணு, வேணும்னா உனக்கும் சேர்த்து மாமன் சீர் இறக்குறேன் " என்றார் கே ஆர்.

" வேணும்னா ன்னு, என்னங்க மாமா, இழுக்குறீங்க. எனக்கு எந்த விசேஷம் வச்சாலும் நீங்க தானுங்க செய்யோனும். இல்லையினா இங்கையே வந்து டேரா போட்ற மாட்டேன்" என ரஞ்சி, விடாமல் வம்பிழுக்கவும்.

" இவ்வளவு தானக் கண்ணு, மாமனுக்கு ஒரு மகன் இருந்திருந்தா உன்னைக் கட்டி வச்சிருப்பேன், அது தான் இல்லையே, மாமன் சொத்து பூரா உனக்குத் தான் எடுத்துக்க. " என அவரும் விடாமல் மருமகளோடு வார்த்தையாடினார்.

" உன்ர மாமன் சொல்றதோட, சொத்துப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக்கக் கண்ணு , அவன் சொத்துக்குத் தான் ஹெவி காம்படிசன் நடக்குது. ஒரு மாசம் வளர்த்த புள்ளையையே தத்தெடுக்கப் பேச்சு ஓடுது , சுதாரிச்சுக்கக் கண்ணு " என நாயகம் ஆதிராவை குறித்துச் சொல்லவும்,

" அப்பா, அது என்னமோ, என்ர சொத்துக்காகத் தான் இங்க இருக்கிற மாதிரி பேசுறீங்க. யாரு கண்ணுளையும் படாமல் வளர்க்கையிலேயே தெரியலைங்கிளா, அது எவ்வளவு பெரிய இடம்னு." என ராஜன் ஆதிராவுக்குச் சப்போர்ட் பண்ணி பேசிய நேரம், கௌரி , வீட்டு மனுசியாக வந்தவர்களை வரவேற்று, காபி பலகாரத்துக்குக் கேட்டு, செல்லி கொண்டு வந்ததை வாங்கிப் பரிமாற வந்தார்.

" அடே, நீ சொல்லிட்டா போச்சா, எந்தப் புத்தில, எந்தப் பாம்போ,சம்பந்தப்பட்டவங்கல்ல வாயைத் திறக்கோணும்." என நாயகம், வழக்கம் போலப் பேச்சில் கௌரியைத் தூண்டி விசயத்தை வாங்க முயன்றார்.

" அப்புச்சி, நீங்க பேசறதே புரியலைங்க.” என ரஞ்சனி, “புரிய வேண்டியவைகளைப் புரியும், ஆனால் பொறியில சிக்க மாட்டாங்க “ என்றார் நாயகம்.

கௌரி,கஸ்தூரி விஜயனுக்கு வாழ்த்துச் சொல்லி, இவர்கள் சம்பாஷனை தங்களுக்குச் சம்பந்தம் இல்லை என்பது போல் புன்னகை மாறாமல் நின்றார்.

கௌரி,கஸ்தூரி விஜயனுக்கு வாழ்த்துச் சொல்லி, இவர்கள் சம்பாஷனை தங்களுக்குச் சம்பந்தம் இல்லை என்பது போல் புன்னகை மாறாமல் நின்றார்.

“அட,அது தான் சத்தியத்துக்குக் கட்டுப் பட்டு இருக்கேன்,சொல்ல முடியாதுன்னு சொல்லிப்போடுச்சுல்ல,பேசாத விடுங்க, இன்னைக்கியெல்லாம் இவ்வளவு விசுவாசமா யார் இருக்காங்க.அதுக்கே கௌரியை மெச்சிக்கோணும், குறை சொல்லக் கூடாது”என்றார் சௌந்தரி.

ஆதிரா, ஆபீஸ் வேலை முடிந்து, அபிராமுடன் வீட்டுக்கு வந்தவளை, ரஞ்சி ஆவலாகவே வரவேற்றவள்,” அப்பா, அம்மா வெட்டிங் ஆனிவேர்சரிக்கு பிளான் பண்ணனுமுங்க அண்ணி,உங்க ஹெல்ப் வேணும்” என்றாள் 

“கட்டாயம் செய்வோம் ரஞ்சி,அதைவிட நமக்கு என்ன வேலை. நான் ப்ரெண்ட்ஸ் கூடச் சேர்ந்து, இந்த வேலை எல்லாம் பார்த்திருக்கேன்,ஆனால் பங்க்சன் தான் அட்டென்ட் பண்ணதில்லை” என அவள் எதார்த்தமாகச் சொல்ல, கைலாஷ் உருகித்தான் போனார். கௌரியைப் பார்த்தவர், “மாஸிமா , நீங்களும் , உங்க திதியும் என் ரஜ்ஜும்மாவை எப்படியெல்லாம் கொடுமை படுத்தியிருக்கீங்க பாருங்க “ என ஆந்திராவை அழைத்துத் தன பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு சொல்லவும், அதற்கும் அவர் பேசாமல் நின்றார்.

சௌந்தரி தான்,” அது தான் காரணம் சொல்லுச்சுங்கள்ல ராஜா, அவிக கூட்டிட்டு போகலையா என்ன, இனி நம்ம கூட்டிட்டுப் போவோம்”எனச் சமாதானம் சொன்னார்.

" ஓகே கைஸ், எல்லாரும் ரொம்பச் செண்டியா போக வேண்டாம். கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க. அப்பா, அம்மா மேரேஜ் ஆன்வர்ஸரியை கிராண்டா செலபரேட் பண்றோம். தீம் ட்ரெஸ், கே கட்டிங், டிஜே வச்சு பாட்டுப் பாடி ஆடுறோம். ஹோட்டல் டின்னர். " என ரஞ்சனி வரிசையாக ப்ளான் போடவும்,

" ரஞ்சி லிஸ்ட் பெரிசாக்கிட்டே போகாத. சிம்பிளா செஞ்சா போதும். அபி கல்யாணத்தைக் கிராண்டா செய்வோம்" என்றார் கஸ்தூரி.

" ஏன் கண்ணு, உன்ர புருஷன் பர்ஸை மிச்சப்படுத்தலாம்னு பார்க்கிறியாக்கும். அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். எனக்காகத் தான், இத்தனை வருசமா, உங்க கல்யாண நாளை விமரிசையா கொண்டாடலையின்னு, ஒரு பலியைப் போட்டு புட்டான்ல, பூரா செலவும் என்னது தான். ரஞ்சிக் கண்ணு 7 ஸ்டார் ஹோட்டலை புக் பண்றோம்டா" என்றார் கைலாஷ்.

" மாமா, நம்மூர்ல ஏதுங்க, 7ஸ்டார் ஹோட்டலு, 5 ஸ்டார் தானுங்களே இருக்கு" என அபிராம் இடை மறிக்கவும், " எங்க இருக்கோ, அங்க போவோம். இது ஒரு பிரச்சனையா " என்றார் கைலாஷ்.

இளையவர்கள், பெரியவர்களோடு சேர்ந்து, ப்ளானிங்கில் ஈடுபட, விஜயன், கைலாஷை ஆபீஸ் ரூமுக்கு கடத்தினார்.

" ராஜா, நாளைக்கு மஹந்த் போஸ்லேவுக்கு டைம் கொடுத்திருக்கியாம். ஆதர்ஸை முதல்ல பார்க்க வேண்டியது தானே" என வினவவும், அர்த்தமாகப் புன்னகைத்த கைலாஷ், " முதல்ல சம்பந்த புறத்தைத் தான் கவனிக்கனுமடா. இல்லைனா கோவிச்சுக்குவாங்க. காரணமாத் தான், ஆதர்ஷை அவாய்ட் பண்றேன். அவன் நம்ம பய தான மெல்ல வரட்டும்" என்றார் கைலாஷ்.

இவர்கள், வீட்டில் உள்ள அலுவலக அறைமில் பேசிக் கொண்டிருக்கும் போதே, வீட்டு போனுக்குச் செக்யூரிட்டியும், கைலாஷ்க்கு உதவியாளர் சம்பத்தும், நடு வாசலில் காரை நிறுத்தி விட்டு சத்தியனும் ஓடி வந்து சொன்னது ஒரே விசயத்தைத் தான்.

" அப்பா, அப்பாயிண்மெண்ட், இல்லாதையே ஒருத்தர் உங்களைப் பார்க்க அடம் பிடிக்கிறாருங்க" என ஓடி வந்து சொல்ல, அந்த நேரம் தான் சம்பத் போன் அடித்தார், அதை ஆண் செய்நுக் கொண்டே, " யார்ரா அவன், இப்ப பார்க்க முடியாதுன்னு சொல்லு" எனக் கோபமாக மொழிந்து விட்டு, " சம்பத் சொல்லுங்க" எனவும்.

" ஐயோ, அப்பா, அந்த விசயத்தைத் தான் சொல்ல வந்தேனுங்க. இவ்வளவு நேரம் அந்தச் சார் , வாக்குவாதம் பண்ணி பார்த்துட்டு தான் உங்களைக் கூப்பிடுறாருங்க. நீங்க உடனே என்னோட வாங்க" என அவன் அழைக்கவும், " ஆமாங்க சார்" எனக் கைலாஷ்க்கு சம்பத் விவரத்தைச் சொல்ல,

" அப்பாயிண்மெண்ட் இல்லாதவனைப் பார்க்க, ஓனரே வருவரா. போய் முடியாதுன்னு சொல்லு" என விஜயன் சத்தியனிடம் சொல்ல,,

" ஐயா, சார், அவர், இவராட்டமே நினைச்சதை உடனே சாதிக்கிற ரகமாட்டத்துக்கு, ஐம்பது காரோட, அவினாசி ரோட்டையே மறிச்சுக்கிட்டு நிற்கிறாப்ளையிங்க , இரண்டு பக்கமும், இரண்டு மைல் தொலைவுக்கு , ட்ராபிக் ஜாமாகி நிற்க்குதுங்க" என அவசரமாகச் சொல்லவும்.

இதைக் கேட்டபடி வந்த, அபிராம், " உடனே பேட்டி கொடுக்கிற அளவுக்கு அவனென்ன, இந்த நாட்டுக்கே ப்ரைம் மினிஸ்டரா என்ன" எனக் கோபமாகக் கேட்கவும்,

" அப்படியும் கேட்டுப் பார்த்துட்டோமுங்க. ஆமாம் உங்க எல்லாருக்கும் ராசாவா வரப் போறவர், ராஜகுமாரன்னு நக்கல் விடுறானுங்கய்யா" எனத் தந்தை மகன் இருவரிடமும் சத்தியன், அடுக்கிக் கொண்டிருக்க,

" யார்ரா அவன், நம்ம இடத்தில வந்து நாட்டாமை பண்றது" எனப் பாலநாயகமும் கோபமாகக் கேட்டபடி மகனைத் தேடி வர,

" அவரே, வர்றாரா, இல்லை பேண்ட் வாத்தியம் வச்சு அழைக்கோனுமானு கேளுங்க" எனச் சிரித்தவர், " வீட்டுக்கே அனுப்பி விடுங்க" எனப் புன்னகையோடு போனை வைத்தவர், மற்ற மூவரும் யாரெனக் கேட்க,

" வந்துட்டான்டா, ராஜகுமாரன், பெங்களூர்ல பார்த்தமே, ஆதர்ஷ் ராஜே போஸ்லே" என்றார் கைலாஷ்.

" அவன் எதுக்குங்க மாமா, இங்க வர்றான்" என அதிர்ந்து நின்றான் அபிராம். ' பால் புட்டி, நம்ம மார்க்கெட்டை பூரா காலி பண்ணுவானே. நல்லவேளை ஆராக்கிட்ட ப்ரபோஸ் பண்ணிட்டேன்' என அவன் மனசாட்சி ஆசுவாசமடைய, ஆதிரா" மாஸி இது யாரு" எனக் கலவரமானாள்.

கைலாஷின் சட்டதிட்டங்களுக்கு எல்லாம், தான் அடங்காதவன், நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் எனக் காட்டினான் ஆதர்ஷ். அதிரடியாக நுழைந்தது மட்டுமின்றி, கே ஆரையே ஒரு கலக்கு கலக்கி, ஆதிராவை அலற விட்டான்.

ஆதர்ஷ் ராஜ் போஸ்லே, கேஆர் மில் வாசலில், அவினாசி,கோவை ரோட்டையே கதிகலங்க வைத்துக் கொண்டு, உள்ளே வர கேயார் அனுமதி வேண்டி நின்றான்.

ஆதர்ஷ் வருகை கேஆர் மாளிகையின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைக்குமா. பொறுத்திருந்து பார்ப்போம்.

நிலவு வளரும்.

யார் இந்த நிலவு-24

 யார் இந்த நிலவு-24

ஆதிரா, அழுது புலம்பிய அந்த முதல் நாளுக்குப் பிறகு, தன் பாபாவோடு ராசியான போதும், முன்பு போல் அவளால் இயல்பாகப் பழக இயலவில்லை. எங்கே தன்னை மறந்து, கைலாஷ் தான் தன் பயாலிஜிக்கல் பாதர் என்பதை, தன்னையறியாமலும் வெளிப்படுத்தி விடுவோமோ, என எச்சரிக்கையாக இருந்ததில் தன் இயல்பைத் தொலைத்திருந்தாள்.

தாத்தா, ஆத்தாவிடமும் சற்று விலகளோடே நடந்து கொள்ளவும், பெரியவர்கள் அவளைச் சரிப்படுத்த முயன்றனர்.

" ஏன்கண்ணு, அது தான் உன் சித்தியம்மா வந்திருச்சில்ல, எதுக்கு இப்படி முகத்தைத் தூக்கி வச்சிக்கிட்டு இருக்க. எப்பவும் போல இரு" என்ற சௌந்தரி, " உன்ர பாபாவுக்குப் பொண்ணு பார்க்கனுமின்னு சொன்னமே, அந்தச் சின்னப் பொபெட்டில பார்க்கலாமாம், சத்தியன் சொன்னான். ஆத்தாவுக்குப் போட்டுக் காட்டு கண்ணு" எனப் பேச்சில் இழுத்தார். இது எதற்குத் தேவையில்லாத வேலை, தன் ஆயியை இங்கு அழைத்து வந்து விடலாம். கைலாஷ் பெயரை பப்ளிக்காகப் போட்டாலும் பிரச்சினை, அவருக்குப் பிடிக்காதே என யோசித்தாள்.

" அதெல்லாம், இந்தப் பொண்ணுக்குத் தெரியுமோ என்னமோ. அபு கண்ணா வரட்டும், போட்டுக் காட்டச் சொல்லு, இல்லையினாக்கும் ரஞ்சி வரச் சொன்னையினா, அவளே அவ மாமனுக்கு ஏத்த ஜோடியா தேடி எடுத்துக் கொடுத்திடப் போறா" என நாயகம், அபிராம், ரஞ்சனியை உயர்வாகச் சொல்ல, " எனக்கும் தெரியும்" என ரோசமாக, இதன் மூலம் தன் ஆயியின் பொறாமையையும் தூண்டலாம், அவரைச் சீக்கிரம் பாபாவோடு சேர்த்து வைக்கலாம் என்ற யோசனையில் மேட்ரிமோனியில் பதிவு செய்தாள். ஆனால் கைலாஷ் பெயரைப் போடாமல், பொதுவாக மட்டுமே போட்டு வைத்தாள்.

சௌந்தரி விவரம் கேட்கவும், " பாபா போட்டோவை போட்டம்னா, அவுங்களுக்கு ரொம்பப் பிரச்சினை ஆகிடும் ஆத்தா. அவங்கள்ட்டையே நேரா போன் போட்டு கேட்டுருவாங்க. முக்கியமா அவங்க சொத்துக்காகத் தான் வருவாங்க. அதுனால பொதுவா போடுவோம் ஆத்தா " என விளக்கம் தர, நாயகமும் மனதில் ஆதிராவின் யோசனையை மெச்சி கொண்டார்.

அபிராமும், ஆதிராவுடன் வேலை செய்யும் போது, வீடு வரை துணைக்கு வரும் போது, எனப் பேச்சுக் கொடுத்துப் பார்த்தான். " குச் நஹி ராம் சாப், எனக்குக் கில்டியா இருக்கு" என அவள் வருத்தப்பட, "இதெல்லாம் எதுவுமே யோசிக்காத ஆரா பேபி. உன் ஆயியை, பாபாவோட எப்படிச் சேர்த்து வைக்கலாம்னு மட்டும் யோசி" என்றவன்,

" அன்னைக்கு ஒரு நாள் பேசினாங்கல்ல, அதே மாதிரி தினமும் பேச வை" என ஐடியா கொடுத்தான்,

அவனை முறைத்தவள் " நீங்க ரொம்ப லேட். அதெல்லாம் இரண்டு பேரும், நைட்ல பேசிட்டு தான் இருக்காங்க. பாபா, எப்படிச் சிரிச்சு பேசுறார் தெரியுமா. இந்த ஆயியும், என்கிட்ட தான் முறைக்கிறது, பாபாட்ட ஹஸ்திஹுயி போல்தி ஹை" என முகத்தை உம்மென வைக்கவும்.

" மாம்ஸ் திறமையே திறமை தான். பக்கத்தில இருக்கிற பொண்ணை என்னால சிரிக்க வைக்க முடியலை. போன்லையே அவர் ஆளைச் சிரிக்க வைக்கிறாரே, இரண்டு பேருக்கும் இடையில, கெமிஸ்ட்ரி, நல்லா இருக்கு. " என்றவன், " நம்ம கெமிஸ்ட்ரியும் அதே மாதிரி இருந்தா, நல்லா இருக்கும் பேபி . ட்ரை பண்ணுவோமா" என அவளை நெருங்கவும், " பிச்சு போடுவேன்" எனக் கேஆர் ஸ்டைலிலேயே அவள் சொல்லவும், " நீ என்ற மாமன் மகள் தான் சந்தேகமே இல்லை. ம்கூம் " என இடைவெளியை அவன் அதிகப்படுத்த, ஆதிரா சிரித்தாள்.

சௌந்தரி, மகனிடம், தங்கள் பழைய வீட்டுக்குச் சென்று வருவதாகவும் ஆதிரா , கௌரியையும் அழைத்துச் செல்வதாகக் கேட்டார். முதலில் ஆதிராவின் பாதுகாப்பு என யோசித்தவர், அடுத்து வந்த சனி ஞாயிற்றை, ராம் நகர் வீட்டில் எல்லாருமாகக் கழிக்கலாம், அவளுக்கும் ஓர் மாற்றமாக இருக்கும், தானும் வருகிறேன், என்று சொல்லவும், பெற்றவர்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. நாயகம், பல வருடங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேற்றிய பின், ராஜன் அந்த வீட்டுக்கு வருவதே இல்லை.

இரண்டு கார்கள் பின் தொடர, ஆதிராவை அருகே அமர்த்திக் கொண்டு தானே காரை செலுத்த,. " இந்த வீடு உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச வீடா பாபா" என அவள் கேட்கவும். " நான் சின்னதிலிருந்து வளர்ந்த வீடு கண்ணு. பிடிக்காமல் எப்படிப் போகும். " என்றவர், தன் சிறு வயது கதைகளைப் பேசியவாறே உற்சாகமாக வர அவரை அதிசயமாகவே பார்த்த ஆதிராவிடமும் அதே உற்சாகம், தொற்றியது.

முதலில் சென்ற காரில், சௌந்தரி, நாயகம், கௌரியை அழைத்துக் கொண்டு சென்றுவிட, அப்பாவும் மகளுமாக வந்து சேர்ந்தனர். சௌந்தரி தயாராக வைத்திருந்த ஆரத்தியை, மகனுக்கும், பேத்திக்குமாகச் சுற்றி வரவேற்றார்.

" எதுக்கும்மா, இதெல்லாம்" என்றவரிடம்,

" நீ இல்லாமல், இந்த வூட்டில ஒரு நாள் கூட, நானும், உங்க அப்பாவும் நிம்மதியா இருந்ததில்லை ராஜா. நீ இந்த வீட்டுக்கு வந்திட்டேயில்ல, இனிமே பார், நம்மளை விட்டுப் போன சந்தோஷமெல்லாம் திரும்ப வந்துரும்" எனச் சௌந்தரி வாக்குச் சொல்ல, " அப்படியே ஆகட்டுங்கம்மா" என்றவர், ஆதிராவை தனது அறையைக் காட்ட அழைத்துச் சென்றார்.

இரண்டாவது மாடியில், தனி ரூமும், மொட்டை மாடியுமாக இருந்தது. ஊஞ்சல், ஷோபா எல்லாம் போட்டிருந்தனர். அதை ஒவ்வொன்றையும் காட்டி, தன் நினைவுகளைப் பகிர்ந்தார் ராஜன்.

மாலை சிற்றுண்டியோடு, விஜயன் குடும்பமும் பக்கத்து வீட்டிலிருந்தே, கீழே பெரியவர்களைக் கண்டு விட்டு, மாடிக்கு வந்து சேர்ந்தனர். இதே போன்ற அறையில் தான் முன்பு விஜயனும் இருந்தார். அந்தப் பக்கமே,ஒரு மாடிப்படி இறங்கி விஜயன் வீட்டு காம்பவுண்டுக்குள் செல்லும். அதையும் காட்டி எல்லாருமாகக் கதைத்துக் கொண்டிருந்தனர்.

ஆதிரா, ரஞ்சியிடம்  ஓரிரு வார்த்தை அளவளாவி விட்டு, கஸ்தூரியிடம் வந்து, " சாரி ஆண்டி, நீங்க அன்னைக்கு வந்தப்ப, என்னால சரியாகவே பேசமுடியலை. " எனத் தன் செய்கைக்கு வருந்தவும்,

" ஏன் கண்ணு, நீ அன்னைக்கு இருந்த நிலைமை எங்களுக்குத் தெரியாதா. இந்தச் சின்ன வயசிலையே இவ்வளவு சோதனையான்னு, வூட்டில போய்ப் புலம்பிக்கிட்டே இருந்தேன் கண்ணு. ரஞ்சி காலேஜ் போயிட்டு வர லேட்டாச்சுனாலே, போனை போட்டுக்கிட்டே இருப்பேன். உங்க அம்மாளும், மகளைப் பக்கத்தில வச்சுக்க, பார்த்துக்க முடியாத, அப்படித் தான கண்ணு துடிப்பாங்க. பாவம்" எனக் கஸ்தூரி கேட்கவும், ஆதிரா தலை குனிந்து அமைதி காக்க, காபியோடு  வந்த கௌரி தான் பதில் தந்தார்.

" என் தீதி, ஆதிரா முலேவுக்காகப் பதறருதும், துடிக்கிறதும் பார்த்தா, அந்த ஆயி பவானிமேல நமக்கே கோபம் வருங்க. தன்னை மறந்து தூங்குற பொழுதைத் தவிர, என் தீதி அவங்க வாழ்க்கையில் நிம்மதியா தூங்கினதே இல்லை. நான் ஆதிராவோடையே இருப்பேன். தீதி தான் மகளைப் பிரிஞ்சு இருப்பாங்க. தன் நிழல் மகள் மேல விழுந்தா கூட, அதுக்கு ஆபத்துன்னு ரொம்பக் கவனமா இருபாங்க. அந்த நிலமை எல்லாம் எந்தத் தாய்க்கும் வரக் கூடாது" எனக் கௌரி கண்ணைத் துடைக்கவும், ஆதிராவுக்கு, தன் ஆயியைப் பற்றிய வேறு ஒரு கோணத்தைக் காட்டியது. 

கைலாஷ்,”இதுக்கெல்லாம் காரணமான , ரஜ்ஜுமாவோட அப்பனை தான் சொல்லோணும். மகளை காப்பாற்ற  வக்கில்லாதவன் எதுக்கு பெத்துக்கோணும் “ என கோபப பட, கஸ்தூரி மட்டும், “ம்க்கும்ங்கண்ணா ‘ என அவர் பேச்சை ஆதரிக்க,  மற்றவர்கள் நோ கமெண்ட்ஸ் என்பது போல், அமைதி காத்தனர். விஷயம் தெரிந்த பின் இருக்கிறது கைலாஷின் ருத்ர ஆட்டம் என நினைத்துக் கொண்டனர்.

" ஆண்டி, இது எல்லாமே கூடிய சீக்கிரத்தில் ஒரு முடிவுக்கு வந்துடும் கவலைப் படாதீங்க. " என  நம்பிக்கை தந்து பேசிய அபிராம்,

கஸ்தூரி , கௌரியும் ,இரண்டு அம்மாக்கள் சேர்ந்தால், பிள்ளைகளைப் பற்றித் தான் பேசுவார்கள், என்பது போல், அபிராம், ஆதிராவைப் பற்றியே பேசியபடி சௌந்தரியிடம் சென்றனர்.

ஆபிராம்,  ஆதிராவிடம், "ரஞ்சி, உன்கிட்ட ஒரு கேள்வி கேட்கனுமாம்" என்றான். " க்யா" என வந்தவளிடம், " நான் கேட்டுருவேன், அப்புறம் நீங்க வருத்தப்படக் கூடாது" என ரஞ்சி பீடிகை போட்டாள்.

சற்று நேரம் முன், தங்கை தன்னிடம், " அப்படி அந்த ஆதிராகிட்ட என்ன இருக்கு, மாமனும், மருமகனும் ஒரேதா கவுந்து கிடக்குறீங்க" என வம்பிழுந்திருந்தாள், அதையே கேட்பாள் என ஆதிராவிடம் கோர்த்து விட," அப்படி இதுக்கிட்ட என்ன இருக்குனு, எங்க அண்ணன் மங்கிக்கு போய், ஓகே சொன்னீங்க " எனக் கேட்கவும், ஆதிரா பட்டெனச் சிரித்து விட,

" அடியே, மங்கியோட தங்கச்சியும் மங்கித் தான். குட்டி மங்கி, குண்டு மங்கி, உன்னை விட்டேனா பாரு " என அபி அவளைத் துரத்த ரஞ்சனியை ஓட என வம்பு ஆரம்பமானது.

ரஞ்சி, தன் அப்பாவையும், மாமாவையும் சுற்றிக் கொண்டு, " வேண்டாம், வந்திருடி. என் இமேஜை ஸ்பாயில் பண்ணிக்கிட்டு இருக்க. விட்டேனா பாரு" எனச் சுற்றி வர, ஆதிரா அவர்களைப் புன்னகையோடு பார்த்திருந்தாள்.

பஞ்சாயத்து, ராஜன், விஜயன் வரை போக, " மாமா, நீங்களே சொல்லுங்க" என இருவருமே, ராஜனிடம் முறையிட, " அண்ணங்காரனைக் கிண்டலடிக்கிற கூட உரிமை ஒரு தங்கச்சிக்கு , இல்லிங்களா" என மாமனைப் பஞ்சாயத்துத் தலைவராக்க

" நல்ல ஆளைப் பார்த்திங்க. அவனே, சங்கீதா, கீதாலை இதுக்கு மேல வம்பிழுப்பான்" என விஜயன் மலரும் நினைவுகளுக்குச் செல்ல, “அவங்க யார் “ என ஆதிரா கேட்டாள்.

"அவிக  என்ர தங்கச்சிங்க, உனக்கு அத்தையாகுது கண்ணு, இரண்டு பேரும் ஸ்டேட்ஸ்ல இருக்கிறாளுங்க. ஆளுக்கு ஒரு பையனும், புள்ளையும் இருக்குதுங்க. உன்னை விடச் சின்னதுக தான்" என ராஜன் சொல்லவும்,

" அப்ப எனக்கு, இன்னும் இரண்டு புவாஸ், கசின்ஸ் எல்லாருமே இருக்காங்களா. அவுங்களை வரச் சொல்லுங்க பாபா. முஜே தேக்னீ ஹை." என ஆசையாகக் கேட்டவள், " சிப்லிங்க்ஸ் இருந்தா, நல்லா ஜாலியா பொழுது போகும்" என ஏக்கமாகக் கேட்கவும்.

" பொழுது தான நல்லாவே போகுங்க. உடன்பிறப்பு செய்யற லோலாயி தனத்துக்கெல்லாம், பெத்த தெய்வங்க, நம்மளை தான் பேசுவாங்க" என ரஞ்சனி சொன்ன விதத்தில், " உன்னை அப்பா ஏதாவது சொல்லி இருக்கேனா கண்ணு " என்றார் விஜயன்.

”நீங்க, உங்க மகளை விட்டுக்கொடுப்பீங்களாக்கும்”  என ஆதர்ஷ் கேட்க, 

“எந்த அப்பனும்,மகளை வீட்டுக் கொடுக்க மாட்டான் கண்ணு ,நாளைக்கு உனக்கே மகள் பொறந்தாலும், நீங்களும்  அப்படி தானுங்க மாப்பிள்ளை இருப்பீங்க” என்றார் ராஜன். மகள்கள் ,அப்பாவிடம் ஹை பை கொடுத்துக் கொண்டனர். ஆதிராவுக்குப் பொழுது சுவாரஸ்யமாகப் போனது.

நாயகமும், சௌந்தரியும் குன்னூருக்கு போன் போட்டு, ராஜன் ராம் நகர் வீட்டுக்கு வந்ததைச் சொல்லிக் கொண்டிருக்க, " நிஜமாவாடா, ராஜனைக் காட்டு" என வம்பிழுத்துக் கொண்டிருந்தனர், பன்னீர், " இன்னைக்குத் தாண்டா, என் மனசு நிம்மதியா இருக்கு. இன்னும் ராஜாவுக்கு, ஒரு வாழ்க்கைத் துணையும், அமைஞ்சிருச்சுன்னா, நான் நிம்மதியா கண்ணை மூடுவேன்" என அந்தப் பக்கம் சொல்லிக் கொண்டிருக்க, " அப்பா" என ஆட்சேபித்துச் சென்றார் பவானி. நாயகம் பவானியிடமும் போனைக் கொடுக்கச் சொன்னவர், " நீ சொன்ன மாதிரியே, என் மகன்கிட்ட ராசியாயிட்டேன் மா. ஆனால் அவன் மனசை தான் திறக்க மாட்டேங்கிறான்" என நாயகம் குறை பட,

" அதுக்கும் ஒரு நேரம் வரும் மாமா. நீங்க பொறுமையா இருங்க. அவசரமா, இங்க வரனும்னு வரவேண்டாம். நீங்க ஆசை தீர இருந்துட்டு வாங்க" எனப் பவானிச் சொல்லவும்,

" ஆமாம்டா, நீ இல்லாமல், நாங்க ஜாலியா என்ஜாய் பண்றோம்." என வம்பிழுத்து பேசிக் கொண்டிருக்க, பாலநாயகத்தின் சிரிப்பு மொட்டை மாடி வரை கேட்டது.

சௌந்தரி, " இவிகளோட, இந்தச் சிரிப்பைக் கேட்டு எத்தனை வருஷம் ஆச்சுது. எல்லாம் என் பேத்தி வந்த ராசி தான்" என கௌரியிடம் சொல்லிக்கொண்டிருக்க, கஸ்தூரியும் ஆமோதித்தார்.பிள்ளைகளை பற்றி சௌந்தரிகேட்கவும், 

 " அபியும், ரஞ்சியும் கூட்டிட்டு போயிருக்காங்க.” என்றார் கஸ்தூரி. 

அபிராம், ஆதிராவை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றவன், " ரஞ்சி, ஆரா , முதல் தடவையா நம்ம வீட்டுக்கு வந்திருக்கா, ஏதாவது ஸ்வீட் எடுத்துட்டு வாடி" என விரட்ட, " இந்தா" என ஒரு சாக்லேட் பாரை நீட்டினாள் ரஞ்சி. ஆதிரா பட்டெனச் சிரித்து விட,

" மரியாதையா, ப்ளீசிங்கா கேளு, போனா போகுதுன்னு உங்களுக்குத் தனிமை கொடுக்குறேன்" என்றவள், இது தான் சாக்கு எனப் பல உறுதி மொழிகளை வாங்கிக் கொண்டு, கத்தை பணத்தை லஞ்சமாகவும் பெற்றுக் கொண்டு, "வாட்ச் உமன் வேலைக்கு , இதெல்லாம் ரொம்பக் கம்மி.சரி அண்ணியை ஐஸ் வச்சுக்கிட்டா, நாளைக்கு நமக்கு உதவியா இருக்குமேன்னுட்டு தான்,,ஒரு தொலைநோக்கு பார்வையோட இதெல்லாம் செய்யிறேனாக்கும் ,மைண்ட்ல வச்சுக்கங்க,சொல்லிப்போட்டேன் ஆமா " என்று விட்டு அவள் கீழே இறங்க,

" ராம் சார், ரஞ்சி, ஹமாரே பாரே மே க்யா கஹ்த்தீகை " எனக் கேட்கவும்,"உனக்கு புரியலையா விட்டுங்க அம்மணி " என்றான்,அவள் "கத்தியே நா" சிணுங்கவும், " ஐயோ இந்தக் கொஞ்சலுக்கே சொல்லலாமே," என அவள்கண்ணத்தை வழித்துகொஞ்சியவன், அவள்விளையாட்டாககையிலடிக்கவும்,பொய்யாய்முறைத்து, "இன்னைக்கு நம்ம காதலை வளர்த்தா தான், நாளைக்கு, அவளோட காதலை வளர்த்திக்க ஹெல் பண்ணுவோம்ன்னு சொல்றா " என்றவன்,

அவள் கைகளைப் பற்றிக் கொண்டு, " ஆரா பேபி, நம்ம காதலை வளர்ப்போமா,நீ என் ரூம்பில நிற்கிற. இது இவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு நான் நினைச்சே பார்க்கலைடா " என அவளிடம் நெருங்கியவன், " மாமாவும், அத்தையும் சேர்ந்த உடனே, நம்ம கல்யாணத்தை வச்சுக்குவோம் சரியா . " என அவன் ஒரு திட்டத்தைப் போட்டான்.

" ம்கூம், நான் ஆயி பாபாவோட, என் கஸின்ஸோட, அஜ்ஜோ, ஆத்தா எல்லாரோடையும் ஆசை தீர இருக்கனும். இன்னும் ஒரு தீன் சால் கே பாத் ஷாதி கரேங்கே" என்றாள்.

" த்ரீ மந்த்ஸ் நோ ப்ராப்ளம் டியர். நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்" என அவன் பெருந்தன்மையாகச் சொல்லவும். அவனைமுறைத்தவள்,

" தீன் மஹினே, நஹி. சால் தட் மீன்ஸ் த்ரி இயர்ஸ்" என்றாள்.

"ஏய் போங்க அம்மணி, இதெல்லாம் போங்கு ஆட்டம். நான் ஒத்துக்க மாட்டேன். இப்பையே, டிஸ்டன்ஸ் கீப் பண்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா" என அவளை நெருங்க. " ராம் சார் நோ" என்றாள் அவள்.

" ராம்…. சாரா, இதுக்கே நோ,எஸ்க்யூஸ். " என மேலும் அவளை நோக்கி, " சாரி, சார் சொல்லலை, சாரி" எனக் கண்ணை மூடியவளை, " அப்படி என்ன செஞ்சுடு வேணாம், இப்படிக் கண்ணை முடிகிற, என்னைப் பார்க்க புடிக்கலையாக்கும் " எனச் சுவற்றோடு ஒட்டி நிற்க வைத்து, அவன் எதிரே மூச்சுக் காற்றுப் படும் அளவில் நின்று கேட்கவும், சட்டெனக் கண்ணைத் திறந்தவள் முகம் , அவன் பார்வை வீச்சிலேயே குப்பெனச் சிவந்தது, வேர்த்தது, அவளது அகண்ட கண்களுக்குள் தொலைந்தவன், சிரமப்பட்டுப் பார்வையை மேலே உயர்த்த, நெற்றியில் பூத்த அவள் வியர்வை துளிகள் , அவனை அழைத்தன.

வல்லவன் போல் ராம்,வாயால் ஊதி ,அந்தத் துளிகளை மறைய வைக்க முயற்சி செய்ய, அவை அவனை இளக்காரமாகப் பார்த்து மேலும் நான்கு பூத்தன.

" ஆரா பேபி, இதுகளுக்கு எவ்வளவு ஏத்தம் பார்த்தியாடா" என ,அவள்கண்களில் ஊடுருவி கேள்விக்கணையைத் தொடுத்தவன்,அவள் என்னவென்று திகைக்கும்போது, தன் இதழ் கொண்டே, முத்துகளாய் பூத்த வியர்வை துளிகளோடு அவன் சண்டையிட, மைவிழியாள் மயங்கி நின்றாள்.

" ராம், நோ" என அவள் சொல்வதாக, நினைத்துக் காற்றை மட்டுமே கடத்த, கண்களில் சிரிப்போடு, தன் இதழ்களை அவள் இமைகளுக்கு இறக்கியிருந்தான் ஆதிராவின் அபிராம். அவள் உடலெங்கும் உணர்வுகள் உயிர்த்து, சிலிர்தோட பெண்ணவள் மேனி துவண்டது. அதைத் தன்னில் தாங்கிக் கொண்டவன், அவள் மறுப்புக்கெல்லாம் இடம் கொடுக்காமல் , சட்டென வாட்ரோப் மறைவிற்கு இட்டுச் சென்று, கண்டா நாள் முதல்.அவன் மூளை செய்யச் சொன்ன செய்கையை, அவள் முகத்தைக் கையிலேந்தி தன் முதல் முத்திரையையும் அவள் இதழ்களில் பதித்து விட ஆதிராவின் கண்கள் விரிந்து சிலிர்த்து நின்றன. கைகள் அவன் சட்டையைப் பின்புறமாகக் கொத்தாய்ப் பிடித்தது.

" அபி" என்ற அவன் அம்மாவின் சத்தத்தில், சட்டென அவளைத் தள்ளி விட்டவள் அவன் வழியை அடைத்து நிற்கவும், தாண்டி செல்லவும் முடியாமல், அவன் முகம் காணாமல் கண்ணைப் பொற்றிக் கொண்டு திரும்பி நின்றாள்.

அவள், வெட்கப் புன்னகையை, கண்ணாடியில் கண்டவனுக்கு, உன்மத்தம் பிடிக்க, மீண்டும் பின்னோடு சென்று அணைத்து, " ஐ லவ் யூ பேபி" என அவள் காதுகளில் கிசுகிசுக்க, ராம் ப்ளீஸ்." என்றவளின் வார்த்தைகள் அன்னத்தை விட்டு வெளியே வர மறுத்தன. அவன் அவள் மொழியைத் தனதாக்கி,

" ஆரா பேபி மஸ்து ஹை. படியா மஸ்து. அதுவும் இப்படிச் சிரிக்கும் போது, யே சீஸ் படியாஹை மஸ்து" எனப் பின்னிருந்தே அணைத்து, அவள் முகத்தைக் கண்ணாடியில் உயர்த்திக் காட்டவும், அவனணைப்பில் அவள், தங்களது பிரதி பிம்பம் என்ற போதும், ஒருவர் கண்களில் மற்றவருக்கான நேசத்தை முழுதாக உணர்ந்தார்கள்.

இரவு உணவை இரண்டு குடும்பங்களும் சேர்ந்து சாப்பிட, எல்லாருடைய முகத்திலுமே மகிழ்ச்சி. பழங் கதைகள் பேசி கதைக்க, ராஜன் சந்தடி சாக்கில் அவருடைய ஹிட்லர் லுக்கை பற்றியும் கிண்டலடிக்க, நாயகம் வெளியே விரைப்பை காட்டினாலும், உள்ளே மகிழ்ந்து இருந்தார்.

அவரவர் செட்டு மக்கள், சேர்ந்து கதைக்க, விளையாட என இருக்க, ராஜன், விஜயனைத் தனது பேச்சுலர் அறைக்குத் தனியாக அழைத்துச் சென்றார்.

" ராஜா, வேணாம்டா, நீ லிமிட்ல இருக்க மாட்ட, மாமா அத்தை, எல்லாரும் இருக்காங்க. கஸ்தூரிக்கு தெரிஞ்சது பத்து நாளைக்குப் பட்டினி தான். எனக்குக் கல்யாண நாள் வேற வருது. குடும்பத்தில கலகத்தைத் தூண்டி விட்டுறாத சாமி" எனப் பதட்டமடைய.

" டேய், இன்னைக்கு லிமிட்லாம் தாண்ட மாட்டனாகும், உன் மேல சத்தியம். ஒரு பெக் மட்டும். இந்த வீட்டுக்கு வரவுமே, பழைய சந்தோஷம் வந்த மாதிரி இருக்குது. சும்மா பழசை பேசிட்டு இரு, போதும்" எனக் கைலாஷ் க்ளாஸ் டம்ளரோடும், விஜயன் வேடிக்கையும் பார்த்திருக்க, ராஜன் கனவுலகில் மிதந்தவர், சந்தன் கட்டில் பாருவுடனான இனிமையான நேரங்களை, மனம் திறந்து பகிர ஆரம்பித்தார்.

" முன்னையெல்லாம் , பாருவை நினைச்சவுடனே முதல்ல சந்தோஷம், அப்புறம் அவளை மிஸ் பண்ணதை நினைச்சு சோகமாவேன், பயங்கரமா துக்கம் ,கோபம் எல்லாமே வரும்டா. நான் அது பாருவை இழந்ததுன்னு நினைச்சிருந்தேன். ஆனால் அது பாரு மட்டும் இல்லை, அப்பா, அம்மா, நீ, உங்கள் பாசத்தை எல்லாம் இழந்தது தாண்டா" எனப் பேசிக் கொண்டே செல்ல, விஜயனுக்குத் தான் மனச்சுமை ஏறியது. தான் பெற்றவர்களைச் சமாதானப்படுத்துவதை இன்னும் கொஞ்சம் முயன்று இருக்கலாமோ என்றும். அட்லீஸ் பைரவியை இரு ஆண்டுகளுக்கு முன் பெங்களூருவில் வைத்து சந்தித்தையாவது சொல்லி இருக்கலாம் எனக் குற்றவுணர்வு தோன்ற, வரிசையாக மதுவை உள்ளே தள்ளிவிட்டார்.

" ராஜா, என்னை மன்னிச்சிடுடா, நான் தாண்டா உனக்குத் துரோகம் பண்ணிட்டேன்" என வழக்கமாக ராஜன் சொல்லும் குற்றச்சாட்டுகளைத் தானே சொல்லி உளறவும், "அதுவும், நான் குடும்பமா இருக்கும் போது, நீ தனியா நிற்கிறியேன்னு அவ்வளவு அழுதிருக்கேன்டா. அதுனால தான், வெட்டிங் ஆன்வர்ஸரி கூடக் கொண்டாட மாட்டேன்" எனக் கண்ணீர் விட,

" இது என்ரா வம்பா போச்சு, ஓவரா போறானே, கஸ்தூரிக்கு தெரிஞ்சது, என்னைப் பிச்சு போடும், ஒழுக்கமானவனாட்டம் அத்தனை பேசினான். சான்ஸ் கிடைக்காத தான் பய வாலை சுருட்டிக்கிட்டு இருந்திருப்பானாட்டத்துக்கு" என்றவர் , தனது அறையிலேயே நண்பனைப் படுக்க வைத்து, விளக்கை ஆப் செய்து, கதவை மூட, அப்போதும், " நான் உனக்குத் துரோகம், பண்ணிட்டேன்டா. தங்கச்சிமா" என ஆரம்பிக்க, இவர் கதவைச் சாத்திவிட்டு வெளியே மொட்டை மாடிக்கு வந்தார்.

, ராஜனின் தங்கச்சிமா என்ற புலம்பலும் , பிறையாய் வளர்ந்து நின்ற நிலவும்,பாருவின் நெற்றித் திலகத்தை நினைவு படுத்த, இன்று மனைவியை நினைத்த மாத்திரத்தில், உதட்டில் தவழ்ந்த புன்னகையோடு, நிலவை பார்த்தபடி நாற்காலியில் சாய்ந்திருந்தார்.

அபிராம், தனது அப்பாவைத் தேடி வர, "தூங்குறான்டா, மாமாவோட பேசிட்டு இருக்கான்னு அம்மாட்ட சொல்லிப்போடு " என மீண்டும் அவர் நிலவில் லயிக்க, அபிராம் அமைதியாக ஓர் மென்னகையோடு இறங்கிவிட்டான்.

ஆதிராவிடம், " உங்கப்பு, செம ரொமான்டிக் மூட்ல இருக்கார்" எனக் காட்டியவன், " ஆண்டியை போன் போட சொல்லு" என்றான்.

" அவங்களுக்கே மணி அடிச்சிடும்" என ஆதிரா சொல்லவும், அவளது போனில் பைரவி அழைக்கவும் சரியாக இருந்தது.

" ஆயி, உங்களுக்குச் சௌ உமர். இப்ப தான் உங்களை நினைச்சேன்" என்றவள், இருங்க எனக் கைலாஷை ஒரு போட்டோ எடுத்து அனுப்ப, " அடி, வாலு" என்றார். " என்ஜாய் ஆயி, உங்க ஆளுக்குப் போன் போடுங்க, ஷாயாரி கூடச் சொல்லுவார் " எனக் கிண்டலடித்து விட்டு ஒரு ஸ்டிக்கரையும் அனுப்பி விட்டாள்.

"ஆரா பேபி, நான் வேணா, ஒரு ஷாயாரி சொல்லவா, பாதியில் விட்ட இதழ் கவிதை" என அவன் விஷமமகாகக் கேட்கவும், "க்யா" என்றால், அவன் அவள் இதழை பார்க்கவும், சட்டென அவளுக்குப் புரிந்தது, "பிச்சு போடுவேன்" எனக் கேஆர் பாணியிலேயே, ,அவனை விரட்டியவள், பெரியவர்களோடு சேர்ந்து கதைக்கச் சென்றாள் . சௌந்தரியும், நாயகமும் கவுண்ட்டர் கொடுத்துக் கொண்டே, பழைய நிகழ்வுகளைச் சொல்லும் போது ஆதிரா ரசித்துக் கேட்பாள். அதுவே அவர்களுக்கு அவளைப் பிடிக்கக் காரணமானது.

பைரவி, மகள் சொன்னதிலேயே, கணவரோடு பேச, ஆசை வர, பேச்சை எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியாமல், " படே அச்சே" பாடலை, கைலாஷ்க்கு அனுப்பி விட்டார். மொபைல், ஆதிரா கீ ஆயி… என ஒளிர்ந்து அனைய, ஆவலாகவே எடுத்துப் பார்த்துப் பாடலை ஓட விட்டவர், கண்ணை மூடி அதில் லயித்திருந்தவர், அது முடியவும், " ஆதிரா கி ஆயி" என அழைத்து விட்டார். "கியா ஜி" என அவர் முதலில் புரியாதது போலக்கேட்க, "படே அச்சே லக்ட் ஹைங் " என்று மட்டும் சொல்ல,மீண்டும் "க்யா" என அவர் கோபமாகக் கேட்டார்.

" ஆதிரா கி ஆயி, எதுக்கு இவ்வளவு கோபம், நீங்க அனுப்பி விட்ட பாட்டைச் சொன்னேனுங்க, படே ஆச்சே ஹை" என அவர் மிதமான போதையில் லயிக்க, "ஜி, ஜி" என இருமுறை அழைத்தவர், பதில் வராததால், குழறிய பேச்சிலிருந்தே யுகித்தவர், "ராஜ்" என்று அழைக்க, கைலாஷ் சுதாரித்தார். 

மீண்டும், "ராஜ் கேட்கிறிங்கள்ல, ராஜ் லிமிட் தாண்ட மாட்டேன்னு சத்தியம் பண்றது, அடுத்தத் தடவை அது காத்துல தான்.இனி ட்ரின்க் பண்ணா போன் பண்ண மாட்டேன்.என் கூடப் பேசவே ட்ரின்க் பண்றிங்க... "ராஜ், சுன்தே ஹை நா " எனப் பைரவி கேட்கவும், 

"ஹாங் பாரு " என அவர் குளறலாகப் பேச, "பாரு தான்,உங்க பாரு தான் , பேசாமல் போய்ப் படுங்க "எனக் கட்டளையிட்டார். சரியாக ராஜனுக்கு அப்பத்து தான் மது வேலையைச் செய்ய ஆரம்பித்து இருக்க, பேச்சு, பாதி நினைவிலும், பாதிக் கனவிலுமாகத் தோன்றியது. தலையைத் தட்டி யோசித்தும் புரியாதவராக,மீண்டும் பாடலை ஒலிக்கவிட்டு கனவுலகிலே சந்தன் கட் பறந்தார்.

அடுத்த நாள்,உணவின் போது, "விஜயா ,அது யாருடா இந்த புது தங்கச்சிமா " என் கேட்கவும்,விஜயனுக்கு சாப்பிட்டது புரை ஏறியது. அவர் தலையில் தட்டி, தண்ணீர் கொடுத்த கஸ்தூரி, "அவிகள்ட்ட தான் அண்ணன், கதவை அடைச்சுப்போட்டுட்டு , போன்ல பேசுவாங்க, கேட்ட தங்கச்சிக்கிறது, நீங்களே  என்னனு விசாரிங்க " எனக் கஸ்தூரி கோர்த்துவிட, விஜயன் வசமாக மாட்டினார்.

 

ராஜன், விஜயனை  முறைத்துக்கொண்டு, அவர்  போனை வலுக்கட்டாயமாக வாங்கி, தங்கச்சிமா எனச் சேமித்த வைத்த எண்ணிற்கே , அவர் டேய , டேய " என ஆட்சேபித்ததை கண்டுக் கொள்ளாமல் அழைத்தார். அழைப்பில் யாரென அறியாமல் அந்த முனையில் பைரவி, "பாய் சாப் " என விழித்தார்.

விஜயன் மாட்டிக்கொண்டாரா ...பார்ப்போம்.

நிலவு வளரும்.